<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>villupuram</title><atom:link href="https://tamil.abplive.com/villupuram/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 09:46:17 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[பி.டெக் 2-ம் ஆண்டு சேர்க்கை: செப்.18-ல் சென்டாக் சிறப்புக் கலந்தாய்வு... யாரெல்லாம் பங்கேற்கலாம்? வெளியான முழு விவரம் !]]></title><link>https://tamil.abplive.com/education/puducherry-centac-btech-lateral-entry-diploma-admission-special-counseling-274652</link><comments>https://tamil.abplive.com/education/puducherry-centac-btech-lateral-entry-diploma-admission-special-counseling-274652#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 06:21:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/puducherry-centac-btech-lateral-entry-diploma-admission-special-counseling-274652</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: பி.டெக். இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான லேட்ரல் என்ட்ரி சிறப்புக் கலந்தாய்வு வரும் 18-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டப வளாகத்தில் இயங்கி வரும் சென்டாக் அலுவலகத்தில் இந்த நேரடி சிறப்புக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;நேர அட்டவணை&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சென்டாக்கில் ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு காலை 11 மணிக்கும், பதிவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு காலை 11.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும்.&lt;/p&gt;
&lt;p&gt;அதனைத் தொடர்ந்து, பிற மாநிலங்களைச் சேர்ந்த சென்டாக்கில் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மதியம் 2 மணிக்கும், பதிவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு மதியம் 2.30 மணிக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்ட பின்னரே பிற மாநிலங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சேர்க்கைக்கு பரிசீலிக்கப்படுவர்.&lt;/p&gt;
&lt;p&gt;காரைக்கால், மாகே, ஏனாம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சென்டாக் அலுவலகத்திற்கு நேரில் வருவதுடன், கூகுள் மீட் இணையவழி இணைப்பு மூலமாகவும் காலை 10.45 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கலந்தாய்வில் பங்கேற்கலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;தகுதி மதிப்பெண்கள்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி பொதுப்பிரிவு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் டிப்ளமோ படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி ஓ.பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பி.டி., மீனவர் மற்றும் முஸ்லிம் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;மாணவர்கள் தங்களது தகுதி மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களை சென்டாக் இணையதளத்தில் தங்களது லாக்-இன் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;அசல் ஆவணங்கள் கட்டாயம்&lt;/h2&gt;
&lt;p&gt;கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள், அதற்கு முன்பாக சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் இடங்களின் விவரங்களைப் பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;ஏற்கனவே சென்டாக் மூலம் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு பாடப்பிரிவு அல்லது கல்லூரியை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கலந்தாய்வு நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக மட்டுமே சென்டாக் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.&lt;/p&gt;
&lt;p&gt;கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தின் நகல், டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அசல் ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;கூடுதல் விவரங்களுக்கு 0413-2655570, 0413-2655571 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், சென்டாக் இணையதளத்தில் உள்ள குறைகேட்பு பகுதி மூலமாகவும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களைத் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/10/72efdd7f6122191e79ae919af66b15461736521414004349_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை! 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/pm-yasasvi-education-scholarship-obc-ebc-dnt-tamil-nadu-274650</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/pm-yasasvi-education-scholarship-obc-ebc-dnt-tamil-nadu-274650#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 06:09:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/pm-yasasvi-education-scholarship-obc-ebc-dnt-tamil-nadu-274650</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 'பி.எம். யசஸ்வி' (PM YASASVI - Top Class Education in Schools for OBC, EBC &amp;amp; DNT Students) திட்டத்தின் கீழ், 2026-27ஆம் கல்விய ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறத் தகுதியுடைய தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;கல்வி உதவித்தொகை&lt;/h2&gt;
&lt;p&gt;மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI - Top Class Education in Schools for OBC, EBC &amp;amp; DNT Students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;2026-27 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) அறிவிக்கப்பட்டுள்ள Top Class School சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனங்களில் (100% தேர்ச்சி பெற்றுள்ள பள்ளிகள்) நடப்பாண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் https://scholarships.gov.in விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9-10ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000/- மற்றும் 11-12ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000/- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். 30% மாணவியர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;நிபந்தனைகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;மாணவ/மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2&gt;வருமான வரம்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;2025-2026 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2&gt;புதுப்பித்தல் (Renewal):&lt;/h2&gt;
&lt;p&gt;இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் (2025-26) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ/மாணவியர்கள் நடப்பாண்டில் (2026-27) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு விண்ணப்பத்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதிசெய்து, National Scholarship Portal (https://scholarships.gov.in) மூலம் புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூர்த்தி செய்து 30.09.2026க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பங்களை சரிபார்ப்பதற்கான (புதுப்பித்தல் - for Renewal) கடைசி நாள்: 15.10.2026.&lt;/p&gt;
&lt;h2&gt;புதியது (Fresh):&lt;/h2&gt;
&lt;p&gt;2026-27 புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ/மாணவியர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையதளத்தில் அறிவிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளமான http://socialjustice.gov.in ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;தகுதியான மாணவ/மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/18/838fb8c721b8667da835ba2d0276a7a51726652362671140_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கிராம வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம்: மேல்மலையனூரில் கலெக்டர் திடீர் ஆய்வு]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/viluppuram-melmalayanur-development-projects-groundwater-milk-chilling-inspection-274643</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/viluppuram-melmalayanur-development-projects-groundwater-milk-chilling-inspection-274643#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 21:49:44 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/viluppuram-melmalayanur-development-projects-groundwater-milk-chilling-inspection-274643</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து, மழைக்காலங்களில் அதிகளவு நீரை சேமித்து வைக்கும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்றையதினம் மேல்மலையனூர் ஒன்றியம் கடலி ஊராட்சியில் வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் மீள் நிரப்பு குழாய் அமைக்கும் பணியினையும், கடலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது நிதி திட்டத்தின் கீழ் பழுதுபார்த்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினையும், கன்னலம் ஊராட்சியில் வளர்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் கருமந்தாங்கல் ஏரிக்கு செல்லும் தொணி ஓடை வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணியினையும், துரிஞ்சிப்பூண்டி ஊராட்சியில் உள்ள சித்தேரியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து, மேல்மலையனூர் ஒன்றியம் கன்னலம் ஊராட்சியில் வட்டார வளமிகு வளர்ச்சித்திட்டத்தின் கீழ் கன்னலம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேல்மலையனூர் ஒன்றியத்திற்கு வட்டார வளமிகு வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்டையில், மேல்மலையனூர் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் பால் உற்பத்தி சார்ந்த தொழிலை மேம்படுத்துவதற்கு கன்னலம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு பயனளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், வளத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் உடற்கல்வித்திட்டம் கீழ் ஓடி விளையாடு உடற்கல்வியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளின் உடற்கல்வி தொடர்பாக பயிற்சி குறித்து கேட்டறியப்பட்டதோடு, மாணவர்களுக்கு பல்வேறு உடற்கல்வி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுவது குறித்து பயிற்சியாளர்களிடம் கேட்டறியப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார வளமிகு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளின் இரத்தசோகை, வாய் சுகாதாரம் தடுத்தல் மற்றும் பராமரித்தல் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு இரத்தசோகை, வாய் சுகாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள், வழங்கப்படும் மாத்திரைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து மருத்துவர்கள், ஆசிரியகர்களிடம் கேட்டறியப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;சுய தொடர்ந்து, மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி, கமலேஷ்வரி உதவிக்குழுவினரின் சணல் பைகள் மற்றும் தாம்பூல பைகள் தயாரிக்கும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. சுய உதவிக்குழுவினர்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை, தரம், மூலப்பொருள் போன்றவைகள் குறித்து கேட்டறியப்பட்டதோடு, தொழில் மையத்தின் மூலம் வங்கி கடன் பெற்று தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/7961a710e5095b4425a5de1d92a320811789489148813194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வேலை தேடும் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! விழுப்புரத்தில் செப்.18-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்...]]></title><link>https://tamil.abplive.com/news/villupuram/viluppuram-district-employment-private-job-fair-youth-september-18-274590</link><comments>https://tamil.abplive.com/news/villupuram/viluppuram-district-employment-private-job-fair-youth-september-18-274590#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 13:48:01 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ விழுப்புரம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/villupuram/viluppuram-district-employment-private-job-fair-youth-september-18-274590</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 18.09.2026 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டுக்கு இருமுறை பெரிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;அதன்படி, செப்டம்பர் 2026-ம் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் 18.09.2026 அன்று காலை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதி&lt;/h2&gt;
&lt;p&gt;விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் ITI, Diploma, B.E./B.Tech, Nursing, Pharmacy உள்ளிட்ட கல்வித் தகுதியுடைய வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பினை பெறலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், தனியார் நிறுவனங்களில் பணிவாய்ப்பை பெறுவது, அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு பதிவை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;பயோடேட்டாவுடன் பங்கேற்கலாம்&lt;/h2&gt;
&lt;p&gt;தனியார் நிறுவனங்களில் பணிவாய்ப்பை பெற விரும்பும் இளைஞர்கள் தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்புகள் (Bio-Data) ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/11/f886df3ea33b251b6ad8dad2740ddbbd17891153904471329_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தட்டாஞ்சாவடியில் தேர்தல் களம் சூடுபிடித்தது! இன்று, நாளை வேட்புமனு தாக்கல்... அக்.6-ல் வாக்குப்பதிவு]]></title><link>https://tamil.abplive.com/elections/puducherry-thattanchavady-assembly-constituency-by-election-nomination-filing-274558</link><comments>https://tamil.abplive.com/elections/puducherry-thattanchavady-assembly-constituency-by-election-nomination-filing-274558#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 09:56:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/puducherry-thattanchavady-assembly-constituency-by-election-nomination-filing-274558</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் மீண்டும் விறுவிறுப்படைய உள்ளது. கடந்த 9-ம் தேதி தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதையடுத்து, அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இருப்பினும் தொடக்க நாட்களில் பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களோ, சுயேச்சை வேட்பாளர்களோ ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்யவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;இதனிடையே, கடந்த 12, 13 மற்றும் 14-ம் தேதிகளில் தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் வந்ததால் வேட்புமனுக்கள் பெறும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக வேட்புமனு தாக்கல் மையம் பெரிய அளவில் பரபரப்பின்றி அமைதியாகவே காணப்பட்டது.&lt;/p&gt;
&lt;h2&gt;விநாயகர் சதுர்த்தியில் வழிபாடு&lt;/h2&gt;
&lt;p&gt;அரசு விடுமுறை நாட்களை வேட்பாளர்கள் தேர்தல் பணிகளுக்காக பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொண்டனர். வேட்புமனு படிவங்களைப் பெற்றுக்கொண்ட அவர்கள், தேர்தல் விதிமுறைகளின்படி தேவைப்படும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களைத் தயார் செய்து வைத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், &lt;a title=&quot;விநாயகர் சதுர்த்தி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vinayagar-chaturthi-2026&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விநாயகர் சதுர்த்தி&lt;/a&gt;யை முன்னிட்டு பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை தங்களது குலதெய்வ கோவில்களுக்கு எடுத்துச் சென்று வைத்து, சிறப்பு வழிபாடு செய்தனர். தேர்தலில் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;இன்று, நாளை பிரம்மாண்ட ஊர்வலம்&lt;/h2&gt;
&lt;p&gt;ஆன்மிக வழிபாடுகளைத் தொடர்ந்து, இன்று மற்றும் நாளை தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வுகள் களைகட்ட உள்ளன. வேட்பாளர்கள் தங்களது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலமாகச் சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஜோதிடர்கள் மற்றும் ஜோசியர்கள் தெரிவித்துள்ள நேரத்தின்படி, நல்ல நேரத்தில் மனுக்களை தாக்கல் செய்யவும் பலர் ஏற்பாடுகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் களம் இன்று முதல் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;பலத்த போலீஸ் பாதுகாப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;வேட்புமனுக்கள் பெறப்படும் தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலக வளாகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்.16 மாலை 3 மணி ஆகும்.&lt;/p&gt;
&lt;h2&gt;செப்.17-ல் வேட்புமனு பரிசீலனை&lt;/h2&gt;
&lt;p&gt;பெறப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் வரும் செப்.17-ம் தேதி காலை 11 மணிக்கு பரிசீலனை செய்யப்படுகின்றன. தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் 2-ம் தளத்தில் இந்த பரிசீலனை நடைபெறும். தேர்தல் விதிமுறைகளின்படி வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தகுதியுடைய பிரதிநிதிகள் மட்டுமே வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.&lt;/p&gt;
&lt;h2&gt;செப்.19-ல் வாபஸ் பெற கடைசி நாள்&lt;/h2&gt;
&lt;p&gt;பரிசீலனையில் ஏற்றுக்கொள்ளப்படும் வேட்புமனுக்களில், போட்டியிலிருந்து விலக விரும்பும் வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் திரும்பப் பெறலாம். இதற்கான கடைசி நாள் செப்.19 மாலை 3 மணி ஆகும். வேட்புமனுவைத் திரும்பப் பெற விரும்புவோர் தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஞானவேலு ஆகியோரிடம் அதற்கான கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். வாபஸ் பெறும் காலக்கெடு முடிந்த பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;அக்.6-ல் வாக்குப்பதிவு; அக்.9-ல் வாக்கு எண்ணிக்கை&lt;/h2&gt;
&lt;p&gt;தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், பதிவான வாக்குகள் 9-ம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரசாரமும் தீவிரமடைந்துள்ளது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் களமிறங்க உள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் தொகுதியில் தேர்தல் பரபரப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;டெபாசிட் தொகை எவ்வளவு?&lt;/h2&gt;
&lt;p&gt;சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பொதுப்பிரிவு வேட்பாளர்கள் ரூ.10,000 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். அதேபோல், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு வேட்பாளர்களுக்கு ரூ.5,000 வைப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி, செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெறத் தவறும் வேட்பாளர்களின் வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும். இதனால் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வெற்றி மட்டுமின்றி, குறைந்தபட்ச வாக்கு சதவீதத்தைப் பெறுவதும் முக்கிய சவாலாக இருக்கும். வேட்புமனு தாக்கல் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதால், தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/23/e279f0483a99ff8376a5576a64adba7f1787485713493194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[“விசிகவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்தால் தவெக காலி!” - பாஜக அஸ்வத்தாமன் பரபரப்பு பேச்சு]]></title><link>https://tamil.abplive.com/news/politics/bjp-aswathaman-vikravandi-criticizes-dmk-udhayanidhi-tvk-vck-congress-law-order-power-cut-tamil-nep-274489</link><comments>https://tamil.abplive.com/news/politics/bjp-aswathaman-vikravandi-criticizes-dmk-udhayanidhi-tvk-vck-congress-law-order-power-cut-tamil-nep-274489#respond</comments><pubDate>Mon, 14 Sep 2026 13:40:55 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/bjp-aswathaman-vikravandi-criticizes-dmk-udhayanidhi-tvk-vck-congress-law-order-power-cut-tamil-nep-274489</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் : விசிகவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்து தமிழக வெற்றி கழகத்த்தை அழித்துவிடுவார்கள் என்றும் திமுக என்றாலே ஆபாசம் எழுதி வைத்து படிக்கவில்லை என்றால் உதயநிதியும் ஆபாசமாக தான் பேசுவார் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்தை திறந்து வைத்தபின் பேட்டியளித்த பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன்,&lt;/p&gt;
&lt;p&gt;தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து தலைவிரித்தாடுதாகவும், திருவொற்றியூர் பகுதியில் இளைஞர் ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக தெரிவித்த அடுத்த நாளே கொலை செய்யப்படுகிறார். இது திமுக ஆட்சியில் கூட நடைபெறவில்லை,காவல்துறையினருக்கு முதலமைச்சர் மீது பயமில்லை, பொதுமக்கள் காவல்துறைக்கு சென்று புகார் அளிக்க பயப்படுகிறார். இது திமுக ஆட்சியில் இருந்து தவெக ஆட்சியிலும் தொடர்வதாக தெரிவித்தார். முதல்வர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; லண்டன் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளார். அது யாருடைய பணத்தில் சென்றார் என்று தெளிவுபடுத்த வேண்டும் என்றும்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மத்திய அரசு அரிசி வாங்குவதற்கு தரப்படுகிற பணம் வீணடிக்கபடுகிறது. நல்ல ஆட்சியை தவெக நடத்த வேண்டும் நிறைய நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் போதை பொருள் பரவல், லாக்கப் மரணம் குறித்து தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் கனிமொழி திமுகவினர் நாவடக்கமாக பேச வேண்டும் என்கிறார் திமுக என்றாலே ஆபாசம் தான் என்றும்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;உதயநிதி பேப்பரில் எழுதி வைக்காமல் பேசினால் ஆபாசமான வார்த்தைகள் தான் வரும் ஏனென்றால் குடும்பம் அது போன்றது என விமர்சனம் செய்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;எதிர்கட்சி வரிசையில் பாஜக அமர்ந்திருந்தால் நல்ல கேள்விகளை கேட்டிருப்போம் திமுக அமர்ந்ததால் தவெக அவர்களை அடித்து தள்ளி விடுவதாகவும், மின்கட்டண உயர்வு குறித்து திமுக கேள்வி கேட்பதில்லை என தெரிவித்த அவர் பாஜகவிலிருந்து பிரிந்து சென்ற அமைப்பு வீ த லீடர் என்ற அமைப்பு பாஜகவில் உள்ள தலைவர்கள் மீது வன்மங்களை தூவி வருவதாகவும், திருவண்ணமாலையில் வீ த லீடர் அமைப்பை சார்ந்த நபர் தன்மீது வேண்டுமென்றே பணம் வாங்கியதாக அவதூறு பரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பவே கூடாது ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக திமுகவுடன் இருந்தார்கள் இன்று தவெகவுடன் உள்ளார்கள்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விசிகவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்து தவெகவை அழித்துவிடுவார்கள், தமிழக வெற்றிக்கழகம் வந்ததிலிருந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து வருகிறது. மின் மிகை மாநிலமாக உள்ள தமிழகத்தில் மின் வெட்டு ஏற்படுகிறது மின்வெட்டு இல்லை என முழு பூசனிக்காயை சப்பாட்டில் மறைக்கிறது போல அமைச்சர் தெரிவிக்கிறார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மின்வெட்டு தொடர்பாக விரைவாக பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தப்பட்டால் தான் தமிழ் கட்டாயப்படுத்தப்படும் அது வந்ததால் தான் தமிழ் கட்டாயமாகும் என கூறினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தவெக மட்டுமல்ல பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் படிப்பதில் பிரச்சனை உள்ளது.