Nagesh Rare Photos: ’காலங்களுக்கும் அவன் கலைஞன்!’ - நகைச்சுவை நாயகன் நாகேஷ் பிறந்ததினம்
தமிழ் சினிமா நகைச்சுவை வரலாற்றை இரு கூறாய் போடவேண்டுமென்றால் அது நாகேஷுக்கு முன், பின் என்றுதான் வரையறுக்கமுடியும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇயக்குநர் ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை (1963) படத்தில் மனோரமா வீட்டுக்குள் புகுந்து அவரை காதலிக்க முற்படும்போது மனோரமாவின் அண்ணனாக வரும் ஜெமினி பாலகிருஷ்ணனிடம் நாகேஷ், உடல் மொழியோடு பேசும் வசன வித்தை, அதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத ஒன்று.
நாகேசுக்கு இயற்பெயர் குண்டுராவ். தாராபுரத்தில் ஒரு ரயில்வே ஊழியரின் மகன்.
பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்து தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த போதுதான் அம்மை வந்து முகமே மாறியது
1959-ல் வெளியான தாமரைக்குளம் படத்தில் நாகேஷுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாக இயக்குர் தயாரிப்பாளர் முக்தா வி சீனுவாசன் சொல்வார். ஆனால் அதற்கு முன்போ பாலாஜி கதாநாயகனாக நடித்த மானமுள்ள மறுதாரம் (1958) படத்தில் நாகேஷ் நடித்துவிட்டார் என்ற விவரமும் உண்டு
அவருக்கு மிகப்பெரிய பிரேக் என்றால் அது ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை (1962) படம்தான்
எம்ஜிஆருடன் பணத்தோட்டம், பெரிய இடத்துப்பெண் என இரண்ட படங்களில் வாய்ப்பு, பணத்தோட்டம் படத்தில்
அதன்பின் காதலிக்க நேரமில்லை, எங்கவீட்டு பிள்ளை, திருவிளையாடல், ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா,அதே கண்கள், ஊட்டி வரை உறவு, தில்லானா மோகனாம்பாள், வசந்தமாளிகை என தமிழ் சினிமாவின் காவியங்கள் அனைத்திலும் இவரின் பாத்திரங்கள் நாயகன்களுக்கு அப்படியொரு சவால் கொடுத்தவை.
நீர்க்குமி்ழி, சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் போன்றவையெல்லாம் நாகேஷின் தனி ஆவர்த்தனத்திற்காகவே எடுக்கப்பட்டவை. லோ பட்ஜெட்டில் இயக்குநர் கே.பாலசந்தருக்கு அடுத்தடுத்து கைகொடுத்து ஏற்றிவிட்ட ஏணி நாகேஷ்தான்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -