<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>villupuram</title><atom:link href="https://tamil.abplive.com/villupuram/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 2 Jul 2026 08:41:10 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்: CBSE அதிரடி வழிகாட்டுதல் - மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள்? முழு விவரம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-schools-nep-2020-three-language-policy-cbse-exemptions-265738</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-schools-nep-2020-three-language-policy-cbse-exemptions-265738#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 16:42:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-schools-nep-2020-three-language-policy-cbse-exemptions-265738</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) பரிந்துரைகளின் அடிப்படையில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2026&amp;ndash;27 கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை நடைமுறைக்கு வர உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) பரிந்துரைகளின்படி மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வரும் 2026&amp;ndash;27 கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாணவர்களுக்கு நிம்மதி தரும் முக்கிய சலுகைகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;புதிய கொள்கை அமலாக்கப்பட்டாலும், தற்போது படித்து வரும் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் சிபிஎஸ்இ சில முக்கிய சலுகைகளையும், தளர்வுகளையும் அறிவித்துள்ளது:&lt;/p&gt;
&lt;p&gt;10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு: தற்போது 10-ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு இந்த மும்மொழிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. பொதுத்தேர்வு எழுதத் தேவையில்லை: தற்போது 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், அடுத்த கல்வி நிலைக்கு (அடுத்த வகுப்புகளுக்கு) உயரும் போது, இந்த மூன்றாவது மொழிக்கான பொதுத் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இருக்காது.&lt;/p&gt;
&lt;p&gt;வெளிநாட்டு மொழி படிப்போருக்குப் புதிய விதி: தற்போது பள்ளிகளில் இரண்டு வெளிநாட்டு மொழிகளைக் கற்று வரும் மாணவர்கள், அதனைத் தொடர்ந்து கற்க அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், அவர்கள் அதனுடன் கூடுதலாக ஒரு இந்திய மொழி அல்லது தங்களது தாய்மொழியைப் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;கற்றல் வளங்கள் மற்றும் சிபிஎஸ்இ-யின் விளக்கம்:&lt;/h2&gt;
&lt;p&gt;மாணவர்களின் வயது மற்றும் அவர்கள் பயிலும் வகுப்புகளுக்கு ஏற்ப, தேவையான கற்றல் வளங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் (Study Materials) அனைத்தும் உரிய காலக்கெடுவிற்குள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது. இந்த மொழிக் கற்றல் முறை, மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் வகையில் பயனுள்ளதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும், அறிவை வளர்க்கும் அனுபவமாகவும் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;தேசிய கல்விக் கொள்கை 2020 கூறுவது என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;தேசிய கல்விக் கொள்கையின்படி, மாணவர்கள் பள்ளிப் பருவத்தில் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். இதில் மிக முக்கியமாக, குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பது கட்டாயப் பரிந்துரையாகும். இதன் மூலம் இந்திய மொழிகளின் பன்முகத்தன்மையை மாணவர்கள் ஆழமாக அறிந்துகொள்ளவும், அவர்களின் மொழித்திறன் மேம்படவும் வழிவகை ஏற்படும் என கல்வி வாரியம் கூறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், நடுநிலைப் பள்ளிகளில் (6 முதல் 8-ஆம் வகுப்பு வரை) கற்ற மொழியின் தொடர்ச்சியாகவே, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளிலும் இந்த மூன்றாவது மொழி அறிமுகப்படுத்தப்படும் என்றும், மாணவர்களின் கல்வி மற்றும் மனவளர்ச்சியில் சமநிலையைப் பேணும் வகையிலேயே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;அரசியல் களம் மற்றும் சமூக அமைப்புகளின் எதிர்ப்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வரப் பல்வேறு சமூக அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடக்கம் முதலே கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. இந்தத் தீவிரமான அரசியல் மற்றும் சமூக எதிர்ப்புச் சூழலுக்கு மத்தியிலும், நடப்பு கல்வியாண்டு முதல் இக்கொள்கை நடைமுறைக்கு வருவது புதுச்சேரி கல்வி வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/17/0d220314152dfaab42eb9f173f85e4e71721195287588140_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[ஆன்லைனில் ஆர்டர் செய்றீங்களா? அப்போ இதப் படிங்க! - புதுச்சேரியில் அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுகள்!]]