(Source: Poll of Polls)
Trump Vs India Pakistan: யப்பா சாமி, ரீல் அந்து போச்சு.! தென்கொரியா மாநாட்டில் கூட இந்தியா-பாக். போர் பற்றி பேசிய ட்ரம்ப்
இதற்கு ஒரு முடிவே இல்லையா என்று கேட்கும் அளவிற்கு, இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது குறித்து ட்ரம்ப் பேசி வருகிறார். அந்த வகையில், தென் கொரியாவில் நடந்த உச்சிமாநாட்டில் கூட அது பற்றி பேசியுள்ளார்.

ஒரு முறை, இரு முறை அல்ல, இதுவரை 50-க்கும் மேற்பட்ட முறை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுவிட்டார். ஆனால், ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்ததோடு அப்படியே நிறுத்திவிட்டது இந்தியா. இந்நிலையில், தென் கொரியாவில் நேற்று நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ட்ரம்ப், மோடி குறித்தும், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்தும் பேசியுள்ளார். அவர் என்ன பேசினார்.? பார்க்கலாம்.
“மோடி ஒரு கில்லர், இந்தியா-பாக். போரை நிறுத்தினேன்“
ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தென் கொரியாவின் கியோங்ஜூவில் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில் பேசிய ட்ரம்ப், இந்தியா உடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்திய பிரதமர் மோடி மீது தனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் உண்டு என்று கூறிய அவர், தங்களுக்குள் ஒரு சிறந்த உயவு இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர், ஆனால் கொஞ்சம் கடினமானவர் என்று கூறினார். தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பேசிய அவர், இரு நாடுகளும் பெரும் போரை நோக்கி சென்றுகொண்டிருந்ததாகவும், இரு நாடுகளுமே அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் என குறிப்பிட்டார்.
பின்னர், பிரதமர் மோடியை அழைத்து, உங்களுடன் வர்த்தகம் செய்ய மாட்டேன், ஏனென்றால் நீங்கள் பாகிஸ்தானுடன் சண்டையிடுகிறீர்கள் என்று கூறியதாக ட்ரம்ப் தெரிவித்தார். இதேபோல், பாகிஸ்தான் பிரதமரிடமும் பேசியதாக கூறினார். மேலும், இந்த மோதலின்போது 7 விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக தனக்கு தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மோடி தேசத்தை விரும்புபவர், அவர் ஒரு தந்தை போல உணர்கிறார், ஆனால் பாகிஸ்தானுடன் சண்டையிட்டே தீருவேன் என்று அவர் கூறினார், அவர் ஒரு கில்லர் என்று நகைச்சுவையாக கூறினார்.
ஆனாலும், அவர்கள் நல்லவர்கள், தான் சொன்னதை விரைவில் உணர்ந்து, இரண்டே நாட்களில் தன்னை அழைத்துப் பேசிய பின், சண்டையை நிறுத்திவிட்டார்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
#WATCH | US President Donald Trump says, "I'm doing a trade deal with India, and I have great respect and love for Prime Minister Modi. We have a great relationship. Likewise, the Prime Minister of Pakistan is a great guy. They have a Field Marshal. You know why he's a Field… pic.twitter.com/ZbxkpSnBl1
— ANI (@ANI) October 29, 2025
இந்தியா ஒருபுறம் மறுப்பு தெரிவித்தாலும், ட்ரம்ப் என்னவோ ஒவ்வொரு மேடையிலும் இந்தியா-பாகிஸ்தான் போரை தானே நிறுத்தியதாக கூறி வருகிறார். இது எப்போதுதான் ஓயுமோ தெரியவில்லை.





















