<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>villupuram</title><atom:link href="https://tamil.abplive.com/villupuram/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 07:35:38 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[இடதுசாரிகளுக்கு அங்கீகாரம் தர திமுக தவறிவிட்டது: விழுப்புரத்தில் பாலகிருஷ்ணன் பகிரங்கக் குற்றச்சாட்டு!]]></title><link>https://tamil.abplive.com/elections/dmk-failed-to-recognize-the-left-balakrishnan-publicly-accuses-villupuram-258094</link><comments>https://tamil.abplive.com/elections/dmk-failed-to-recognize-the-left-balakrishnan-publicly-accuses-villupuram-258094#respond</comments><pubDate>Fri, 1 May 2026 18:22:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/dmk-failed-to-recognize-the-left-balakrishnan-publicly-accuses-villupuram-258094</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் : தேர்தலில் குறைந்த இடங்களை அளித்து, இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது. அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. கடந்த காலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு:&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்கிற செய்தியை தான் எல்லா கருத்துக்கணிப்புகளும் தெளிவாக கூறியுள்ளனர். பாஜக எத்தனை பகல் வேடம் போட்டாலும். மோடி, அமித்ஷா தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை படை எடுத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு இடம் அளிக்க மாட்டார்கள் என்பது இந்த தேர்தலில் மீண்டும் உறுதியாகியுள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுகவுக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வருகின்ற காலத்தில் திமுக எப்படி ஆட்சி நடத்தப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இடதுசாரிகளுக்கு ஆறு இடங்களை ஒதுக்க வேண்டும் என எவ்வளவோ வற்புறுத்தியும் திமுக தலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தருவதற்கு திமுக மறுத்துவிட்டது என்பது தான் உண்மை. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடம் அளிக்கக்கூடாது என்கிற அடிப்படையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டோம். அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. பல்வேறு துறைகளில் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை திமுக அரசாங்கம் செய்ய தவறிவிட்டது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இரட்டை இலக்கு பொருளாதாரம் வளர்ச்சி என அமைச்சர்கள் பெருமை பேசுகிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் உழைப்பாளர் தான். இரட்டை இலக்க வளர்ச்சியை கொடுக்கும் தொழிலாளர்களுக்கு அரசு என்ன கொடுக்கிறது என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வேற எந்த தேர்தலையும் விட இந்த தேர்தலில் இளைஞர்களிடம் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்கிற அரசியல் புரிதல் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி வரவேற்கத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வணிக சிலிண்டரின் விலை இன்றைக்கு மட்டுமே 900 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. சாலையோர கடைகள் மூடும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள யுத்தம் தான். தமிழ்நாட்டிற்கு பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பாஜக இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தாலும், திமுக ஆட்சி கடைப்பிடிக்ககூடிய கொள்கையில் மக்கள் நலன் பாதிக்கப்படும் போது குறிப்பாக பணி நிரந்தரம், தொழிலாளிகள் மீதான அடக்குமுறை, வழக்கு ரத்து இப்படிப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியான போராட்டங்களை முன்னெடுக்கும். என தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/0814ade7d66d5901fba8354d1ab580301777639855013194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பட்டதாரிகளுக்குப் புதுச்சேரி ஜிப்மரில் வேலை: மாதம் ரூ.22,000 சம்பளம் - விண்ணப்பிக்கத் தயாரா?]]></title><link>https://tamil.abplive.com/jobs/jobs-at-jipmer-puducherry-for-graduates-salary-of-rs-22-000-per-month-ready-to-apply-258090</link><comments>https://tamil.abplive.com/jobs/jobs-at-jipmer-puducherry-for-graduates-salary-of-rs-22-000-per-month-ready-to-apply-258090#respond</comments><pubDate>Fri, 1 May 2026 18:09:08 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/jobs-at-jipmer-puducherry-for-graduates-salary-of-rs-22-000-per-month-ready-to-apply-258090</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரி&amp;nbsp; ஜிப்மர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு:&lt;/p&gt;
&lt;h3&gt;பணி விவரம்:&lt;/h3&gt;
&lt;p&gt;ஜிப்மர் நிறுவனத்தில் தற்போது நடைபெற்று வரும் மருத்துவ ஆராய்ச்சித் திட்டத்திற்காக 'கிளினிக்கல் ட்ரையல் கோஆர்டினேட்டர்' (Clinical Trial Coordinator) பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;கல்வித் தகுதி:&lt;/h3&gt;
&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் உயிரி அறிவியல் (Life Sciences) சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;h3&gt;வயது வரம்பு:&lt;/h3&gt;
&lt;p&gt;விண்ணப்பதாரர்களின் வயது 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3&gt;சம்பளம்:&lt;/h3&gt;
&lt;p&gt;தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ. 22,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3&gt;தேர்வு செய்யப்படும் முறை:&lt;/h3&gt;
&lt;p&gt;விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்களுக்கு எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) நடத்தப்படும். இதில் சிறப்பாகச் செயல்படுபவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;h3&gt;விண்ணப்பிக்கும் முறை:&lt;/h3&gt;
&lt;p&gt;தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஜிப்மரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (jipmer.edu.in) கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3&gt;முக்கியத் தேதிகள்:&lt;/h3&gt;
&lt;p&gt;விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 05.05.2026&lt;/p&gt;
&lt;p&gt;மருத்துவத் துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலதிக விவரங்களுக்கு ஜிப்மர் இணையதளத்தைப் பார்க்கவும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/18/c8c3fb5ae531a4aa0eda3e1fd278c1291726647659469856_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பிஞ்சு உயிரைப் பறித்த கரம்.. கோர்ட் காவலில் கருணாஸ்: தண்டனை குறித்த திக் திக் நிமிடங்கள் !]]></title><link>https://tamil.abplive.com/crime/puducherry-girl-murder-sensational-verdict-karunas-found-guilty-258005</link><comments>https://tamil.abplive.com/crime/puducherry-girl-murder-sensational-verdict-karunas-found-guilty-258005#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 16:31:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/puducherry-girl-murder-sensational-verdict-karunas-found-guilty-258005</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி : புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கருணாஸை குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் இன்று அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரம் வரும் மே மாதம் 5-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவி, கடந்த 2024 மார்ச் 2-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மாயமானார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;p&gt;இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19) மற்றும் விவேகானந்தன் (59) ஆகிய இருவரைக் கைது செய்தனர். இதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;நீதிமன்ற விசாரணை:&lt;/p&gt;
&lt;p&gt;இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. காவல்துறை தரப்பில் 540 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 54 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, 80-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் தடய அறிவியல் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கருணாஸ் மீது சுமத்தப்பட்ட கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்: பாலியல் நோக்கில் குழந்தையைக் கடத்துதல்., சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்தல் (போக்சோ பிரிவு 6), கொலை செய்தல் மற்றும் ஆதாரங்களை மறைத்தல்.&lt;/p&gt;
&lt;h2&gt;அரசு தரப்பு வாதம்:&lt;/h2&gt;
&lt;p&gt;இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் கூறுகையில், &quot;இந்த வழக்கு 'அரிதினும் அரிதான' பிரிவின் கீழ் வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட சிறுமி 12 வயதுக்குட்பட்டவர் என்பதாலும், இது மிகக் கொடூரமான குற்றம் என்பதாலும் சட்ட நடைமுறைகளின்படி இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு மே 5-ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும்&quot; எனத் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;இன்று தீர்ப்பு வழங்கப்பட்டபோது உயிரிழந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கருணாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/f85875acdb72717b83093fb0eecf519d1777546833209194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Travel with ABP: அமேசான் காடு போல ஒரு அனுபவம்... அதுவும் நம்ம புதுச்சேரியிலா? - மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/travel/travel-with-abp-an-experience-like-the-amazon-jungle-is-that-also-in-our-puducherry-places-not-to-be-missed-257946</link><comments>https://tamil.abplive.com/travel/travel-with-abp-an-experience-like-the-amazon-jungle-is-that-also-in-our-puducherry-places-not-to-be-missed-257946#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 10:42:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ சுற்றுலா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/travel/travel-with-abp-an-experience-like-the-amazon-jungle-is-that-also-in-our-puducherry-places-not-to-be-missed-257946</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: &quot;இந்தியாவின் குட்டி பிரான்ஸ்&quot; என்று அழைக்கப்படும் புதுச்சேரி, வெறும் மதுபானங்களுக்கும் கடற்கரைகளுக்கும் மட்டும் பெயர் போனதல்ல. அதன் பிரெஞ்சு காலனித்துவ கட்டிடக்கலை, ஆன்மீக அமைதி மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றுப் பாடம் சொல்லும். வார இறுதி விடுமுறையை பயனுள்ளதாகவும், குறைந்த செலவிலும் கழிக்க விரும்பும் சுற்றுலாப் &lt;em&gt;பயணிகளுக்கு&lt;/em&gt; புதுச்சேரி ஒரு சிறந்த தேர்வாகும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;em&gt;அதிகம் அறியப்படாத, ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய புதுச்சேரியின் பல முக்கிய இடங்கள் இதோ:&lt;/em&gt;&lt;/h3&gt;
&lt;h2&gt;வரலாற்றைத் தாங்கி நிற்கும் அரிக்கமேடு&lt;/h2&gt;
&lt;p&gt;வரலாற்று ஆய்வாளர்களின் சொர்க்கமாகத் திகழ்வது அரிக்கமேடு. சோழர் காலத்தில் மீனவ கிராமமாக இருந்த இங்கிருந்து, ரோம் நகருடன் கடல்வழி வாணிபம் நடைபெற்றதற்கான சான்றுகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் சிதிலமடைந்த செங்கல் சுவர்களும், பழங்கால பானை ஓடுகளும் கடந்த காலத்தின் சாட்சிகளாக நிற்கின்றன. மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் சில முக்கிய காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h2&gt;இயற்கையின் அரவணைப்பில் மாங்குரோவ் காடுகள்&lt;/h2&gt;
&lt;p&gt;கடலும் முருங்கப்பாக்கம் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள மாங்குரோவ் (சதுப்புநில) காடுகள் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அடர்ந்த மரங்களுக்கு இடையே சுமார் இரண்டு மணி நேரம் செல்லும் படகு சவாரி, ஒரு திரில்லான அனுபவத்தைத் தரும். இந்த பயணத்தின் போது அரிய வகை கடல் பறவைகள் மற்றும் அரிக்கமேடு துறைமுகத்தின் அழகை ரசிக்கலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;தனிமனித சாதனை: ஆரண்யா சதுப்புவனம்&lt;/h2&gt;
&lt;p&gt;சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்டவர்கள் தவறவிடக்கூடாத இடம் பூத்துறை கிராமத்தில் உள்ள 'ஆரண்யா வனம்'. ஒரு தனி மனிதரின் விடாமுயற்சியால் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காடு, லட்சக்கணக்கான அரிய வகை மரங்களைக் கொண்டுள்ளது. புதுச்சேரி நகரின் இரைச்சலில் இருந்து விடுபட்டு அமைதியைத் தேடுபவர்களுக்கு இது சரியான இடம்.&lt;/p&gt;
&lt;h2&gt;கட்டிடக்கலை வியப்பு: பழமையான தேவாலயங்கள்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியின் ஆன்மீக முகவரி அங்குள்ள தேவாலயங்கள். போர்த்துகீசிய மற்றும் பிரெஞ்சு கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள தூய இருதய ஆண்டவர் தேவாலயம், புனித ஜென்மராக்கினி தேவாலயம் மற்றும் லூர்து அன்னை தேவாலயம் ஆகியவை பார்ப்போரை வியக்க வைக்கும். இவற்றின் வண்ணமயமான கண்ணாடி ஓவியங்களும், பிரம்மாண்டமான தூண்களும் கலைநயத்தின் உச்சம்.&lt;/p&gt;
&lt;h2&gt;சுண்ணாம்பாறு மற்றும் பாரடைஸ் பீச்&lt;/h2&gt;
&lt;p&gt;சாகச விரும்பிகளுக்கு சுண்ணாம்பாறு படகுத்துறை ஒரு சிறந்த தளம். இங்கிருந்து படகு மூலம் வங்கக்கடலின் அலைகளைக் கடந்து 'பாரடைஸ் பீச்' சென்றடையலாம். தூய்மையான மணற்பரப்பு மற்றும் சுவையான கடல் உணவுகளுக்கு இந்த கடற்கரை மிகவும் பிரபலம்.&lt;/p&gt;
&lt;h2&gt;பறவைகளின் சரணாலயம்: ஊசுடு ஏரி&lt;/h2&gt;
&lt;p&gt;பறவை ஆர்வலர்களுக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் ஊசுடு ஏரி ஒரு சொர்க்கம். 800 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு, குளிர்காலங்களில் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான அரிய வகை பறவைகள் வருகின்றன. ஏரியின் நடுவே படகு சவாரி செய்துகொண்டே பறவைகளை வேடிக்கை பார்ப்பது மனதிற்கு இதமளிக்கும், மன அழுத்தம் நீங்கும்.&lt;/p&gt;
&lt;h3&gt;சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு:&lt;/h3&gt;
&lt;p&gt;புதுச்சேரி அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற ஒரு பட்ஜெட் தலம். குறைந்த செலவில் நிறைவான ஒரு சுற்றுலாவை மேற்கொள்ள விரும்புவோர், இந்த இடங்களைத் திட்டமிட்டுச் சென்றால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளைச் சேகரிக்கலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/3e3d8fe0f47146f9523e95372a0c0ee71777525916771194_original.png" width="220"/></item><item><title><![CDATA[அதிமுக பின்னடைவு... தவெக-வுக்கு கேள்விக்குறி? - தேர்தல் கள நிலவரத்தை போட்டுடைத்த கே.பாலகிருஷ்ணன்!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/aiadmk-setback-question-mark-for-the-tvk-cpim-balakrishnan-reveals-the-election-situation-257919</link><comments>https://tamil.abplive.com/news/politics/aiadmk-setback-question-mark-for-the-tvk-cpim-balakrishnan-reveals-the-election-situation-257919#respond</comments><pubDate>Wed, 29 Apr 2026 21:53:36 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/aiadmk-setback-question-mark-for-the-tvk-cpim-balakrishnan-reveals-the-election-situation-257919</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதையே ஒருமித்த கருத்தாகத் தெரிவிக்கின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;கருத்துக்கணிப்புகள் உணர்த்தும் உண்மை&lt;/h2&gt;
&lt;p&gt;தற்போது வெளியாகியுள்ள பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதையே ஒருமித்த கருத்தாகத் தெரிவிக்கின்றன. ஒரு சில நிறுவனங்களின் கணிப்புகளில் சிறிய அளவிலான மாற்றங்கள் இருந்தாலும், திமுகவின் வெற்றியையே அனைவரும் உறுதிப்படுத்துகின்றனர். ஒரு நிறுவனம் மட்டும் அதிமுகவுக்குச் சாதகமாகக் கூறியுள்ளது. இருப்பினும், இந்தக் கணிப்புகளை நூறு சதவீதம் அப்படியே ஏற்க முடியாது; கள நிலவரத்தில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;கூடுதல் இடங்களை வெல்வோம்&lt;/h2&gt;
&lt;p&gt;தேர்தல் பிரச்சாரத்தின் போதே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்.&lt;/p&gt;
&lt;p&gt;&quot;கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணிக்கு 120 முதல் 140 இடங்கள் வரை கிடைக்கும் எனக் கூறுகின்றன. ஆனால், எங்களைப் போன்ற களப்பணியாளர்களின் கணிப்புப்படி, திமுக கூட்டணி 170 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். கருத்துக்கணிப்புகள் சற்று மந்தமாகத் தெரிந்தாலும், வாக்கு எண்ணிக்கையின் போது உண்மையான பலம் வெளிப்படும்.&quot; என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;அதிமுக மற்றும் தவெக நிலவரம்&lt;/h2&gt;
&lt;p&gt;அதிமுக எதிர்பார்த்ததை விடப் பின்னடைவையே சந்திக்கும் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்; அதை இக்கருத்துக்கணிப்புகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தைப் (தவெக) பொறுத்தவரை, அவர்களுக்குக் கணிப்புகளில் சொல்லப்பட்டுள்ள 25-26 இடங்கள் கிடைக்குமா என்பது சந்தேகமே. அவர்கள் வாக்குகளைப் பிரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த அளவிற்கான இடங்களைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறிதான்.&lt;/p&gt;
&lt;h2&gt;மக்கள் தீர்ப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;இறுதியாக அவர் கூறுகையில், &quot;கருத்துக்கணிப்புகள் எதுவாக இருந்தாலும், வரும் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது முழுமையான உண்மை தெரிந்துவிடும். ஆனால், தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு புதிய ஆட்சி அமையப் போவது உறுதி என்பது மட்டும் மீண்டும் ஒருமுறை தெளிவாகியுள்ளது,&quot; எனத் தெரிவித்தார்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/29/61ef65b54db2a0e739356ef814a84b491777479780585194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தாலி, விதவைக் கோலம்: கூவாகத்தில் திருநங்கைகளின் உணர்ச்சிப்பூர்வமான கூத்தாண்டவர் சித்திரை பெருவிழா!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tying-the-thali-adopting-the-widow-s-guise-transgender-women-s-emotional-koothandavar-chithirai-grand-festival-in-koovagam-257849</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tying-the-thali-adopting-the-widow-s-guise-transgender-women-s-emotional-koothandavar-chithirai-grand-festival-in-koovagam-257849#respond</comments><pubDate>Wed, 29 Apr 2026 12:42:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tying-the-thali-adopting-the-widow-s-guise-transgender-women-s-emotional-koothandavar-chithirai-grand-festival-in-koovagam-257849</guid><description><![CDATA[&lt;p&gt;கள்ளக்குறிச்சி: உலகப் புகழ்பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா, பல்லாயிரக்கணக்கான திருநங்கைகளின் கண்ணீர் மற்றும் மகிழ்ச்சிக்கு இடையே மிக விமரிசையாக நடைபெற்றது. மகாபாரத இதிகாசத்தின் ஒரு பகுதியை வாழ்வியலாக மாற்றும் இந்த தனித்துவமான விழாவில் பங்கேற்க, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் குவிந்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;மணப்பெண் அலங்காரத்தில் திருநங்கைகள்&lt;/h2&gt;
&lt;p&gt;விழாவின் முக்கிய நிகழ்வான 'அரவான் சாமி திருக்கண் திறத்தல்' நேற்று மாலை நடைபெற்றது. இதற்காகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வந்திருந்த திருநங்கைகள், தங்களை மணப்பெண்களாக அலங்கரித்துக் கொண்டனர். பட்டுப்புடவை, கைநிறைய வளையல்கள், வாசனையுள்ள மலர்கள் மற்றும் ஆபரணங்கள் அணிந்து ஜொலித்த திருநங்கைகள், அரவானை (கூத்தாண்டவர்) தங்கள் கணவராக ஏற்றுக்கொண்டனர். கோவில் பூசாரிகளின் கைகளால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள், கோவில் வளாகத்தில் விடிய விடிய கும்மியடித்தும், அரவானின் பெருமைகளை பாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.&lt;/p&gt;
&lt;h2&gt;பக்தி வெள்ளத்தில் தேரோட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;இன்று புதன்கிழமை அதிகாலை அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து, பிரம்மாண்ட தேரோட்டம் தொடங்கியது. இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், கூவாகம், கீரிமேடு, நத்தம் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் திருநங்கைகள் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.&lt;/p&gt;
&lt;h3&gt;விவசாயிகளின் நேர்த்திக்கடன்:&lt;/h3&gt;
&lt;p&gt;தேர் புறப்பட்டபோது, அப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் தானியங்களை அரவான் மீது வீசி, விளைச்சல் செழிக்க வேண்டி வழிபாடு செய்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;அழிகளம்: சுமங்கலிக் கோலம் கலைப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;தேரோட்டம் அதன் உச்சகட்டமான 'அழிகளம்' நோக்கிச் சென்றபோது, மகிழ்ச்சியில் இருந்த திருநங்கைகளிடம் சோகம் குடிகொண்டது. மகாபாரதப் போரில் அரவான் பலியாவதை நினைவுகூரும் வகையில், நத்தம் கிராம பந்தல் அருகே 'களப்பலி' நிகழ்ச்சி நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;அரவான் பலியானதாகக் கருதப்படும் அந்த நொடியில், திருநங்கைகள் கதறி அழுது ஒப்பாரி வைத்தனர். தங்கள் தலையில் இருந்த பூக்களைப் பிய்த்து எறிந்தும், நெற்றிக் குங்குமத்தை அழித்தும் துயரத்தை வெளிப்படுத்தினர். பின்னர், பூசாரிகள் மூலம் கை வளையல்களை உடைத்து, கழுத்தில் கட்டியிருந்த தாலியை அகற்றினர்.&lt;/p&gt;
&lt;h2&gt;விதவைக் கோலத்துடன் பிரியாவிடை&lt;/h2&gt;
&lt;p&gt;தாலியை அறநிலையத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்த திருநங்கைகள், பின்னர் அருகில் உள்ள விளைநிலங்களுக்குச் சென்று நீராடினர். மங்கல நாண் கழற்றப்பட்ட நிலையில், வெள்ளை உடை அணிந்து விதவைக் கோலம் பூண்டனர். தங்களின் 'கணவன்' அரவான் பலியான சோகத்தை முகத்தில் சுமந்தபடி, திருநங்கைகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பிரியாவிடை பெற்றுச் சென்றனர். கூவாகம் திருவிழாவையொட்டி கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/29/1d04f7edee96464331b776ece187891d1777446666659194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[புதுச்சேரி மதுபானம் 90 மி.லி கொண்டு வந்தாலும் குற்றமே! - தமிழக போலீஸ் அதிரடி]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/even-bringing-90-ml-of-puducherry-liquor-is-a-crime-tamil-nadu-police-action-257770</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/even-bringing-90-ml-of-puducherry-liquor-is-a-crime-tamil-nadu-police-action-257770#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 16:30:48 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/even-bringing-90-ml-of-puducherry-liquor-is-a-crime-tamil-nadu-police-action-257770</guid><description><![CDATA[&lt;p&gt;கடலூர்: புதுச்சேரியில் இருந்து ஒரு சிறிய (90 மி.லி) மதுபான பாட்டிலை தமிழகத்திற்குள் கொண்டு வந்தாலும் அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் அதிரடியாக தெரிவித்துள்ளனர். 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற பொதுவான விதியின் பின்னணியில் உள்ள சட்ட நுணுக்கங்களையும் அவர்கள் விளக்கியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;வழக்கின் பின்னணி: 4.5 லிட்டர் விதி செல்லுமா?&lt;/h2&gt;
&lt;p&gt;சில மாதங்களுக்கு முன்பு, காட்டுமயிலூரைச் சேர்ந்த வல்லரசு என்பவர் புதுச்சேரியில் இருந்து 1 லிட்டர் 680 மி.லி மதுபானத்தை (3 பாட்டில்கள்) எடுத்து வந்தபோது கடலூர் எல்லை சோதனைச் சாவடியில் பிடிபட்டார். அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், &quot;தமிழக அரசின் 2017-ம் ஆண்டு அரசாணையின்படி, ஒரு நபர் தனது சொந்த பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்திருக்க அனுமதி உள்ளது. எனவே 1.6 லிட்டர் வைத்திருந்தது குற்றமல்ல&quot; என்று வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.நிர்மல்குமார், அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.&lt;/p&gt;
&lt;h2&gt;காவல்துறையின் அதிரடி மேல்முறையீடு&lt;/h2&gt;
&lt;p&gt;இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் தற்போது மேல்முறையீடு செய்துள்ளனர். மேலும், இந்தச் சட்டம் குறித்து நிலவும் குழப்பங்களுக்கு விளக்கம் அளித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அனுமதி யாருக்கு?&lt;/strong&gt;: தமிழக அரசின் 4.5 லிட்டர் மதுபான விதி என்பது, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் (TASMAC) கடைகளில் முறையாக வாங்கப்பட்ட மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வெளிமாநில மதுபானம்&lt;/strong&gt;: அண்டை மாநிலமான புதுச்சேரி அல்லது பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மதுபானங்களுக்கு இந்த விதி பொருந்தாது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;90 மி.லி பாட்டிலும் குற்றமே&lt;/strong&gt;: மாநில அரசால் அங்கீகரிக்கப்படாத அல்லது இறக்குமதி அனுமதி பெறப்படாத மதுபானங்களை, ஒரு சிறிய 90 மி.லி பாட்டிலாக இருந்தாலும் சரி, அல்லது அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருந்தாலும் சரி, அதனை வைத்திருப்பது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் பிரிவு 4(1)(சி) மற்றும் 14-இன் கீழ் கடுமையான குற்றமாகும்.&lt;/p&gt;
&lt;h2&gt;பறிமுதல் மற்றும் சிறை தண்டனை&lt;/h2&gt;
&lt;p&gt;&quot;சொந்த உபயோகம்&quot; என்ற காரணத்தைக் கூறி வெளிமாநில மதுபானங்களை கொண்டு வருவது சட்டவிரோதக் கடத்தலாகவே கருதப்படும். அவ்வாறு பிடிபடுபவர்களின் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் அரசுடைமையாக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;தற்போது புதுச்சேரியில் தாராளமாகக் கிடைக்கும் 90 மி.லி பாட்டில்களை மக்கள் எளிதாக எடுத்து வருகின்றனர். ஆனால், சட்டம் இந்த விஷயத்தில் மிகவும் கடுமையானது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என கடலூர் மதுவிலக்கு போலீஸார் எச்சரித்துள்ளனர்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/ca849f1b1e6cbfbe1ad60834d4ee9b5817773559284031321_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[புதுச்சேரி டூ பெங்களூரு இனி ஈஸி! மே 1 முதல் கூடுதல் விமான சேவை: டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-to-bengaluru-now-easier-additional-flight-services-from-may-1st-ticket-bookings-open-257706</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-to-bengaluru-now-easier-additional-flight-services-from-may-1st-ticket-bookings-open-257706#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 09:59:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-to-bengaluru-now-easier-additional-flight-services-from-may-1st-ticket-bookings-open-257706</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி : புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு இடையே வான்வழிப் போக்குவரத்து தேவைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பிரபல தனியார் விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), வரும் மே 1-ஆம் தேதி முதல் தனது கூடுதல் விமான சேவைகளைத் தொடங்க உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதை முன்னிட்டு, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வரும் மே 1-ஆம் தேதி முதல் கூடுதல் விமான சேவையைத் தொடங்கவுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;இருமுறை இயக்கப்படும் விமானங்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;தற்போது புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து விமானங்களை இயக்கும் ஒரே நிறுவனமாக இண்டிகோ விளங்கி வருகிறது. ஏற்கனவே பெங்களூரு - புதுச்சேரி - ஹைதராபாத் வழித்தடத்தில் ஒரு விமானம் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை ஈடுகட்டவும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும் இரண்டு முறை (Frequency) விமானங்களை இயக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;புதிய கால அட்டவணை:&lt;/h2&gt;
&lt;p&gt;புதிய அட்டவணையின்படி, பெங்களூருவில் இருந்து காலை 10:10 மணிக்குப் புறப்படும் விமானம் 11:15 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். மறுமார்க்கமாக புதுச்சேரியில் இருந்து காலை 11:35 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12:15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். அதேபோல், மதிய வேளையில் புதுச்சேரியில் இருந்து மதியம் 2:00 மணிக்குப் புறப்படும் விமானம் 3:15 மணிக்கு பெங்களூருவை அடையும். அங்கிருந்து மாலை 4:00 மணிக்குப் புறப்பட்டு 5:10 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.&lt;/p&gt;
&lt;h2&gt;பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்:&lt;/h2&gt;
&lt;p&gt;இது குறித்து புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் கே. ராஜசேகர் ரெட்டி கூறுகையில், &quot;இந்த கூடுதல் விமான சேவை பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிக நிமித்தமாகப் பயணிப்பவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஓடுபாதை விரிவாக்கத் திட்டம்:&lt;/h2&gt;
&lt;p&gt;பெரிய ரக விமானங்கள் வந்து செல்வதற்கு வசதியாக, தற்போதைய ஓடுபாதையை 2,300 மீட்டராக விரிவாக்கம் செய்ய இந்திய விமான நிலையங்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காகத் தமிழகப் பகுதியில் 217 ஏக்கர் மற்றும் புதுச்சேரி பகுதியில் 185 ஏக்கர் என மொத்தம் 402 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்த சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில், இந்த கூடுதல் விமான சேவை சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பயணச்சீட்டு முன்பதிவுகளை இண்டிகோ நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/0e3b170dcc8f35554777a841e26c98791777350499967194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை: ரூ.33,000 சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/jobs/job-opportunity-at-jipmer-puducherry-salary-of-33-000-apply-immediately-257702</link><comments>https://tamil.abplive.com/jobs/job-opportunity-at-jipmer-puducherry-salary-of-33-000-apply-immediately-257702#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 09:24:47 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/job-opportunity-at-jipmer-puducherry-salary-of-33-000-apply-immediately-257702</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி : புதுச்சேரி ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சேவையாற்றி வரும் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ள திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (Project Technical Assistant) பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;பணியின் விவரம்:&lt;/h2&gt;
&lt;p&gt;ஜிப்மர் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் ஐ.சி.எம்.ஆர் (ICMR) திட்டத்தின் கீழ் 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' (Project Technical Assistant) பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;கல்வித் தகுதி:&lt;/h3&gt;
&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் உயிரியல் (Life Sciences), பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ் அல்லது பயோ கெமிஸ்ட்ரி ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.எஸ்சி (B.Sc) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வயது வரம்பு &amp;amp; ஊதியம்: &lt;/strong&gt;விண்ணப்பதாரர்கள் 05.05.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 33,000 ஊதியமாக வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கும் முறை: &lt;/strong&gt;விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்பு (Resume) மற்றும் தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களை icmrcrsproject@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மே 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நேர்முகத் தேர்வு: &lt;/strong&gt;விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்களுக்கு வரும் மே 9-ஆம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள ENT பிரிவில் நேர்முகத் தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/21/f7fac2e4d47e078629aba68642b873411721550748913140_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கோடை வெப்பம்: விழுப்புரம் அரசு நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக்கொள்ளக் குவியும் சிறுவர் சிறுமியர்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/summer-heat-children-flock-to-the-villupuram-government-swimming-pool-to-learn-how-to-swim-257606</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/summer-heat-children-flock-to-the-villupuram-government-swimming-pool-to-learn-how-to-swim-257606#respond</comments><pubDate>Mon, 27 Apr 2026 09:18:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/summer-heat-children-flock-to-the-villupuram-government-swimming-pool-to-learn-how-to-swim-257606</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள அரசு நீச்சல் குளத்தில், கோடை விடுமுறையை முன்னிட்டு நீச்சல் கற்றுக்கொள்ளும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது&lt;/p&gt;
&lt;p&gt;விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள அரசு நீச்சல் குளத்தில், கோடை விடுமுறையை முன்னிட்டு நீச்சல் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;பயிற்சி வகுப்புகள்:&lt;/h2&gt;
&lt;p data-path-to-node=&quot;5&quot;&gt;&lt;span class=&quot;&quot;&gt;தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக &lt;/span&gt;'நீச்சல் கற்றுக்கொள்வோம்' (Learn to Swim)&lt;span class=&quot;&quot;&gt; என்ற சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.&lt;/span&gt;&lt;span class=&quot;&quot;&gt; நடப்பு ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால்,&lt;/span&gt;&lt;span class=&quot;&quot;&gt; ஏப்ரல் மாதம் முதலே மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;முக்கிய விவரங்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பயிற்சி காலம்:&lt;/strong&gt; ஒவ்வொரு கட்டப் பயிற்சியும் 12 நாட்கள் நடத்தப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நேரம்:&lt;/strong&gt; காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கட்டணம்:&lt;/strong&gt; ஒரு நபருக்கு 1,500 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி வரி (சுமார் ₹1,770) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;ஆர்வமும் பாதுகாப்பும்:&lt;/h2&gt;
&lt;p&gt;தற்போது கடும் வெயில் நிலவி வருவதாலும், கோடை விடுமுறை என்பதாலும் விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வத்துடன் இந்தப் பயிற்சியில் சேர்த்து வருகின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;பயிற்சியின் போது அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும் வகையில், அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் உயிர்மயக்கப் பாதுகாவலர்கள் (Lifeguards) நியமிக்கப்பட்டு மாணவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். பயிற்சி முடிவில் மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. திங்கட்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதால் நீச்சல் குளம் பகுதி தற்போது களைகட்டியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/27/40f456c3b959e4b5b019204e7e7a653b1777261682815194_original.jpg" width="220"/></item></channel></rss>