<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>villupuram</title><atom:link href="https://tamil.abplive.com/villupuram/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Fri, 12 Jun 2026 01:45:10 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[புதுச்சேரிக்கு பாய்ந்து வரும் மழை மேகங்கள்! 13 நாள் நரக வெயிலுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி? வானிலை மையத்தின் ‘அல்டிமேட்’ அப்டேட்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-weather-report-heavy-rain-warning-in-puducherry-and-tamil-nadu-districts-tnn-263534</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-weather-report-heavy-rain-warning-in-puducherry-and-tamil-nadu-districts-tnn-263534#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 17:44:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-weather-report-heavy-rain-warning-in-puducherry-and-tamil-nadu-districts-tnn-263534</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர்ந்து மக்களை வறுத்தெடுத்து வந்த நிலையில், தற்போது வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்கக் குளிர்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொட்டு, கத்தரி வெயில் போல் மக்களை வறுத்தெடுத்து வந்தது. இந்நிலையில், வெப்பத்தின் பிடியில் இருந்து மக்களுக்குச் சற்று நிம்மதி தரும் வகையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-&lt;/p&gt;
&lt;h2&gt;வளிமண்டல சுழற்சி&lt;/h2&gt;
&lt;p&gt;மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிலோ மீட்டர் உயரத்திலும், தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.12 கிலோ மீட்டர் உயரத்திலும் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் 9.35 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;104 டிகிரி வெயில்: முடங்கிய புதுச்சேரி!&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் கடந்த 13 நாட்களாகத் தொடர்ந்து வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவாகி வந்தது. இதில் உச்சக்கட்டமாக நேற்று அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டாகப் பதிவானது. இந்த கடும் வெயில் காரணமாக, அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மக்கள் யாரும் வெளியில் வரவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் நகரின் முக்கிய சந்திப்புகள், வணிகப் பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இருசக்கர வாகன ஓட்டிகள், முதியவர்கள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கப் பொதுமக்கள் இளநீர், பழச்சாறு, குளிர்பானங்களை அதிகளவில் வாங்கிப் பருகினர்.&lt;/p&gt;
&lt;h2&gt;நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நிலையில், வெயிலில் தவித்த மக்களுக்குக் குளிர்ச்சியான செய்தியாக நாளை (ஜூன் 12) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று: கனமழை எச்சரிக்கை!&lt;/h2&gt;
&lt;p&gt;நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, விழுப்புரம், கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;நாளை மறுநாள் வானிலை நிலவரம் (ஜூன் 13):&lt;/h2&gt;
&lt;p&gt;&amp;nbsp;தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/06/b85cbb7ffd1e291b075e4a9d86a29e731738821631913614_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பிளஸ்-2 முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு: புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி சேர்க்கை தொடக்கம்!]]></title><link>https://tamil.abplive.com/education/diploma-training-at-the-puducherry-institute-of-cooperative-management-admissions-open-a-rare-opportunity-to-earn-3-certificates-tnn-263521</link><comments>https://tamil.abplive.com/education/diploma-training-at-the-puducherry-institute-of-cooperative-management-admissions-open-a-rare-opportunity-to-earn-3-certificates-tnn-263521#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 16:21:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/diploma-training-at-the-puducherry-institute-of-cooperative-management-admissions-open-a-rare-opportunity-to-earn-3-certificates-tnn-263521</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் தமிழக இளைஞர்களின் அரசு மற்றும் தனியார் வங்கித் துறை வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில், புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஓராண்டு கால முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (HDCm) வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி மற்றும் தமிழக இளைஞர்களுக்குப் பயனுள்ள ஒரு சிறந்த வேலைவாய்ப்பு வழிகாட்டியாக, புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஓராண்டு கால முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்புக்கான (Higher Diploma in Co-operative Management) மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதுவை மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குனர் வெங்கடேஸ்வரி வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;கல்வித் தகுதியும் வயது வரம்பும்:&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த ஓராண்டு பயிற்சியில் சேருவதற்குப் பின்வரும் தகுதிகள் அவசியமாகும்:&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கல்வித் தகுதி:&lt;/strong&gt; பிளஸ்-2 (12-ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வயது வரம்பு:&lt;/strong&gt; விண்ணப்பதாரர்கள் வரும் 01.07.2026 அன்று 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;அதிகபட்ச வயது வரம்பு இல்லை: இந்த சேர்க்கையின் மிக முக்கிய அம்சமாக, பழகுநர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, கூட்டுறவுத் துறையில் சாதிக்க விரும்பும் அனைத்து வயதினருக்கும் இது ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;பயிற்சிப் பாடங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த ஓராண்டு காலப் பயிற்சியில், மாணவர்களின் வேலைவாய்ப்பிற்குத் தேவையான பல்வேறு முக்கியப் பாடங்கள் மற்றும் தொழிற்பயிற்சிகள் விரிவாகக் கற்றுத்தரப்படுகின்றன. அடிப்படைப் பாடங்கள்: கூட்டுறவு மேலாண்மை, நிதி மேலாண்மை, அலுவலக நிர்வாகம், வங்கியியல், கணக்கியல் மற்றும் தணிக்கை. சட்ட நடைமுறைகள்: கடன் மற்றும் கடன் சார்பற்ற சங்கங்களின் செயல்பாடுகள், கூட்டுறவு மற்றும் இதர சட்டங்கள். கூடுதல் தொழிற்பயிற்சிகள்: இன்றைய நவீன வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்ப கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் (Jewel Appraisal) மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஒரே பயிற்சியில் 3 மதிப்புமிக்க சான்றிதழ்கள்!&lt;/h2&gt;
&lt;p&gt;இப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குப் பின்வரும் மூன்று சான்றிதழ்கள் ஒன்றாக வழங்கப்படவுள்ளன:&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;கூட்டுறவு மேலாண்மை பட்டயச் சான்றிதழ்&lt;/li&gt;
&lt;li&gt;கணினி மேலாண்மை சான்றிதழ்&lt;/li&gt;
&lt;li&gt;நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் சான்றிதழ்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசித் தேதி:&lt;/h2&gt;
&lt;p&gt;இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள தகுதியான மாணவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tncu.tn.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அடுத்த மாதம் (ஜூலை) 20-ஆம் தேதி மாலை 5:00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை, கூட்டுறவு வங்கிகள் மற்றும் இதர வங்கித் துறைகளில் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளைப் பெற விரும்பும் புதுச்சேரி மற்றும் தமிழக மாணவர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/b0b3c12ccf09c023b68bdd9181e818e01719825794025140_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[வழக்கை முடக்க ரூ.2 கோடி லஞ்சம்: போலி மருந்து அதிபர் ராஜாவை டெல்லிக்கு தூக்கிய சிபிஐ!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/owner-arrested-in-puducherry-for-paying-a-2-crore-bribe-via-hawala-to-stall-a-case-against-a-spurious-medicine-company-tnn-263519</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/owner-arrested-in-puducherry-for-paying-a-2-crore-bribe-via-hawala-to-stall-a-case-against-a-spurious-medicine-company-tnn-263519#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 16:03:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/owner-arrested-in-puducherry-for-paying-a-2-crore-bribe-via-hawala-to-stall-a-case-against-a-spurious-medicine-company-tnn-263519</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.200 கோடி போலி மருந்து வழக்கை மேல் நடவடிக்கை இன்றி முடக்குவதற்காக, டெல்லி காவல் ஆய்வாளருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், போலி மருந்து நிறுவன அதிபர் 'ராஜா' என்ற வள்ளியப்பனை சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் புதுச்சேரியில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஆக்ராவில் தொடங்கிய சோதனை&lt;/h2&gt;
&lt;p&gt;கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் மத்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பெருமளவில் போலி மருந்துகள் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்த, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் என்பவர்தான் இந்த போலி மருந்து நெட்வொர்க்கின் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. இவர் நாட்டின் முன்னணி மருந்து நிறுவனமான 'சன் பார்மா' உட்பட பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயர்களில் போலி மருந்துகளைத் தயாரித்து, நாடு முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;ரூ.200 கோடி போலி மருந்துகள் பறிமுதல்&lt;/h2&gt;
&lt;p&gt;இதுகுறித்து சன் பார்மா நிறுவனம் அளித்த புகாரின்பேரில், புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த ராஜாவின் ரகசிய போலி மருந்து தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ராஜாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், தங்க மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை எஸ்பி நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (SIT) மாற்றப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், ராஜா, அவரது மனைவி ஞானப்பிரியா, ராணா, மெய்யப்பன், விவேக், அவரது கூட்டாளியும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மணிகண்டன் மற்றும் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி உட்பட 4 பெண்கள் என மொத்தம் 26 பேரை போலீஸார் கைது செய்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;சிபிஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கு&lt;/h2&gt;
