பாகிஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்தியா அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று வெற்றியுடன் இந்த உலககோப்பை ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த ஆட்டத்தை சுமார் 40 கோடிக்கும் மேற்பட்டோர் பேர் கண்டு ரசித்தனர். ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக சுமார் 40 கோடிக்கும் மேற்பட்டோர் பேர் இந்தப் போட்டியைக் கண்டு ரசித்தனர்.


இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மற்ற போட்டிகளை காட்டிலும் இந்த ஆட்டத்துக்கு எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். அதிலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலானோர் வீடுகளில் இருக்கின்றனர்.


இதனால், இந்த ஆட்டத்தை கோடிக்கான கண்கள் கண்டு ரசித்திருக்கின்றன. உலகக் கோப்பை டி20 தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக 160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. நசீம் ஷா வீசிய ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் போல்டு ஆனார். 2 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 7 ரன்கள் எடுத்துள்ளது.


இந்தியா 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹரிஸ் ரெளஃப் பந்துவீச்சில் ரிஸ்வானிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். 


சூர்ய குமார் யாதவ் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல், வந்த வேகத்தில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவர் 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா களம் புகுந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலியும், ஹார்திக் பாண்டியாவும் களத்தில் இருந்தபோது, இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 100  ரன்களை எடுத்தது.


கோலி அரை சதம் பதிவு செய்தார். அவர் 43 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என அரை சதம் பதிவு செய்தார். 12 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா கடைசி நிமிட பதற்றத்துடன் விளையாடியது. 19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் பேக் டூ பேக் சிக்ஸர் அடித்து அசத்தினார் கோலி. கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி ஓவரை நவாஸ் வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்தை தூக்கி அடித்த பாண்டியா பாபர் ஆஸாமிடம் கேட்ச் ஆனார்.


தினேஷ் கார்த்திக் களத்தில் இறங்கினார். 5 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் 1 ரன் எடுத்தார். கடைசி ஓவரின் 3வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார் கோலி. இதனிடையே நோ பால் என போட்டி நடுவர் அறிவித்தார். இதனால், பாகிஸ்தான் வீரர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. நடுவரிடம் முறையிட்டனர். எனினும், நோ பால் என்று போட்டி நடுவர் உறுதிப்படுத்தினார்.


ஃப்ரீ ஹிட் வாய்ப்பு கிடைக்க 3 பந்துகளுக்கு 6 ரன் எடுக்க  வேண்டியிருந்தது. ஃப்ரீ ஹிட்டில் போல்டு ஆனார் கோலி. எனினும் அவுட் இல்லை என்பதால் 3 ரன்களை ஓடி எடுத்தனர். 2 பந்துகளுக்கு 2 ரன்கள் தேவை என்று இருந்தது. எதிர்பாராதவிதமாக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். இதையடுத்து அஸ்வின் களம் இறங்கினார். கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், 5வது பந்து ஒயிட் ஆக அமைந்த நிலையில் கடைசி பந்தில் அஸ்வின் ஒரு ரன் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். முன்னதாக,பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. மசூத், இஃப்திகார் ஆகியோர் அரை சதம் பதிவு செய்தனர்.