Puducherry Power Cut: புதுச்சேரியில் இன்று மின் தடை.. உங்க பகுதி லிஸ்ட்ல இருக்கான்னு செக் பண்ணுங்க!
puducherry power cut (02-06-2026): புதுச்சேரி உயர் மின் அழுத்தப் பாதையில் சில பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 02-06-2026 காலை 10.00 மணியிலிருந்து பகல் 02.00 மணி மின்தடை !

Puducherry Power Cut : புதுச்சேரி உயர் மின் அழுத்தப் பாதையில் சில பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 02-06-2026 காலை 10.00 மணியிலிருந்து பகல் 02.00 மணி வரை கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் தடைபடுமென்று பொதுமக்களுக்கு மின்துறை அறிவித்துள்ளது.
மரப்பாலம் துணை மின் நிலையம்
மின்தடை நேரம் : காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை
ஆனந்தா நகர், திருமால் நகர், திருமகள் நகர், வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் நகர், ரமணர் நகர், அண்ணா நகர், சுதானா நகர், அங்காளம்மன் நகர், அரவிந்தர் நகர், அன்னை தெரசா நகர், முருங்கப்பாக்கம் பேட், கமலன் நகர், பாப்பாஞ்சாவடி, ஒட்டம் பாளையம், கொம்பாக்கம் ஆகிய பகுதிகள். மேற்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இ.சி.ஆர் மின் பாதை
தெற்கு இ.சி.ஆர், பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லஷ்மி நகர், முத்துரங்கசெட்டி நகர், கவிக்குயில் நகர், மேற்கு கிருஷ்ணா நகர், சலவையாலர் நகர், மடுவுப்பேட், பாலாஜி நகர், வடக்கு கிருஷ்ணாநகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்குபார்க், அரசு அச்சகம் குடியிருப்பு, உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். மேற்கண்ட இடங்களில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் தடை செய்யப்படும்.
மிட்டால் மின் பாதை
காட்டுக்குப்பம் (பகுதி), கிருமாம்பாக்கம் (பகுதி), தவளக்குப்பம், தேடுவார்நத்தம், கொருக்கமேடு, ஆண்டியார்பாளையம், NR நகர், காசாந்திட்டு, வைஷ்ணவிபுரம், நாணமேடு, டி.என். பாளையம், தானம் பாளையம், எடையார் பாளையம், பிள்ளையார் திட்டு, நல்லவாடு, புது குப்பம், பூரணாங்குப்பம், அபிஷேகப்பாக்கம், ராஜாராம் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள். மேற்கண்ட இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் நிறுத்தப்படும்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
Before You Go
Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