தமிழை கட்டாயமாக படித்து வந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது. &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;விற்கு எதிரான நிலைபாட்டினை கம்யூனிஸ்ட்டுக்கள் எடுத்துவிட்டார்கள் ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் எடுக்கவில்லை ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் பக்கம் நிற்கிறார்கள் இது சந்தர்ப்பவாத அரசியல் என்பதை காட்டுவதாக குற்றஞ்சாட்டினார். மின்வெட்டு ஏற்படுவதாக அஸ்வத்தாமன் தெரிவித்தபோது மின்வெட்டு ஏற்பட்டால் செய்தியாளர் சாந்திப்பில் சிரிப்பலை ஏற்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/14/001614982181e231891f34b3100ee05d1789373387224194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Vinayagar Chaturthi 2026 : விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! மணக்குள விநாயகர் கோயிலில் தங்கக் கவச தரிசனம்... 16 ஆயிரம் லட்டுகள் தயார்!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/vinayagar-chaturthi-2026-puducherry-manakula-vinayagar-temple-vinayagar-chaturthi-sarva-divya-darshanam-274456</link><comments>https://tamil.abplive.com/spiritual/vinayagar-chaturthi-2026-puducherry-manakula-vinayagar-temple-vinayagar-chaturthi-sarva-divya-darshanam-274456#respond</comments><pubDate>Mon, 14 Sep 2026 11:22:47 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/vinayagar-chaturthi-2026-puducherry-manakula-vinayagar-temple-vinayagar-chaturthi-sarva-divya-darshanam-274456</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் கோயிலில் பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;விநாயகர் சதுர்த்தி நாளில் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து மூலவரான மணக்குள விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. உற்சவர் விநாயகருக்கும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, வண்ண விளக்குகள் மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் விநாயகர் சதுர்த்தி நாளில் மணக்குள விநாயகர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;தனிநபர் அர்ச்சனை, விசேஷ பூஜைகள் ரத்து&lt;/h2&gt;
&lt;p&gt;விநாயகர் சதுர்த்தி நாளில் பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யும் வகையில், தனிநபர் அர்ச்சனை மற்றும் விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து பக்தர்களும் ஒரே முறையில் சாமி தரிசனம் செய்யும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோயில் வளாகத்தில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;16 ஆயிரம் லட்டுகள் தயார்&lt;/h2&gt;
&lt;p&gt;விநாயகர் சதுர்த்தி நாளில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, இடைவிடாமல் லட்டு பிரசாதம் வழங்குவதற்காக சுமார் 16 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தரிசனம் முடித்து வெளியேறும் பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;காலை முதல் இரவு வரை தரிசனம்&lt;/h2&gt;
&lt;p&gt;பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், பிற்பகல் 2 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. பின்னர் மதியம் 3 மணிக்கு மீண்டும் பூஜைகளுடன் நடை திறக்கப்பட்டு, இரவு 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகாலை முதலே கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி, பிற்பகல் மற்றும் மாலை நேரங்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும்.&lt;/p&gt;
&lt;h2&gt;விஐபி., சிறப்பு தரிசனத்துக்கு தனி வழி&lt;/h2&gt;
&lt;p&gt;விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, விஐபி.க்கள் தரிசனம் செய்வதற்கு தனி வழியும், சர்வ திவ்ய தரிசனத்துக்கு தனி வழியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் கூட்டத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்த்து, ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;ரூ.100 கட்டணத்தில் சிறப்பு தரிசனம்&lt;/h2&gt;
&lt;p&gt;இந்து அறநிலையத்துறை அனுமதியுடன், விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டும் தனிநபர் கட்டண சிறப்பு தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 10 வயதுக்குள்பட்ட சிறுவர்களைத் தவிர்த்து, தனிநபருக்கு ரூ.100 கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. &lt;a title=&quot;விநாயகர் சதுர்த்தி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vinayagar-chaturthi-2026&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விநாயகர் சதுர்த்தி&lt;/a&gt; விழாவை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் நடைபெறும் சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளை காணவும், சாமி தரிசனம் செய்யவும் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையொட்டி பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், அனைவரும் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் தரிசனம் செய்து செல்லவும் கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/14/5d6e002c1c8b61ec3fe26a9e493a45ef1789365143070194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Vinayagar Chaturthi 2026: 27 அடி உயரத்தில் ‘பாகுபலி