Trump Iran War: “மொத்த பிராந்தியமும் தீக்கிரையாகும்“-ஈரான் வார்னிங்; ஹார்முஸை திறக்க நிபந்தனை - அது என்ன.?
ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இறுதி கெடு விதித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான், பிராந்தியம் முழுவதும் தீக்கிரையாகும் என எச்சரித்துள்ளதோடு, ஹார்மஸை திறக்க நிபந்தனையும் விதித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு இறுதி காலக்கெடு விதித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலைக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு அவகாசம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களும், பாலங்களும் அழிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் மீண்டும் ஈரானை எச்சரித்தார். இருப்பினும், அமெரிக்க அதிபரின் இந்த அச்சுறுத்தல் ஈரான் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவிடம் ஒரு நிபந்தனையை விதித்துள்ளது.
ஈரான் விதித்த நிபந்தனை என்ன.?
ஈரான் அதிபர் அலுவல அதிகாரியான மெஹ்தி தபதபாய், ட்ரம்பின் மிரட்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, போரில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வதற்காக போக்குவரத்துக் கட்டணத்தின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்று கூறியுள்ளார்.
‘‘பிராந்தியம் முழுவதும் தீக்கிரையாகும்“ - ஈரானின் சபாநாயகர் காலிபாஃப்
இதனிடையே, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப், ட்ரம்பின் பொறுப்பற்ற செயல்களால், பிராந்தியம் முழுவதும் எரிந்து சாம்பலாகும் என்று எச்சரித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் போட்ட பதிவில், "உங்களின் பொறுப்பற்ற செயல்கள் அமெரிக்காவை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நரக வேதனைக்குள் இழுத்துச் செல்கின்றன. நீங்கள் நெதன்யாகுவின் கட்டளைகளை பின்பற்றுவதில் பிடிவாதமாக இருப்பதால், நமது பிராந்தியம் முழுவதும் எரிந்து சாம்பலாகும்" என்று கூறியுள்ளார்.
1/ Your reckless moves are dragging the United States into a living HELL for every single family, and our whole region is going to burn because you insist on following Netanyahu’s commands.
— محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) April 5, 2026
Make no mistake: You won’t gain anything through war crimes.
ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
செவ்வாய்க்கிழமை மாலைக்குள் ஈரான் நடவடிக்கை எடுக்காவிட்டால், மின் உற்பத்தி நிலையம் அல்லது பாதுகாப்பான பாலம் இல்லாமல் போய்விடும் என்று டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார். மேலும், அமெரிக்கா எப்போது ஈரான் மீது ஒரு பெரிய தாக்குதலை தொடங்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில், அவர் 'ட்ரூத் சோஷியல்' (TruthSocial) தளத்தில் பதிவிட்டார். ட்ரம்ப், "கிழக்கு நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை காலை)" என்று கூறியிருந்தார்.
ஒரு உடன்பாடு ஏற்படும் என ட்ரம்ப் நம்பிக்கை
இதனிடையே, ஈரானுடன் திங்கட்கிழமைக்குள் ஒரு உடன்பாடு எட்டப்படலாம் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய அவர், "திங்கட்கிழமை ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன், அவர்கள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வராவிட்டால், எல்லாவற்றையும் தகர்த்துவிட்டு எண்ணெயை கைப்பற்றுவது பற்றி நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்," என்று கூறினார்.
முன்னதாக, ட்ரம்ப் ஈரானை கடுமையாகச் சாடி, "செவ்வாய்க்கிழமையன்று, ஈரான் மின் உற்பத்தி நிலைய தினத்தையும் பால தினத்தையும் ஒன்றாகக் கொண்டாடும். இது இதற்கு முன் ஒருபோதும் நடந்ததில்லை!!! பைத்தியக்காரர்களே! ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறங்கள், இல்லையென்றால் நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள் - பொறுத்திருந்து பாருங்கள்! அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்," என்று கூறியிருந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















