Trump Iran War: ”சரியா 8 மணிக்கு.. எல்லாத்தையுமே அடிக்குறது தான் ப்ளான்” ஈரானுக்கு நேரம் குறித்த ட்ரம்ப்
Trump Iran War: இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலைக்குள் ஹார்மஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், ஈரானின் எல்லாமே அழித்தொழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Trump Iran War: அமெரிக்க நேரப்படி செவ்வாய்கிழமை இரவு 8 மணிக்குள் சர்வதே வணிகத்திற்காக, ஹார்மஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார்.
சரியா 8 மணி - நேரம் குறித்த ட்ரம்ப்
குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானை துடைத்து எறிவதற்கான தீவிரமான ராணுவ நடவடிக்கை தொடரப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசுகையில், ஈரானின் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து, எண்ணெய் வளங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவேன் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி” என குறிப்பிட்டுள்ளார். இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலையில் அடுத்த கட்ட தீவிர ராணுவ நடவடிக்கைக்கான எச்சரிக்கையாக கருதப்படுகிறது. முன்னதாக 48 மணி நேரத்தில் சர்வதேச வணிகத்திற்காக ஹார்மஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின்சார உட்கட்டமைப்புகள் போன்றவை தகர்த்தெறியப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுதங்களை வழங்கினோம்..
ஈரான் வேகமாக ஒப்பந்தங்களுக்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால், தீவிரமான ராணுவ நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்கட்சிக்கு அளித்த பேட்டியில், “வேகமான அவர்கள் ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால், ஈரானின் எல்லாவற்றையும் வெடிக்கச் செய்து எண்ணெய் வளங்களை கையிலெடுத்துக்கொள்வேன். மேம்பாலங்கள், ஆற்றல் நிலையங்கள் ஆகியவை நாடு முழுவதும் குறிவைக்கப்படும். முன்னதாக ஆண்டின் தொடக்கத்தில் ஈரானில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களுக்கு குர்திஷ் சமூகத்திற்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது” என ட்ரம்ப் பேசியுள்ளார். கடும் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும், எந்தவித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என ஈரான் மறுத்து வந்தாலுமே, அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள நல்ல வாய்ப்பு இருப்பதாக ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
ஈரான் சொல்வது என்ன?
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்டளைப்படி டிரம்ப் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். வளைகுடா பகுதியை வாஷிங்டன் ஒரு பெரும் பேரழிவை நோக்கி இழுத்துச் செல்வதாகவும் எச்சரித்துள்ளார். ட்ரம்ப் விடுக்கும் அச்சுறுத்தல்கள் ஈரானை நிர்ப்பந்திக்காது என்றும், அமெரிக்காவின் நிலைப்பாடு சர்வதேச சட்ட மீறல் என்றும் காலிபாஃப் எச்சரித்துள்ளார். ஈரானின் முக்கிய கூட்டாளியான ரஷ்யா, இறுதி எச்சரிக்கைகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.
தெற்குக் கடற்கரையில் உள்ள புஷேர் அணுமின் நிலையம் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், கதிரியக்க கசிவுக்கு வழிவகுத்து, ஈரான் மக்களுக்கு அல்ல, வளைகுடா ஒத்துழைப்பு மன்ற (GCC) தலைநகரங்களில் உயிர்களுக்கே மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார். புஷேர், ஈரானியத் தலைநகரை விட குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு நெருக்கமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























