Sri Lanka Crisis Live Updates: பிரதமர் பதவியிலிருந்து விலகும் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. இன்று காலை முதல் அந்த நாட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவாதன் Last Updated: 09 Jul 2022 09:32 PM

Background

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. இன்று காலை முதல் அந்த நாட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிபர் மாளிகையை ஒரே நேரத்தில் ஆயிரக்ணக்கான மக்கள் முற்றுகையிட்டதால் காவல்துறையினராலும், ராணுவத்தாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த...More

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீவைப்பு

கொழும்புவில் உள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.