கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.


 


 




கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் காயத்ரி தேவிக்கு புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி ,குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காயத்ரி தேவிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தின் நடைபெற்ற புரட்டாசி மாத அமாவாசை சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலயத்தின் சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


மேலும், தேர் வீதி அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது.




 


தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தங்கத்தேரில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அமர்ந்திருந்தார். அதைத்தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட மாரியம்மன் தங்க தேரோட்ட திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார்.


 




 


கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.