விநாயகர்’! புதுச்சேரியில் காகிதக் கூழில் பிரமாண்ட சிலை தயாரிப்பு]]></title><link>https://tamil.abplive.com/spiritual/vinayagar-chaturthi-2026-puducherry-bahubali-vinayagar-eco-friendly-paper-pulp-natural-materials-274452</link><comments>https://tamil.abplive.com/spiritual/vinayagar-chaturthi-2026-puducherry-bahubali-vinayagar-eco-friendly-paper-pulp-natural-materials-274452#respond</comments><pubDate>Mon, 14 Sep 2026 10:39:48 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/vinayagar-chaturthi-2026-puducherry-bahubali-vinayagar-eco-friendly-paper-pulp-natural-materials-274452</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், காகிதக் கூழ் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி பிரமாண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி புதுச்சேரியில் தீவிரமாக நடைபெற்றது. இந்த ஆண்டு பெருமாள் விநாயகர், சங்கு-சக்கரத்துடன் கூடிய மகாவிஷ்ணு வடிவ விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான வடிவங்களில் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 25-வது ஆண்டு பணியை முன்னிட்டு சுமார் 27 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள &amp;lsquo;பாகுபலி விநாயகர்&amp;rsquo; சிலை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்&lt;/h2&gt;
&lt;p&gt;நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியிலும் பிரமாண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் கைவினைக் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், காகிதக் கூழ், காய்கறி ஸ்டார்ச் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி இந்த சிலைகள் உருவாக்கப்படுகின்றன. ரசாயனப் பொருட்களை தவிர்த்து சிலைகள் தயாரிக்கப்படுவதால், நீரில் கரையும் தன்மையுடன் இருப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது என கைவினைக் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;1986-ல் தொடங்கிய முயற்சி&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் காகிதக் கூழைப் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் இந்த முயற்சி கடந்த 1986-ஆம் ஆண்டு வேதபுரீஸ்வரர் கோயிலில் தொடங்கியதாக கைவினைக் கலைஞர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்தப் பணியை மேற்கொண்டு வருவதாகவும், தாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களை கவரும் வகையில் புதிய, வித்தியாசமான வடிவமைப்புகளில் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் பல்வேறு சிறப்பு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;பெருமாள் விநாயகர்... மகாவிஷ்ணு வடிவ விநாயகர்&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த ஆண்டு பெருமாள் விநாயகர், சங்கு மற்றும் சக்கரத்துடன் கூடிய மகாவிஷ்ணு வடிவ விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிலைகளில் மேற்கொள்ளப்படும் வேலைப்பாடுகள் மிகவும் நுணுக்கமாகவும், பாரம்பரிய சிற்பக் கலையை பிரதிபலிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரியின் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளைப் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் 12 அடி முதல் 15 அடி உயரம் வரையிலான பிரமாண்ட விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;27 அடி &amp;lsquo;பாகுபலி விநாயகர்&amp;rsquo;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ள சிலைகளில் முக்கிய சிறப்பம்சமாக சுமார் 27 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள &amp;lsquo;பாகுபலி விநாயகர்&amp;rsquo; சிலை அமைந்துள்ளது. கைவினைக் கலைஞர்களின் 25-வது ஆண்டு பணியை முன்னிட்டு இந்த பிரமாண்ட சிலை சிறப்பு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த சிலையை உருவாக்கும் பணியில் சுமார் ஒன்றரை மாதங்களாக 15 முதல் 20-க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். சிலையின் உடல் அமைப்பு, முகத் தோற்றம், ஆபரணங்கள் மற்றும் ஒவ்வொரு சிற்ப வேலைப்பாடுகளும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கலைஞர்கள் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், சிலையின் ஒவ்வொரு பகுதியும் சிற்ப சாஸ்திரம் மற்றும் ஆகம விதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதனால் வழக்கமான விநாயகர் சிலைகளிலிருந்து இந்த &amp;lsquo;பாகுபலி விநாயகர்&amp;rsquo; சிலை தனித்துவமாக காட்சியளிக்கிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;வெளிநாடுகளுக்கும் செல்லும் புதுச்சேரி விநாயகர் சிலைகள்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் தயாரிக்கப்படும் காகிதக் கூழ் விநாயகர் சிலைகளுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வரவேற்பு இருப்பதாக கைவினைக் கலைஞர்கள் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு சிலைகள் அனுப்பப்படுவதுடன், பிரான்ஸ், லண்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சிலைகள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;அமெரிக்காவிலும் நியூயார்க், நியூஜெர்சி, புளோரிடா, புரூக்ளின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட காகிதக் கூழ் விநாயகர் சிலைகள் அனுப்பப்பட்டு, அங்கு விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பூஜிக்கப்பட்டு வருவதாக கைவினைக் கலைஞர்கள் கூறினர்.&lt;/p&gt;
&lt;h2&gt;நிரந்தர பணியிடம் வேண்டும்&lt;/h2&gt;
