World sparrow day : ‘சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது..’ சிட்டு குருவி தினம் இன்று!
சிட்டு குருவிகள் உருவத்தில் சிரியதாகவே இருக்கும் உயரம் மூன்று முதல் நான்கு அங்குலம் வரை மட்டுமே வளரும் எடையானது முப்பது கிராமுக்குள்ளே இருக்கும்.
பெரும்பாலும் சிட்டு குருவிகள் பழுப்பு , சாம்பல் , மங்கலான வெள்ளை போன்ற நிறங்களில் காணப்படும்
இவை மனிதர்களோடு ஒன்றி வாழக்கூடிய ஒரு பறவை பரண் ,வீடுகளின் ஒருசிறுபகுதி போன்ற இடங்களில் கூடுகளை அமைக்கும்
சிட்டு குருவிகள் கம்பு, கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை உண்ண கூடியவை தற்போதைய சூழலில் எவை கிடைக்காததால் புழு பூச்சிகளை உண்ணுகின்றன
கடந்த பதினைந்து ஆண்டுகளில் சிட்டு குருவிகளின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் மிக குறைந்த அளவே காணப்படுகிறது
பெண் சிட்டு குருவிகள் இனசேர்கைக்கு பின், மூன்று முதல் ஐந்து முட்டைகளை இடும் அவைகளை பதினைந்து நாட்கள் வரை அடைக்காக்கும்
ஆசியா, ஐரோபியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சிட்டு குருவிகள், 3 முதல் 4 ஆண்டுகள் மட்டுமே வாழும்.
நகர்புற சூழல் ஒவ்வாத காரணத்தாலும் அலைபேசியின் கதிர்வீச்சுகளை தாங்க முடியாத காரணத்தாலும் இவை இறக்கின்றன