&lt;p&gt;குற்றவாளி ராஜாவுக்கு பல்வேறு மாநிலங்களில் போலி மருந்து விற்பனைத் தொடர்பு இருந்ததால், வழக்கின் தன்மையைக் கருதி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தார். அதன்பேரில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதற்கிடையே, கைது செய்யப்பட்டிருந்த ராஜா உள்ளிட்ட 26 பேரும் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;வழக்கை முடக்க ரூ.3 கோடி பேரம்: டெல்லியில் ஹவாலா டீல்&lt;/h2&gt;
&lt;p&gt;சிபிஐ தன் மீது பதிவு செய்துள்ள இரு வழக்குகளிலும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் வழக்கை அப்படியே முடக்குவதற்காக, ராஜா டெல்லியில் உள்ள சில உயர் போலீஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது வழக்கை முடிக்க போலீஸ் தரப்பில் ரூ.3 கோடி லஞ்சம் கேட்கப்பட்டு, இறுதியாக ரூ.2 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டு முடிவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதன்படி, கடந்த ஜூன் 6-ம் தேதி லஞ்சப் பணத்தை ஹவாலா முறையில் டெல்லியில் பட்டுவாடா செய்ய ராஜா திட்டமிட்டார். இதற்காக சென்னையைச் சேர்ந்த ஹவாலா ஏஜெண்ட் நாகூரான் என்பவரிடம் முதற்கட்டமாக ரூ.1 கோடியை ராஜா கொடுத்துள்ளார். நாகூரான், ராஜாவின் நண்பரான அபிஷேகப்பாக்கம் ராஜ்குமார் என்பவரின் மூலமாக டெல்லியில் உள்ள மற்றொரு ஹவாலா ஏஜெண்டைச் சந்தித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர், அந்த ஏஜெண்ட் கொடுத்த பணத்தையும், தான் கொண்டு சென்ற ரூ.1 கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடியை டெல்லி காவல் ஆய்வாளர் பிரவின்குமாரிடம் கொடுப்பதற்காக ராஜ்குமார் சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;கையும்களவுமாக பிடித்த சிபிஐ: அடுத்தடுத்து கைது நடவடிக்கை&lt;/h2&gt;
&lt;p&gt;லஞ்சப் பணம் கைமாறும் போது, டெல்லி சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் அதிரடியாகப் புகுந்து காவல் ஆய்வாளர் பிரவின்குமார் மற்றும் ராஜாவின் நண்பர் ராஜ்குமார் ஆகிய இருவரையும் ரூ.2 கோடி பணத்துடன் கையும்களவுமாக கைது செய்தனர். இதுதொடர்பாக டெல்லி சிபிஐ லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதன் தொடர்ச்சியாக: ஜூன் 8-ம் தேதி சென்னையில் வைத்து ஹவாலா ஏஜெண்ட் நாகூரானை சிபிஐ லஞ்ச ஒழிப்பு சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். நேற்று முன்தினம் வழக்கில் மிக முக்கிய குற்றவாளியான மருந்து நிறுவன அதிபர் ராஜாவை புதுச்சேரியில் வைத்து சிபிஐ அதிரடியாகக் கைது செய்தது.&lt;/p&gt;
&lt;h2&gt;வீட்டில் சோதனை &amp;amp; சொத்துக்கள் பறிமுதல்&lt;/h2&gt;
&lt;p&gt;ராஜாவைக்கைது செய்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ராஜாவை புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ அதிகாரிகள், லஞ்ச வழக்கு டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மேல் விசாரணைக்காக அவரை நீதிமன்ற அனுமதியுடன் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் புதுச்சேரி மற்றும் டெல்லி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/2ebd97317e133d476d9d788c87994ab21781173940525194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Auroville ; ஆரோவில்லில் டிஜிட்டல் புரட்சி: ஜோஹோ மென்பொருள் பயிற்சித் திட்டம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/auroville-moves-towards-digital-evolution-zoho-accounting-training-for-over-200-administrators-tnn-263447</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/auroville-moves-towards-digital-evolution-zoho-accounting-training-for-over-200-administrators-tnn-263447#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 07:51:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/auroville-moves-towards-digital-evolution-zoho-accounting-training-for-over-200-administrators-tnn-263447</guid><description><![CDATA[&lt;p&gt;ஆரோவில் : ஆரோவில்லின் செயல்பாட்டு வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், நவீன நிதித் தொழில்நுட்பத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, ஆரோவில் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் அனைத்து வணிக மற்றும் சேவைப் பிரிவுகளின் நிர்வாகிகள் மற்றும் கணக்காளர்களுக்கான மிகச் சிறப்பான கூட்டுப் பயிற்சித் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. நிதி மற்றும் சொத்து மேலாண்மைக் குழுவால் (FAMC) நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் கணக்காளர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஜோஹோ கணக்கியல் மென்பொருள் ஒருங்கிணைப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;அனைத்து ஆரோவில் பிரிவுகளிலும் 'ஜோஹோ கணக்கியல்' (Zoho Accounts) மென்பொருளை செயல்படுத்துவது மற்றும் ஒருங்கிணைப்பது குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த பயனுள்ள அமர்வின் போது, ஆரோவில் அறக்கட்டளையின் கணக்காளர்கள் மற்றும் FAMC கணக்குக் குழுவினர் இணைந்து, தினசரி நிதிச் செயல்பாடுகளை எளிமையாக்குவதற்கு இந்த புதிய மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினர். மேலும், இந்த கலந்துரையாடலின் போது பங்கேற்பாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை முன்வைத்து, அதற்கான தெளிவான விளக்கங்களை உடனுக்குடன் பெற்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;ரொக்கமில்லா பரிவர்த்தனை &amp;amp; வெளிப்படைத்தன்மை&lt;/h2&gt;
&lt;p&gt;சமீப நாட்களாக, ஆரோவில்லின் அனைத்துப் பிரிவுகளும் முற்றிலும் ரொக்கமில்லா (Cashless) நிதி மாதிரியை நோக்கி வேகமாக மாறி வருகின்றன. பாதுகாப்பான டிஜிட்டல் கட்டண முறைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை ஜோஹோ மென்பொருளுடன் தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், ஆரோவில் தனது அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளிலும் முழுமையான பொறுப்புக்கூறலையும் மற்றும் இணையற்ற வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கிறது. இந்த நவீனமயமாக்கல் முயற்சி, நிலையான, திறமையான மற்றும் எதிர்காலத்திற்கான சிறந்த நிர்வாக நடைமுறைகளில் ஆரோவில் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;தொலைநோக்கு தலைமை&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த மிகச்சிறந்த முற்போக்கான முன்முயற்சியானது, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி, IAS அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் ரவி அவர்களின் தொலைநோக்கு தலைமை மற்றும் நிர்வாகச் சிறப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவை இந்த டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. இது ஆரோவில்லின் பல்வேறு பிரிவுகள் அதிக நிதித் தெளிவு மற்றும் செயல்திறனுடன் இயங்குவதற்குப் பெரும் ஊக்கமளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்பயிற்சி முகாமில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட பிரிவு நிர்வாகிகள் மற்றும் கணக்கியல் ஊழியர்கள் தங்களின் முழுமையான ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். புதிய அமைப்பின் எளிமையான பயன்பாடு மற்றும் FAMC கணக்குக் குழுவினர் வழங்கிய பிரத்யேக ஆதரவை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆரோவில் சர்வதேச நகரமாகத் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் வேளையில், ஜோஹோ மென்பொருள் ஒருங்கிணைப்பு மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை நோக்கிய இந்த நகர்வு, ஆரோவில் எப்போதும் புதுமை, நேர்மை மற்றும் முற்போக்கான சமூக நிர்வாகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வதை உறுதி செய்கிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/2933f25e36973a369ace71840f59f6be1781144412358194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம்: அமைச்சர் அருண்ராஜ் உறுதி!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/resolution-against-neet-in-the-assembly-again-minister-arunraj-s-bold-announcement-263444</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/resolution-against-neet-in-the-assembly-again-minister-arunraj-s-bold-announcement-263444#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 07:44:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/resolution-against-neet-in-the-assembly-again-minister-arunraj-s-bold-announcement-263444</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் : நீட் கிராமப்புற மாணவர்களுக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்றும், கல்வி மற்றும் மருத்துவம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை நிலைப்பாடு என்றும். நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;விழுப்புரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற 11-ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், கடந்த காலங்களில் விழுப்புரம் போன்ற பின்தங்கிய மாவட்டங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், தற்போதைய அரசு அனைத்து மாவட்ட மக்களுக்கும் தரமான மருத்துவ சேவைகளை கொண்டு சேர்க்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;சென்னை &amp;ndash; திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீது பொதுமக்கள் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும், குறிப்பாக சாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை நோயாளிகள் அதிக அளவில் இங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மருத்துவமனைக்கு தேவையான அனைத்து அடிப்படை மற்றும் மேம்பட்ட வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தரும் என உறுதியளித்த அமைச்சர், விரைவில் புதிய கிரிட்டிக்கல் கேர் பிளாக் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் மருத்துவமனையின் வளர்ச்சிக்காக நிர்வாகம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;தற்போது 611 படுக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். இதனால் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியிடங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். விழுப்புரம் மாவட்டத்திற்கு தனி சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சைப் பிரிவு தேவை என்ற கோரிக்கை குறித்து கேட்டபோது, அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்படும் என்றும், கிரிட்டிக்கல் கேர் பிளாக் தொடங்கப்பட்ட பிறகு அடுத்த கட்டமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;புற்றுநோய் சிகிச்சைக்கான கதிர்வீச்சு இயந்திரம் அமைக்க வேண்டிய அவசியம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு குறைபாடு, சுகாதார வசதிகள் பற்றாக்குறை போன்ற புகார்கள் குறித்து கேட்டபோது, நல்ல நிர்வாகத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்றும், சுத்தமான காத்திருப்பு அறைகள், கழிப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது தொடர்பாக பல்வேறு துறைகளிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், அவை அனைத்தையும் அரசு கனிவுடன் பரிசீலித்து உரிய முடிவுகளை எடுக்கும் என்றும் கூறினார். மருத்துவக் கல்லூரிக்கு தேவையான மின்சார வசதிகளை மேம்படுத்த புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பது தொடர்பாக மின்சாரத் துறையுடன் ஆலோசித்து விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழகத்தில் மருத்துவர்-நோயாளி விகிதம் இந்திய அளவில் சிறப்பாக உள்ளதாகவும், அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசு மருத்துவமனைகளில் கையூட்டு பெறப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், லஞ்சம் மற்றும் ஊழலற்ற நிர்வாகமே அரசின் நோக்கம் என்றும், தவறுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மருத்துவ கவுன்சிலிங் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர், மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான அனைத்து கவுன்சிலிங்குகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருவதாக கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;நீட் தேர்வு குறித்து அரசின் நிலைப்பாட்டை விளக்கிய அமைச்சர், நீட் கிராமப்புற மாணவர்களுக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்றும், கல்வி மற்றும் மருத்துவம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வரை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/10a623b68d0d9b1f8f960d2cbd7c40bf1781143611486194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[புதுச்சேரியில் பயங்கரம்: செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி... ஒரே நாளில் 10 பேரிடம் ரூ.3 லட்சம் சுருட்டல்...!]]></title><link>https://tamil.abplive.com/crime/online-scam-in-puducherry-2-96-lakh-swindled-from-10-people-in-a-single-day-via-car-rental-app-links-cyber-crime-police-investigating-263347</link><comments>https://tamil.abplive.com/crime/online-scam-in-puducherry-2-96-lakh-swindled-from-10-people-in-a-single-day-via-car-rental-app-links-cyber-crime-police-investigating-263347#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 08:38:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/online-scam-in-puducherry-2-96-lakh-swindled-from-10-people-in-a-single-day-via-car-rental-app-links-cyber-crime-police-investigating-263347</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில் சமீபகாலமாக ஆன்லைன் மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பு, செயலிகளை பதிவிறக்கம் செய்யக் கோருதல் போன்ற பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது போலி 'ஏ.பி.கே' (APK) ஃபைல் மூலமாக புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் சுமார் 2 லட்சத்து 96 ஆயிரத்து 813 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;ஏ.பி.கே (APK) செயலி மூலம் விழுந்த முதல் விக்கெட்!&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் மொபைல் போனுக்கு அண்மையில் குறுஞ்செய்தி (SMS) ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தான் ஒரு பிரபல தனியார் கார் வாடகைக்கு விடும் (Rental Car) நிறுவனத்தின் பிரதிநிதி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், தங்களது நிறுவனத்தின் பிரத்யேக செயலியை இன்ஸ்டால் செய்தால் பல்வேறு சலுகைகள் மற்றும் வருமானம் கிடைக்கும் என ஆசைவார்த்தைகளைக் கூறியுள்ளார். அதனை நம்பிய காலாப்பட்டு நபர், அந்த மர்ம நபர் அனுப்பிய லிங்க் மூலமாக ஒரு குறிப்பிட்ட ஏ.பி.கே (APK) ஃபைலை தனது மொபைலில் பதிவிறக்கம் செய்து நிறுவியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;அடுத்தடுத்து 10 பேர் சிக்கினர்&lt;/h2&gt;
&lt;p&gt;இதேபோல் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் லிங்க்குகள் மூலமாக அடுத்தடுத்து 9 பேர் தங்களது பணத்தை பறிகொடுத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;காந்திநகரை சேர்ந்த நபர் - ரூ.48,000&lt;/li&gt;
&lt;li&gt;கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த நபர் - ரூ.39,000&lt;/li&gt;
&lt;li&gt;கோவிந்த சாலையை சேர்ந்த பெண் - ரூ.39,000&lt;/li&gt;
&lt;li&gt;மிஷன் வீதியை சேர்ந்த பெண் - ரூ.39,000&lt;/li&gt;
&lt;li&gt;காலாப்பட்டை சேர்ந்த மற்றொரு நபர் - ரூ.35,000&lt;/li&gt;
&lt;li&gt;கோரிமேட்டை சேர்ந்த நபர் - ரூ.27,000&lt;/li&gt;
&lt;li&gt;கோரிமேட்டை சேர்ந்த மற்றொருவர் - ரூ.25,000&lt;/li&gt;
&lt;li&gt;ஒதியன்சாலையை சேர்ந்த நபர் - ரூ.6,828&lt;/li&gt;
&lt;li&gt;பங்கூரை சேர்ந்த நபர் - ரூ.1,394&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 10 பேர் தங்களது வங்கி கணக்குகளில் இருந்து ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்து 813-ஐ இழந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;எப்படி நடந்தது திருட்டு?&lt;/h2&gt;
&lt;p&gt;அந்த போலியான செயலியில் தனது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ரகசிய எண்களை அவர் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, மொபைலுக்கு வந்த ஓ.டி.பி (OTP) எண்ணையும் மர்ம நபரிடம் பகிர்ந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 59,081 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை&lt;/h2&gt;
