இன்றைய காலத்தில் சில இளைஞர்கள் பல போதை பொருட்களுக்கு அடிமையாகி வரும் நிலையில் வானூர் அருகே  தான் சொந்த கிராமத்திற்கு சுமார் 10.5 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை அமைத்து கொடுத்த இளைஞருக்கு அப்பகுதி மக்கள்  பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.




விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், லட்சுமி தம்பதி. இவர்களின் இளைய மகன் சந்திரசேகர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்றின்போது கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு விதியின் படி சந்திர சேகர் தன் கிராமத்திற்கு வந்து வீட்டிலே இருந்தபடியே தன் பணியினை செய்து வந்தார். இந்நிலையில் பெய்த மழையின் போது தன் கிராமத்தில் உள்ள ஒரு சாலை மிகவும் சேரும் சகதியுகமாக காட்சி அளிப்பதை பார்த்த சந்திரசேகர் அதிர்ச்சி அடைந்தார்.






உடனே வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று தன் கிராமத்தில் நிலவரத்தை எடுத்துக்கூறி சாலை அமைத்து தர வேண்டுமென மனு அளித்தார். இதற்கு அரசு அதிகாரிகள் தற்போது எதுவும் நிதி இல்லை என தெரிவித்தனர், இந்த சாலைக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டுள்ளார் இந்த செலவையும் தானே செய்து எனது கிராமத்திற்கு சாலை அமைத்துக் கொள்கிறேன் எனக் கூறினார். இதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டுமென அரசு அதிகாரிகள் தெரிவிக்கவே அதன்படி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் அனுமதி பெற்று சுமார் 14 அடி அகலமும் 270 மீட்டர் தூரம் கொண்ட சிமெண்ட் சாலையை சுமார் ரூ.10.50 லட்சம் செலவில் தன் சொந்த பணத்தை செலவிட்டு சிமெண்ட் சாலை அமைத்துள்ளார். இளைஞர் சந்திரசேகரன் செயலை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வரை வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்.


11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?












மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண