Ind vs Pak: லாக்கான பாகிஸ்தான்! ஐசிசியின் 'டீல்' ஓகே... இந்தியாவுடன் விளையாட ஒப்புக்கொண்ட பாக்
Ind vs Pak: பாகிஸ்தானும் வங்கதேசமும் ஐ.சி.சி.யிடம் பல கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் அவற்றில் சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் வரும் 15 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி திட்டமிட்ட்டபடி நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. லாகூரில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.. இந்தச் சந்திப்பின் போது, பாகிஸ்தானும் வங்கதேசமும் ஐ.சி.சி.யிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தன, அவற்றில் சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
என்னென்ன கோரிக்கைகள் வைக்கப்பட்டன?
- டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகிய வங்கதேசத்திற்கு எந்தவொரு அபராதமும் விதிக்கக் கூடாது
- வங்கதேச ப்ரீமியர் லீக்கிற்கு தடையில்லா சான்று வழங்குவதில் எந்த சிக்கலும் இருக்கக் கூடாது
- வங்காளதேசத்துக்கான இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும். உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் வங்காளதேசத்துக்கான பங்கேற்புத் தொகையை அளிக்க வேண்டும்.
- இனிவரும் காலங்களில் ஐ.சி.சி தொடர்களை நடத்தும் உரிமைகளை வங்காளாதேசத்துக்கு வழங்க வேண்டும்
- ஐசிசி போட்டிகளில் இந்தியா -பாகிஸ்தான் போட்டிகள் தான் அதிக வருவாய் ஈட்டுவதால், தங்களுக்கான நிதிப்பகிர்வை உயர்த்த வேண்டும்
- போட்டி முடிந்த பிறகு கைகுலுக்கும் வழக்கம் தொடர வேண்டும்
பாதிக்கு ஒகே மீதிக்கு நோ
லாகூரில் நடந்த கூட்டத்தில், உலகக் கோப்பையில் இருந்து வங்கதேசம் விலக்கப்பட்டதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இழப்பீடாக, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மற்றும் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை வங்கதேசத்திற்கு வழங்க வாய்ப்புள்ளது
மறுபுறம், பாகிஸ்தான் ஐ.சி.சி வருவாயில் தனது பங்கை அதிகரிக்கக் கோரியுள்ளது. அறிக்கைகளின்படி, ஐ.சி.சி வருவாயில் அதன் தற்போதைய பங்கு 5.75 சதவீதம், இது தோராயமாக 34-35 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வழங்க கேட்டது, தற்போது இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் தொடர் இருக்காது.
2012 ஆம் ஆண்டு முதல் இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை. இருதரப்பு தொடர்களை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது, ஆனால் ஐ.சி.சி இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்களை ஏற்பாடு செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அதிகார வரம்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான விளையாடவில்லை என்றால் அந்த அணிக்கு தான் அதிக பாதிப்பு என்பதால் ஐசிசி சரி என்று சொன்ன கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு பாகிஸ்தான் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் திட்டமிட்ட[படி வரும் 15 ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் நடைப்பெறும் என தெரிகிறது.





















