நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நேற்று வி.சாலையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்து. மாநாட்டில் 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்ட நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் உடைக்கப்பட்டு தண்ணீர் பாட்டில்கள் போடப்பட்டு மாநாட்டு திடல் குப்பைகளாக காட்சி அளிப்பதால் அதனை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  மேலும் வி சாலை முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் நேற்று மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த மாநாட்டிற்கு 20,000 வாகனங்கள் வந்ததாகவும், சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்று இருக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.


பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாடு பகுதியில் திரண்டதால் மாநாடு திடலில் அமைக்கப்பட்ட 50 ஆயிரம் இருக்கைகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் உடைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வந்தவர்கள் அதிகமானோர் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தியதால் மாநாடு திடல் முழுவதும் தண்ணீர் பாட்டில் குப்பைகள், காலணிகள் என புயல் அடித்து முடிந்தால் எப்படி இருக்குமோ அதுபோலா மாநாட்டு திடல் பகுதி காட்சியளிக்கிறது.


தண்ணீர் பாட்டில்களை எடுக்கும் பணியில் குப்பைகளை எடுக்கும் நபர்கள் தண்ணீர் பாட்டில் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். மாநாடு பந்தல் அமைத்தவர்கள் உடைந்த இருக்கைகளை அப்புறப்படுத்தி நல்ல நிலையில் உள்ள இருக்கைகளை எடுத்து செல்லும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாநாடு திடல் முழுவதுமாக கூட்ட நெரிசலில் சிக்கி காலனிகளை விட்டு சென்றதால் அதிகமான காலணிகள் கிடைகின்றன. 


மாநாட்டு திடலில் போடப்பட்ட மின் விளக்குகள் மேடையை அகற்றும் பணி தொடங்கியுள்ளதால் அருகிலுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் மாநாட்டு திடலை பார்வையிட்டு  செல்பி எடுத்து செல்கின்றனர். மாநாட்டிற்காக அதிகமானோர் வருகை புரிந்தால் நேற்றைய தினம் போக்குவரத்து நெரிசல் காலை 11 மணிக்கு ஏற்பட்டது அதிகாலை 2 மணி சீரானதால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


மாநாடு முடிந்தவுடன் புறப்பட்ட வாகனங்கள் ஊர்ந்தபடி சுமார் 4 மணி நேரம் சென்றது. U டர்ன் கூட போட முடியாமல் திருச்சி செல்ல வேண்டிய வாகனங்கள் திண்டிவனம் சென்று அங்கிருந்து மீண்டும் திரும்பி விழுப்புரம் வழியாக பயணித்தது. மாநாடு நடைபெற்ற வி.சாலை முதல் விழுப்புரம் வரையிலான 17 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 5 மணி நேரமானது. விழுப்புரத்திலிருந்து மாநாட்டு திடல் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதிகாலை 3 மணிக்கு பின்பே போக்குவரத்து சீரானது.


விழுப்புரம் - திண்டிவனம் வழியாக காலை 5 மணி முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. வி.சாலையிலிருந்து விழுப்புரத்துக்கு நடந்து வந்தவர்கள் 3 மணி நேரத்தில் வந்துவிட்டாலும், பைக்கில் வந்தவர்கள் வருவதற்கு 5 மணி நேரமானது. இதனால் இப்பகுதியில் மொபைல் பயன்பாடு அதிகரித்ததால் இணையதள சேவை முடங்கியது. பேருந்துகளில் மாநாட்டிற்கு வந்தவர்கள் வி.சாலையிலிருந்து விக்கிரவாண்டி சுங்கசாவடிக்கு 6 கிலோ மீட்டர் நடந்து வந்து அங்கு பூட்டப்பட்டு கிடந்த உணவங்களின் வாசல்களில் படுத்து தூங்கி எழுந்து, அதிகாலை இயக்கப்பட்ட பேருந்தில் தங்கள் ஊருக்கு பயணித்தனர்.


மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான காலி வாட்டர் பாட்டில்கள், உணவு தட்டுகள், குப்பைகள் என சுமார் 5 டன் அளவுக்கான குப்பைகள் இருந்தது. மீதமான உணவுகளை சாலை ஓரத்தில் வீசியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.