பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான 70 வயது ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


பாகிஸ்தான் நாட்டில் சில வாரங்களாக அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்த நிலையில், பிரதமராக இருந்த இம்ரான் கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அவரின் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான 70 வயது ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க் கட்சிகள் இல்லாத நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.





 


முன்னதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள்,  இம்ரான் கானை பதவி விலகுமாறு தொடர்ந்து வலியுறுத்தி, அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை க் கொண்டு வந்தன. ஆனால் தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தார். எனினும் சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.



அந்தத் தீர்ப்பை எதிர்த்து இம்ரான் கான் தரப்பு மேல் முறையீடு செய்தது. எனினும் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நாடாளுமன்றத்தில் புதிய வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் தோல்வி அடைந்தார்.

 

இந்நிலையில் இன்று நடைபெற்ற புதிய பிரதமருக்கான வாக்கெடுப்பில் பிரதமராக இருந்த இம்ரான் கான் கலந்துகொள்ளவில்லை. அவரின் பிடிஐ கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

 




புதிய பிரதமர் மீது பண மோசடி வழக்குகள்

 

342 எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் வெற்றிபெற 172க்கும் அதிகமான எம்.பிக்களின் ஓட்டுகள் வேண்டும். பிடிஐ கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், 174 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான 70 வயது ஷெபாஸ் ஷெரிப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமரான அவர் மீது ஏராளமான பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


சமீப காலங்களாக சீனா, பாகிஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகளில் முதலீடு செய்துள்ளது. பாகிஸ்தான் தனது பொருளாதார வளர்ச்சிக்குக் கணிசமான அளவில் சீனாவையே நம்பியுள்ளது. ஆனாலும் பொருளதார நெருக்கடிகள் தீவிரமடைந்து வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 


இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களின் நெருக்கடியை குறைக்க, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்று பிரதமராக இருந்த இம்ரான் கான் கோரிக்கை விடுத்திருந்தார்.


மக்களின் இந்தப் போராட்டத்திற்குப் பின்னணியில் அமெரிக்கப் படைகளின் துருப்புகள் இருப்பதாகவும் அவர் சந்தேகம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண