மேலும் அறிய

கனமழை எச்சரிக்கை! ஆட்சியர் அதிரடி ஆய்வு - விழுப்புரத்தில் தயார் நிலையில் மீட்புப் பணிகள், பொருட்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையினை எதிர்கொள்ளும் விதமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதிகளுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம்.

விழுப்புரம்: வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பல்வேறு இடங்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில்:

தமிழ்நாடு முதலமைச்சர் வடகிழக்கு பருவமழையொட்டி பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழையொட்டி முன்னேற்பாடு பணிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையினை எதிர்கொள்ளும் விதமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் விதமாக அனைத்து பகுதிகளுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றையதினம் விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் மழைகாலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வதற்காக சிறப்பு தளவாடங்களான இரப்பர் போட், ஜெனரெட்டர், சூப்பர் ஜெட் பம்ப், ஏணி வகைகள், ஹைட்டாலிக் டோர் ஒப்பனர், கயிறு வகைகள், பாம்பு பிடிக்கும் கருவி, ஸ்டெச்சர், புயல்கால விளக்குகள், பாதுகாப்பு உடைகள் போன்ற உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள் இருப்பு உள்ளதை நேரில் ஆய்வு

இதனை தொடர்ந்து, விழுப்புரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மழைகாலங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அரிசி, பருப்பு, சக்கரை மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு உள்ளதை நேரில் பார்வையிட்டதோடு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,254 நியாய விலை கடைகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் சரியாக அனுப்பப்படுகிறதா என்பதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

12,546 மின் கம்பங்கள் தயார்

மேலும், கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட பூத்தமேடு ஊராட்சியில் அமைந்துள்ள துணை மின் நிலையம் வளாகத்தில் மின் கம்பம் தயாரிக்கப்பட்டு வருவதையும், பேரிடர் காலங்களில் பயன்படுத்துவதற்காக 12,546 மின் கம்பங்கள் தயார் நிலையில் இருப்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டதோடு, கூடுதலாக மின் கம்பங்கள் தயாரிக்கப்பட்டு வைக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பேரிடர் காலத்தில் அவசரகால தொலை தொடர்பு அழைப்பு சம்மந்தமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காணை ஊராட்சியில் பெஞ்சல் புயலால் சேதமடைந்த வையலாமூர் சாலையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மறு சீரமைப்பு செய்து தார் சாலை அமைப்பதற்கும், காணை குப்பம் ஊராட்சியில் நீர்வளத்துறை சார்பில் பம்மை ஆற்றிலிருந்து வைலாமூர் ஏரிக்கு செல்லும் பிரிவில் தலைமதகு கதவு அமைத்திடவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

ரூ.256.73 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை

மேலும், முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆயந்தூர் ஊராட்சியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட ஆயந்தூரிலிருந்து புரவடை செல்லும் சாலையில் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.256.73 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை மற்றும் சாலை நடுவே சிறு பாலம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

எனவே, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் அனைவரும் கனமழை பாதிப்பு ஏற்படாத வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Ponmudi: திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பெண்களுக்கு 30000”தேஜஸ்வி அதிரடி வியூகம்!கலக்கத்தில் நிதிஷ்குமார் | Bihar Election Tejashwi Yadav
கோவை பெண் பாலியல் கொடூரம் 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ் நடந்தது என்ன? | Kovai Student Sexual Assault
Thanjavur Boy German Girl Marriage | தமிழ் பையன் ஜெர்மன் பொண்ணு தஞ்சாவூரில் டும்..டும்..COUPLE GOALS
Kovai Student Sexual Assault |கூட்டு பாலியல் வன்கொடுமைமாணவிக்கு நேர்ந்த கொடூரம் கோவையில் பயங்கரம்
TVK Karur Stampede Case | பனையூர் வந்த CBI அதிகாரிகள்பரபரக்கும் தவெக அலுவலகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Ponmudi: திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!
Aippasi Annabishekam: சிவ பக்தர்களே.. ஐப்பசி அன்னாபிஷேகத்தில் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க!
Aippasi Annabishekam: சிவ பக்தர்களே.. ஐப்பசி அன்னாபிஷேகத்தில் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க!
Ajith Seeman: “நான் சொன்னத தான் அஜித் சொல்லியிருக்கார்“; ஒரே போடாய் போட்ட சீமான் - என்ன விஷயம் தெரியுமா.?
“நான் சொன்னத தான் அஜித் சொல்லியிருக்கார்“; ஒரே போடாய் போட்ட சீமான் - என்ன விஷயம் தெரியுமா.?
TN 10th 12th Exam Dates:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு; இதோ லிஸ்ட்- தேர்வு முடிவுகள் எப்போது?
TN 10th 12th Exam Dates:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு; இதோ லிஸ்ட்- தேர்வு முடிவுகள் எப்போது?
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு: இந்திக்கு சாதகம், தமிழுக்கு அநீதி? எழும் கண்டனம்
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு: இந்திக்கு சாதகம், தமிழுக்கு அநீதி? எழும் கண்டனம்
Embed widget