திருவள்ளுர் மாவட்டத்தில் சிறுவாபுரி முருகன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், திருவேற்காடு காமாட்சி அம்மன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் என நான்கு கோயில்களில் இன்று முதல்  பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல இந்து அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 52 கோயில்களில் இன்று முதல் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி முருகன் கோயில், சிறுவாபுரி முருகன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்களில் இன்று முதல் செல்போன்  எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

 

பக்தர்கள் வரவேற்பு

கோயிலின் முகப்பில் செல்போன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையும், காவல் துறையினர் கோயிலுக்குள் செல்போனை கொண்டு செல்லக்கூடாது என மைக் மூலமாகவும் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக கோயிலின் அருகே செல்போன் வாங்கும் இடம், செல்போன் பெறும் இடம் என 2 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக செல்போன்கள் வாங்கப்பட்டு 5 ரூபாய் கட்டணத்தில் அதற்கான பில் கொடுக்கப்படுகிறது. செல்போன்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மீண்டும் அந்த பில்லை கொடுக்கும்போது உரியவர்களிடம் செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை வரவேற்கத்தக்கது எனவும், 5 ரூபாய் கட்டணம்  வரவேற்கதகுந்ததாக இருந்தாலும் ஸகேன் மூலம் பணம் செலுத்தும் வசதியையும் கொண்டு வர வேண்டும் எனவும் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாதாரண செல்போனுக்கு தடையில்லை

கோயில்களில் இன்று முதல் பக்தர்கள் செல்போன்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், கேமரா வசதியுடைய செல்போன்களுக்கு மட்டுமே கோயில்களுக்குள் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாவும் கேமரா வசதியில்லாத செல்போன்களுக்கு கட்டுப்பாடு பொருந்தாது என்றும் கருவறையிலுள்ள சாமி சிலைகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்க செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.