இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அஸ்வின், நான் வேண்டுமானால் கிரிக்கெட்டை விட்டு வெளியேறவா? என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதில் ஐந்தாவது நாளில் இந்திய அணி சார்பில் வீசப்பட்ட 78வது ஓவரினை இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா வீசினார். புஜாரா பந்து வீச கிரீஸ்க்கு அருகில் வரும்போதே மைதானத்தில் இருந்த இந்திய அணியின் வீரர்களால் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தனர். புஜாரா வீசிய ஓவருக்குப் பிறகு நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது டிவிட்டர் பக்கதில் புஜாரா பந்து வீசும் புகைப்படத்தினை பதிவிட்டு “ நான் வேண்டுமானால் கிரிக்கெட்டை விட்டு வெளியேறவா?” என பொருள் படும் படி இந்தியில்  நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார்.




அஸ்வினின் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.