IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு இப்படி ஒரு சோதனையா? மோசமான சாதனை படைத்து வேதனை!

ராய்ப்பூரில் இன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.

Continues below advertisement

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும், தொடரை இழக்கக்கூடாது என நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டி வருகிறது.

Continues below advertisement

டாஸ் வென்ற ரோகித்:

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே நெருக்கடி கொட்டுத்தனர்.

தடுமாறிய நியூசிலாந்து:

தொடக்க ஆட்டக்காரர்களாக ஆலன் மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கினர். ஆனால், ரன் கணக்கை தொடங்கும் முன்பே, முதல் ஓவரின் 5வது பந்தில் ஆலன் போல்டாகி வெளியேறினார்.  போட்டியின் 6வது ஓவரில் நிகோலஸ் முகமது சிராஜ் வீசிய பந்தில் சுப்மன் கில்லிடன் கேட்ச் ஆகி அவுட்டாகி வெளியேறினார். அவர் 20 பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுத்தார்.

அதற்கடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மிட்ஷ்லெல் விக்கெட்டை முகமது ஷமி வீழ்த்தினார்.  இதற்கடுத்து பாண்ட்யா பந்துவீச்சில் காட் & போல்ட் முறையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். aவரை தொடர்ந்து, கேப்டன் லாதம் 17 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், தாகூர் பந்து வீச்சில் அவுட்டானர். இதன் மூலம், நியூசிலாந்து அணி 15 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது.

நியூசிலாந்தின் மோசமான சாதனை:

இதன் மூலம், மிக மோசமான முதல் 5 விக்கெட் சரிவை நியூசிலாந்து அணி சந்தித்துள்ளது. முன்னதாக, கடந்த 2001ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி வெறும் 18 ரன்களை சேர்ப்பதற்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், இன்றைய போட்டியில் அதைவிட மோசமாக விளையாடிய நியூசிலாந்து, 15 ரன்களை சேர்ப்பதற்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் மோசமான முதல் 5 விக்கெட் சரிவாக இது பதிவாகியுள்ளது.

108 ரன்களுக்கு ஆல்-அவுட்

இதனிடையே, இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி, 34.3 ஓவர்களில், 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 36 ரன்களை சேர்த்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக, ஷமி 3 விக்கெட்டுகளையும், பாண்ட்யா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 109 ரன்களை எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது.

Continues below advertisement
Sponsored Links by Taboola