<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!</title><atom:link href="https://tamil.abplive.com/spiritual/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 05:10:32 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/sathuragiri-forest-fire-devotees-entry-cancelled-district-collector-announcement-tnn-270852</link><comments>https://tamil.abplive.com/spiritual/sathuragiri-forest-fire-devotees-entry-cancelled-district-collector-announcement-tnn-270852#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 21:27:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/sathuragiri-forest-fire-devotees-entry-cancelled-district-collector-announcement-tnn-270852</guid><description><![CDATA[&lt;div dir=&quot;auto&quot;&gt;சதுரகிரி மலையில் மீண்டும் காட்டுத்தீ - பக்தர்களுக்கு அனுமதி ரத்து -&amp;nbsp; விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பிரசித்தி பெற்ற சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் மலை, ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அதிகளவு மதுரை, விருதுநகர், தேனி மாவட்ட மக்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இந்த வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை வனத்துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், காட்டுத்தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக வனத்துறையினரிடம் இருந்து தகவல் வரப்பெற்றதை அடுத்து, நாளை பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி உண்டு என மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்நிலையில், இன்று இரவு சுமார் 7.00 மணியளவில் சதுரகிரி மலை வனப்பகுதியில் காட்டுத்தீ மீண்டும் பரவியுள்ளதாக மதுரை மாவட்ட வன கண்காணிப்பாளரிடம் இருந்து தகவல் வரப்பெற்றுள்ளது. தற்போது காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு நலன் கருதி, நாளை சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது நிலவும் காட்டுத்தீயினால் பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தை கருத்தில் கொண்டு, இயல்பு நிலை திரும்பும் வரை, நாளை&amp;nbsp; சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை சீரான பிறகு பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்வதற்கான அனுமதி குறித்து மீண்டும் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/18/9ec30b1492ce7d4de1699690b731e82b1702882279346184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/aadi-month-last-week-wedding-event-happening-upcoming-aavani-1st-muhurtham-270833</link><comments>https://tamil.abplive.com/spiritual/aadi-month-last-week-wedding-event-happening-upcoming-aavani-1st-muhurtham-270833#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 18:08:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/aadi-month-last-week-wedding-event-happening-upcoming-aavani-1st-muhurtham-270833</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டின் உள்ள ஒவ்வொரு மாதமும் தனித்துவம் வாய்ந்த மாதம் ஆகும். அந்த வகையில், மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக இருப்பது ஆடி மாதம் ஆகும். ஆடி மாதம் என்றாலே ஆன்மீகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆடி கடைசி வாரம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக திகழ்கிறது. அம்மன் மட்டுமின்றி சிவபெருமான், முருகப்பெருமான் என மற்ற தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஆடி மாதம் முழுவதும் ஆன்மீக மாதமாக இருந்தாலும் ஆடி மாதத்தில் பெரும்பாலும் திருமணங்கள் நடைபெறுவதில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;ஆடி மாதம் முடிந்த பிறகு வரும் ஆவணி மாதத்தில் வரும் முகூர்த்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. &amp;nbsp;ஏனென்றால், ஆடி மாதத்தில் திருமண காரியத்தை செய்யாத ஜோடிகளுக்கு இந்த மாதத்தில் திருமணம் செய்து வைப்பது வழக்கம் ஆகும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆடி முடிந்து வரும் முதல் முகூர்த்தம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நிலையில், ஆடி மாதம் வரும் 18ம் தேதி பிறக்கிறது. இந்த மாதத்தில் வரும் முதல் முகூர்த்த நாளாக வரும் ஆகஸ்ட் 23ம் தேதி உள்ளது. இந்த ஆகஸ்ட் 23ம் தேதி முகூர்த்த நாள் பல்லாயிரக்கணக்கான ஜோடிகளுக்கு தமிழ்நாட்டில் திருமணம் நடைபெற உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;ஆடி மாதம் முடிய உள்ள நிலையில், பல திருமண வீடுகளிலும் திருமண பணிகள் மிகவும் படுஜோராக நடந்து வருகிறது. ஆவணி மாதத்தில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில், சந்தைகளில் காய்கறிகள் வரத்து இறக்குமதி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருமண மண்டபங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு திருமண பணிகளுக்காக தயாராக உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;களைகட்டும் விற்பனை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மேலும், ஜவுளி கடைகளிலும் பட்டுப்புடவைகள் விற்பனை, பட்டு வேஷ்டி, சட்டை விற்பனையும் மிகவும் ஜோராக நடைபெற்று வருகிறது. நகை கடைகளிலும் தங்க விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பொதுவாக திருமணங்கள் கோயில்களிலே நடைபெறும் என்பதால் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயில்களில் திருமணம் செய்வதற்கான முன்பதிவும் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.&amp;nbsp; ஆடி மாதத்தில் பலரும் அம்மனுக்கு விரதம் இருத்தல் போன்ற பல்வேறு வேண்டுதலில் இருந்ததால் இறைச்சி விற்பனை குறைந்த அளவே இருந்தது. ஆடி மாதம் முடிய உள்ளதால் ஆவணி மாதத்தில் இறைச்சி விற்பனை மீண்டும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஆடி மாத கடைசி வாரம் என்பதால் தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் களை கட்டி வருகிறது. அம்மனுக்கு கூழ் வார்த்தல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்று பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனையும் செய்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆடி கடைசி வாரம் என்பதால் கோயில்களில் கடந்த வாரத்தில் வந்த பக்தர்களை காட்டிலும் இந்த வாரம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/vegetables-to-avoid-during-monsoon-know-details-270805&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/686acf26d622364390eec1a8791c49c01786451890914102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!]]></title><link>https://tamil.abplive.com/crime/dhandayuthapani-swamy-koumara-madam-property-encroachment-bjp-kalamani-tnn-270729</link><comments>https://tamil.abplive.com/crime/dhandayuthapani-swamy-koumara-madam-property-encroachment-bjp-kalamani-tnn-270729#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 22:01:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/dhandayuthapani-swamy-koumara-madam-property-encroachment-bjp-kalamani-tnn-270729</guid><description><![CDATA[&lt;div dir=&quot;auto&quot;&gt;பழனி தண்டாயுதபாணி சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள கௌமார மடத்திற்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இடம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கனகராஜ் மனைவி கலாமணி அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதம். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் , இந்து சமய அறநிலை துறை செயலாளர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் பூலாம்பட்டியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி தாக்கல் செய்த மனு. பழனி கோவில் அடிவாரத்தில் பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் மடம்&amp;nbsp; உள்ளது. இது கௌமாரமடாலயத்திற்க்கு சொந்தமானது இது பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இடம் இதன் மொத்த நிலங்கள் 1.77 ஏக்கர் பரப்பளவு கொண்டது தற்போதைய சந்தை மதிப்பீட்டில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புடையது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt; பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட கோரி மனு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த சொத்துக்கள் மடத்திற்கு காரணமாக கொடுத்ததின் நோக்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இளைப்பாறவும் வாகனங்களை நிறுத்திக் கொள்வதற்கும் உணவுகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு ஆகும் ஆனால் இந்நிலையில் இந்த சொத்துக்களை உடுமலை பகுதியைச் சேர்ந்த அம்பிகா திண்டுக்கல் சேர்ந்த பாஜக பிரமுகர் கனகராஜ் மனைவி கலாமணி உள்ளிட்டோர் ஆக்கிரோப்பு செய்து அதில் வணிக நிறுவனங்கள் வாடகை வாகன நிறுத்தம் இடங்கள் வைத்து நடத்தி வருகின்றனர். மேலும் மடத்திற்கு சொந்தமான சொத்தை 99 வருட குத்தகை ஒப்பந்தமும் போட்டுள்ளனர் மத நிறுவனங்கள் சொந்தமான சொத்துக்களை ஐந்து வருடங்களுக்கு மேல் தனிநபருக்கு குத்தகை பதிவு செய்ய முடியாது என்பது விதி இதனை மறைத்து மோசடியாக குத்தகை பத்திரங்கள் போடப்பட்டுள்ளது எனவே குத்தகை பத்திரங்களை ரத்து செய்து 150 கோடி ரூபாய் மதிப்பீட்டு சொத்துக்களை மீட்டு பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;இந்த மனு என்று நீதிபதிகள் கார்த்திகேயன் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவில் நிலங்களை மோசடியாக குத்தகை பதிவு செய்து தனி நபர்கள் வருவாய் ஈட்டி வருகின்றனர் இது சட்டவிரோதம் மடத்தின் சொத்துக்கள் மீட்கப்பட உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். அரசு தரப்பில் இதே கோரிக்கையுடன் மேலும் சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மட கௌமாரமடம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு மற்ற வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/10/66db23b0adc9ecfc7b11f99d090ae8df1783687205259184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/do-you-want-to-overcome-obstacles-to-marriage-visit-lord-vedapureeswarar-at-thiruvedikudi-to-find-your-life-partner-tnn-270607</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/do-you-want-to-overcome-obstacles-to-marriage-visit-lord-vedapureeswarar-at-thiruvedikudi-to-find-your-life-partner-tnn-270607#respond</comments><pubDate>Sun, 9 Aug 2026 14:58:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/do-you-want-to-overcome-obstacles-to-marriage-visit-lord-vedapureeswarar-at-thiruvedikudi-to-find-your-life-partner-tnn-270607</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: திருமணத் தடையா... முழுமையாக நீங்க திருவேதிக்குடி வேதபுரீசுவரர் கோயிலுக்கு வாங்க என்று பக்தர்களே நம்பிக்கையுடன் அழைக்கும் ஸ்தலமாக அமைந்துள்ளது. சரிங்க இந்த கோயில் எங்கே இருக்கு. தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த திருவேதிக்குடி வேதபுரீசுவரர் கோயில். இறைவன் வேதபுரீசுவரர். இறைவி மங்கையர்கரசி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இக்கோயிலில் நுழைந்ததும் இடது புறம் கணபதி அமர்ந்துள்ளார். இவரை வேத விநாயகர், வேதம் கேட்ட விநாயகர் என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். காரணம் சிரசை ஒரு புறமாகச் சாய்த்து காதை சற்று உயர்த்தி வேதம் கேட்கும் பாவனையில் கணபதி அமர்ந்துள்ளார். வேதங்கள் வழிபட்ட தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எப்போதும் வேதியர்கள் வேதம் ஓதிக் கொண்டிருந்த இடம். வேத நாயகரான பிரம்மன் வழிபட்ட தலம். வேதபுரீசுவரர் ஆக வேதத்தின் பொருளாக சிவபெருமான் விளங்குகிறார் என்றால் வேதத்தின் சொல்லாகவும், அதன் இனிமையாகவும் மங்கையர்கரசி அம்மன் உள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கல்வெட்டுக்கள் இத்தல இறைவனை திருவேதிக்குடி மகாதேவர் என்றும், பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் எனவும் குறிப்பிடுகின்றன. திருநாவுக்கரசு சுவாமிகள் 'ஐயனை ஆராவமுதினை நாமடைந்து ஆடுதுமே' எனப் பாடுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இறைவன் சுயம்பு மூர்த்தி வாழை மடுவில் சுயம்புவாகத் தோன்றியதால் வாழை மடுநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்தத் திருக்கோயில் பிரகாரத்தைச் சுற்றி 108 சிவலிங்கங்கள் வரிசையாக அமைந்துள்ளன. இந்தத் தலத்தை ஒரு முறை வலம் வந்து தரிசனம் செய்தால் 108 சிவாலயங்களை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சூரியன் வழிபட்ட தலம். இப்போதும், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 13 - 15 ஆம் தேதிகளில் சூரிய பகவான் தன் பொற் கிரணங்களால் வேதபுரீசுவரரை அர்ச்சிப்பதை காணலாம். மேலும், செல்வங்களுக்கு அதிபதியான குபேரனும் இத்தல இறைவனை வழிபட்டு வரம் பெற்றுள்ளார். நந்தியெம் பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் ஒரு பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் கூடிய சுப நாளில் திருமழப்பாடியில் திருமணம் நடத்த முடிவு செய்கிறார் அய்யாரப்பர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதற்காகச் சுற்றியுள்ள ஏழு ஊர்களில் இருந்து பொருள்களைச் சேகரிக்கிறார். திருமணத்துக்குத் தேவையான பழங்கள் கொடுத்த ஊர் திருப்பழனம். விருந்துக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் கொடுத்த ஊர் திருச்சோற்றுத்துறை. கண்டாபரணங்கள் வழங்கிய ஊர் திருக்கண்டியூர். மலர்களும், மாலைகளும் வழங்கிய ஊர் திருப்பூந்துருத்தி. ஹோமங்களுக்கு தேவையான நெய்யை வழங்கிய ஊர் திருநெய்தானம். திருமணச் சடங்குகளுக்குத் தேவையான வேதம் அறிந்த வேதியர்கள் திருவேதிக்குடியிலிருந்துதான் சென்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அய்யாரப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் சித்திரை மாதத்தில் புது மணமக்களான நந்தியெம்பெருமான் சுயசாம்பிகை தலத்துக்கு அழைத்து வந்து நன்றி தெரிவிக்கிறார். இது ஏழூர் வலம் என்ற சப்தஸ்தான திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நந்தியெம்பெருமானுக்கே திருமணம் நடத்தி வைக்க காரணமாக இருந்த தலம் என்பதால் இது திருமணத் தடை நீக்கும் தலமாக இருக்கிறது. நம்பிக்கையுடன் திருவேதிக்குடி வந்து வேதபுரீசுவரரையும், மங்கையர்க்கரசியையும் வழிபடுபவர்களுக்கு திருமணத்தடை நீங்குகிறது. இத்தலத்திற்கு வந்து வழிபட்ட பின்னர் வீட்டுக்குச் சென்று இத்தலத்தில் சம்பந்தர் பாடிய பதிகத்தில் உள்ள உன்னி இரு போதும் எனத் தொடங்கும் பாடலை 48 நாட்களுக்குத் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் விரைவில் திருமணம் கைக்கூடி வரும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது திருமணத் தடை நீங்கிய நூற்றுக்கணக்கானவர்களின் அனுபவம். திருமணம் நடந்த பிறகு கணவன், மனைவி இருவருமாக வந்து பிரார்த்தனையை நிறைவு செய்யலாம். ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள் தங்களது குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு கணவன்- மனைவி விரிசல் இருந்தாலும், ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டிருந்தாலும் இங்கு வந்து வழிபட மனக் கசப்பு நீங்கி ஒற்றுமை பிறக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நல்ல திருமணத்தை விரும்புகிறவர் இங்கு வந்து திருமண மங்கலச் சடங்குகளைச் செய்தால் பதினாறு பேறுகளும் பெற்று நிறைவாழ்வு வாழலாம். எனவே திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட தடங்கல்கள் நீங்கி திருமணம் சிறப்பாக நடக்கும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/09/49b4fcf825e8e5f43e0f20b0c1c1e5621786267685235733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/simply-visiting-this-holy-site-is-enough-to-dispel-navagraha-afflictions-do-you-know-which-place-it-is-tnn-270604</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/simply-visiting-this-holy-site-is-enough-to-dispel-navagraha-afflictions-do-you-know-which-place-it-is-tnn-270604#respond</comments><pubDate>Sun, 9 Aug 2026 14:51:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/simply-visiting-this-holy-site-is-enough-to-dispel-navagraha-afflictions-do-you-know-which-place-it-is-tnn-270604</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம்: ஜாதகத்தில் எந்தவித நவக்கிரக தோஷம் இருந்தாலும் அதை நீக்கிவிடும் தலம் எங்கிருக்கிறது என்று தெரியுங்களா? தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 123-வது தலமாக நாகை மாவட்டம் திருக்குவளை கோளிலிநாத சுவாமி கோயில் உள்ளது. இத்தலத்து இறைவன் கோளிலிநாதர், பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி வண்டமர் பூங்குழலி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். இறைவன் கோளிலிநாதரை வழிபடுவதால், பக்தர்களுக்கு ஜாதகத்தில் எந்தவித நவக்கிரக தோஷம் இருந்தாலும் அவை நீங்கிவிடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/09/f552bf1b5ce8415a29cc589171c67fb31786267191867733_original.jpg&quot; /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இத்தலத்துக்கு திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பதிகம் பாடப்பட்ட ஸ்தலம். சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொய் கூறியதால் அவரது படைப்புத் தொழிலை இறைவன் பறித்து சாபம் இடுகிறார். இதனால் தனது சாபம் நீங்க, பிரம்மா இத்தல இறைவனை தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்குகிறார். தொடர்ந்து அத்தீர்த்தத்தால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிரம்மாவுக்கு சாபம் ஏற்பட்டதால் அவரது படைப்புத் தொழில் பாதிக்கப்பட, அவரது கட்டுப்பாட்டில் இயங்கும் நவக்கிரகங்களாலும் தங்களது தொழிலை சரிவர செய்ய முடியவில்லை. நவக்கிரகங்களும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு பலன் பெற்றனர். நவக்கோள்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. இறைவனுக்கும் கோளிலிநாதர் என்ற பெயர் வழங்கலாயிற்று. கோளிலிநாதரை வழிபடுவதால், பக்தர்களுக்கு ஜாதகத்தில் எந்தவித நவக்கிரக தோஷம் இருந்தாலும் அவை நீங்கிவிடும் என்பது இத்தலத்தின் சிறப்பு. பிரம்மா வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருவாரூரில் இருந்து தென்கிழக்கே எட்டுக்குடி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. இத்தலத்துக்கு அருகில், திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் அமைந்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருக்கோளிலி தலம், தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்கோளிலி ஆகும். விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். நடனம் பிருங்க நடனம். பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். அகத்தியர் பூசித்த லிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமாகக் காட்சி தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்துக்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் திருக்குவளை என்றும் பெயர் பெற்றது. கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. பிரகார வலம் வரும்போது தென் மேற்கில் தியாகவிநாயகரும், அடுத்து விசுவநாதர் லிங்க மூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் சந்நிதிகளும் உள்ளன. முருகப் பெருமானுக்கு அழகான சந்நிதி உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி தனிக்கோவிலாக உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி, இறைவி சந்நிதி இரண்டும் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளன. பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதால் இத்தலத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வேண்டுதல் நிறைவேறுகிறது என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத உறுதியான குரலாக ஒலிக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/09/a0e9685bec61dbd1569e2c5847bfc01a1786267151571733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/spiritual/aadi-amavasya-2026-date-and-ancestor-worship-procedure-at-home-270583</link><comments>https://tamil.abplive.com/spiritual/aadi-amavasya-2026-date-and-ancestor-worship-procedure-at-home-270583#respond</comments><pubDate>Sun, 9 Aug 2026 11:20:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/aadi-amavasya-2026-date-and-ancestor-worship-procedure-at-home-270583</guid><description><![CDATA[&lt;p&gt;முன்னோர்களை வழிபட மிக உகந்த நாளாக பார்க்கப்படும் ஆடி அமாவாசை 2026ஆம் ஆண்டு எப்போது வருகிறது என்பதைப் பற்றிக் காணலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆடி அமாவாசை சிறப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்து மதத்தில் அமாவாசை, பௌர்ணமி தவிர்த்து 14 வளர்பிறை மற்றும் தேய்பிறை திதிகள் உள்ளது. ஒவ்வொரு திதியும் பல்வேறு விதமான சிறப்புகளை கொண்டிருக்கிறது. அப்படியாக அமாவாசையானது முன்னோர்களை வழிபட உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் நாம் முன்னோர்களை 3 அமாவாசைகளில் கட்டாயம் வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அதன்படி ஆடி, புரட்டாசி, தை ஆகிய 3 அமாவாசைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் அவர் தம் குடும்ப உறுப்பினர்களை காணும் பொருட்டு ஆடி மாத அமாவாசை நாளில் பூலோகத்திற்கு புறப்பட்டு வருவார்கள். புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை நாளில் பூமியில் தங்கி தை மாத அமாவாசை நாளில் மீண்டும் பித்ருலோகம் திரும்புவார்கள் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் இந்த மற்ற அமாவாசைகளில் முன்னோர் வழிபாடு, தர்ப்பணம் போன்றவை கொடுக்காவிட்டாலும், இந்த 3 அமாவாசைகள் தவறாமல் கடபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;TVK Ravisankar Assembly | &amp;quot;We are not like you... Did we use the CM's face?&amp;quot; Deputy Speaker's ste...&quot; src=&quot;https://www.youtube.com/embed/PS7tjVene7g&quot; width=&quot;1022&quot; height=&quot;575&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;2026 ஆடி அமாவாசை எப்போது?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அதன்படி 2026ம் ஆண்டு ஆடி அமாவாசை வரும் ஆகஸ்ட் 12ம் தேதி புதன் கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் நீர்நிலைகளில் மறைந்த நம் முன்னோர்களுக்கு பலரும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். சிலரால் இந்நாளில் பல காரணங்களால் நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாது. அவர்கள் வீட்டிலேயே பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி தர்ப்பணம் செய்யலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;வீட்டிலேயே தர்ப்பணம் செய்வது எப்படி?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதற்கு முதலில் மறைந்த முன்னோர்கள் புகைப்படங்களை ஓரிடத்தில் வைக்க வேண்டும். இது கட்டாயம் கிடையாது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர், கருப்பு எள், தர்ப்பைப்புல், ஒரு தாம்பாளம், மோதிர விரலில் அணியும் தர்ப்பை புல்லாலான பவித்திரம் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தர்ப்பணம் செய்பவர்கள் சூரிய உதயம் தொடங்கிய நேரத்தில் இருந்து நண்பகல் 12 மணிக்குள் செய்து விட வேண்டும். தர்ப்பணம் கொடுக்க கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி அமர வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தாம்பால தட்டை நன்கு கழுவி அதனை உங்கள் முன் வைக்கவும். அதில் தர்ப்பைப்புல்லை கிழக்கு மேற்காக பரப்பி முன்னோர்களை மனதார நினைத்து அவர்களின் பெயர் கோத்திரம் ஆகியவற்றை கூறி மனதார அழைக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;பவித்திரத்தை வலது கை மோதிர விரலில் அணிந்துக் கொண்டு வலது கையின் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே உள்ள பகுதி வழியாக கருப்பு எள் கலந்த தண்ணீரை பித்ரு தீர்த்தமான நினைத்து தட்டில் உள்ள தர்ப்பைப்புல்லின் மீது விட வேண்டும். இதனை தந்தை மற்றும் தாய் வழி முன்னோர்களுக்காக தலா 3 &amp;nbsp;முறை செய்ய வேண்டும். பின்னர் இரு கைகளையும் கூப்பி சூரியனை நோக்கி வணக்கம் செலுத்தி குடும்பத்தினரை ஆசீர்வசித்து நல்வழிப்படுத்த வேண்டும் என மனதார பிராத்தனை செய்யவும். தர்ப்பணம் செய்த தண்ணீரை யாரும் மிதிக்காதவாறு செடி, கொடிகளின் வேர்களில் ஊற்றி விட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் வீட்டில் உள்ள முன்னோர் புகைப்படத்திற்கு அவர்களுக்குப் பிடித்த உணவுகள், திண்பண்டங்கள் போன்றவை படைத்து வழிபட வேண்டும். மாலையில் அருகிலுள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று கட்டாயம் வழிபட வேண்டும். இந்நாளில் தர்ப்பணம் செய்பவர்கள் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும். விரதம் முடித்த பின்னரே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இந்நாளில் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்க நாம் தானம் செய்யலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-how-to-lose-5-kg-of-weight-in-a-month-270335&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/09/5f112ffaf60d157b21cdc91687efb1a217862546221921322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-kamakshi-amman-temple-celebrated-the-aadi-4th-velli-thanga-ther-vizha-with-grand-rituals-tnn-270451</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-kamakshi-amman-temple-celebrated-the-aadi-4th-velli-thanga-ther-vizha-with-grand-rituals-tnn-270451#respond</comments><pubDate>Fri, 7 Aug 2026 21:24:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-kamakshi-amman-temple-celebrated-the-aadi-4th-velli-thanga-ther-vizha-with-grand-rituals-tnn-270451</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;Aadi Velli Kanchipuram Kamakshi Amman:&lt;/strong&gt; ஆன்மீகப் பெருமையும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், அகில உலகிலும் உள்ள சக்தி பீடங்களில் முதன்மையான ஆதி பீடமாகத் திகழ்கிறது. அம்மனுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் ஆடி மாதத்தில், பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் பிரார்தனைகளும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் பேரானந்தம் தரும் வகையில் தங்கத் தேர் உற்சவம் மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றது. இந்த மகத்தான நிகழ்வைக் காண்பதற்காகவும், அம்பாளின் அருள்மழையில் நனைவதற்காகவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவில் வளாகத்தில் திரண்டனர்.&lt;/p&gt;
&lt;h4 style=&quot;text-align: justify;&quot;&gt;அம்பாளுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகமும் வண்ணமயமான தங்கத் தேர் அலங்காரமும்&lt;/h4&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையின் பெருமையை முன்னிட்டு, அதிகாலை முதலே திருக்கோவிலில் நடை திறக்கப்பட்டு, காஞ்சி காமாட்சி அம்மனுக்குப் பல்வேறு நன்னீராட்டு அபிஷேகங்களும் சிறப்பு ஆராதனைகளும் பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்டன. தொடர்ந்து, அம்பாளுக்குத் திருவாபரணங்கள் பூட்டப்பட்டு, கண்கவர வைக்கும் சிவப்பு நிறப் பட்டு உடுத்தப்பட்டது. மேலும், நறுமணம் கமழும் மல்லிகைப் பூக்கள் மற்றும் வர்ணஜாலம் காட்டும் சாமந்திப் பூ மாலைகளால் அம்மன் பேரழகுடன் அலங்கரிக்கப்பட்டார். லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவியுடன் இணைந்து சிறப்புச் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய அம்பாள், தங்கத் தேரில் வீற்றிருந்து அங்கு கூடியிருந்த ஆன்மீக அன்பர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலித்தார்.&lt;/p&gt;
&lt;h4 style=&quot;text-align: justify;&quot;&gt;மேளதாள முழக்கத்துடன் நடைபெற்ற தங்கத் தேர் உலா&amp;nbsp;&lt;/h4&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தங்கத் தேர் உற்சவம் தொடங்கியதும், நாதஸ்வர இசை மற்றும் மங்களகரமான மேளதாளங்கள் கோவில் வளாகமெங்கும் அதிர்ந்தன. உபயதாரர்களும் திரளான ஆன்மீகப் பெரியோர்களும், ஆர்வமிக்க பக்தர்களும் பக்திப் பெருக்கோடு தங்கத் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்துச் சென்றனர். காஞ்சி காமாட்சி அம்மன் தங்கத் தேரில் பவனி வந்து கோவில் பிரகாரத்தை வலம் வந்தபோது, அங்கே கூடியிருந்த உள்ளூர்வாசிகள், வெளியூர் பக்தர்கள், பக்கத்து மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருகை தந்த ஆன்மீக அன்பர்கள் அனைவரும் &quot;ஓம் சக்தி, பராசக்தி&quot; என்ற கோஷங்களை விண்ணதிர முழங்கினர். அம்பாளின் இந்த அருள்நிறைந்த தங்கத் தேர் உலாவைக் கண்டு பரவசமடைந்த பக்தர்கள் அனைவரும் மனமுருகி காமாட்சி அம்மனைத் தரிசித்து, தங்களுடைய பிரார்த்தனைகளைச் செலுத்தி வழிபட்டனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/07/1f578c168ee56052e8cc8f5dd01d8ce417861180148711319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/a-remarkable-blend-of-science-and-spirituality-the-secret-of-chidambaram-tnn-270434</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/a-remarkable-blend-of-science-and-spirituality-the-secret-of-chidambaram-tnn-270434#respond</comments><pubDate>Fri, 7 Aug 2026 19:19:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/a-remarkable-blend-of-science-and-spirituality-the-secret-of-chidambaram-tnn-270434</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: &amp;nbsp;சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலும் மனித உடற்கூறியலும் (Human Anatomy) ஒன்றோடொன்று அச்சு பிசகாமல் ஒத்துப்போகின்றன என்பது அறிவியல் மற்றும் ஆன்மீகத்தின் வியக்கத்தக்க கலவையாகும். எப்படி என்பதை பார்ப்போமா!!!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சிதம்பரம் திருக்கோயிலின் அமைப்பும்... மனித உடலின் வடிவமைப்பும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, அது மனித உடலையே கோயிலாக உருவகப்படுத்தி சோழர் காலத்தில் கட்டப்பட்ட அற்புதமான கட்டடக்கலை நுட்பமாகும். திருமந்திரத்தில் திருமூலர், &quot;உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்&quot; என்று பாடியதன் நிதர்சனமான வடிவமே இத்தலமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மனித உடலும் கோயில் அமைப்பும்: வியப்பூட்டும் ஒப்பீடுகளும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோயிலின் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் மனித உடலின் பாகங்களோடும் அமைப்புகளோடும் எவ்வாறு துல்லியமாகப் பொருந்துகின்றன என்பதைப் பின்வரும் ஆய்வுக் குறிப்புகள் விளக்குகின்றன:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இதயம் (சிற்சபை):&lt;/strong&gt; மனித உடலின் மையப்பகுதியிலும், இடதுபுறம் சற்றே சாய்ந்தும் அமைந்திருப்பது இதயம். அதேபோல, சிதம்பரம் கோயிலின் மையப் பகுதியான சிற்சபை (பொன்னம்பலம்) கோயில் வளாகத்தின் இடதுபுறமாகச் சற்றே சாய்ந்து அமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சுவாசச் சுழற்சி (தங்க ஓடுகள்):&lt;/strong&gt; பொன்னம்பலத்தின் கூரையில் வேயப்பட்டுள்ள 21,600 தங்க ஓடுகள், ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாகச் சுவாசிக்கும் மூச்சுக்காற்றின் (Swasa Count) எண்ணிக்கையைக் குறிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாடிநரம்புகள் (ஆணிகள்):&lt;/strong&gt; இந்தத் தங்க ஓடுகளைப் பிணைக்கப் பயன்படுத்தப்பட்ட 72,000 தங்க ஆணிகள் (Rivets), மனித உடலில் ஓடும் 72,000 நாடி நரம்புகளைக் குறிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;9 வாசல்கள் (நவ துவாரங்கள்):&lt;/strong&gt; மனித உடலில் உள்ள 9 துவாரங்களைக் (மலம், மூத்திரம், இரு கண்கள், இரு காதுகள், இரு நாசித்துவாரங்கள், வாய்) குறிக்கும் விதமாக கோயிலில் 9 நுழைவு வாசல்கள் அமைந்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பஞ்சபூதத் தத்துவம்:&lt;/strong&gt; சிதம்பரம் ஆகாயத் தலத்தைக் குறிக்கிறது. திருவாரூர் தியாகராஜர் நிலத்தின் அதிபதியாகவும், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் நீருக்கு அதிபதியாகவும், திருக்காளத்தி காளஹஸ்தீஸ்வரர் காற்றின் அதிபதியாகவும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் நெருப்பின் அதிபதியாகவும், ஆகாயத்தின் அதிபதியாக சிதம்பரம் நடராஜ பெருமானும் உள்ளனர். . ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவம் வரை சிவபெருமான் 108 தாண்டவம் ஆடியதாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக இருப்பவை ஐந்து. இவை பஞ்ச தாண்டவம் என அழைக்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலமாக திகழ்கிறது. மனித உடலும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களால் ஆனது என்பதை இக்கோயில் உணர்த்துகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சுவர்கள், பஞ்சாட்சரம் மற்றும் ஆதாரங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பஞ்சாட்சரப் படிகள்:&lt;/strong&gt; சிற்சபைக்கு செல்லும் 5 படிகள் சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரமான &lt;strong&gt;&quot;ந-ம-சி-வா-ய&quot;&lt;/strong&gt; என்பதைக் குறிக்கின்றன. இது மனிதனின் ஐந்து புலன்களைக் கடந்து இறைவனை அடையும் பாதையைக் காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தூண்களின் குறியீடு&lt;/strong&gt;: பொன்னம்பலத்தில் உள்ள 64 மரத்தூண்கள் மனிதனின் 64 ஆயக்கலைகளையும், அதைச் சுற்றியுள்ள தூண்கள் மனித உடலின் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளையும் குறிக்கின்றன. 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்கள் மற்றும் நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் இங்குள்ள தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பூகோள மையம்:&lt;/strong&gt; இக்கோயில் பூமியின் காந்தப்புலத்தின் மையப் புள்ளியில் (Equatorial Grid Center) அமைந்திருப்பதாக நவீன இயற்பியல் ஆய்வுகள் கூறுகின்றன. மனித உடலின் 'சுஷும்னா நாடி' அல்லது 'சக்ரா' மையத்தைப் போல இக்கோயில் பூமியின் முதன்மைச் சக்தி மையமாகச் செயல்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிதம்பரம் நடராஜர் கோயில் என்பது கற்களாலும் பொன்னாலும் கட்டப்பட்ட கட்டடம் மட்டுமல்ல; அது மனித உடலைப் பற்றிய ஆழமான அறிவியல் புரிதலை ஆன்மீகக் குறியீடுகளாக மாற்றியமைத்த தமிழர்களின் உச்சகட்டக் கலைப்படைப்பாகும். உடலே கோயில், அதில் வாழும் உயிரே சிவன் என்பதை சிதம்பரம் நம்மிடையே உரக்கச் சொல்கிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/07/f78b16adc83a461fa2cf2d4e2711e3f51786110505254733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கந்தனுக்கு அரோகரா! சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம்! பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்]]></title><link>https://tamil.abplive.com/spiritual/aadi-krithigai-sikkal-singaravelar-murugan-5000-liter-paal-abhishekam-nagapattinam-270416</link><comments>https://tamil.abplive.com/spiritual/aadi-krithigai-sikkal-singaravelar-murugan-5000-liter-paal-abhishekam-nagapattinam-270416#respond</comments><pubDate>Fri, 7 Aug 2026 17:10:14 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/aadi-krithigai-sikkal-singaravelar-murugan-5000-liter-paal-abhishekam-nagapattinam-270416</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நாகப்பட்டினம் அடுத்துள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற சிறப்பு வழிபாடும், 5,000 லிட்டர் பால் அபிஷேகமும் விமரிசையாக நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த தினமான ஆடி கிருத்திகை இன்று. இதையொட்டி, பல முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் விரதம் இருந்து கோயிலில் வழிபாடு செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/qz8pPepyeJM?si=5dNKg8F2m8hxehz2&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற முருகர் கோயிலான சிக்கல் சிங்கார வேலர் கோயிலில் ஆடி கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. &amp;ldquo;வேல் வாங்கிய ஸ்தலம்&amp;rdquo; என கந்தபுராணம் போற்றும் இத்தலத்தில், திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்ய முருகப்பெருமான் தனது தாயாரிடம் வேல் பெற்றதாக வரலாறு கூறுகிறது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் வளாகத்தில் சிறப்பு யாகத்துடன் வழிபாடுகள் தொடங்கின. இதனைத்தொடர்ந்து, கார்த்திகை மண்டபத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக எழுந்தருளிய சிங்காரவேலருக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் 5,000 லிட்டர் பால் பயன்படுத்தப்பட்டதோடு, யாகசாலையிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் 'ஆயிரம் கண் சல்லடை' வைத்தும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/07/90ee3a7ca9061102ed4dfa57949fbfd61786102696813113_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;br /&gt;​&lt;br /&gt;அபிஷேகத்தைத் தொடர்ந்து, சுவாமிக்கு வெண்பட்டாடை உடுத்தி, வண்ண வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மட்டுமின்றி, திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலில் குவிந்தனர். &quot;வேலும் மயிலும் துணை&quot;, &quot;முருகா முருகா&quot; என்ற சரண கோஷங்களுடன் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/which-is-most-expensive-tesla-car-price-specs-270384&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/07/2c52d49d1bdc8e3d02adb63ae57f41f11786102746927113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-thiruvidaikazhi-murugan-temple-aadi-krithigai-celebration-tnn-270407</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-thiruvidaikazhi-murugan-temple-aadi-krithigai-celebration-tnn-270407#respond</comments><pubDate>Fri, 7 Aug 2026 15:39:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-thiruvidaikazhi-murugan-temple-aadi-krithigai-celebration-tnn-270407</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த சிறப்பு வழிபாடு செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&amp;zwnj; &lt;/strong&gt;ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருவிடைக்கழி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் &amp;lsquo;முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா&amp;rsquo; என்ற பக்தி கோஷங்களுடன் பக்தி பரவசத்தில் வழிபாடு நடத்தினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆலய தல பெருமையும் புராண பின்னணியும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இத்திருக்கோயில் முசுகுந்த சக்கரவர்த்தியால் நிர்மாணிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமாகும். சூரபத்மனின் இரண்டாவது மகனும், சிவபக்தனுமான ஹிரண்யாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக் கொள்ள, முருகப்பெருமான் இத்தலத்தின் குரா மரத்தடியில் சிவபெருமானைப் பூஜித்து பாவ விமோசனம் பெற்றார் என்பது தலபுராண வரலாறு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பண்டைய தமிழ் இலக்கியங்களில் &amp;lsquo;குராவடி&amp;rsquo; என்ற பெயரில் குறிப்பிடப்படும் இத்தலம், முருகனின் பாவம் கழிந்த இடமாக அமைந்ததால் &amp;lsquo;திருவிடைக்கழி&amp;rsquo; என்று பெயர் பெற்றது. மேலும், முருகப்பெருமானை மணமுடிக்க விரும்பிய தெய்வானை அம்மையார் தவம் இயற்றிய பெருமைக்குரிய இடமாகவும் இது திகழ்கிறது. சிவபெருமானைப் பூஜித்த நிலையில் முருகப்பெருமான் காட்சி தரும் இத்தலம், பிரசித்தி பெற்ற திருச்செந்தூருக்கு நிகராகப் போற்றப்படுகிறது. அருணகிரிநாதர் உள்ளிட்ட சந்தக் கவிஞர்கள் இத்தலத்து முருகனைப் போற்றித் திருப்புகழ் பாடியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பாதயாத்திரையாக வருகை தந்த பக்தர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரையாகக் கோயிலுக்கு வருகை தந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக பால்காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி, பால்குடங்கள், ஆகியவற்றை ஏந்தி, பல கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும்.&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆடிக்கிருத்திகை நன்னாளை முன்னிட்டு அதிகாலை முதலே பாலசுப்பிரமணிய சுவாமிக்குத் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. மூலவருக்குப் பால், இளநீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியப் பொடிகளைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் பாதயாத்திரையாகக் கொண்டு வந்த பாலாலும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அபிஷேகத்தைத் தொடர்ந்து சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தூப தீப ஆராதனைகளுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பக்திப் பரவசத்தில் மூழ்கிய திருவிடைக்கழி - முருக பக்தர்கள் நெகிழ்ச்சி&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலை முதலே கோயிலின் வெளிப்பிரகாரம் மற்றும் உட்பிரகாரங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் &amp;lsquo;முருகனுக்கு அரோகரா&amp;rsquo;, &amp;lsquo;வேலனுக்கு அரோகரா&amp;rsquo; என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விழாவிற்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். பாதயாத்திரை வந்த பக்தர்களுக்கு வழிநெடுகிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர் வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன. அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கக் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/07/164c6aa54a849fe3a2fbeefadc55219d1786097311754186_original.jpg" width="220"/></item></channel></rss>