Kim Jong Un Successor: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அடுத்த வாரிசு யார்.? தென் கொரியா வெளியிட்ட முக்கிய தகவல்
North Korea Kim Jong Un Successor: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் தென் கெரிய உளவுத்துறை, அவரது அடுத்த வாரிசு குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அது என்ன என்று பார்க்கலாம்.

தென் கொரியாவிற்கு, வட கொரியா பெரும் அச்சுறுத்தாக இருந்துவரும் நிலையில், வட கொரியாவின் நகர்வுகளை உன்னிப்பாக, அதிலும் குறிப்பாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகிறது தென் கொரிய உளவுத்துறை. மேலும், அது தொடர்பான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது மகள் கிம் ஜூ ஏ-வை தனது வாரிசாக நியமிக்க தயாராகி வருவதாக தென் கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவிக்கிறது.
தென் கொரிய செய்தி நிறுவனங்கள் கூறுவது என்ன.?
தென் கொரியாவின் அதிகாரப்பூர்வ யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, சியோலில் உள்ள தேசிய புலனாய்வு சேவை, இன்று ரகசியமாக நடந்த மாநாட்டில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்ததாக கூறுகிறது. அப்படி தெரிவிக்கப்பட்ட தகவலை, தென் கொரிய அரசியல்வாதிகள் பார்க் சியோன்-வோன் மற்றும் லீ சியோங்-க்வோன் ஆகியோர் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டதாக கூறியுள்ளது.
அந்த தகவலின்படி, சமீபத்திய ஆயுதப்படை தின விழா மற்றும் கிம் ஜாங் உன்னின் தாத்தா மற்றும் தந்தை ஆகியோரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும், வட கொரியாவின் முக்கிய இடமாக உள்ள சூரியனின் கும்சுசன் அரண்மனைக்கு வருகை தந்தது போன்ற நிகழ்வுகளில், கிம் ஜு ஏ-வின் இருப்பு தொடர்ந்து சிறப்பிக்கப்படுவது சுட்டக்காட்டப்பட்டுள்ளது. மேலும், சில கொள்கைகள் குறித்து அவர் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான அறிகுறிகள் கூட உள்ளதாகவும், "அவர் இப்போது வாரிசு தேர்வு கட்டத்திற்குள் நுழைந்துவிட்டார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றும் லீ சியோங் செய்தியாளர்களிடம் கூறியதாக யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
இந்த மாத இறுதியில் நடைபெறும் ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டில் ஜூ ஏ கலந்து கொண்டாலோ அல்லது பட்டத்தைப் பெற்றாலோ, முக்கிய கொள்கை இலக்குகள் வெளிப்படுத்தப்படும் என்று ஆய்வாளர்கள் நம்பும் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வானது, அவரது வாரிசுரிமைப் பாதை குறித்த ஊகங்கள் "ஈர்ப்பு பெறும்" என்று யோன்ஹாப் தெரிவித்துள்ளது.
கிம் ஜூ ஏ பற்றி...
கிம் ஜாங் உன்னின் மகளை கிம் ஜூ ஏ-வைப் பற்றி மிகக் குறைவான தகவல்களே வெளி உலகில் அறியப்படுகின்றன. அவருடைய அதிகாரப்பூர்வ வயது உட்பட எந்த விவரங்களும் சரியாக வெளியாகாத நிலையில், அவர் இன்னும் டீன் ஏஜில் இருப்பதாகவே நம்பப்படுகிறது. அவர், 2012 அல்லது 2013-ல் பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2022-ம் ஆண்டு வட கொரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் சோதனை ஏவுதலில் கிம் ஜூ ஏ முதன்முதலாக பொது வெளியில் தோன்றினார். அதன் பின்னர், நாடு முழுவதும் நடந்த பல நிகழ்வுகளில் அவர் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.
ஜனவரி மாதம், பியோங்யாங்கின் கொரிய மத்திய செய்தி நிறுவனத்தால், அவரது தந்தையுடன் ஒரு பெரிய அளவிலான மல்டிபிள்-ராக்கெட் ஏவுதள அமைப்பின் சோதனை ஏவுதலில் கலந்து கொண்டபோது அவர் புகைப்படம் எடுக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்ததன் 80 ஆண்டுகளைக் குறிக்கும் ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள, தனது தந்தையுடன் கவசம் பூசப்பட்ட ரயிலில் பெய்ஜிங்கிற்கு கிம் ஜூ ஏ சென்றார். அங்கு அவர் சீன மற்றும் ரஷ்ய தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பார்.
இந்த சூழலில், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமதி கிம், அரசு ஊடகங்களில் அதிகளவில் முக்கிய தோற்றங்களை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக, வட கொரியாவின் நான்காம் தலைமுறை தலைவராக அவர் தகுதி பெறக்கூடும் என்று ஆய்வாளர்கள் மற்றும் தென் கொரிய உளவுத்துறை கருதுகிறது. மேலும், அரசின் முக்கிய நிகழ்வுகளில் கிம் தனது மனைவி மற்றும் மகளையும் அழைத்து வருவதன் மூலம், வட கொரியா கிம்மின் "நிலையான குடும்பத்தின்" பிம்பத்தை சித்தரித்து வருவதாகக் நிபுணர்கள் கூறுகின்றனர்.























