IND vs PAK: இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான்.. டிவியை அடித்து உடைத்த ரசிகர்!
பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிடம் தோற்ற நிலையில் அந்நாட்டு ரசிகர்கள் நொந்து போயுள்ளனர்.

டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோற்ற நிலையில், அந்த அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியா vs பாகிஸ்தான்
டி20 உலகக்கோப்பை போட்டியில் கொழும்புவில் நடைபெற்ற ஆட்டத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 77 ரன்களும், தொடர்ந்து திலக் வர்மா 25, சூர்யகுமார் யாதவ் 32, சிவம் துபே 27 ரன்களும் எடுக்க 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனால் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிவியை உடைத்த ரசிகர்
இதனிடையே இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்ற நிலையில், அந்நாட்டு ரசிகர்கள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வகையில் போட்டி முடிந்த சிறிது நேரத்தில் பாகிஸ்தானிய ரசிகர் ஒருவர் தனது வீட்டில் இருந்த டிவியை அடித்து உடைக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளது. அதில் டி20 உலகக்கோப்பையில் இந்தியா மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தியது. நான் விரக்தியில் என் வீட்டு டிவியை உடைத்தேன் என சொல்லும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.
இன்னொரு ரசிகர், “முற்றிலும் உடைந்து, வெட்கப்பட்டு இருக்கிறேன். பாகிஸ்தான் தோற்ற அதிர்ச்சியில் என்னால் பேசக்கூட முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
India were unstoppable on the field 🤩 Swipe to see how it unfolded ➡️#T20WorldCup broadcast details 👉 https://t.co/NPykWM7qqY pic.twitter.com/DxQ1zIgYEz
— ICC (@ICC) February 15, 2026
இதேபோல், கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் போட்டியை நேரடியாக பார்த்த பாகிஸ்தான் ரசிகர் மக்பூல் ஊடகத்தினரிடம் பேசும்போது, “இப்போதெல்லாம் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோற்பது ஒரு வழக்கமான விஷயமாகிவிட்டது என்று நினைக்கிறேன். குறைந்தப்பட்சம் போட்டி கடினமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் எங்களிடம் பும்ரா, ஹர்திக் பாண்ட்யாவை போன்றவர்களை எதிர்கொள்ள முடியாத சூழல் உள்ளது.இப்படியே இருந்தால் நாம் என்றைக்கும் இந்தியாவை வெல்ல முடியாது. அவர்கள் செய்யும் முன்னேற்பாடுகள் மிக சிறப்பாக உள்ளது. இன்றைய போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது பார்த்து என் இதயம் உடைந்து விட்டது. இது மிகவும் மோசமான செயல்திறன்” என தெரிவித்தார்.






















