Just In





Djokovic Shocks Crowd: பாதியில் வெளியேறிய ஜோகோவிச்... இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஸ்வெரேவ்... நடந்தது என்ன.?
Djokovic Shocks Crowd: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் அரையிறுதிப் போட்டியில் ஜோகோவிச் பாதிலேயே வெளியேறியதால், ஸ்வெரேவ் இறுதிப் போட்டிக்குள் நழைந்தார்.

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று(24.01.25) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல் அரையிறுதிப் போட்டியில், ஜேகோவிச் மற்றும் ஸ்வெரேவ் மோதினர். இதில், ஸ்வெரேவ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
முதல் செட்டுடன் வெளியேறிய ஜோகோவிச்
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ஆடவர் ஒற்றையர் முதல் அரையிறுப்போட்டி உலக தர வரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ஸ்வெரேவ் மற்றும் 7-ம் இடத்தில் இருக்கும் ஜோகோவிச் இடையே நடைபெற்றது. இதில் அனல் பறந்த முதல் செட்டை, 7-6 என்ற கணக்கில் ஸ்வெரேவ் வென்றார். இந்த நிலையில், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக ஜோகோவிச் அறிவித்தார். இதை கேட்டு ரசிகர்கள் மட்டுமின்றி, ஸ்வெரேவும் அதிர்ச்சியடைந்தார். காலிறுதிப் போட்டியின்போதே ஜோகோவிச்சிற்கு காயம் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே. எனினும் இன்றைய போட்டியின் முதல் செட்டில் சற்றும் விட்டுக்கொடுக்காமல் ஆடிய ஜேகோவிச்சால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது அவருக்கு மட்டுமின்றி டென்னிஸ் ரசிகர்கள் அனைவருக்குமே ஏமாற்றம்தான்.

சாதனைகளை தவறவிட்ட ஜோகோவிச்
இந்த போட்டியிலிருந்து வெளியேறியதன் மூலம், தனது 25-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் செர்பிய டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ஜோகோவிச். அதோடு, தொடர்ந்து 5-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பையும் தவறவிட்டார். மேலும், டென்னிஸில் தனது 100-வது வெற்றியை பதிவு செய்யவும் தவறிவிட்டார்.
முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ஸ்வெரேவ்
ஜோகோவிச்சின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, ஸ்வெரேவ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்குள் முதல் முறையாக நுழைந்துள்ளார். அமெரிக்க ஓபன் மற்றும் ப்ரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்வெரேவ், முதல் முறையாக நுழையும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பட்டத்தை வெல்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.