&lt;p&gt;ஒரே நேரத்தில் இத்தனைப் பேர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தன. பாதிக்கப்பட்டவர்களின் புகார்களைப் பெற்றுக்கொண்ட போலீஸார், மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோசடிப் பேர்வழிகள் பயன்படுத்திய வங்கி கணக்குகள், மொபைல் எண்கள் மற்றும் அவர்கள் அனுப்பிய ஏ.பி.கே லிங்க்குகளின் ஐபி முகவரி (IP Address) ஆகியவற்றை வைத்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;சைபர் கிரைம் போலீஸாரின் அவசர எச்சரிக்கை:&lt;/h2&gt;
&lt;p&gt;அன்னிய நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் அல்லது எஸ்.எம்.எஸ் மூலமாக வரும் எந்தவொரு 'APK' ஃபைல்களையும் மொபைலில் இன்ஸ்டால் செய்யக் கூடாது. கூகுள் பிளே ஸ்டோர் தவிர்த்து பிற வழிகளில் செயலிகளை பதிவிறக்குவது ஆபத்தானது. மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும் வங்கி கணக்கு விவரங்களையோ, ஓ.டி.பி (OTP) எண்களையோ யாருக்கும் பகிர வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆன்லைன் மோசடிக்கு உள்ளானால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை அழைக்கவும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/25/b644ee708ef22ffba57b5de4595a734717771377615331299_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[JIPMER Recruitment 2026: ஜிப்மர் மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதச் சம்பளம் ரூ.67,000 வரை!]]></title><link>https://tamil.abplive.com/jobs/jipmer-recruitment-2026-new-job-notification-from-jipmer-hospital-monthly-salary-up-to-rs-67-000-263345</link><comments>https://tamil.abplive.com/jobs/jipmer-recruitment-2026-new-job-notification-from-jipmer-hospital-monthly-salary-up-to-rs-67-000-263345#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 08:24:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/jipmer-recruitment-2026-new-job-notification-from-jipmer-hospital-monthly-salary-up-to-rs-67-000-263345</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Project Nurse - II மற்றும் Project Research Scientist - I (Medical) ஆகிய பிரிவுகளில் தற்காலிக அடிப்படையில் (Contract Basis) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் வரும் 16.06.2026 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/AeGPyaUT8g4?si=kkVhC524FGvtTiM7&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;காலிப்பணியிட விவரங்கள் மற்றும் தகுதிகள்&lt;/h2&gt;
&lt;h3&gt;1. Project Nurse - II&lt;/h3&gt;
&lt;p&gt;காலியிடங்களின் எண்ணிக்கை: 02&lt;/p&gt;
&lt;p&gt;கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் General Nursing and Midwife (GNM) படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;வயது வரம்பு: 16.06.2026 அன்று விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;சம்பளம்: மாதம் ரூ. 20,000/- + 20% HRA&lt;/p&gt;
&lt;h3&gt;2.Project Research Scientist - I (Medical)&lt;/h3&gt;
&lt;p&gt;காலியிடங்களின் எண்ணிக்கை: 1&lt;/p&gt;
&lt;p&gt;கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வயதுத் தகுதி: 16.06.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;சம்பளம்: ரூ. 67000 + 20% HRA&lt;/p&gt;
&lt;p&gt;தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;விண்ணப்பிப்பது எப்படி?&lt;/h2&gt;
&lt;p&gt;இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://jipmer.edu.in/announcement/advertisements-recruitment-contract-basis-posts-project-research-scientist-i-medical-0 என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்ய வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.06.2026&lt;/p&gt;
&lt;p&gt;https://jipmer.edu.in/announcement/advertisements-recruitment-contract-basis-posts-project-research-scientist-i-medical-0&amp;nbsp;இந்த வேலைவாய்ப்பு குறித்த வயது வரம்பு தளர்வு, கூடுதல் தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜிப்மர் இணையதளப் பக்கத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) முழுமையாகப் படித்துப் பார்த்துப் பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/20/81b5ecc493da75f8f69e79d30d6b3be61718878142959140_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[Power Shutdown : கடலூர் மாவட்டத்தில்  இன்று (10.06.2026) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா...? ஏரியாக்களின் லிஸ்ட் இதோ.....]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/cuddalore-power-cut-today-10-06-2026-know-timings-areas-affected-by-cuddalore-power-shutdown-tnn-263331</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/cuddalore-power-cut-today-10-06-2026-know-timings-areas-affected-by-cuddalore-power-shutdown-tnn-263331#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 06:25:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/cuddalore-power-cut-today-10-06-2026-know-timings-areas-affected-by-cuddalore-power-shutdown-tnn-263331</guid><description><![CDATA[&lt;p&gt;கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கியத் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஒறையூர் &amp;nbsp;துணை மின் நிலைய பராமரிப்பு பணி:&lt;/h2&gt;
