உலகக் கோப்பை 2023ல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஹஸ்மத்துல்லா தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல ஒன்றன் பின் ஒன்றாக நான்கு வெற்றிகளை வென்று வலுவாக திரும்பியுள்ளது. தற்போது ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து ஆகியவை 8 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளன. ஆனால் இந்த இரு அணிகளின் நிகர ரன் ரேட் ஆப்கானிஸ்தானை விட அதிகமாக உள்ளதால் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், இப்போது ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் கனவில் உள்ளது. ஆப்கானிஸ்தான் எப்படி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதை இங்கே பார்க்கலாம். 


ஆப்கானிஸ்தான் எப்படி அரையிறுதிக்கு முன்னேறும்?



  • ஆப்கானிஸ்தான் தனது அடுத்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு செல்வதற்கான பாதை எளிதாகிவிடும். ஆஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் வீழ்த்தினாலும் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெறுவதற்கு, பிற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். 

  • அதே சமயம், ஆஸ்திரேலியாவிடம் தோற்று தென்னாப்பிரிக்காவை ஆப்கானிஸ்தான் வீழ்த்தினால், அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புகள் இருந்தாலும், அப்போதும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே அமையும்.

  • அதே சமயம் இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் அரையிறுதிக்கு செல்வது கடினம். 

  • இது தவிர, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி ஒரு கண் வைத்திருக்க வேண்டும், இது அரையிறுதிக்கான பாதையில் தடையாக மாறலாம். இந்த போட்டியில் முடிந்தவரை பாகிஸ்தான் அணி தோற்றால் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி செல்லும் பாதை எளிதாக இருக்கும். அதே நேரத்தில், இன்றைய இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்திக்க வேண்டும். 


நவம்பர் 4 ஆம் தேதி, அதாவது இன்று, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையே ஒரு போட்டி நடைபெறவுள்ளது, இது கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டிக்கு சமமானது. இந்த போட்டி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு மட்டுமின்றி ஆப்கானிஸ்தானுக்கும் முக்கியமானது. ஏனெனில் இந்த இரண்டு அணிகளின் வெற்றி தோல்வியே ஆப்கானிஸ்தானின் அரையிறுதி பாதையை தீர்மானிக்கும். இனி வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


ஆப்கானிஸ்தானின் வெறித்தனம்:


 உலகக் கோப்பை 2023ல் ஆப்கானிஸ்தான் அணி முதலில் இங்கிலாந்து, பின்னர் பாகிஸ்தான், இலங்கை மற்றும் தற்போது நெதர்லாந்தை வீழ்த்தியுள்ளது. இப்போது ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறும். 


நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 179 ரன்களுக்குள் சுருண்டது. இந்த இலகுவான இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி வெறும் 31.3 ஓவர்களில் 181 ரன்களை பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பையில் இலக்கைத் துரத்திய ஆப்கானிஸ்தான் அணி பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும்.


இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் ரன்களை விரட்டும் போது பாகிஸ்தானை வீழ்த்தியது. 50 ஓவர்களில் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு, இலங்கையும் ஆப்கானிஸ்தானுக்கு 241 ரன்கள் இலக்கை நிர்ணயித்திருந்தது, ஆப்கானிஸ்தான் அணி 46-வது ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது ஆப்கானிஸ்தான் அணி நெதர்லாந்துக்கு எதிராக சேஸிங் செய்து வெற்றிபெற்றது.