></title><link>https://tamil.abplive.com/crime/puducherry-cyber-crime-police-investigate-instagram-dress-advertisement-morphing-threat-tnn-265736</link><comments>https://tamil.abplive.com/crime/puducherry-cyber-crime-police-investigate-instagram-dress-advertisement-morphing-threat-tnn-265736#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 16:29:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/puducherry-cyber-crime-police-investigate-instagram-dress-advertisement-morphing-threat-tnn-265736</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரியில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு வேறு சைபர் குற்றங்களில், ஆடை விளம்பரத்தை நம்பியும், மார்பிங் மிரட்டலுக்கு பயந்தும் இரண்டு பேர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். மர்மக் கும்பலிடம் சிக்கி மொத்தம் 12 ஆயிரம் ரூபாயை இழந்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;இன்ஸ்டாகிராம் ஆடை விளம்பர நம்பி ஏமாற்றம்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி அடுத்த மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் (Instagram) ஆடை விற்பனை தொடர்பான கவர்ச்சிகரமான விளம்பரம் ஒன்றைப் பார்த்துள்ளார். அதை உண்மை என நம்பிய அவர், ஆடைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆர்டர் செய்த சில நிமிடங்களில் அவரைத் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், ஆடைகளை டெலிவரி செய்ய வேண்டுமானால் முன்பணம் (Advance) செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த நபர், மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ. 8,ிரத்து 250 செலுத்தியுள்ளார். பணம் கைமாறியவுடன் அந்த மர்மநபர் தனது மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்து ஏமாற்றியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;லோன் ஆப் (Loan App) மிரட்டல் - மார்பிங் செய்து பணம் பறிப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;மற்றொரு சம்பவத்தில், புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அவசரத் தேவைக்காக மொபைல் செயலி (Mobile App) மூலம் ஆன்லைனில் கடன் வாங்கியுள்ளார். பின்னர், தான் வாங்கிய கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து முழுமையாகத் திரும்பவும் செலுத்திவிட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;இருப்பினும், ஆன்லைன் கடன் கும்பலைச் சேர்ந்த மர்மநபர் ஒருவர், கடன் வாங்கிய நபரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் (Morphing) செய்து அவரது மொபைலுக்கே அனுப்பியுள்ளார். &quot;மேலும் கூடுதல் பணம் தராவிட்டால், இந்த மார்பிங் புகைப்படத்தை உனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம்&quot; என மிரட்டியுள்ளார். இதனால் கடும் பயத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளான அந்த நபர், வேறு வழியின்றி மர்மநபரின் கணக்கிற்கு ரூ. 4 ஆயிரம் அனுப்பி ஏமாந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;இதேபோல் கடந்த வாரம், லாஸ்பேட் பகுதியைச் சேர்ந்த ஆண் நபர் ஒருவர், லோன் குறித்து விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். சிறிதுநேரம் கழித்து மர்ம நபர் ஒருவர் மேற்கூறிய நபரை தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய நபரும் விண்ணப்பித்து, விண்ணப்பத்துக்கான செயலாக்க கட்டணமாக ரூ.78 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்துள்ளார். மேலும் முதலியார்பேட்டையைச் சேர்ந்த ஆண் நபரின் வங்கி கணக்கலிருந்து அவருக்கு தெரியாமல் ரூ.41 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;முதலியார்பேட் பகுதியை சேர்ந்த ஆண் நபர் முகநூலில் வந்த முதலீடு தொடர்பான விளம்பரத்தை கிளிக் செய்து, அதில் வந்த லிங்க் மூலம் ரூ.17 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளார். புதுவையை சேர்ந்த ஆண் நபர் ரூ.1,600, முத்தியால்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ரூ.10 ஆயிரம் என மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். ேமற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.1.48 லட்சத்தை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை:&lt;/h2&gt;
&lt;p&gt;ஆன்லைன் ஆடை மோசடி மற்றும் மார்பிங் மிரட்டல் குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்தனர். அந்தப் புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோசடி நபர்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் மொபைல் எண்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;போலீசாரின் எச்சரிக்கை:&lt;/h2&gt;
&lt;p&gt;முன்பின் தெரியாத ஆன்லைன் செயலிகளில் கடன் வாங்குவதையும், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் சரிபார்க்கப்படாத விளம்பரங்களை நம்பி முன்பணம் அனுப்புவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/18/f12c3df3215ad64a194330b6241354b117817687901301431_original.png" width="220"/></item><item><title><![CDATA[விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் அதிரடி மறியல்: சட்ட நகலை எரித்து போராட்டம் - 100-க்கும் மேற்பட்டோர் கைது!]]></title><link>https://tamil.abplive.com/news/villupuram/differently-abled-persons-stage-a-surprise-road-blockade-in-villupuram-protest-involves-burning-a-copy-of-the-legislation-over-100-arrested-tnn-265730</link><comments>https://tamil.abplive.com/news/villupuram/differently-abled-persons-stage-a-surprise-road-blockade-in-villupuram-protest-involves-burning-a-copy-of-the-legislation-over-100-arrested-tnn-265730#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 15:56:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ விழுப்புரம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/villupuram/differently-abled-persons-stage-a-surprise-road-blockade-in-villupuram-protest-involves-burning-a-copy-of-the-legislation-over-100-arrested-tnn-265730</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: , விழுப்புரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை எவ்வித மாற்றமும் இன்றி மீண்டும் முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்ட நகலை எரித்து சாலை மறியலில்.&lt;/p&gt;
&lt;h2&gt;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (100 நாள் வேலைத் திட்டம்) எவ்வித மாற்றமும் இன்றி மீண்டும் முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, விழுப்புரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சட்ட நகலை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;கருப்புப் பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கத்தின் சார்பில் இந்தத் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பாகத் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புப் பட்டை அணிந்து ஒன்றிய அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.&lt;/p&gt;
&lt;h2&gt;மாற்றுத்திறனாளிகளின் முக்கியக் கோரிக்கைகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பின்வரும் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினர்:&lt;/p&gt;
&lt;p&gt;திட்டப் பெயரை மாற்றக் கூடாது: மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை, 'வி.பி.ஜி ராம்ஜி' எனப் பெயர் மாற்றம் செய்யக் கூடாது.&lt;/p&gt;
&lt;p&gt;நிதியைக் குறைக்கக் கூடாது: 100 நாள் திட்டத்திற்கான ஒன்றிய அரசின் நிதியைக் குறைத்து, மாநில அரசுகளின் மீது கூடுதல் நிதிச்சுமையை ஏற்றக் கூடாது.&lt;/p&gt;
&lt;p&gt;தொழில்நுட்பக் கெடுபிடிகள் வேண்டாம்: கருவிழிப் பதிவு (Iris scan), கைரேகைப் பதிவு (Biometric) போன்ற புதிய தொழில்நுட்பக் கெடுபிடிகள் என்கிற பெயரால், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்கக் கூடாது.&lt;/p&gt;
&lt;p&gt;பழைய நடைமுறை வேண்டும்: மாற்றுத்திறனாளிகளுக்குப் பயனுள்ளதாக இருந்த பழைய வேலை உறுதித் திட்ட நடைமுறைகளையே மீண்டும் கொண்டு வர வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2&gt;சட்ட நகல் எரிப்பு மற்றும் மறியல் போராட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது எதிர்ப்பைக் காட்டும் விதமாக, திட்டத்தின் புதிய சட்ட நகல்களைத் தீயிட்டு எரித்துப் போராடினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;h2&gt;போலீசார் நடவடிக்கை &amp;ndash; 100 பேர் கைது&lt;/h2&gt;
&lt;p&gt;சாலை மறியல் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளைத் தடுத்து நிறுத்தினர். போக்குவரத்துக்கு இடையூறாகவும், அனுமதியின்றியும் மறியலில் ஈடுபட்டதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளைப் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் நடத்திய இந்த அதிரடிப் போராட்டத்தால், விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பரபரப்பான சூழல் நிலவியது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/db348b649fe70f0029c148382897eebd1782901530519194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி: வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை - விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!]]></title><link>https://tamil.abplive.com/crime/villupuram-mahila-court-balaji-rape-7-years-sentence-265726</link><comments>https://tamil.abplive.com/crime/villupuram-mahila-court-balaji-rape-7-years-sentence-265726#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 15:46:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/villupuram-mahila-court-balaji-rape-7-years-sentence-265726</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: விழுப்புரம் அருகே காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;விழுப்புரம் மாவட்டம், சிறுவாளை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். தனக்குச் சாதகமாக அந்தப் பெண்ணிடம் &quot;உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்&quot; என ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரைப் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பாலாஜியிடம் கேட்டபோது, அவர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;போலீசார் நடவடிக்கை மற்றும் கைது:&lt;/h2&gt;
&lt;p&gt;பாலாஜியால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட இளம்பெண், கடந்த 2018-ஆம் ஆண்டு விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், மகளிர் காவல் நிலைய போலீசார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் (மகளிர் நீதிமன்றம்) கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்துத் தரப்பு சாட்சிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.&lt;/p&gt;
&lt;p&gt;வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி இன்று இறுதித் தீர்ப்பை வழங்கினார். அதில், இளம்பெண்ணை ஏமாற்றிப் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி பாலாஜிக்கு: 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 5,000/- (ஐந்தாயிரம் ரூபாய்) அபராதம் விதித்து உத்தரவிட்டார். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றவாளி பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காதல் என்ற பெயரில் பெண்ணை ஏமாற்றிய நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/39877548440c8b9276fb5cb7dd4b32121782900855721194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பதவி வேணுமா? பணத்தை எடு! விழுப்புரம் நில அளவைத்துறையில் லஞ்ச வேட்டை... உதவி இயக்குனர் உள்பட 5 பேர் அவுட்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/villupuram-land-survey-department-assistant-director-bribery-vigilance-case-265629</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/villupuram-land-survey-department-assistant-director-bribery-vigilance-case-265629#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 18:31:14 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/villupuram-land-survey-department-assistant-director-bribery-vigilance-case-265629</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட நில அளவைத்துறை அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய புகாரில், நில அளவை உதவி இயக்குனர் உள்பட 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அலுவலக சோதனையில் கணக்கில் வராத ரூ.78,000 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;நில அளவைத்துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்&amp;nbsp; திடீர் சோதனை&lt;/h2&gt;
&lt;p&gt;விழுப்புரம் மாவட்ட நில அளவைத்துறையின் கீழ், பல்வேறு வட்ட தலைநகரங்களில் நில அளவையர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்குப் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கும், விரும்பிய இடங்களுக்குப் பணியிட மாற்றம் செய்வதற்கும் உயர் அதிகாரிகள் தரப்பில் பெருந்தொகை லஞ்சமாகக் கேட்கப்படுவதாகப் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியப் புகார்கள் சென்றன. இந்தத் திட்டவட்டமான புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனையில் இறங்கினர்.&lt;/p&gt;
&lt;h2&gt;8 மணி நேர பரபரப்பு சோதனை&lt;/h2&gt;
&lt;p&gt;விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் இயங்கி வரும் நில அளவை பதிவேடுகள் துறை மாவட்ட அலுவலகம் மற்றும் அதற்கு எதிரே அமைந்துள்ள நில அளவைகள் துறை உதவி இயக்குனர் அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களிலும் போலீசார் ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கினர்.&lt;/p&gt;
&lt;p&gt;நேற்று நண்பகல் 1 மணிக்குத் தொடங்கிய இந்த அதிரடி சோதனை, இரவு 9 மணி வரை என சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்தச் சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ.78,000 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.&lt;/p&gt;
&lt;h2&gt;விசாரணையில் அம்பலமான உண்மை&lt;/h2&gt;
&lt;p&gt;கைப்பற்றப்பட்ட பணம் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், துறையில் பணிபுரியும் 5 ஊழியர்களுக்குப் பதவி உயர்வு ஆணைகளை வழங்குவதற்காக, உயர் அதிகாரிகள் இந்தத் தொகையை லஞ்சமாகப் பெற்றது முதற்கட்ட விசாரணையில் உறுதியானது.&lt;/p&gt;
&lt;h2&gt;5 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு&lt;/h2&gt;
&lt;p&gt;இதனையடுத்து, லஞ்சப் பணம் வாங்கிய விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களாகச் செயல்பட்ட ஊழியர்கள் என 5 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரம்:&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;ஜெய்சங்கர் &amp;ndash; நில அளவைத்துறை உதவி இயக்குனர்&lt;/li&gt;
&lt;li&gt;ஆனந்தகுமார் &amp;ndash; கண்காணிப்பாளர்&lt;/li&gt;
&lt;li&gt;துரைராஜ் &amp;ndash; திருவெண்ணெய்நல்லூர் வட்ட துணை ஆய்வாளர்&lt;/li&gt;
&lt;li&gt;இளையராஜா &amp;ndash; விழுப்புரம் கோட்ட ஆய்வாளர்&lt;/li&gt;
&lt;li&gt;சக்திவேல் &amp;ndash; விழுப்புரம் வட்ட நில அளவையர்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே உள்ள நில அளவைத்துறை அலுவலகத்தில் உதவி இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள இச்சம்பவம், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/ec31b2cc895b7a2c16119afd39137e2c1782824009322194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[உதயநிதி படத்தால் விழுப்புரம் நகர மன்றத்தில் வெடித்த வாக்குவாதம்: அகற்ற மறுத்த தலைவி!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/villupuram-nagara-mandram-udhayanidhi-photo-aiadmk-congress-debate-tnn-265624</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/villupuram-nagara-mandram-udhayanidhi-photo-aiadmk-congress-debate-tnn-265624#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 18:10:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/villupuram-nagara-mandram-udhayanidhi-photo-aiadmk-congress-debate-tnn-265624</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் நகரமன்ற தலைவர் இருக்கையின் மேசையின் மீது வைக்கபட்டிருந்த முன்னாள் துனை முதல்வர் உதயநிதி புகைப்படத்தினை அகற்றக்கோரி அதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்ததால் கூட்டத்தில் சல்சலப்பு ஏற்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நகரமன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு தலைமையில் மாதாந்திர சாதாரணக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஆரம்பமே அதிரடி.. அடுக்கடுக்கான புகார்கள்!&lt;/h2&gt;
&lt;p&gt;கூட்டம் தொடங்கிய உடனே, நகராட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து உறுப்பினர்கள் ஆக்ரோஷமாகப் புகார்களை அடுக்கத் தொடங்கினர். நகரத்தின் பல்வேறு முக்கியச் சாலைகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு நகராட்சி நிர்வாகம் இன்னும் நிரந்தரத் தீர்வு காணவில்லை, குப்பைக் கிடங்குகளில் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன, சுகாதாரச் சீர்கேடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது எனப் பல்வேறு வார்டு பிரச்சினைகளைக் முன்வைத்து காரசாரமாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;பற்றிக்கொண்ட புகைப்படம் விவகாரம்!&lt;/h2&gt;
&lt;p&gt;பிரச்சினைகள் ஒருபுறம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, திடீரென அனைவரின் கவனமும் நகரமன்றத் தலைவரின் இருக்கை நோக்கித் திரும்பியது. தலைவியின் இருக்கைக்கு முன்பாக உள்ள மேஜையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி &lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt; ஆகியோரின் புகைப்படங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. (அதேநேரம், தலைவி இருக்கையின் பின்புறச் சுவரில் தற்போதைய தமிழக முதல்வர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;யின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது).&lt;/p&gt;
&lt;p&gt;இதனைக் கவனித்த அதிமுக நகரமன்ற உறுப்பினர் கலை மற்றும் காங்கிரஸ் நகரமன்ற உறுப்பினர் சுரேஷ் ராம் ஆகியோர் சட்டென எழுந்து, மிகக் கடுமையான தொனியில் கேள்வி எழுப்பினர்:&lt;/p&gt;
&lt;p&gt;&quot;நகரமன்றக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் இடம்பெறுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், முன்னாள் துணை முதல்வராக இருந்த உதயநிதியின் புகைப்படத்தை ஏன் இங்கு வைத்துள்ளீர்கள்? அதை உடனடியாக மேஜையிலிருந்து அகற்ற வேண்டும்!&quot; என்று ஆக்ரோஷமாகக் குரல் எழுப்பினர்.&lt;/p&gt;
&lt;h2&gt;திமுக - அதிமுக நேரடி மோதல்!&lt;/h2&gt;
&lt;p&gt;இதைக் கேட்டுப் பாய்ந்த திமுக நகரமன்ற உறுப்பினர் மணவாளன், அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அதிரடியாகப் பதிலடி கொடுத்தார்:&lt;/p&gt;
&lt;p&gt;&quot;இந்தப் புகைப்படங்கள் ஒன்றும் அரசு அலுவலகக் கட்டிடச் சுவரில் நிரந்தரமாகத் தொங்கவிடப்படவில்லை! நகரமன்றத் தலைவரின் தனிப்பட்ட இருக்கைக்கு முன்புள்ள மேஜையில்தான் வைக்கப்பட்டுள்ளது. அதை உங்களால் அகற்றச் சொல்ல முடியாது, அகற்றவும் மாட்டோம்!&quot; என்று திட்டவட்டமாகக் கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் இருதரப்புக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றியது. &quot;அகற்று!&quot;, &quot;அகற்ற முடியாது!&quot; என இருகட்சி உறுப்பினர்களும் நேருக்கு நேர் நின்று காரசாரமாக வாதிட்டதால் கூட்ட அரங்கமே அதிரத் தொடங்கியது. பெரும் சலசலப்பும், கூச்சலும் நிலவியதால் கூட்டத்தில் பதற்றமான சூழல் உருவானது.&lt;/p&gt;
&lt;h2&gt;தலைவியின் இறுதிப் பஞ்ச்: அடங்கிய சலசலப்பு!&lt;/h2&gt;
&lt;p&gt;வார்த்தை முட்டல்கள் எல்லை மீறிச் சென்றுகொண்டிருந்த வேளையில், நகரமன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு நேரடியாகக் களத்தில் இறங்கி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் மிகத் துணிச்சலாக,&lt;/p&gt;
&lt;p&gt;&quot;மேஜையில் இருக்கும் புகைப்படங்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்படாது! உங்களுக்கு இதில் இவ்வளவு உடன்பாடில்லை என்றால், நீங்கள் உங்கள் விருப்பப்படி உங்கள் அதிமுக கட்சித் தலைவரின் புகைப்படத்தை வேண்டுமானால் எடுத்துக்கொண்டு வந்து உங்கள் மேஜையில் வைத்துக் கொள்ளுங்கள்!&quot; என்று அதிரடியாகத் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;நகரமன்றத் தலைவியின் இந்த அதிரடிப் பதிலடியைக் கேட்டு அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேற்கொண்டு பேச முடியாமல் திகைத்துப் போயினர். இதையடுத்து, நீண்ட நேரமாக நீடித்த சலசலப்பு ஒருவழியாக ஓய்ந்து அமைதியானது. இதனைத் தொடர்ந்து, பெரும் பரபரப்பு மற்றும் காரசாரமான விவாதங்களுக்கு மத்தியிலேயே விழுப்புரம் நகராட்சி மன்றக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று முடிந்தது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/1b9cc3fedc4d74caca792de626ef3e0a1782823133922194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இனி டிராபிக் ஜாம் இல்லை.. அலைச்சலும் இல்லை! பைபாஸ் வழியிலேயே உலகத்தரம் வாய்ந்த இலவச சிகிச்சை: JIPMER மெகா பிளான்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/jipmer-puducherry-sedharappattu-51-acre-land-advanced-hospital-expansion-tnn-265620</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/jipmer-puducherry-sedharappattu-51-acre-land-advanced-hospital-expansion-tnn-265620#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 17:43:44 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/jipmer-puducherry-sedharappattu-51-acre-land-advanced-hospital-expansion-tnn-265620</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி : புதுச்சேரி மற்றும் அண்டை மாநில ஏழை எளிய மக்களின் மருத்துவப் புகலிடமாக விளங்கும் ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், புதுச்சேரி அரசு சேதராப்பட்டு பகுதியில் 51 ஏக்கர் நிலத்தை மீண்டும் ஜிப்மர் நிர்வாகத்திற்கே மறுஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;புதுச்சேரி கோரிமேட்டில் இயங்கி வரும் ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER), புதுச்சேரி மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்களின் முதன்மை மருத்துவத் தேவையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால், கோரிமேடு முதன்மை வளாகத்தின் கட்டமைப்பில் கடும் நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதனைத் தீர்க்கும் பொருட்டு, சேதராப்பட்டு பகுதியில் உள்ள 51 ஏக்கர் நிலத்தை ஜிப்மரின் அதிநவீன விரிவாக்கத் திட்டங்களுக்காக புதுச்சேரி அரசு தற்போது முழுமையாகக் கையளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த காலங்களில் இந்த 51 ஏக்கர் நிலம் வெவ்வேறு அரசுத் திட்டங்களுக்காகவும், தொழில்துறை பயன்பாட்டிற்காகவும் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதனால் ஜிப்மரின் விரிவாக்கப் பணிகள் தற்காலிகமாகத் தடைபட்டிருந்தன. எனினும், ஏழை எளிய மக்களுக்கு உயர்தர சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்த புதுச்சேரி அரசு, நிலத்தை மீண்டும் ஜிப்மரிடமே ஒப்படைக்கும் கொள்கை ரீதியான முடிவை எடுத்து, நிலப் பரிமாற்ற நடவடிக்கைகளை தற்போது இறுதி செய்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;சேதராப்பட்டு வளாகத்தில் அமையவுள்ள அதிநவீன வசதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த 51 ஏக்கர் பரப்பளவில், கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு இணையாகப் பல்வேறு பிரம்மாண்ட உள்கட்டமைப்புகளை உருவாக்க ஜிப்மர் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது:&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள்:&lt;/strong&gt; வளர்ந்து வரும் நவீன மற்றும் புதிய வகை நோய்களுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்புப் பிரிவுகள் மற்றும் அதிநவீன அறுவை சிகிச்சை மையங்கள் (Advanced Surgical Centres).&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;ஆராய்ச்சி மற்றும் கல்வி மையங்கள்:&lt;/strong&gt; மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்கான பிரத்யேக உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்கள் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப (Biotechnology) வசதிகள்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;புனர்வாழ்வு மற்றும் அவசர சிகிச்சை:&lt;/strong&gt; விபத்துக் கால அவசரச் சிகிச்சைப் பிரிவுகள் (Trauma Care) மற்றும் நீண்ட நாள் தொடர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கான பிரத்யேக புனர்வாழ்வு மையங்கள் (Rehabilitation Centres).&lt;/p&gt;
&lt;h2&gt;பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளும் போக்குவரத்துச் சாதகமும்:&lt;/h2&gt;
&lt;p&gt;சேதராப்பட்டில் புதிய வளாகம் அமைவதன் மூலம், கோரிமேடு முதன்மை மருத்துவமனையில் நிலவும் கட்டுக்கடங்காத நோயாளிகளின் கூட்ட நெரிசல் கணிசமாகக் குறையும். &amp;nbsp;ஏழை எளிய மக்களுக்குப் பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள உயர்தரச் சிகிச்சைகள், மிகக் குறைந்த செலவிலும், பல நேரங்களில் முற்றிலும் இலவசமாகவும் தடையின்றி கிடைக்கும்.&lt;/p&gt;
&lt;h2&gt;அண்டை மாவட்ட மக்களுக்குப் பேருதவி:&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியின் புறநகர்ப் பகுதிகள் மட்டுமன்றி, தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், விக்கிரவாண்டி போன்ற அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், புதுச்சேரி நகரத்திற்குள் நுழைந்து போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், பைபாஸ் சாலை வழியாகச் சேதராப்பட்டு வளாகத்தை மிக எளிதாக வந்தடைந்து அவசரச் சிகிச்சைகளைப் பெற முடியும்.&lt;/p&gt;
&lt;h2&gt;அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசின் எதிர்பார்ப்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;நில ஒதுக்கீடுப் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, புதிய வளாகத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணியில் ஜிப்மர் நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (Union Health Ministry) நேரடி நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால், தேவையான நிதியை விரைவாகப் பெற்று கட்டுமானப் பணிகளைத் தொடங்க மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்படவுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;புதுச்சேரி அரசின் இந்த அதிரடி நில ஒதுக்கீட்டின் மூலம், மாநிலத்தின் பொது சுகாதாரத் துறை மேலும் வலுவடையும் என்றும், புதுச்சேரி பிராந்தியத்தில் மருத்துவச் சுற்றுலா (Medical Tourism) பல மடங்கு மேம்படும் என்றும் அரசுத் தரப்பில் பெரிதும் நம்பப்படுகிறது. இப்பாரிய திட்டத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து, விரைவாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/e0fae95f8e4debe73e44692064d791f61782821503402194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஏழை மக்களின் கவலை தீர்ந்தது! இலவச பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு வரப்போகுது! நேரில் வந்த சபாநாயகர் & கலெக்டர்!]]></title><link>https://tamil.abplive.com/news/villupuram/puducherry-uppalam-aattuppatti-free-land-pattas-apartment-buildings-survey-tnn-265619</link><comments>https://tamil.abplive.com/news/villupuram/puducherry-uppalam-aattuppatti-free-land-pattas-apartment-buildings-survey-tnn-265619#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 17:31:53 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ விழுப்புரம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/villupuram/puducherry-uppalam-aattuppatti-free-land-pattas-apartment-buildings-survey-tnn-265619</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுபட்டி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவது மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் இன்று (30-06-2026) நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி உப்பளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன், தன் தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் நோக்கில், அரசு அதிகாரிகளுடன் இணைந்து தொகுதி முழுவதும் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி பகுதியில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஆய்வின் முக்கிய நோக்கங்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அடிப்படை வசதிகள் மேம்பாடு:&lt;/strong&gt; ஆட்டுப்பட்டி பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இலவச மனைப்பட்டா:&lt;/strong&gt; அப்பகுதி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதற்கான சட்டப்பூர்வ வழிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;அடுக்குமாடி குடியிருப்பு திட்டமிடல்: ஆட்டுப்பட்டி பகுதியில் உள்ள சுமார் 30 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில், ஏழை எளிய மக்களுக்காக புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் குழுவினர் விரிவாக ஆய்வு செய்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த ஆய்வின் போது, அப்பகுதி பொதுமக்கள் தற்காலிக சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது குறைகளையும், நீண்ட நாள் கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்தனர். மக்களின் குறைகளை கனிவோடு கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், &quot;இப்பகுதி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவது மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவது குறித்து உரிய ஆலோசனைகள் மேற்கொண்டு, விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்&quot; என உறுதியளித்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பேட்டி&lt;/h2&gt;
&lt;p&gt;ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தெரிவித்ததாவது:&lt;/p&gt;
&lt;p&gt;&quot;ஆட்டுப்பட்டி பகுதியில் தற்போது ஏராளமான கூரை வீடுகள் உள்ளன. ஏழை மக்களின் இந்த கூரை வீடுகளை கல்வீடுகளாக (நிரந்தர வீடுகளாக) மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ஆய்வில் முதன்மையாக ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலம் கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது என்பதால், சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடமிருந்து தடையின்மை சான்றிதழ் (NOC) பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். சான்றிதழ் பெற்ற பிறகு, அரசு மூலம் அவர்களுக்கு கல்வீடு கட்டுவதற்கான நிதியுதவியைப் பெற்றுத் தருவது குறித்து மாவட்ட ஆட்சியரை நேரில் அழைத்து வந்து ஆலோசனை நடத்தியுள்ளோம். இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.&quot; இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள், துறை சார்ந்த பொறியாளர்கள் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/72a4bc0e86568d5c6a92000c8ab91fe41782820755095194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இரு கலைகள்... ஒரே மேடை! – அசாத்திய நெகிழ்வுத்திறனால் சாதனை படைத்த மாணவி ஜனனி!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-janani-international-yoga-bharatanatyam-yogasanas-extraordinary-performance-pondicherry-tnn-265614</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-janani-international-yoga-bharatanatyam-yogasanas-extraordinary-performance-pondicherry-tnn-265614#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 16:48:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-janani-international-yoga-bharatanatyam-yogasanas-extraordinary-performance-pondicherry-tnn-265614</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி : புதுச்சேரி தனியார் பள்ளியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி ஜனனி, பரதநாட்டிய அசைவுகளுடன் பல்வேறு யோகாசனங்களை ஒருங்கிணைத்து செய்து தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;யோகா தின நிகழ்ச்சி&lt;/h2&gt;
&lt;p&gt;சர்வதேச யோகா தினத்தையொட்டி, புதுச்சேரி முழுவதும் யோகா கலை குறித்த விழிப்புணர்வு அலை வீசி வருகிறது. கடந்த ஒரு வார காலமாக நகரின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் யோகா விழாக்கள், விழிப்புணர்வு பேரணிகள் விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டம், ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு மேடையாக மாறியுள்ளது. அந்த மேடையில் தனது அபார திறமையால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் மாணவி ஜனனி.&lt;/p&gt;
&lt;h2&gt;இரு கலைகளின் சங்கமம்: பரதநாட்டியத்துடன் இணைந்த யோகாசனம்!&lt;/h2&gt;
&lt;p&gt;வழக்கமாக யோகா தின நிகழ்வுகளில் பாரம்பரிய ஆசனங்கள் மட்டுமே செய்து காண்பிக்கப்படும். ஆனால், காந்தி வீதி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஜனனி, முற்றிலும் மாறுபட்ட ஒரு முயற்சியைக் கையாண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;மிகவும் கடினமான, அதிக உடல் சமநிலையும் (Balance) நெகிழ்வுத்திறனும் (Flexibility) தேவைப்படக்கூடிய கடினமான யோகாசனங்களை ஜனனி மிகத் துல்லியமாகச் செய்து காட்டினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கலைநயம் மிக்க அசைவுகள்:&lt;/strong&gt; வெறும் ஆசனங்களாக மட்டுமில்லாமல், அவற்றுடன் இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தின் முத்திரைகள் மற்றும் அழகிய அசைவுகளையும் (Expressions and Mudras) ஒருங்கிணைத்து, ஒரு கலை வடிவமாக மேடையில் அரங்கேற்றினார்.&lt;/p&gt;
