காஞ்சிபுரத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக்கொள்ளை திருவிழா: வினோத வழிபாடு, காரணம் தெரியுமா?
"காஞ்சிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில், மயானக் கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது."

காஞ்சிபுரம் மாநகராட்சி 50-வது வார்டு ஓரிக்கை, சர்வோதயாநகர் முதல்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் 21 ஆம் ஆண்டு மாசி மாத மகா சிவாரத்திரி மற்றும் மயானக்கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஓவியர்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர், அமமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜெ.கே.ஜி சதீஷ் சீனிவாச பிரபு, துணைவியார் ஸ்ரீதேவி, சச்சின் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
சீர்வரிசை பொருட்கள்
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ பச்சையம்மனுக்கு 101 தட்டுடன் கூடிய சீர்வரிசை பொருட்களுடன், திருமாங்கல்யம் ஆகியவற்றை பொதுமக்கள் பேன்ட் வாத்தியங்களுடன் திருநங்கைகள் உற்சாக ஆட்டம், கொண்ட்டத்துடன் வீதிகளில் ஊர்வலமாக சென்று ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில் மருளாடி தனம்மாள் இடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ பச்சையம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விமர்சையாக நடைபெற்ற மயான சூறை திருவிழா
மேலும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ பச்சையம்மனுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள உதயமாங்குளம் குளக்கரை மாரியம்மன் கோவிலில் இருந்து அக்னி தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்து 2 டன் காய்கறிகளால்ளான பல விதமான காய்கறிகளை கொண்டு உருவாக்கப்பட்ட அரக்கனை வதம் செய்த பின்பு மயானக்கொள்ளை திருவிழாவில் அக்காய்கறிகளை பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முன்டியடித்துக் கொண்டு எடுத்து சொல்லும் வினோத வழிபாடு நடைபெற்றது. மேலும் மகாசிவராத்திரி மற்றும் மயானக்கொள்ளை விழாவிற்கு வந்திருந்த அனைத்து பொதுமக்களுக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
மயான கொள்ளை திருவிழா ஏன் நடைபெறுகிறது ?
அங்காள பரமேஸ்வரி அவதாரம் எடுத்த பார்வதி தேவி, மேல்மலையனூர் மயானத்திற்குச் சென்றார். அங்கு சுவையான உணவைச் சமைத்து மூன்று கவளங்களாக உருட்டினார். முதல் இரண்டு கவளங்களை கபாலத்திற்குப் போட்டார். அதன் சுவையில் மயங்கிய கபாலம், மூன்றாவது கவளத்தை அம்மன் தரையில் வீசியபோது, அதை உண்ண சிவனின் கையை விட்டு கீழே இறங்கியது. அந்த நொடி, அம்மன் தனது விஸ்வரூபத்தை எடுத்து கபாலத்தைத் தனது காலால் மிதித்து அழித்தார். சிவபெருமான் சாப விமோசனம் பெற்ற இந்த நிகழ்வே 'மயான கொள்ளை' என்று கொண்டாடப்படுகிறது.






















