Iran Youth Video to Trump: “ட்ரம்ப் சார், பேச்சுவார்த்தையே வேணாம், அட்டாக் பண்ணுங்க“; வீடியோ போட்டு உயிரை விட்ட ஈரான் இளைஞர்
ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தவரும் நிலையில், அதெல்லாம் வேண்டாம், உடனே தாக்குங்கள் என்று வீடியோ வெளியிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் ஒரு ஈரானிய இளைஞர்.

ஈரானுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பலமுறை எச்சரிக்கை விடுத்த போதிலும், ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தான் வருகின்றன. எனினும், வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதால், பதற்றமான சூழலே அங்கு நிலவுகிறது. இந்நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டாம், உடனே தாக்குதல் நடத்துங்கள் என்று ட்ரம்ப்பிற்கு கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ள ஈரானிய இளைஞர் ஒருவர், அதன்பிறகு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில் அவர் என்ன பேசியுள்ளார் என்பதை இப்போது பார்க்கலாம்.
ட்ரம்ப்பிற்கு வீடியோ போட்டுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட ஈரானிய இளைஞர்
பவுரியா ஹமிடி என்ற 28 வயது ஈரானிய இளைஞர் ஒருவர், ட்ரம்ப்பிற்கு வோண்டுகோள் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பின் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஈரானின் தெற்கு துறைமுக நகரமான புஷேரில் வசிக்கும் அந்த இளைஞர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், "நீங்கள் இதைப் பார்த்துக் கொண்டிருந்தால், நான் இப்போது இல்லை" என்று கூறி தனது உரையை தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து, "ரஷ்யா-உக்ரைன் போரை விடவும், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரை விடவும், 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர், கொல்லப்பட்டனர், படுகொலை செய்யப்பட்டனர்," என்று, பிப்ரவரி 5-ம் தேதி தனது ' PoorY X ' யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவில் அவர் கூறியுள்ளார். தனது வீடியோவை "இது எனது தியாகம் - தயவுசெய்து, எனது நாட்டை விடுவிக்கவும்" என்று தலைப்பிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த காணொளியில், அமெரிக்க தலைமைக்கு அவர் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார். டெஹ்ரானுடனான எந்தவொரு ராஜதந்திர ஒப்பந்தத்தையும் தொடர வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சியுடனான எந்தவொரு ஒப்பந்தமும் "உயிரிழந்த அனைவருக்கும் துரோகம் செய்வது போன்றது" என்று அவர் கூறியுள்ளார். "அதனால், தயவுசெய்து, இந்த ஒப்பந்தத்தை நிறுத்த உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள் என்று நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "தொடர்ந்து போராடுங்கள்" என்று ஈரானியர்களிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாகவும், நாங்கள் அவரை நம்பினோம் என்றும் கூறியுள்ள அவர், ஆனால், ஆயுதம் ஏந்திய மனிதர்களுடன் சண்டையிடுவது சாத்தியமில்லை என்றும், வெளிப்புற ஆதரவு இல்லாமல் ஈரானியர்கள் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக வெல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
"ஈரானை அமெரிக்கா தாக்குவதுதான் இப்போது நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை" என்று ஹமிடி கூறியுள்ளார். "இந்த ஆட்சியை நாம் தனியாக எதிர்த்துப் போராட முடியாது. நமது மக்களுக்கு வெளிநாட்டு தலையீடு தேவை." ஈரானின் நாடுகடத்தப்பட்ட இளவரசர் ரெசா பஹ்லவிக்கு ஆதரவையும் தெரிவித்த அவர், "ஒரு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சிறந்த தேர்வு" என்று தெரிவித்துள்ளார். ஈரானுக்கு வெளியே உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் "ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை நிறுத்த வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த காணொளியை உருவாக்கியதன் நோக்கம், தனது வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதாக ஹமிடி விவரித்துள்ளார். மேலும், ஈரானியர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த பதிவு முடிந்ததும், அவர் பாரசீக மொழிக்கு மாறி, "நாங்கள் ஈரான் மக்கள் தனிமையானவர்கள், எங்களுக்கு யாரும் இல்லை, எனவே தயவுசெய்து ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும். ஈரான் வாழ்க" என்று கூறியதாக ஈரான் சர்வதேச அறிக்கை தெரிவித்துள்ளது.
Pouria Hamidi, 28, from Bushehr, took his own life yesterday.
— 𝐍𝐢𝐨𝐡 𝐁𝐞𝐫𝐠 ♛ ✡︎ (@NiohBerg) February 8, 2026
Why? Because President Trump decided to enter a nuclear negotiation with the regime in Iran, breaking everyone's hopes and dreams, and rendering their sacrifices for nothing.
This is the real human cost of what the… pic.twitter.com/ST7vqyog0a
இந்த வீடியோ பதிவிற்குப் பிறகு, ஹமிடி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஈரானை தாக்க, தக்க தருணத்தை எதிர்பார்த்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்போது ட்ரம்ப் என்ன செய்வார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.























