பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ உன்மந்த வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எழுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




அதை தொடர்ந்து வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சந்தன காப்பு காட்சியளித்த வாராகி அம்மனுக்கு சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.


 


 




கரூர் மினி பேருந்து நிலையம் அருகே அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ உன்மந்த வாராகி அம்மனுக்கு நடைபெற்ற ஆனி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் குங்கும பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


 




கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியில் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.



ஆனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம் உழவர் சந்தை அருகே வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மனுக்கு தங்க கவசம் அணிவித்து பின்னர் வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.


 




கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து வாராகி அம்மனை மனம் உருகி வழிபட்டு சென்றனர். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டை உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து வந்தனர்.