மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் அமைந்துள்ள கடைகள் இருக்கும் உருவ பொம்மைகளின் தலைகளை அகற்றுமாறு ஆஃப்கானின் துணைத் தடுப்பு அமைச்சகம் கூறியுள்ளாதாக பத்திரிகையில் செய்தி வெளியிட்டப்பட்டுள்ளது.


இந்த உத்தரவை புறக்கணிப்பவர்கள்  கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள் என அமைச்சகத்துறை எச்சரித்துள்ளது. சிலர் மனித உருவங்களை சிலைகளாக செய்து வணங்குகின்றனர். உருவ வழிபாடு என்பது இஸ்லாத்தின் படி மன்னிக்க முடியாத பாவமாக இருக்கின்றது. இதன் காரணமாக உருவ பொம்மைகளின் தலைகளை அகற்றுமாறு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளது.


இந்த உத்தரவால் ஹெராட்டில் உள்ள வியாபாரிகள் பீதி அடைந்து இருப்பதாக அந்நாட்டு பத்திரிகை தெரிவித்துள்ளது, கடைகளின் பார்வைக்கு என்று வைத்திருக்கும் உருவ சிலைகள் எவ்வளவு விலை என்பதை மேற்கொள் காட்டிய வியாபாரி ஒருவர், “அச்சிலைகள் ஒவ்வொன்றையும் உருவாக்க 200 டாலர் வரை செலவு செய்யப்படும், மேலும் அவற்றின் தலைகளை அகற்றுவது என்பது பெரிய இழப்பு” என்றும் அவர் கூறினார்.



ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு மக்கள் மீதான கட்டுப்பாடுகளை படிப்படியாக அதிகரித்தது.


பழைய ஆப்கானிஸ்தான் அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பெரும்பாலான பகுதிகளில் பெண்களுக்கான இடைநிலைப் பள்ளிகள் இன்னும் மூடப்பட்டு உள்ளன. தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய ஒரு மாதத்திற்குப் பிறகு, பெண்கள் படிக்க அனுமதிக்கப்பட்டனர்.  ஆனால், அதற்கு பல நிபந்தனைகளை அவர்கள் விதித்தனர். இதில், வகுப்பில் உள்ள மாணவர்களிடம் இருந்து பிரிந்து மாணவிகள் திரைக்கு மறுபுறம் தனியாக அமர ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது


மேலும் முடியை மறைப்பதில் இருந்து முகத்தையோ அல்லது முழு உடலையோ மறைப்பது வரை ஹிஜாபுக்கான விளக்கம் மாறுபடும். பெரும்பாலான ஆப்கானிஸ்தான் பெண்கள் ஏற்கனவே தலையில் முக்காடு அணிந்திருப்பதால், இந்த கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இவை அனைத்திற்கும் மேலாக, இசை மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் தொடர்பாகவும் தலிபான்கள் முக்கிய முடிவுகளை எடுத்தது. இனி மக்கள் தங்கள் வாகனங்களில் இசையை ஒலிக்கச் செய்யக்கூடாது என்று தாலிபன் உத்தரவிட்டது.


தலிபான் ஆட்சிக்கு திரும்பிய பிறகு, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து வரும் நிதி உதவி நிறுத்தப்பட்டது.  இதனால்,  இச்சமயத்தில் ஆப்கானிஸ்தானின் நிதி நிலவரம் மிகவும் மோசமாகிவிட்டது. இந்த நாடு, விரைவில் கடுமையான பசி மற்றும் வறுமையின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதாக பல ஊடகச் செய்திகளில் கூறப்பட்டது. இதை தவிர்க்க,குறைந்தபட்சம் தங்கள் வங்கிக் கணக்குகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று உலகின் பல நாடுகளுக்கு  தலிபான்  வேண்டுகோள் விடுத்திருந்தது.  இது தவிர, ஆப்கானிஸ்தானுக்கு உதவ பல அமைப்புகளும் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.