<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>"திமுக தமிழ்நாட்டு மக்களுக்கு மொட்டை போட்டுவிட்டது!" - மதுரை எம்எல்ஏ முஸ்தபா ஆவேசம் !</title><atom:link href="https://tamil.abplive.com/spiritual/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 15:52:37 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-mangaimadam-veera-narasimha-perumal-temple-car-festival-tnn-268576</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-mangaimadam-veera-narasimha-perumal-temple-car-festival-tnn-268576#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 13:44:24 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-mangaimadam-veera-narasimha-perumal-temple-car-festival-tnn-268576</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் வீர நரசிம்ம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க தேரோட்டத்தில் பங்கேற்று 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை, ஜூலை 22;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மங்கைமடம் கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு வீர நரசிம்ம பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. பஞ்ச நரசிம்மர் சேத்திரங்களில் 2-வது தலமாகப் போற்றப்படும் இத்தலம், ஆன்மிக வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. திருமங்கை மன்னன் தனது வாழ்நாளில் குமுதவள்ளியைத் திருமணம் புரியும் நோக்கில், 1008 வைணவர்களுக்கு ஒரு வருடம் முழுமையாகத் ததி ஆராதனை (அன்னதானம்) செய்து, எம்பெருமானின் பேரருளைப் பெற்று 'திருமங்கை ஆழ்வார்' என்ற திருநாமம் பெற்ற திவ்ய தேசம் இதுவாகும். இத்தலம் அமைந்துள்ள பகுதி 'திருமங்கை வளநாடு' என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தோஷ நிவர்த்தி ஸ்தலம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்தகைய பழமையும் ஆன்மிகச் சிறப்பும் பல வாய்ந்த இத்தலத்தில் வீர நரசிம்ம பெருமாளை மனதாரச் சேவித்தால், ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கி, தடைப்பட்ட திருமணம் கைகூடும் மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். இதனால் இப்பகுதி மக்களுமன்றி, வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பிரம்மோற்சவ திருவிழா மற்றும் தேரோட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த ஜுலை 14-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் விழாவாக ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் சமேத வீர நரசிம்ம பெருமாள் ஆகியோரின் திருக்கல்யாண வைபவம் நடைபெற்ற நிலையில், 9 நாட்கள் நடைபெறும் இத்ததிருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையிலேயே மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பக்திப் பரவசத்தில் வலம் வந்த தேர்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ந்து, ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் சமேத வீர நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்கப் புறப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட திருத்தேரில் எழுந்தருளினார். தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை காண்பித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனையடுத்து 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற பக்தி முழக்கத்துடன் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரானது நான்கு வீதிகளின் வழியாகச் பக்திப் பரவசத்துடன் வலம் வந்தது. தேரோட்டப் பாதையின் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், தங்களது வீடுகளின் முன்பு கோலமிட்டு, தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து, தீபாராதனை எடுத்து பெருமாளை வழிபட்டனர். விழாவில் சீர்காழி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வீர நரசிம்ம பெருமாளையும், செங்கமலவல்லி தாயாரையும் தரிசித்து ஆன்மிகப் பேறு பெற்றனர். கோவில் நிர்வாகத்தினரும், ஊர் பொதுமக்களும் விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/dc3f52d688e68e784771d17786e2f0ef1784707553975186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! செவ்வாய்க்கிழமை நடந்த அதிசயம் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/spiritual/kanchipuram-vallakottai-murugan-temple-sees-huge-rush-of-devotees-on-tuesday-tnn-268504</link><comments>https://tamil.abplive.com/spiritual/kanchipuram-vallakottai-murugan-temple-sees-huge-rush-of-devotees-on-tuesday-tnn-268504#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 21:53:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/kanchipuram-vallakottai-murugan-temple-sees-huge-rush-of-devotees-on-tuesday-tnn-268504</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததும், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற சிறப்புடையதுமான இத்தலத்திற்கு, முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கோயில் வரலாறு மற்றும் தல பெருமை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வல்லன் என்ற அசுரனை முருகப்பெருமான் வதம் செய்து அருள் பாலித்ததால் இத்தலம் 'வல்லக்கோட்டை' என்று பெயர் பெற்றது. கருவறையில் ஏழு அடி உயரத்தில் கம்பீரமாக காட்சிதரும் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். மேலும், தேவர்களின் தலைவனான இந்திரன் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு இந்திராணியை கரம்பிடித்த புராணச் சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு. இதனால் இத்தலம் சிறந்த 'கல்யாண பரிகாரத் தலமாக' விளங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வாரந்தோறும் இக்கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில், திருமண வரம் வேண்டி பிரார்த்தனை செய்பவர்களும், திருமணம் கை கூடி முடிந்தவர்களும் பெருமளவில் கலந்துகொள்கின்றனர். இதனாலேயே &quot;வந்தாரை வாழ வைக்கும் வல்லக்கோட்டை முருகன்&quot; என்ற சிறப்புப் பெயரும் இத்தலத்திற்கு உண்டு. அதுமட்டுமன்றி, இங்கு செய்யப்படும் 'சத்ரு சம்கார யாகம்' மிக முக்கிய பரிகாரமாகப் பார்க்கப்படுகிறது. திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், சின்னத்திரை கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இங்கு வந்து வழிபட்டு வாழ்வில் வளர்ச்சியடைந்துள்ளனர். புதிய திரைப்படங்களைத் தொடங்குவதற்கு முன்பாக திரைப் பிரபலங்கள் இக்கோயிலுக்கு வந்து அருள் பெற்றுச் செல்வது வழக்கமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, மங்களகரமாக 'கோ பூஜை' நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கருவறையில் உள்ள மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்திற்குப் பிறகு, முருகப்பெருமான் மஞ்சள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அருள் பாலிக்க, பக்தர்களின் &quot;அரோகரா&quot; கோஷத்துடன் பொது தரிசனம் தொடங்கியது. அதேபோல், உற்சவர் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் காலையில் பால் அபிஷேகம் செய்யப்படடு, சிறப்பு 'மந்திர புஷ்ப பூஜை' மற்றும் அழகிய மலர் அலங்காரம் செய்யப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முருகனுக்குரிய உகந்த நாள் என்பதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களின் வசதிக்காக, மண்டல இணை ஆணையர் சி. குமரதுரை அறிவுறுத்தலின்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ. செந்தில்குமார் தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பாகச் செய்திருந்தார். மேலும், கோயில் வளாகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, வருகை தந்த பக்தர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகளும், தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/5c6e358a04c587e3e30233bc3339ad5c17846509384351319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கடன் தொல்லையா? ஒரே ஒரு தடவை இந்த கோயில்களுக்கு போயிட்டு வாங்க.. அப்புறம் பாருங்க]]></title><link>https://tamil.abplive.com/spiritual/debt-issues-problems-solved-temples-in-tamil-nadu-268398</link><comments>https://tamil.abplive.com/spiritual/debt-issues-problems-solved-temples-in-tamil-nadu-268398#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 10:39:16 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/debt-issues-problems-solved-temples-in-tamil-nadu-268398</guid><description><![CDATA[&lt;p&gt;ஒவ்வொரு திருத்தலங்களுக்கும் ஒவ்வொரு தனித்தன்மையும், ஸ்தல வரலாறும் உள்ளது. ஒவ்வொரு கோயில்களுக்கும் நாம் சென்று வரும்போது நாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் ஐதீகம் ஆகும்.&lt;/p&gt;
&lt;p&gt;இன்று பலரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது கடன் பிரச்சினை. கடன் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு எந்தெந்த கோயில்களுக்கு செல்லலாம்? என்பதை கீழே காணலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சவுரிராஜ பெருமாள் கோயில்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏராளமான புண்ணிய தலங்கள் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ளது திருமருகல். இந்த பகுதிக்கு அருகே அமைந்துள்ள திருக்கோயில் திருக்கண்ணாபுரம் சவுரிராஜப் பெருமாள் திருக்கோயில் ஆகும். திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக இந்த கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள மூலவர் நீலமேகப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோயிலுக்குச் சென்று பெருமாளை மனமுருக வேண்டினால் நமது கடன் தொல்லை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இந்த பெருமாள் பக்தர்களின் பாவங்களை தானமாக வாங்கிக்கொண்டு, பக்தர்களின் தோஷங்களை நீக்கும் வல்லமை கொண்டவராக கருதப்படுகிறார்.&lt;/p&gt;
&lt;h2&gt;திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்:&lt;/h2&gt;
&lt;p&gt;கோயில் நகரமான கும்பகோணம் அருகே அமைந்துள்ள கோயில் திருச்சேறை சாரபரமேஸ்வரர் திருக்கோயில். புகழ்பெற்ற சிவன் கோயிலான இந்த கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை கடன் நிவர்த்தீஸ்வரர் என்று பக்தர்கள் போற்றுகின்றனர். இந்த கோயில் 11 சோமவாரங்களில் அதாவது 11 திங்கட்கிழமையில் தொடர்ந்து சிவபெருமானை வணங்கி கடன் தொல்லைகள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கடும்பாடி சின்னம்மன் கோயில்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சென்னையின் முக்கியமான நகரமாக திகழும் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கடும்பாடி சின்னம்மன் கோயில். புற்றுவடிவில் சுயம்பாக தோன்றியதால் இந்த கோயில் மிக மிக பிரபலமான கோயிலாக திகழ்கிறது. இந்த கடும்பாடி சின்னம்மன் கோயில் சைதை மக்களின் குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் உள்ளது. இந்த கோயிலில் மனமுருகி வேண்டிக்கொண்டால் கடன் பிரச்சினை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;தாண்டிக்குடி பாலமுருகன் கோயில்:&lt;/h2&gt;
&lt;p&gt;திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற கொடைக்கானலில் அமைந்துள்ளது தாண்டிக்குடி. இங்கு அமைந்துள்ளது பாலமுருகன் கோயில். இந்த கோயிலுக்கு நேரில் சென்று இங்குள்ள முருகனை வழிபட்ட பிறகு, அங்குள்ள பைரவரை வணங்கினால் கடன் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், கடன் தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம் என்பதும் நம்பிக்கை ஆகும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe src=&quot;//www.youtube.com/embed/1E4iCRu0ySE?si=uY7Qv8cYFwCAZ5RF&quot; width=&quot;560&quot; height=&quot;314&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-often-should-you-wash-and-change-your-bedsheets-health-risks-details-in-pics-268389&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/dd8e25a6965c52f309901a4299b8913b1784610511598102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காளி வீதியுலா கோலாகலம்: தஞ்சை கரந்தையில் திரண்ட திரளான பக்தர்கள்]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/grand-kali-procession-throngs-of-devotees-gather-at-karanthai-thanjavur-tnn-268360</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/grand-kali-procession-throngs-of-devotees-gather-at-karanthai-thanjavur-tnn-268360#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 08:16:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/grand-kali-procession-throngs-of-devotees-gather-at-karanthai-thanjavur-tnn-268360</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சாவூர்:&lt;/strong&gt; தஞ்சாவூர் கரந்தையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற &amp;nbsp;ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் ஆடி மாத மகாபாரத உபன்யாசம் மற்றும் தீமிதி திருவிழாவையொட்டி, விழாவின் முக்கிய நிகழ்வான காளி படுகளம் மற்றும் காளி வீதி உலா பக்தி பரவசத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் கரந்தை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/52b4585c562a503b699f97bba8b36b401784601893064733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தை முன்னிட்டு மகாபாரத வரலாற்றை மையமாகக் கொண்டு பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் தீமிதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜூன் 29-ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றதுடன் விழா கோலாகலமாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வுகளை எடுத்துரைக்கும் உபன்யாசங்கள் நடைபெற்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த உபன்யாசங்களில் ஸ்ரீகிருஷ்ணன் வரலாறு, தருமர் பிறப்பு, திரௌபதி அம்மன் அவதாரம், சுபத்ரா கல்யாணம், பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட மகாபாரதத்தின் முக்கிய அத்தியாயங்கள் பக்தர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் ஆன்மிக சொற்பொழிவைக் கேட்பதற்காக ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான காளி படுகளம் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காளி அம்மன் மேளதாளங்கள் முழங்க, பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு மத்தியில் கரந்தையின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து அருள்பாலித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காளி அம்மன் வீதி உலா வந்தபோது, வீதியின் இருபுறங்களிலும் பக்தர்கள் திரண்டு நின்று மலர் தூவி வரவேற்றனர். பலர் தங்களது வீடுகளின் முன்பு கோலமிட்டு, குத்துவிளக்குகள் ஏற்றி, தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வீதி உலாவை முன்னிட்டு கரந்தை முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீதிகள், பக்தர்களின் பக்திப் பாடல்கள் மற்றும் மேளதாள இசையால் ஆன்மிகச் சூழல் நிலவியது. திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு விழாக்குழுவினர் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவையொட்டி சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ந்து நடைபெற உள்ள தீமிதி திருவிழா மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/a12b1c8f85e3172680a56340c142e6ee1784601732811733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-september-17-property-recovery-tnn-268332</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-september-17-property-recovery-tnn-268332#respond</comments><pubDate>Mon, 20 Jul 2026 22:04:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-september-17-property-recovery-tnn-268332</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களை மீட்கவும், மீனாட்சியம்மன் கோயிலை புனரமைத்து விரைவாக குடமுழுக்கு நடத்தவும் கோரிய வழக்கு. கோயிலின் குடமுழுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. - கோயில் நிர்வாகம் தரப்பில் தகவல்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மதுரை மீனாட்சி அம்மன் கோயில்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உப கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை முறையாக மீட்டு பராமரிக்கவும், கோவிலை புனரமைத்து விரைவாக குடமுழுக்கு நடத்தவும் உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அரசுத் தரப்பில், &quot; வீரவசந்தராயர் மண்டப&amp;nbsp; பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. புதிய நவீன சமையலறை அமைப்பதற்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்து விடும். கோயிலின் குடமுழுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது&quot; என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், &quot; ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை. தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் வசூலிக்கப்பட வேண்டிய தொகை&amp;nbsp; வசூலிக்கப்படாமல் உள்ளது&quot; என தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/27/3e3ae83985158daa08b1041f4049a050_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் எதிரொலி: தவெகவினர் செய்த காரியம் என்ன தெரியுமா?]]></title><link>https://tamil.abplive.com/entertainment/vijay-jananaayagan-movie-release-tvk-mayiladuthurai-mayuranathar-kovil-special-worship-tnn-268316</link><comments>https://tamil.abplive.com/entertainment/vijay-jananaayagan-movie-release-tvk-mayiladuthurai-mayuranathar-kovil-special-worship-tnn-268316#respond</comments><pubDate>Mon, 20 Jul 2026 18:57:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ பொழுதுபோக்கு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/entertainment/vijay-jananaayagan-movie-release-tvk-mayiladuthurai-mayuranathar-kovil-special-worship-tnn-268316</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை, ஜூலை 20: &lt;/strong&gt;தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நடிப்பில் அவரது திரைப்பயணத்தின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' திரைப்படம், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கும் பலத்த தணிக்கை சிக்கல்களுக்கும் பிறகு, வரும் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியாகவுள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வெளிவரும் முதல் படம் மற்றும் அவரது இறுதித் திரைப்படம் என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள திரையுலகினர், அரசியல் கட்சியினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் கரைபுரண்டு ஓடுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தப் படத்தின் ரிலீஸை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தொண்டர்களும், ரசிகர்களும் மாநிலம் முழுவதும் பல்வேறு வகையான ஆன்மீக வழிபாடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று மயிலாடுதுறை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில், தவெக கட்சியின் சார்பில் 'ஜனநாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவேண்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திரண்டு வந்த தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்ட தவெக மற்றும் ரசிகர் மன்றங்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டு நிகழ்வில், ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். கோயில் நுழைவு வாயிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க, உற்சாகக் கோஷங்களுடன் ஊர்வலமாக வந்த அவர்கள், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் பதாகைகளையும், சுவரொட்டிகளையும் ஏந்தியவாறு வலம் வந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ந்து, கோயிலின் மூலவரான மாயூரநாதருக்கும், அம்பாள் அன்னை அபயாம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. முதலமைச்சர் சி. ஜோசப் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; அரசியலில் மட்டுமின்றி, தனது கடைசித் திரைப்படத்தின் மூலமாகவும் மாபெரும் சாதனையைப் படைக்க வேண்டும் என்றும், படம் தடையின்றி வெளியாகி வசூல் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்றும் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சிறப்புப் பூஜைகளும் பிரத்யேக வழிபாடுகளும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் விளம்பரப் பலகைகள் மற்றும் பிரத்யேக போஸ்டர்களை வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. திரைப்படத்தின் வெற்றியை வேண்டி கோயில் வளாகத்தில் தேங்காய் உடைத்து, கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து விழாவில் கலந்துகொண்ட தவெக மாவட்ட நிர்வாகி ஒருவர் பேசுகையில், &quot;எங்கள் அன்புத் தலைவர், தமிழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் கடைசித் திரைப்படம் என்பதால், இது வெறும் சினிமா ரிலீஸ் அல்ல; எங்கள் இயக்கத்திற்கு இது ஒரு திருவிழா. பல்வேறு முட்டுக்கட்டைகளைத் தாண்டி படம் திரைக்கு வருகிறது. அவர் வழிகாட்டுதலின்படி, மக்கள் சேவையில் மட்டுமல்லாமல், கலைத்துறையிலும் அவர் என்றும் உச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்று எங்கள் கட்சியின் சார்பில் இந்த கூட்டுப் பிரார்த்தனையை நடத்தியுள்ளோம்&quot; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வரும் ஜூலை 23-ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 'ஜனநாயகன்' திரைப்படம் திருவிழாக்கோலமாக வெளியிடப்படவுள்ளது. தியேட்டர்களின் முன்பாக பிரம்மாண்ட கட்-அவுட்டுகள், பாலபிஷேகம் மற்றும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். முதலமைச்சரின் இறுதிப் படம் என்பதால் சட்டம்-ஒழுங்கைப் பேணும்படியும், ரசிகர்கள் அமைதியாகவும் உற்சாகமாகவும் கொண்டாடும்படியும் தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்ற இந்த விசேஷ பூஜைகள் மூலம், &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வினரின் 'ஜனநாயகன்' திரைப்படக் கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டன என்று கூறினால் அது மிகையாகாது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/20/cc3fd07ac6039c500db9ab250210f78f1784554007980186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மாதுளை அலங்காரத்தில் மஹாவாராஹி... தஞ்சாவூரில் பக்திப்பரவசத்தில் மிதந்த பக்தர்கள்]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/maha-varahi-adorned-with-pomegranates-devotees-in-thanjavur-immersed-in-devotional-ecstasy-tnn-268127</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/maha-varahi-adorned-with-pomegranates-devotees-in-thanjavur-immersed-in-devotional-ecstasy-tnn-268127#respond</comments><pubDate>Sun, 19 Jul 2026 13:18:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/maha-varahi-adorned-with-pomegranates-devotees-in-thanjavur-immersed-in-devotional-ecstasy-tnn-268127</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சாவூர்:&lt;/strong&gt; தஞ்சை பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி 6-ம் நாள் விழாவில் மாதுளை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கும் தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு நடைபெற்று வரும் 24-வது ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது. விழாவின் 6-ம் நாளான இன்று மஹாவாராஹி அம்மனுக்கு கண்கவர் மாதுளை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. சிவப்பு நிற மாதுளைப் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் திருக்கோலத்தை தரிசிக்க காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆன்மிக மகத்துவம் பெற்ற ஆஷாட நவராத்திரி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரியகோயில், சிவபெருமானின் புகழ்பெற்ற திருத்தலமாக மட்டுமல்லாமல், பல அரிய தெய்வ சன்னதிகளைக் கொண்ட ஆன்மிக மையமாகவும் திகழ்கிறது. அவற்றில் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கும் மஹாவாராஹி அம்மன், சக்தி வழிபாட்டில் மிக முக்கியமான தெய்வமாக கருதப்படுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட மாதத்தில் நடைபெறும் நவராத்திரி விழா, தஞ்சாவூர் பெரியகோயிலின் மிக முக்கிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த விழா தஞ்சை பெரியகோயிலில் உள்ள மஹாவாராஹி அம்மனுக்கே சிறப்பாக நடைபெறுவது இதன் தனிச்சிறப்பாக பக்தர்களால் கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழா&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;24-வது ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த ஜூலை 13-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மஹாவாராஹி அம்மனுக்கு வெவ்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;6-ம் நாள் மாதுளை அலங்காரம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விழாவின் 6-ம் நாளான இன்று மஹாவாராஹி அம்மனுக்கு மாதுளைப் பழங்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டது. சிவப்பு நிற மாதுளைப் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் திவ்ய திருக்கோலம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீபாராதனையின்போது பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பி, அம்மனின் அருளைப் பெற்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாதுளை அலங்காரத்தை தரிசிப்பது சிறப்பான பலன்களை அளிக்கும் என்ற நம்பிக்கையால், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் நீண்ட வரிசையில் காத்திருந்து மஹாவாராஹி அம்மனை வழிபட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;10 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆஷாட நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் மஹாவாராஹி அம்மனுக்கு தனித்துவமான அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, மகா தீபாராதனை மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் நிறைவு நாளில் சிறப்பு யாகங்கள், பூர்ணாஹூதி, மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பக்தி வெள்ளத்தில் தஞ்சை பெரியகோயில்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி தஞ்சை பெரியகோயில் வளாகம் முழுவதும் பக்தி நிறைந்த சூழல் நிலவியது. பக்தர்கள் குடும்பத்துடன் வந்து மஹாவாராஹி அம்மனை தரிசித்து, நெய்தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மஹாவாராஹி அம்மனின் அருளைப் பெறும் இந்த ஆன்மிக விழா, பக்தர்களுக்கு பக்தி, நம்பிக்கை மற்றும் இறையருளை உணர்த்தும் வகையில் சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/19/edb85df7501bdb95fe808702100a36ed1784447206981733_original.png" width="220"/></item><item><title><![CDATA[நெருப்புப் பிழம்பாய் வந்த ஈசன், சரணடைந்த அசுரன்! திருவெண்காட்டில் மிரள வைத்த ஆடிப் பூர மகா அபிஷேகம்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-thiruvenkadu-swetharanyeswarar-agora-moorthi-adi-pooram-abhishekam-tnn-268122</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-thiruvenkadu-swetharanyeswarar-agora-moorthi-adi-pooram-abhishekam-tnn-268122#respond</comments><pubDate>Sun, 19 Jul 2026 12:28:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-thiruvenkadu-swetharanyeswarar-agora-moorthi-adi-pooram-abhishekam-tnn-268122</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சீர்காழி:&lt;/strong&gt; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் புகழ்பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் முதன்மை பெற்ற புதன் பரிகார ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில், ஈசனின் ஐந்து முகங்களில் ஒன்றான சத்தியோஜாத முகத்திலிருந்து தோன்றிய அகோர மூர்த்தி சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலில், ஆடி மாத பூர நட்சத்திரத்தை முன்னிட்டு, உற்சவர் அகோர மூர்த்தி சுவாமிக்கு லட்சார்ச்சனை மற்றும் மகா அபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தல வரலாறு மற்றும் அகோர மூர்த்தியின் மகிமை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பண்டைய புராண வரலாற்றின் படி, மருத்துவ சூரன் என்ற அசுரன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அடுக்கடுக்கான துன்பங்களை விளைவித்து வந்தான். அவனது அராஜகத்தை அடக்கி, உலகைக் காக்க வேண்டி சிவபெருமான் தனது ஐந்து முகங்களில் ஒன்றான சத்தியோஜாத முகத்திலிருந்து அகோர மூர்த்தியாக அவதாரம் எடுத்தார். மாசி மாதம், பிரதமை திதி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பூர நட்சத்திரம் கூடிய நன்னாளில், ஈசன் பிரம்மாண்ட நெருப்புப் பிழம்பாக உருவெடுத்துத் தோன்றினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அகோர மூர்த்தியின் அந்த உக்கிரமான, தெய்வீகக் காட்சியைக் கண்ட மாத்திரத்திலேயே மருத்துவ சூரன் தனது ஆணவம் நீங்கி, சிவபெருமானின் திருவடிகளில் சரணாகதி அடைந்தான்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், தான் கண்ட அதே திவ்ய ரூபத்தில் ஈசன் திருவெண்காடு ஸ்தலத்தில் எழுந்தருள வேண்டும் என்றும், தம்மை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் வரம் வேண்டினான். அசுரனின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், அகோர மூர்த்தியாக இத்தலத்தில் தனிச் சன்னதி கொண்டு, தன்னை அண்டி வரும் பக்தர்களுக்குப் பிணிகளும், பயங்களும் நீங்கி வேண்டும் வரங்களை அள்ளித்தரும் வள்ளலாக அருள்பாலித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பல்வேறு திரவியங்களால் நடைபெற்ற மகா அபிஷேகம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆடி மாத பூர நட்சத்திர முன்னிட்டு, உற்சவர் அகோர மூர்த்தி சுவாமிக்குச் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. விழாவையொட்டி, சன்னதியில் சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்கின. அதனைத் தொடர்ந்து, உற்சவர் அகோர மூர்த்தி சுவாமிக்கு நறுமணப் பொருட்கள் மற்றும் மங்களப் பொருட்களால் மகா அபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், அரிசி மாவு, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, தேன், பஞ்சாமிர்தம், நாட்டுச் சர்க்கரை, பசும்பால், தயிர், இளநீர்,வாசனை மிகுந்த பன்னீர் மற்றும் சந்தனம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உள்ளிட்ட 16 வகையான சோடச உபசார திரவியங்களைக் கொண்டு சுவாமிக்குத் தொடர்ச்சியாக அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அபிஷேகத்தின் போது கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் &quot;நமச்சிவாய&quot; மற்றும் &quot;அகோர வீரபத்திராய நமஹ&quot; என்ற கோஷங்களை எழுப்பி பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மலர் அலங்காரமும் மகா தீபாராதனையும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மகா அபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உற்சவர் அகோர மூர்த்தி சுவாமிக்குத் தூய பட்டு உடுத்தி, வண்ணமயமான நறுமண மலர்களாலும், மல்லிகைச் சரங்களாலும் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களையும், சிவபுராணத்தையும் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆன்மீக வழிபாட்டுச் சடங்குகளைக் கோவில் தலைமை அர்ச்சகர் ராஜப்பா குருக்கள் முறைப்படி சாஸ்திரோக்தமாகச் செய்து வைத்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திரளான பக்தர்கள் பங்கேற்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆடிப் பூர சிறப்பு வழிபாட்டைக் காண்பதற்காகத் திருவெண்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்தும், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்களுக்குச் சுவாமியின் விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இத்திருவிழா திருவெண்காடு பகுதியில் பெரும் ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/19/7b9ab95286f4f8262ea4b3d1d3dabfab1784444308846186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கண்கொள்ளாக் காட்சி! மகிஷ வாகனத்தில் கம்பீரமாக காட்சியளித்த வெற்றி வராகி அம்மன்: பக்தி பரவசத்தில் மயிலாடுதுறை!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/mayiladuthurai-padithurai-viswanathar-temple-vetri-varahi-amman-ashadha-navratri-mahisharuda-alankaram-tnn-268090</link><comments>https://tamil.abplive.com/spiritual/mayiladuthurai-padithurai-viswanathar-temple-vetri-varahi-amman-ashadha-navratri-mahisharuda-alankaram-tnn-268090#respond</comments><pubDate>Sat, 18 Jul 2026 22:34:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/mayiladuthurai-padithurai-viswanathar-temple-vetri-varahi-amman-ashadha-navratri-mahisharuda-alankaram-tnn-268090</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறையின் புகழ்பெற்ற காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தில், ஆஷாட நவராத்திரி விழாவின் மிக முக்கிய நிகழ்வான பஞ்சமி திதியை முன்னிட்டு, அருள்மிகு வெற்றி வராகி அம்மனுக்கு மகா யாகமும், அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட மகிஷாரூட அலங்கார வழிபாடும் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன. இதில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆஷாட நவராத்திரியின் ஆன்மீகப் பின்னணி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்து மத வழிபாட்டில் ஓராண்டில் மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அவை புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரி, தை மாதத்தில் வரும் சியாமளா நவராத்திரி, பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரி மற்றும் ஆனி-ஆடி மாதத்தில் வரும் ஆஷாட நவராத்திரி ஆகும். இதில் ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி தனிச்சிறப்பு வாய்ந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அன்னை பராசக்தியின் பெரும் படைத்தளபதியாகவும், தீமைகளை அழிக்கும் சக்தியாகவும் விளங்கும் ஸ்ரீ வராகி அம்மனுக்கு உகந்த வழிபாட்டு காலமாக இது போற்றப்படுகிறது. எதிரிகள் தொல்லை நீங்கவும், எடுத்த காரியங்களில் வெற்றி பெறவும் வராகி அம்மனை இந்நாட்களில் வழிபடுவது விசேஷமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வெற்றி வராகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு யாகம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை காவிரி ஆற்றின் கரையில், இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள வெற்றி வராகி அம்மனுக்கு, கடந்த 14ஆம் தேதி காப்புக்கட்டுடன் ஆஷாட நவராத்திரி விழா வெகுவிமரிசையாகத் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விழாவின் முக்கிய நாளான பஞ்சமி திதியான இன்று அதிகாலை முதலே ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலை 8.00 மணியளவில், உலக நன்ம வேண்டியும், பக்தர்கள் தங்களின் வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் பெற வேண்டியும் பிரம்மாண்டமான மகா யாகம் தொடங்கப்பட்டது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, யாக குண்டத்தில் பல்வேறு நறுமணப் பொருட்கள், மூலிகைகள் மற்றும் திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. யாக குண்டத்தின் முன்பு கலசங்கள் வைக்கப்பட்டு, புனித நீர் ஆவாகனம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;16 வகையான மகா அபிஷேகம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;யாகத்தின் பூர்ணாஹுதிக்குப் பின்னர், தியாக குண்டத்தில் வைத்து முறைப்படி பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கருவறைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அதன்பின், வெற்றி வராகி அம்மனுக்கு மகா அபிஷேகம் விமரிசையாகத் தொடங்கியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தூய மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி மற்றும் பல்வேறு நறுமணத் திரவியப் பொடிகளால் சிறப்பு அபிஷேகங்கள் வரிசையாகச் செய்யப்பட்டன. இறுதியாக, யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு அன்னைக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் &quot;ஓம் சக்தி, ஜகதம்பே, வராகி தாயே&quot; என பக்தி கோஷங்களை எழுப்பினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கண்கொள்ளாக் காட்சியாக 'மகிஷாரூட அலங்காரம்'&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அபிஷேக ஆராதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அன்னை வெற்றி வராகி அம்மனுக்குத் திரை இடப்பட்டு, கருவறையில் மகா அலங்காரப் பணிகள் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டன. ஆஷாட நவராத்திரியின் பஞ்சமி திதி நாளான இன்று, அன்னை வராகி தேவி மகிஷ வாகனத்தின் (எருமை கடா) மீது கம்பீரமாக அமர்ந்திருக்கும் 'மகிஷாரூட அலங்காரம்' செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பச்சை பட்டு உடுத்தி, தங்கக் கவசங்கள் மற்றும் வண்ணமயமான மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, கைகளில் ஆயுதங்கள் ஏந்தி அன்னை காட்சியளித்த விதம் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. சோடச உபசார தீபாராதனைகளுடன், தூப தீபங்கள் காட்டப்பட்டு, கற்பூர ஆராதனை நடைபெற்ற போது ஒட்டுமொத்த ஆலயமும் ஆன்மீக ஒளியில் பிரகாசித்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திரண்ட ஆன்மீகப் பெருங்கடல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த அரிய மகிஷாரூட அலங்கார தரிசனத்தைக் காண்பதற்காக மயிலாடுதுறை மட்டுமின்றி, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தில் திரண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வழிபாட்டில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் ஆலயத்தின் சார்பில் மஞ்சள், குங்குமப் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகிகள் மற்றும் மயிலாடுதுறை ஆன்மீக அமைப்பினர் இணைந்து செய்திருந்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/18/e1e00c22131d422e2d9466790d56989c1784394235994186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["திமுக தமிழ்நாட்டு மக்களுக்கு மொட்டை போட்டுவிட்டது!" - மதுரை எம்எல்ஏ முஸ்தபா ஆவேசம் !]]></title><link>https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-chief-minister-vijay-musthafa-tnn-268071</link><comments>https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-chief-minister-vijay-musthafa-tnn-268071#respond</comments><pubDate>Sat, 18 Jul 2026 20:40:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-chief-minister-vijay-musthafa-tnn-268071</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தமிழக முதல்வர் வருகை தர உள்ளார் - மத்திய தொகுதி tvk எம்எல்ஏ முஸ்தபா.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;tvk எம்எல்ஏ முஸ்தபா செய்தியாளர் சந்திப்பு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கவிழா மற்றும் பிரியாணி வழங்கும் விழா நடைபெற்றது.&amp;nbsp;விழாவில் கலந்து கொண்ட மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி வழங்கும் விழாவை துவக்கி வைத்தார்.&amp;nbsp;பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை&amp;nbsp; மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா....,&quot; உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17, 2026 அன்று நடைபெறுகிறது. கும்பாபிஷே விழாவிற்கு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் வருகை தர உள்ளார். நாங்கள் அழைப்பு கொடுக்க உள்ளோம் என்றார். மதுரை மத்திய தொகுதியில் கழிவுநீர் தெருக்களில் சாக்கடையாக ஓடுகிறது மற்றும் குடிநீர் பிரச்னைகள் இருக்கிறது. இவற்றை நாங்கள் உடனுக்குடன் சரி செய்து வருகிறோம். பாதையில சாப்பிட திட்டத்தை பொறுத்த அளவில் பம்பிங் சீசனை அதிகப்படுத்த வேண்டும். எவ்வளவு தான் சரி செய்தாலும் மறுநாளே பாதாள சாக்கடை கழிவு நீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மரியாதைக்குரிய விஜய் அவர்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்துள்ளார்கள்.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;கடந்த ஆட்சி காலங்கள்ல இரண்டு அமைச்சர்கள் மதுரையில் இருந்தும் மதுரை குப்பை மாநகராக இருந்துள்ளது மதுரை மாநகராட்சி எவ்வித வளர்ச்சியும் அடையாமல் உள்ளது. மதுரை மாநகராட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் ஆட்சி மாற்ற வேண்டும் என கோரி தமிழக மக்கள் மரியாதைக்குரிய விஜய் அவர்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்துள்ளார்கள்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;திமுகவினர் மக்களுக்கு மொட்டை போட்டு விட்டார்கள், &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;வேண்டுமென்றே வன்மத்தை கக்குகிறார்கள், ஏற்கனவே திமுகவினர் மக்களுக்கு மொட்டை போட்டு விட்டார்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு மொட்டை போட்டு விட்டார்கள்.&amp;nbsp;கொடைக்கானலில் 500 பேர் வரக்கூடிய கோயில் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் மல்டி விஷாலிட்டி கார் பார்க்கிங் அமைத்துள்ளார்கள். பழனி கோயில் விவகாரத்தில் முற்றிலும் அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியினர் பொய்யை வாரி இறைக்கின்றனர். மத்திய தொகுதி சார்பாக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பிரசித்தி பெற்ற உலகப் புகழ் பெற்ற பிரம்மாண்ட மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; அவர்களை அழைக்க உள்ளோம். கும்பாபிஷேக முன் ஏற்பாடு பணிகள் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் மீண்டும் நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளார்&quot; என்றார்&amp;zwnj;.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/18/782499581e25543ff43ead8e5c39034f1784387386305184_original.jpeg" width="220"/></item></channel></rss>