&lt;p&gt;பல ஆண்டுகளாக இந்த பாரம்பரியக் கைவினைப் பணியை மேற்கொண்டு வரும் நிலையில், கைவினைக் கலைஞர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;குறிப்பாக மழைக்காலங்களில் சிலைகள் தயாரிக்கும் பணியை மேற்கொள்வதிலும், தயாரிக்கப்பட்ட சிலைகளை பாதுகாப்பாக வைப்பதிலும் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும், சிலைகளை விற்பனை செய்வதற்கும் தனி இடம் இல்லாததால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;எனவே, புதுச்சேரி அரசு கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சிலைகள் தயாரிப்பதற்கான நிரந்தர பணியிடத்தையும், பொதுமக்கள் மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் நிரந்தர விற்பனை அங்காடியையும் அமைத்துத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;பாரம்பரிய சிற்பக் கலையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒருங்கிணைத்து புதுச்சேரியில் உருவாகி வரும் இந்த காகிதக் கூழ் விநாயகர் சிலைகள், &lt;a title=&quot;விநாயகர் சதுர்த்தி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vinayagar-chaturthi-2026&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விநாயகர் சதுர்த்தி&lt;/a&gt; விழாவை முன்னிட்டு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/14/8c5440553f5ece56a2e5dd37b6afd38c1789362353665194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திமுக தனியாக நின்றிருந்தால் 25 தொகுதிகளில் வெற்றி! - ஜெகத்ரட்சகன் பரபரப்பு பேச்சு]]></title><link>https://tamil.abplive.com/news/politics/puducherry-state-status-jagathrakshakan-dm-k-tamil-government-change-274412</link><comments>https://tamil.abplive.com/news/politics/puducherry-state-status-jagathrakshakan-dm-k-tamil-government-change-274412#respond</comments><pubDate>Sun, 13 Sep 2026 17:03:55 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/puducherry-state-status-jagathrakshakan-dm-k-tamil-government-change-274412</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படாமல் இருப்பதற்கு, தமிழர் என்பதாலும் இரு மாநிலங்களில் தமிழ் பேசும் கட்சிகள் ஆட்சியில் இருப்பதாலும் மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்க மறுப்பதாக திமுக கொள்கை பரப்புச் செயலரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் அறிமுகம்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிகழ்ச்சியில் திமுக கொள்கை பரப்புச் செயலர் எம்.பி. ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, புதுச்சேரி அரசியல் நிலவரம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான செயல்பாடுகள், மாநில அந்தஸ்து கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;ldquo;மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்&amp;rdquo;&lt;/h2&gt;
&lt;p&gt;ஜெகத்ரட்சகன் பேசுகையில், &amp;ldquo;புதுச்சேரி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கக்கூட முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு வரவில்லை&amp;rdquo; என்று விமர்சித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் தேர்தல் களத்தை உருவாக்கியபோது திமுக கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்ததாகவும், கூட்டணிக்கு உட்பட்டு அனைத்து தொகுதிகளிலும் திமுகவினர் பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;திமுக போட்டியிட்ட தொகுதிகளில் கடுமையான அரசியல் போட்டி ஏற்பட்டதாகவும், அதன் பாதிப்பு இன்னும் ஆறவில்லை என்றும் அவர் கூறினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;ldquo;திமுக தனியாக போட்டியிட்டிருந்தால் 25 தொகுதிகளில் வெற்றி&amp;rdquo;&lt;/h2&gt;
&lt;p&gt;கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பல்வேறு தொகுதிகளை கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் விட்டுக்கொடுத்ததாகவும் ஜெகத்ரட்சகன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அவர் கூறுகையில், &amp;ldquo;வெற்றி பெற வேண்டிய பல தொகுதிகளை கூட்டணி தர்மத்துக்காக விட்டுக் கொடுத்தோம். நம்முடன் இருந்தவர்களே எதிரிகளாக இருந்தனர். திமுக தனியாக நின்றிருந்தால் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம்&amp;rdquo; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தனித்து போட்டியிட அனுமதி கேட்டதாகவும், ஆனால் கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு அவர் அனுமதி வழங்கவில்லை என்றும் ஜெகத்ரட்சகன் கூறினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;ldquo;தோல்வி வந்ததும் கூட்டணியை விட்டு ஓடிவிட்டனர்&amp;rdquo;&lt;/h2&gt;
&lt;p&gt;மேலும், கூட்டணியில் இருந்த சிலர் தேர்தலில் தோல்வி ஏற்பட்டவுடன் கூட்டணியை விட்டு விலகிச் சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;ldquo;கூட்டணி தர்மத்தை திமுக முழுமையாக கடைப்பிடித்தது. ஆனால் கூட்டணியில் இருந்தவர்கள் ஒரு தோல்வி ஏற்பட்டவுடன் ஓடிவிட்டனர். புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டுவோம்&amp;rdquo; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வெறும் ஒரு தொகுதிக்கான தேர்தல் மட்டுமல்லாமல், புதுச்சேரியின் எதிர்கால அரசியலுக்கான முக்கியமான களமாக மாறியுள்ளது என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h2&gt;புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து ஏன் கிடைக்கவில்லை?&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரிக்கு நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் மாநில அந்தஸ்து கோரிக்கை குறித்தும் ஜெகத்ரட்சகன் பேசினார்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது, &amp;ldquo;புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை. தமிழர் என்பதாலும், இரு மாநிலங்களில் தமிழ் பேசுவோர் ஆட்சியில் இருப்பார்கள் என்பதாலும் மாநில அந்தஸ்து தர மறுக்கிறார்கள்&amp;rdquo; என்று அவர் குற்றம்சாட்டினார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த கருத்து புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;ldquo;தேர்தலுக்குப் பிறகு மாநில அந்தஸ்துக்காக போராட்டம்&amp;rdquo;&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான போராட்டத்தை திமுக