&lt;p&gt;ஒறையூர், எனதிரிமங்கலம், நல்லுார்பாளையம், வாணியம்பாளையம், பண்டரக்கோட்டை, திருத்துறையூர்,வரிஞ்சிப்பாக்கம், கரும்பூர்,கொரத்தி, சின்னபேட்டை, அழகுப்பெருமாள் குப்பம், அவியனுார், பைத்தாம்பாடி,பைத்தாம்பாடிசத்திரம் , காவனுார்,பூண்டி, நத்தம், மணம் தவிழ்ந்த புத்துார், மேல் அருங்குணம், அக்கடவல்லி, வேலங்காடு, ராயர்பாளையம் மற்றும் மணப்பாக்கம்.&lt;/p&gt;
&lt;h2&gt;கேப்பர்மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:&lt;/h2&gt;
&lt;p&gt;பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைபாளையம், சான்றோர்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாக்கம், எஸ்.புதுார், மணக்குப்பம், எம்.புதுார்.&lt;/p&gt;
&lt;h2&gt;தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் பாரமரிப்பு பணி:&lt;/h2&gt;
&lt;p&gt;அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரெங்கநாதபுரம், தையல் குணாம்பட்டினம்.&lt;/p&gt;
&lt;h2&gt;குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:&lt;/h2&gt;
&lt;p&gt;குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்ரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ்.புதுார், வள்ளுவர் காலனி, காரைக்காடு.&lt;/p&gt;
&lt;h2&gt;பூங்குணம் துணை மின்நிலைய பராமரிப்பு பணி:&lt;/h2&gt;
&lt;p&gt;அங்குசெட்டிப்பாளையம், &amp;nbsp;சேமக்கோட்டை, &amp;nbsp;விசூர், கருக்கை, மணலுார், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், &amp;nbsp; சூரக்குப்பம், பணப்பாக்கம், பக்கிரிபாளையம், ராசாப்பாளையம், &amp;nbsp;தமிழ்நாடு வீட்டுவசதிவாரியம், &amp;nbsp;ஏரிப்பாளையம், தட்டாம்பாளையம், மாளிகைமேடு, புதுப்பேட்டை, கொண்டாரெட்டிப்பாளையம், பண்டரக்கோட்டை, தொரப்பாடி, கோட்லாம்பாக்கம் வ.ஊ.சி நகர், ஆர்.எஸ்.மணிநகர், ரயில்வே காலணி, சாமியார் தர்கா, மற்றும் புதுநகர்.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/03/b2356dcd871a1ef1fc03990adc3f63a317804642247821241_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Villupuram Power Cut 10.06.2026 : விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கரண்ட் கட் ! உங்க ஏரியா இருக்கா?]]></title><link>https://tamil.abplive.com/news/villupuram/villupuram-power-cut-in-today-10-06-2026-multiple-areas-marakkanam-to-face-outage-for-maintenance-tnn-263333</link><comments>https://tamil.abplive.com/news/villupuram/villupuram-power-cut-in-today-10-06-2026-multiple-areas-marakkanam-to-face-outage-for-maintenance-tnn-263333#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 06:24:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ விழுப்புரம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/villupuram/villupuram-power-cut-in-today-10-06-2026-multiple-areas-marakkanam-to-face-outage-for-maintenance-tnn-263333</guid><description><![CDATA[&lt;p&gt;Villupuram Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (10.06.2026) மரக்காணம், முருக்கேரி துணைமின்நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காலை 09.00 மணி முதல் 6.00 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மரக்காணம்&amp;nbsp; துணை மின்நிலையம்&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;மரக்காணம்&lt;/li&gt;
&lt;li&gt;ஆச்சிக்காடு&lt;/li&gt;
&lt;li&gt;முட்டுக்காடு&lt;/li&gt;
&lt;li&gt;அசப்பூர்&lt;/li&gt;
&lt;li&gt;கந்தாடு&lt;/li&gt;
&lt;li&gt;வட அகரம்&lt;/li&gt;
&lt;li&gt;திருக்கனூர்&lt;/li&gt;
&lt;li&gt;ஆ.புதுப்பாக்கம்&lt;/li&gt;
&lt;li&gt;கூனிமேடு&lt;/li&gt;
&lt;li&gt;கீழ்புத்துப்பட்டு&lt;/li&gt;
&lt;li&gt;கீழ்பேட்டை&lt;/li&gt;
&lt;li&gt;அனுமந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;முருக்கேரி துணை மின் நிலையம்&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;முருக்கேரி&lt;/li&gt;
&lt;li&gt;சிறுவாடி&lt;/li&gt;
&lt;li&gt;சாத்தமங்கலம்&lt;/li&gt;
&lt;li&gt;நடுக்குப்பம்&lt;/li&gt;
&lt;li&gt;வண்டிப்பாளையம்&lt;/li&gt;
&lt;li&gt;தேவிகுளம்&lt;/li&gt;
&lt;li&gt;கோட்டிக்குப்பம்&lt;/li&gt;
&lt;li&gt;ஓமிப்பேர்&lt;/li&gt;
&lt;li&gt;கிளாப்பாக்கம்&lt;/li&gt;
&lt;li&gt;முன்னூர்&lt;/li&gt;
&lt;li&gt;முத்தாம்பாளையம்&lt;/li&gt;
&lt;li&gt;வடநெற்குணம்&lt;/li&gt;
&lt;li&gt;ராயநல்லூர்&lt;/li&gt;
&lt;li&gt;குரூர்&lt;/li&gt;
&lt;li&gt;வைடப்பாக்கம்&lt;/li&gt;
&lt;li&gt;ஆலத்தூர்&lt;/li&gt;
&lt;li&gt;அசப்பூர்&lt;/li&gt;
&lt;li&gt;பிரம்மதேசம்&lt;/li&gt;
&lt;li&gt;வன்னிப்பேர்&lt;/li&gt;
&lt;li&gt;டி.புதுப்பாக்கம்&lt;/li&gt;
&lt;li&gt;ஆலங்குப்பம்&lt;/li&gt;
&lt;li&gt;சிங்கநந்தல்&lt;/li&gt;
&lt;li&gt;ஏந்தூர்&lt;/li&gt;
&lt;li&gt;அரியந்தாங்கல்&lt;/li&gt;
&lt;li&gt;கீழ்சிவிரி&lt;/li&gt;
&lt;li&gt;நல்முக்கல்&lt;/li&gt;
&lt;li&gt;சொக்கந்தாங்கல்&lt;/li&gt;
&lt;li&gt;நல்லாளம்&lt;/li&gt;
&lt;li&gt;வெள்ளகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;மேற்கண்ட மின்தடை நாளானது தவிர்க்க இயலாத காரணம் ஏற்படும்பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்சார நிறுத்தம்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்&lt;/li&gt;
&lt;li&gt;துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு&lt;/li&gt;
&lt;li&gt;துணை மின்நிலைய சோதனை &amp;amp; செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்&lt;/li&gt;
&lt;li&gt;துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்&lt;/li&gt;
&lt;li&gt;மின்மாற்றி பழுதுபார்ப்பு &amp;amp; சேவை&lt;/li&gt;
&lt;li&gt;தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு&lt;/li&gt;
&lt;li&gt;பாதுகாப்பு சோதனை&lt;/li&gt;
&lt;li&gt;இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை&lt;/li&gt;
&lt;/ul&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/14/c004a11a7d6113b8d86229e2fedaffb21752463604591614_original.png" width="220"/></item><item><title><![CDATA[சுடுகாடு பிரச்சினை: கோட்டகுப்பத்தில் மீனவப் பெண்கள் கழுத்தில் கயிறு கட்டி தற்கொலை முயற்சி போராட்டம் - கடலோரக் கிராமத்தில் பெரும் பதற்றம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/crematorium-dispute-fisherwomen-in-kottakuppam-stage-a-protest-by-attempting-suicide-with-ropes-around-their-necks-high-tension-in-the-coastal-village-263330</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/crematorium-dispute-fisherwomen-in-kottakuppam-stage-a-protest-by-attempting-suicide-with-ropes-around-their-necks-high-tension-in-the-coastal-village-263330#respond</comments><pubDate>Tue, 9 Jun 2026 22:49:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/crematorium-dispute-fisherwomen-in-kottakuppam-stage-a-protest-by-attempting-suicide-with-ropes-around-their-necks-high-tension-in-the-coastal-village-263330</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட நடுகுப்பம் கிராமத்தில், சுடுகாடு நிலம் தொடர்பான இருதரப்புப் பிரச்சினையில் அரசு அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, மீனவப் பெண்கள் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக்கொண்டு கடலில் இறங்கி தற்கொலை மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடலோரப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;h2&gt;நீண்ட நாள் சர்ச்சை:&lt;/h2&gt;
&lt;p&gt;கோட்டகுப்பம் நடுகுப்பம் கிராமத்தில் வசிக்கும் மீனவ சமூகத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கும் இடையே சுடுகாட்டுப் பாதை மற்றும் நிலம் தொடர்பாக நீண்ட காலமாகவே எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. குறிப்பாக, ஆதிதிராவிடர் மக்களுக்குச் சொந்தமான சுடுகாட்டுப் பகுதிக்கு அருகே மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகள் மற்றும் வலைகளை நிறுத்தி வைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;தோல்வியில் முடிந்த அமைதிப் பேச்சுவார்த்தை:&lt;/h2&gt;
&lt;p&gt;இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், நேற்று மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்புப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. எனினும், இருதரப்பிலும் உடன்பாடு எட்டப்படாததால் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இது மீனவ கிராம மக்களிடையே கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;h2&gt;கழுத்தில் கயிறுடன் கடலில் இறங்கிய பெண்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் ஆதிதிராவிடர் மக்களுக்கு ஆதரவாக, தங்களுக்கு எதிராகச் செயல்படுவதாக நடுகுப்பம் மீனவ மக்கள் குற்றம் சாட்டினர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் ஆத்திரமடைந்த மீனவப் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இன்று திடீரென தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தங்களது கழுத்துகளில் தூக்குக் கயிறுகளை மாட்டிக்கொண்டு, &quot;எங்களுக்கு நீதி வேண்டும்&quot; என முழக்கமிட்டபடி கடலுக்குள் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;போலீசாருடன் வாக்குவாதம் - படகுகள் மீது ஏறி போராட்டம்:&lt;/h2&gt;
&lt;p&gt;அங்கு அசம்பாவிதங்களைத் தடுக்க ஏற்கனவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கோட்டகுப்பம் காவல்துறையினர், உடனடியாகக் கடலுக்குள் பாய்ந்து சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்களைப் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தி கரைக்கு இழுத்து வந்தனர். அப்போது காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ மக்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளும், வாக்குவாதமும் ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;காவல்துறையினர் கடலுக்குள் செல்ல விடாமல் தடுத்ததால், போராட்டக் களத்தை மாற்றிய மீனவப் பெண்களும் கிராம மக்களும், கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது மீன்பிடிப் படகுகளின் மீது ஏறி அமர்ந்து கொண்டு தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;போலீஸ் குவிப்பு - அதிகாரிகள் சமாதானம்:&lt;/h2&gt;
&lt;p&gt;மீனவ மக்களின் இந்தத் தொடர் போராட்டத்தால் நடுகுப்பம் கடற்கரை கிராமமே போர்க்களமாகத் காட்சியளித்தது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறை மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். &quot;இந்தப் பிரச்சினைக்குச் சட்டப்பூர்வமாக, இருதரப்பும் ஏற்கும் வகையில் விரைவில் சுமுகமான தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்&quot; என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். எனினும், கிராமத்தில் இன்னும் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/09/cdb38497ed9763ef048e0e81427c97281781025414477194_original.jpg" width="220"/></item></channel></rss>