Jitesh Sharma: ”பேட்ஸ்மேன் அவுட்டாகனும் வேண்டிப்பேன்.. நான் ஹீரோ ஆகணும்” கெத்தாக சொன்ன ஜித்தேஷ் சர்மா
தனது சொந்த அணியின் பேட்ஸ்மென்கள் சிக்கீரம் அவுட்டாக வேண்டும் என்று தான் கடவுளிடம் வேண்டிக்கொண்டதாக ஜித்தேஷ் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2026 (IPL 2026) சீசன் தொடங்குவதற்கு முன்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜித்தேஷ் சர்மா வெளியிட்டுள்ள ஒரு தகவல் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்த அணியின் பேட்ஸ்மென்கள் சிக்கீரம் அவுட்டாக வேண்டும் என்று தான் கடவுளிடம் வேண்டிக்கொண்டதாக ஜித்தேஷ் கூறியுள்ளார்.
ஏபி டி வில்லியர்ஸ் உடனான உரையாடல்
சமீபத்தில், ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸின் யூடியூப் சேனலில் ஜித்தேஷ் சர்மா கலந்துகொண்டார். அப்போது, தனது அணியின் பேட்ஸ் தான் ஏன் பிரார்த்தனை செய்தேன் என்பதை அவர் விளக்கினார். உண்மையில், அணியின் தோல்வியை விட, தன்னை ஒரு 'ஹீரோவாக' நிலைநிறுத்திக் கொள்ளவே அவர் அவ்வாறு செய்துள்ளார்.
ஜித்தேஷ் சர்மாவின் விசித்திரமான வேண்டுதல்
இது குறித்து ஜித்தேஷ் கூறுகையில் "நீங்கள் நம்பமாட்டீர்கள், ஆனால் எங்கள் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீக்கிரம் ஆட்டமிழக்க வேண்டும் என்று நான் எப்போதும் கடவுளிடம் வேண்டுவேன். அப்போதுதான் எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும். நான் ஒரு ஹீரோவாக மாறுவதற்கான வாய்ப்பை எப்போதும் தேடிக்கொண்டிருப்பேன். எனது வாழ்வில் ஒரு மாயாஜால இன்னிங்ஸை ஆட வேண்டும் என்பது எனது கனவு. அத்தகைய தருணங்களை உருவாக்கும் ஒரு நபராகவே நான் இருக்க விரும்புகிறேன்."
🚨 BRO, ALWAYS SAW ON PERSONAL MILESTONES (ABD YT ) 🚨
— Kiara (@crickiara) February 26, 2026
Jitesh Sharma 🎙️: “ You won’t believe it, but I always pray to God, let my top order fail so I can walk out. I see a chance to be the hero. I always dream of such knocks, and I’m the type of person who always wants to pull… pic.twitter.com/BBlGcobVmW
ஆர்சிபி அணியில் ஜித்தேஷின் பங்களிப்பு
ஜித்தேஷ் சர்மா 2025 ஆம் ஆண்டு ஆர்சிபி அணியில் இணைந்தார். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் 15 போட்டிகளில் விளையாடிய அவர், 11 இன்னிங்ஸ்களில் 176.35 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் 261 ரன்களைக் குவித்தார். இதில் ஒரு அரைசதமும் அடங்கும் (அதிகபட்ச ரன்கள் 85*). ஆர்சிபி-க்கு வருவதற்கு முன்பு, அவர் மூன்று ஆண்டுகள் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
ஜித்தேஷின் ஒட்டுமொத்த ஐபிஎல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இதுவரை 55 போட்டிகளில் விளையாடி 991 ரன்களை எடுத்துள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி
கடந்த 2025 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஒரு சிறப்பான சீசனாக அமைந்தது. ரஜத் பாட்டிதார் தலைமையில் ஆர்சிபி அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. 18 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. நடப்பு சீசனிலும் அந்த அணி தனது ஆதிக்கத்தைத் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




















