Afghanistan crisis: தலிபான்கள் ஆட்சியில் வகுப்பறைகள் இப்படித்தான் இருக்கின்றன
ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து இன்று காபூலில் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் திறக்கப்பட்டன
வகுப்பறைகள் திறக்கப்பட்ட நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தலிபான் விதித்துள்ளது
இதன்படி வகுப்பி ஆண்களும் பெண்களும் தனித்தனியே அமரவைக்கப்பட்டுள்ளனர்.
இரு பாலர்களுக்கும் இடையே திரைச்சீலை போட்டு முகமே பார்க்க முடியாதபடி மறைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன
முன்னதாக பெண் பிள்ளைகள் படிக்கும் வகுப்புகளில் ஆண் ஆசிரியர்கள் பாடம் நடத்தக்கூடாது என்கிற தடையும் விதிக்கப்பட்டிருந்தது
இருபாலர் கல்விமுறைதான் பல்வேறு வன்முறைகளுக்கு வழிவகுப்பதாக அண்மையில் தலிபான் தலைவர் கூறியிருந்தார்
பல்கலைக்கழகம் வரும் பெண்கள் நிக்காப் என்னும் கண்கள் மட்டுமே தெரியும் வகையிலான உடையை அணிந்து வரவேண்டும் என தலிபான் உத்தரவிட்டிருந்தனர்.
பல பெண்களின் கல்வி தலிபான் ஆட்சிக்கு வந்ததால் அங்கே கேள்விக்குறியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது