வெனிசுலா அதிபர் சுற்றிவளைத்த அமெரிக்கா
உலகநாடுகளில் போர் ஏற்பட்டால் உடனடியாக தடுத்து நிறுத்த முதல் ஆளாக ஆஜராகுபவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஆனால் இதற்கு நேர்மாறாக வெனிசுலா நாட்டை அதிரடியாக தாக்கி அந்தநாட்டின் அதிபரான நிகோலஸ் மாடுரோவை அமெரிக்க இராணுவம் கைது செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவையடுத்து, அமெரிக்கப் படைகள் வெனிசுலாவில் மிகப்பெரிய அளவிலான தாக்குதல் நடத்தி, மாடுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸையும் கைது செய்து கப்பல் வழியாக அமெரிக்காவுக்கு கொண்டு வந்துள்ளது.
கைகள் கட்டப்பட்டு விலங்கிடப்பட்ட வெனிசுலா அதிபர்
கைகள் கட்டப்பட்டு, கையில் விலங்கிடப்பட்ட காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மாடுரோ மீது அமெரிக்க பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது. குறிப்பாக மாடுரோ மீது 2020 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் "நார்கோ-டெரரிசம்" கொகெய்ன் இறக்குமதி சதி மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது. இதன் காரணமாகவே நிகோலஸ் மாடுரோ கைது செய்யப்பட்டுள்ளாதகவும் நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே இனி நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டின் இறையாண்மையைப் பறித்துள்ளது அமெரிக்கா, எங்களது நெருங்கிய நண்பரான மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை
ஒரு நாட்டின் தலைவரைக் கடத்துவது சர்வதேச பயங்கரவாதம் என தெரிவித்துள்ளவர், உலக நாடுகளுக்குப் பாடம் சொல்லும் தகுதியை அமெரிக்கா இழந்துவிட்டது. வெனிசுலா அதிபரை நாடு கடத்தியிருப்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல், டிரம்ப் நெருப்போடு விளையாடுகிறார். இந்த சம்பவம் அனு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை, நட்பு நாடுகளுக்கு பாதிப்பு என்றால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்.
மூன்றாம் உலகப்போர் தொடங்க அமெரிக்கா விரும்பினால், அதை எதிர்கொள்ள நாங்களும் தயாராக உள்ளோம். எங்களது ஏவுகணைகள் சரியான இலக்கை நோக்கி குறி வைத்து தயாராக உள்ளது. வெனிசுலா அதிபர் கைது தனி மனிதனின் கைது அல்ல, உலக நாடுகளின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ள கிம் ஜாங் உன், இதற்கான விலையை அமெரிக்கா மிகக் கடுமையாகக் கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.