IND vs PAK: சொல்லி அடிச்ச அகா! அபிஷேக்கை டக் அவுட்டாக்கிய பாகிஸ்தான் கேப்டன்!
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவை டக் அவுட்டாக்கி இந்திய ரசிகரகளுக்கு அதிர்ச்சி தந்தார்.

டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இலங்கையின் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அபிஷேக் சர்மா அவுட்:
இதையடுத்து, கடந்த போட்டியில் ஆடாத அபிஷேக் சர்மா - இஷான் கிஷனுடனஜ் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். முதல் ஓவரையே பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா வீசினார். அவரது பந்தில் இஷான் கிஷான் 2வது பந்தில் ரன் எடுக்க, அடுத்த பந்துகளில் தடுமாறிய அபிஷேக் சர்மா முதல் ஓவரின் கடைசி பந்தில் ஷாகின் அப்ரிடியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
சொல்லி அடித்த பாகிஸ்தான் கேப்டன்:
இந்த போட்டி தொடங்கும் முன்பு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா அபிஷேக் சர்மா இந்த போட்டியில் ஆட வேண்டும் என்று விரும்புகிறோம் என்று பேட்டி அளித்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அபிஷேக் சர்மா அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து முதல் பந்திலே அவுட்டானார். இந்த போட்டியிலும் அவர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார்.
அச்சுறுத்திய அபிஷேக்:
இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா அதிரடி பேட்ஸ்மேனாக உலா வருகிறார். அவரது அபாரமான பேட்டிங் திறமையால் அவர் சர்வதேச அரங்கில் தவிர்க்க முடியாத வீரராக வளர்ந்துள்ளார்.
ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்த அபிஷேக் சர்மா இந்த போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நமீபியாவிற்கு எதிரான கடந்த போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடவில்லை.
இமாலய இலக்கை நிர்ணயிக்குமா?
இதனால், இந்த போட்டியில் அவர் ஆடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்து இந்த போட்டியில் ஆடினார். பவர் ப்ளேவில் மிகப்பெரிய அளவில் ரன்களை குவிக்கும் ஆற்றல் கொண்ட அபிஷேக் சர்மாவை அவுட்டாக்குவதே முதல் குறிக்கோளாக பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
முதல் ஓவரையே பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா வீசி அபிஷேக் சர்மாவை அவுட்டாக்கினார். இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்கும் வகையில் ஆடி வருகிறது. சுழற்பந்துவீச்சை நம்பி களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணிக்கு அப்ரார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், உஸ்மான் தாரிக், சையும் அயூப், சல்மான் அகா ஆகியோரை நம்பி களமிறங்கியுள்ளனர்.




