தீவிரப்படுத்தும் என்றும் ஜெகத்ரட்சகன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;ldquo;தேர்தலுக்குப் பிறகு புதுச்சேரிக்கு வந்து மாநில அந்தஸ்து போராட்டத்தை தொடங்குவோம்&amp;rdquo; என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி &lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt; ஏற்கனவே தெரிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், தேவைப்பட்டால் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து போராடலாம் என்றும், மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரலாம் என்றும் ஜெகத்ரட்சகன் கூறினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;தொழிற்சாலைகள் வரவில்லை என குற்றச்சாட்டு&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் தொழில் வளர்ச்சி குறித்தும் ஆளும் அரசை அவர் விமர்சித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;ldquo;கடந்த ஆட்சியில் புதுச்சேரிக்கு ஒரு தொழிற்சாலை கூட வரவில்லை&amp;rdquo; என்று குற்றம்சாட்டிய அவர், தொழில் முதலீடுகளை ஈர்த்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை திமுகவால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;போலி மருந்து விவகாரத்தையும் சுட்டிக்காட்டிய ஜெகத்ரட்சகன்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் பேசுபொருளாக உள்ள போலி மருந்து ஊழல் விவகாரம் குறித்தும் ஜெகத்ரட்சகன் கடுமையாக விமர்சித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;ldquo;போலி மருந்து ஊழலில் ஊரே நாறிவிட்டது&amp;rdquo; என்று அவர் கூறியதுடன், இந்த விவகாரம் புதுச்சேரி அரசின் நிர்வாகம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;ldquo;புதுச்சேரியை வளர்க்க திமுகவால் மட்டுமே முடியும்&amp;rdquo;&lt;/h2&gt;
&lt;p&gt;இறுதியாக, புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த திமுக தலைமையிலான கூட்டணி பாடுபடும் என்றும், புதுச்சேரியின் பொருளாதாரம், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்த திமுகவால் மட்டுமே முடியும் என்றும் ஜெகத்ரட்சகன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பிரசாரத்தின் தொடக்கத்திலேயே மாநில அந்தஸ்து, கூட்டணி தர்மம், ரங்கசாமி அரசு மீதான விமர்சனம், தொழில் வளர்ச்சி மற்றும் போலி மருந்து விவகாரம் என பல்வேறு விவகாரங்களை திமுக முன்வைத்துள்ளதால், புதுச்சேரி அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/13/988907f0a4caf8bbdf25c8da4bcb990b1789299083563194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த போர்க்கால நடவடிக்கை: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/villupuram-district-prosopis-juliflora-trees-removal-water-bodies-desilting-274410</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/villupuram-district-prosopis-juliflora-trees-removal-water-bodies-desilting-274410#respond</comments><pubDate>Sun, 13 Sep 2026 16:50:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/villupuram-district-prosopis-juliflora-trees-removal-water-bodies-desilting-274410</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் பரவியுள்ள சீம கருவேல மரங்களை அகற்றும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியதோடு, வளர்ச்சியடைந்த பாரதம் -கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள வரத்து வாய்க்கல், குளம், குட்டைகள் போன்ற நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள 85000 பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளை பாதுகாத்து, மழைக்காலங்களில் அதிகளவு நீரை சேமித்து வைக்கும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் வாரந்தோறும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அதனடிப்படையில், மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய பகுதிகளில் உள்ள சிறு பாசன ஏரிகளுக்கு துருவாறும் பணிகள் மேற்கொள்ள மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, ஊரகப்பகுதிகளில் உள்ள சிறு பாசன ஏரிகளின் கலிங்கள் மற்றும் மதகுகள் பழுது பார்ப்பதற்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்துக் த்துக் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தூர்வாரும் பணிகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டதோடு, பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதியரசர் அவர்களின் உத்திரவின்படி, கடந்த ஆண்டு முதல் ஏரிகளில் சீம கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதனடிப்படையில், மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை கட்டுபாட்டில் உள்ள ஏரிகளில் சீம கருவேல மரங்கள் பரவியுள்ளதை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அந்தவகையில் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித்துறை சார்ந்த 71 ஏரிகளில் சீம கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேப்போல், நீர்வளத்துறை சார்பில் 74 ஏரிகளில் சீம கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில் 04 ஏரிகளில் அகற்றும் பணிகள் நடைபெற்றுவருகிறது. வளர்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில்&lt;/p&gt;
&lt;p&gt;உள்ள வரத்து வாய்க்கல், குளம், குட்டைகள் போன்ற நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, மாவட்டத்தில் இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டத்தில் 78400 நபர்கள் பணியாற்றி வரும் நிலையில் தற்போது 85000 நபர்களாக அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளையும் எதிர்வரும் பருவமழைக்கு முன் முடித்து மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் மழைநீர் சேமித்து நிலத்தடி நீரை மட்டத்தை உயர்த்தி குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/13/d0a954685fe402ce69b8f5bc70e3747f1789298365522194_original.jpg" width="220"/></item></channel></rss>