நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் ஐந்து போட்டிகள் மும்பையில் நடைபெறவுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதற்கட்ட பயிற்சிகளை மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி உட்பட சில வீரர்கள் சென்னையில் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இரண்டு நாட்களில் அவர்களும் மும்பைக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.