கும்பாபிஷேகம் / குடமுழுக்கு விழா 
 
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பெரியோரின் வாழ்க்கை. அவ்வாறு கட்டப்படும் கோவில்களுக்கு  குறைந்தபட்சம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது. அவ்வாறு குடமுழுக்கு விழா செய்வது மூலம் உள்ளிருக்கும்  கடவுளின் சிலைக்கு தெய்வத்தன்மை புதுப்பிக்கப்படுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. குடமுழுக்கு விழாவானது புனித கலசத்தில் பல்வேறு, ஆறுகளின் புனித நீரை நிரப்பி மந்திரங்களால் தெய்வத்தன்மை, ஏற்பட்ட நீரினால் சிலைகளுக்கும் கோபுரத்தின் உச்சியில் கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்துவார்கள்.




தெய்வ சிலைகளும் கோபுர கலசங்களும் தெய்வத்தன்மை பெறுவதால் கோவிலுக்கு செல்லாமல் கோபுர தரிசனம் மூலமாக கடவுள் அருளைப் பெற முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.  இதன் அடிப்படையில்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற வார்த்தை வந்ததாகவும், ஒரு கருத்து உள்ளது.  மிகவும் முக்கியம் வாழ்ந்த விழாவாக குடமுழுக்கு விழா பார்க்கப்படுவதால் மிகச்சிறிய கோவில் என்றால் கூட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கு விழாவை காண வருகை புரிவார்கள்.


பாலாலயம் 


கும்பாபிஷேகம் என்பது இந்த அளவிற்கு மிக வாய்ந்த ஒன்றாக உள்ளது.  சிதிலமடைந்த மற்றும் பூஜை செய்வதற்கு ஏதுவற்ற கோவில்களை மீண்டும் புதுப்பித்து  கும்பாபிஷேகம் செய்து, நித்திய பூஜை செய்ய வேண்டும்.  அப்படி  பூஜை பூஜைகள் நிற்காமல் இருக்க பாலாலயம்  செய்யப்படுவது வழக்கம். கிட்டத்தட்ட இது தற்காலிக கோவிலுக்கு நிகரான ஒன்று. கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்பு பாலாலயம் செய்வது மிக இன்றி அமையாத ஒன்றாக பல ஐதீகங்கள் கூறுகின்றன. இதன் மூலம் தொடர்ந்து கடவுளின் அருள் பக்தர்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்,  இதன் மூலம் கோவிலை எந்த தடையும் இல்லாமல் வேகமாக கட்டி முடிக்கப்படும் என பக்தர்கள் நம்புகின்றனர்.


திருவீரட்டானேஸ்வரர் திருக்கோயில்


கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்களும் பரிகார தளங்களும் அமைந்துள்ளது. ப்ருதிவிஷேத்திரமாகவும்,  மோஷபுரிகளில் ஒன்றாகியும்,  ஸ்ரீ காமகோடி பீடஸ்தானமாகவும்,  63 நாயன்மார்களில் மூன்று நாயன்மார்கள் முக்தி பெற்ற இன்னும் பல அற்புதங்கள் நிறைந்த காஞ்சி மாநகரில், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிராய் வீட்டிலிருந்து பக்தர்களின் குறைகளை போக்கி வேண்டும் திருவீரட்டானேஸ்வரர் திருக்கோயில் அப்பாராவ் தெருவில் அமைந்துள்ளது.



இத்தளத்தில் 63 நாயன்மார்களில் ஒரு உருவான சாக்கிய நாயனார் முத்தி பெற்ற ஸ்தலமாகும் சேக்கிழார் எழுதிய புராணம் சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகை சுகன்யா முனிவர் எழுதிய காஞ்சிபுரம் ஆகிய நூல்களில் இத்திருக் கோயில் குறிப்பிட்டுள்ளது. பல சித்தர்களால் வழிபட்ட மேற்கண்ட ஆலயத்தின் திருப்பணி செய்ய ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி மகா சாமிகள்,  ஜெயேந்திர சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகளின் பரிபூரண அனுகிரத்துடன் திருப்பணி செம்மல் குரு சேவா ரத்னா மகாலட்சுமி  சுப்ரமணியன் அவர்கள் தலைமையில், திருப்பணி செய்ய தீர்மானிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் லக்கினத்தில் திருப்பணி துவங்க சிறப்பு கலசங்கள் நிறுத்தப்பட்டு சண்முகம் மற்றும் மகேஷ் சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம்,  மூலவர் விமானம்,  விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சன்னதிக்குகளுக்கான பாலாலயம் நடைபெற்றது. இப்ப பணிகளை ஆறு மாதத்திற்குள் முடித்து மகா கும்பாபிஷேகம் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.