திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் அலிபிரி பாதை அருகே அசைவு உணவு சாப்பிட்ட இரண்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்து தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

Continues below advertisement

திருப்பதி திருமலையின் அலிபிரி சோதனைச் சாவடி அருகே அசைவ உணவு சாப்பிட்டதற்காக இரண்டு ஊழியர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பணிநீக்கம் செய்தது. அலிபிரி சோதனைச் சாவடி அருகே அசைவ உணவு உட்கொண்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, ராமசாமி மற்றும் சரசம்மா ஆகிய இரண்டு அவுட்சோர்சிங் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 

அலிபிரி முக்கிய நுழைவாயில்

திருப்பதி திருமலைக்கு செல்ல ஒரு முக்கிய நுழைவாயிலாக அலிபிரி செயல்படுகிறது. அங்கு கோயிலின் புனிதத்தன்மைக்கு ஏற்ப கடுமையான சைவ உணவு கடைபிடிக்கப்படுகிறது. திருமலை எல்லைக்குள் அசைவ உணவு, மது அல்லது புகையிலை உட்கொள்வது திருமலை திருப்பதி தேவஸ்தானம் விதிமுறைகளின் கீழ் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

அசைவு உணவு சாப்பிட்ட ஊழியர்கள்

இந்த நிலையில், அலிபிரி பகுதியில் சிலர் அசைவு சாப்பிட்டு கொண்டிருந்த வீடியோ ஒன்று சமூகவளைதளத்தில் வெளியாகி வைரலானது. இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஒரு முக்கியமான பாதுகாப்பு மண்டலமான அலிபிரி அருகே நடந்த இந்த சம்பவம், கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது மற்றும் சோதனைச் சாவடியில் நடந்து வரும் கண்காணிப்பின் செயல்திறன் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இந்த நிலையில், அலிபிரி அருகே அசைவு உணவு சாப்பிட்ட  இரண்டு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் ஒப்பந்த ஊழியர்கள் என்றும் திருமலை II நகர காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.

மேலும், புகாரைப் பெற்ற பிறகு விரைவாகச் செயல்பட்டதாகவும், புனித மலையின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார புனிதத்தை நிலைநிறுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் TTD அதிகாரிகள் தெரிவித்தனர்.

அலிபிரியில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஜனவரியில், பக்தர்கள் குழு ஒன்று திருமலைக்குள் அசைவ உணவைக் கடத்திச் சென்று, பின்னர் அதை உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச் மாதத்தில், வியாபாரிகள் சோதனைச் சாவடி வழியாக மது மற்றும் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இரண்டு தனித்தனி சம்பவங்கள், கோயிலுக்கு அருகில் கலவரத்தை ஏற்படுத்தின.

அலிபிரியில் சோதனைகளை தீவிரப்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, கோயில் நகரத்தின் புனித சூழலைப் பாதுகாக்க, சைவ உணவு மற்றும் அனுமதிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே திருமலைக்குள் நுழைவதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.