செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது விமர்சையாக நடைபெற்று வருகிறது. மகாபலிபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகாபலிபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மிக இளம் வீரராக பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ராண்டா செடர் என்கிற எட்டு வயது சிறுமி செஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.   இன்று  ஒலிம்பியாட் போட்டியில் தனது முதலாவது ஆட்டத்தில் விளையாடிய அந்த இளம் வீராங்கனை முதல் கேமில் வெற்றியை பதிவு செய்தார். 



 

நாஜி சீகர் இவர் தான் பாலஸ்தீன  பொது ( ஓபன்) அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். ஐந்து வயது முதலே செஸ்ஸின் மீது ஆர்வம் உடைய சிறுமி செஸ் கற்றுக் கொண்டு விளையாடி வந்துள்ளார். பாலஸ்தீன நாட்டில் நடைபெற்ற மகளிர் காண செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தது தொடர்ந்து, சென்னையில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார் .

 

எட்டு வயது சிறுமி பாலஸ்தீன மகளிர் அணி பிரிவில் பங்கு பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற போட்டியிலும் சிறுமி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைதியான சூழலில் செஸ் போட்டிக்காக பயிற்சி எடுத்துக் கொள்வதே வழக்கமாக உள்ள நிலையில் தங்கள் நாட்டில் , துப்பாக்கி மற்றும் பீரங்கி சத்தங்கள் இடையே பயிற்சி மேற்கொண்டதாக அந்நாட்டு வீராங்கனைகள்.   

 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்று முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைத்து இந்திய அணிகளும் சிறப்பான வெற்றியை பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் களமிறங்கினர். முதல் சுற்று போட்டியில் ஓய்வில் இருந்த பிரக்ஞானந்தா இன்று களமிறங்கினார்.இந்நிலையில் தற்போது பிரக்ஞானந்தா உள்ளிட்ட 5 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். எஸ்டோனியா அணி வீரர் கிரில் சுக்கவினையை பிரக்ஞானந்தா இந்தியா பி அணி சார்பில் எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 41வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா கிரில் சுக்கவினை வீழ்த்தி அசத்தினார். அவரைப் போல் இந்திய சி பிரிவில் விளையாடிய கார்த்திக்கேயன் முரளி விளையாடினார். அவர் மெக்சிகோ வீரருக்கு எதிரான போட்டியில் 30வது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார்.




மகளிர் பிரிவில் இந்திய அணியில் இடம்பெற்று இருந்த நந்திதா சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் 34வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அதேபோல் இந்திய பி பிரிவில் இடம்பெற்று இருந்த அதிபன் பாஸ்கரன் 31வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.  இந்தியா பி பிரிவில் விளையாடிய மற்றொரு தமிழ்நாடு வீரரான குகேஷ் எஸ்டோனியா வீரரை வீழ்த்தி அசத்தினார். அவர் தன்னுடைய 39வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.