ஆனி மாத ஆஷாட ஏகாதசி; சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ வாராஹி அம்மன்

தொடர்ந்து 9 நாட்களுக்கு ஆனி மாத ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு நாள்தோறும் மாலை வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.

Continues below advertisement

கரூர் மாவட்டத்தில் வீற்றிருக்கும் பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் 9 நாட்களுக்கு ஆனி மாத ஆஷாட ஏகாதசி முன்னிட்டு நாள்தோறும் மாலை  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

 


 

இதன் ஒரு பகுதியாக கரூர் உழவர் சந்தை பகுதியில் வீற்றிருக்கும் வாராஹி அம்மன் ஆலய அம்மனுக்கும், கரூர் மினி பேருந்து நிலைய கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் உன்மத்த வாராஹி அம்மன் சுவாமிக்கும் அதை தொடர்ந்து எல்ஜி பி நகர் கிழக்குத் தெரு சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராஹி அம்மனுக்கும், வெங்கமேடு பகுதியில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரம் நடைபெற்று ஏராளமான பக்தர்களும் முன்னிலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.

 


ஆனி அமாவாசையை முன்னிட்டு எல் ஜி பி நகர் கிழக்கு தெரு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.

ஆனி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல் ஜி பி நகர் கிழக்கு தெரு பகுதிகளில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பிரம்மி, ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ கௌமாரி, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ வராகி ஸ்ரீ இந்திராணி ஸ்ரீ சாமுண்டி ஸ்ரீ வீரபத்திரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பிரம்மி, ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ கௌமாரி, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ வராகி ஸ்ரீ இந்திராணி ஸ்ரீ சாமுண்டி ஸ்ரீ வீரபத்திரர் பரிவார தெய்வங்களுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பின்னர் ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

 


அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் எல்ஜி பி நகர் கிழக்கு தெரு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி அமாவாசை சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகிறது சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola