IPL 2023: 'நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாருமில்லை..' தோனி மேல் உள்ள பாசத்தை இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் மூலம் வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா
இரண்டு மாதங்களாக நடந்துவந்த ஐபிஎல் போட்டி நேற்று நிறைவடைந்தது. இறுதி போட்டியில் குஜராத் அணியுடன் மோதிய சென்னை அணி, வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை வென்றது.
இந்த வருட ஐ.பி.எல் தொடரில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரரான ஜடேஜா, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அந்த அளவுக்கு பூர்த்தி செய்யவில்லை.
பேட்டிங்கில் கணிசமான ஆட்டத்தை வெளிபடுத்தினாலும் பந்துவீச்சில் இவர் சென்னை அணிக்கு ஒரு பக்கபலமாக இருந்து வந்தார்.
இறுதிப்போட்டியில் பேட்டர்கள் அனைவரும் அவரவர் பங்குக்கு ரன்கள் சேர்த்து அவுட்டாக கடைசியாக களத்தில் இருந்தார் ஜடேஜா.
கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜா சிறப்பாக ஆடி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இதனை கொண்டாடும் போது தோனி ஆனந்த கண்ணீருடன் ஜடேஜாவை கட்டி தூக்கிகொண்டார்.இந்த புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைலாக மாற்றி தோனி மீது உள்ள அன்பை வெளிபடுத்தியுள்ளார் ஜடேஜா.