Mojtaba Khamenei: “உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இல்லை என அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறிவரும் நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, அவரது உடல்நிலை குறித்தும் முக்கிய தகவல் வந்துள்ளது.

அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடுத்த போரின் முதல் நாளிலேயே, அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, சில நாட்களில், அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் அடுத்த உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டர். இந்த நிலையில், அந்த தாக்குதலில் மொஜ்தபாவும் இறந்திருக்கலாம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூறி வருகின்றன. ஆனால், மொஜ்தபா உயிருடன் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, அவரது உடல்நிலை குறித்தும் முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.
தாக்குதலில் கொல்லப்பட்ட கமேனி - அமெரிக்கா இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், 3 கட்ட பேச்சுவார்த்தையும் ஓமனின் மத்தியஸ்தத்தில் நடைபெற்றது. பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்கா அளித்த அமைதித் திட்டத்தின் பெரும்பாலான அம்சங்களை ஈரான் ஏற்றுக்கொண்டதாக ஓமன் அறிவித்தது. ஆனால், அதே நாள் இரவு, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல்களை தொடங்கின.
இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த ஈரான், உடனடியாக பதில் தாக்குதலை தொடங்கியது. அதன் தாக்குதல், அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு ராணுவ தளங்களை கொடுத்து உதவிய வளைகுடா அரபு நாடுகள் மீது இறங்கியது. இதனிடையே, முதல் நாளிலோயே, ஈரான் அதிபர் அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அடுத்த தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும், அவரும் கொல்லப்படுவார் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தன.
அடுத்த உச்ச தலைவராக தேர்வான மொஜ்தபா கமேனியும் பலியா.?
இந்நிலையில், ஈரானின் அடுத்த உச்ச தலைவராக, மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் 56 வயதான மோஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டு, மார்ச் மாதம் 8-ம் தேதி அறிவிக்கப்பட்டார்.
அப்போது முதல், அவரது பெயரில் அறிக்கைகள் வெளியாகி வருகின்றன. அவை, அந்நாட்டு அரசு ஊடகங்களில் வாசிக்கப்படுகின்றன. ஆனால், அவர் பொதுவெளியில் இதுவரை தோன்றவில்லை. இது பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியது.
சமீபத்தில், அவர் கோமா நிலையில் இருப்பதாகக் கூட செய்திகள் வெளியாகின. ஆனால், மறுபுறம், முதல் நாள் நடந்த தாக்குதலில் மொஜ்தபாவும் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் கூறிவந்தது. மொஜ்தபாவும் பொதுவெளியிலோ, வீடியோவிலோ தோன்றாததால், அந்த சந்தேகம் வலுத்து வந்தது.
“உயிருடன் இருக்கிறார், ஆனால் பலத்த காயமடைந்துள்ளார்“
இந்நிலையில், மொஜ்தபா உயிருடன் இருப்பதாகவும், ஆனால், அவரது முகம் சிதைக்கப்பட்டு, இடையாளம் தெரியாத அளவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளன. மேலும், அவர் ஒரு காலை இழந்துவிட்டதாகவும், கல்லீரல் மற்றும் வயிற்றுப் பகதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அதனால் தான் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும், இருக்கும் இடத்தில் இருந்தே, பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவர் மனதளவில் தெளிவாகவே இருப்பதாகவும், தொலைபேசி வாயிலாக நாட்டின் முக்கிய நடவடிக்கைகளில் கலந்துகொண்டு வழிநடத்துவதாகவும் கூறப்படுகிறது.
எனினும், ஈரான் தரப்பிலிருந்து இந்த செய்திகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















