இந்தியா - இங்கிலாந்து அணிகள், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில், முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. 2-வது போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. 


முன்னதாக, டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, தற்போது விளையாடிவரும் இந்தியா 13 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 16, ராகுல் 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ரோஹித் சர்மா 25-இலும், தவான் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.


இந்திய அணியில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் விலகியதால், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், ரீஸ் டோப்ஸி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் வெல்லும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும்  என்பது குறிப்பிடத்தக்கது.