விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம்... எந்தெந்த பகுதிகள் தெரியுமா ?
Tindivanam Power Shutdown: மரக்காணம், முறுக்கேரி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 16-07-2025 மின்சாரம் நிறுத்தம்.

Tindivanam Power Shutdown: மரக்காணம், முருக்கேரி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 16-07-2025 அன்று கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மரக்காணம் துணை மின்நிலையம்
மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வட அகரம், திருக்கனூர், ஆ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, கீழ்பேட்டை, அனுமந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
முருக்கேரி துணை மின் நிலையம்
முருக்கேரி, சிறுவாடி, சாத்தமங்கலம், நடுக்குப்பம், வண்டிப்பாளையம், தேவிகுளம், கோட்டிக்குப்பம், ஓமிப்பேர், கிளாப்பாக்கம், முன்னூர், முத்தாம்பாளையம், வடநெற்குணம், ராயநல்லூர், குரூர், வைடப்பாக்கம், ஆலத்தூர், அசப்பூர், பிரம்மதேசம், வன்னிப்பேர், டி.புதுப்பாக்கம், ஆலங்குப்பம், சிங்கநந்தல், ஏந்தூர், அரியந்தாங்கல், கீழ்சிவிரி, நல்முக்கல், சொக்கந்தாங்கல், நல்லாளம், வெள்ளகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும். மேற்கண்ட மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும்பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