&lt;p&gt;யோகாவின் அமைதியும், பரதநாட்டியத்தின் கம்பீரமும் ஒரே மேடையில் சங்கமித்த அந்த விநாடிகள், அரங்கில் இருந்த பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஜனனியின் துல்லியமான ஒவ்வொரு அசைவிற்கும் அரங்கம் அதிரும் வகையில் கைதட்டல்களும் பாராட்டுமழையும் குவிந்தன.&lt;/p&gt;
&lt;h2&gt;10 ஆண்டுகால அசுர உழைப்பு!&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த அசாத்திய திறமை ஜனனிக்கு ஒரே நாளில் வந்துவிடவில்லை. இதன் பின்னணியில் அவரது 10 ஆண்டுகால அர்ப்பணிப்பும், கடுமையான உழைப்பும் ஒளிந்திருக்கின்றன. &quot;சிறு வயது முதலே பரதநாட்டியம் மற்றும் யோகா ஆகிய இரு கலைகளையும் சமமாக பாவித்து, கடந்த 10 ஆண்டுகளாக ஜனனி முறையான பயிற்சி பெற்று வருகிறார். இந்த இருவேறு கலைகளையும் ஒன்றிணைத்து புதுமையான முறையில் மேடையில் வழங்க வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவு, இந்த சர்வதேச யோகா தினத்தில் நனவாகியுள்ளது.&quot;&lt;/p&gt;
&lt;h2&gt;இளம் தலைமுறைக்கு ஒரு ரோல் மாடல்&lt;/h2&gt;
&lt;p&gt;டிஜிட்டல் உலகிலும், மொபைல் திரைகளிலும் மூழ்கிக்கிடக்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு மத்தியில், மாணவி ஜனனி ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், ஊக்கமளிக்கும் சக்தியாகவும் (Inspiration) திகழ்கிறார். கலைகளையும், உடற்பயிற்சியையும் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டால் என்ன சாதிக்கலாம் என்பதற்கு ஜனனியின் இந்த உலக யோகா தின நிகழ்ச்சி ஒரு சான்றாகும்.&lt;/p&gt;
&lt;h2&gt;குவியும் வாழ்த்துகள்&lt;/h2&gt;
&lt;p&gt;நிகழ்ச்சியின் நிறைவில், புதுமையான முறையில் யோகா விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவி ஜனனியை பள்ளி ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள், பெற்றோர் மற்றும் பொது மக்கள் என பலரும் நேரில் பாராட்டி வாழ்த்தினர்.&lt;/p&gt;
&lt;p&gt;கடின உழைப்பால் புதுச்சேரி மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ள ஜனனி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்னும் பல உயரங்களைத் தொட்டு, சாதனைப் படைக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களிலும் பலரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/89a89abd877e54c06910f262989f7aad1782818248080194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சுற்றுலாப் பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்: புதுச்சேரி கடற்கரையில் 'அதிநவீன லக்கேஜ் லாக்கர்' வசதி!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-rock-beach-luggage-locker-tourism-infrastructure-otp-security-tnn-265543</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-rock-beach-luggage-locker-tourism-infrastructure-otp-security-tnn-265543#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 11:36:55 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-rock-beach-luggage-locker-tourism-infrastructure-otp-security-tnn-265543</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வசதிக்காக, கடற்கரைப் பகுதியில் அதிநவீன லக்கேஜ் லாக்கர் (Luggage Locker) வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் தங்களது உடைமைகளைச் சுமக்க வேண்டிய அவசியமின்றி, நிம்மதியாகச் சுற்றிப் பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரிக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வசதிக்காக, கடற்கரைப் பகுதியில் அதிநவீன லக்கேஜ் லாக்கர் (Luggage Locker) வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரைப் பகுதிக்கு (Rock Beach) தினமும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் இதர வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கத்தை விட மிகக் கணிசமாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் பயணிகள் தங்கள் கொண்டு வரும் பயணப் பைகள் மற்றும் உடைமைகளை வைத்துக் கொண்டு கடற்கரையில் உலாவுவதற்கும், அருகில் உள்ள இடங்களுக்குச் செல்வதற்கும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;அதிநவீன OTP பாதுகாப்புத் தொழில்நுட்பம்&lt;/h2&gt;
&lt;p&gt;சுற்றுலாப் பயணிகளின் இந்த நீண்ட நாள் சிரமத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், புதுச்சேரி சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்தும் ஒரு பகுதியாக இந்த நவீன லாக்கர் சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த லாக்கர்கள் சாதாரணப் பூட்டுகளுக்குப் பதிலாக, தற்கால டிஜிட்டல் தொழில்நுட்பத்தின்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;செயல்பாடு:&lt;/strong&gt; பயணிகள் தங்களது மொபைல் எண்ணைப் பதிவு செய்து, அதற்கு வரும் ஒன் டைம் பாஸ்வேர்ட் (OTP) மூலம் லாக்கரைத் திறந்து பயன்படுத்தலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பாதுகாப்பு:&lt;/strong&gt; இந்த OTP அடிப்படையிலான தொழில்நுட்பத்தால், பயணிகளின் பைகள், உடைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களுக்கு (Valuables) 100% பாதுகாப்பான சேமிப்பு உறுதி செய்யப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;எளிமையான பயன்பாடு:&lt;/strong&gt; மொபைல் மூலம் இயங்குவதால், எந்தவொரு பயணியும் மிக எளிதாக இதனை இயக்க முடியும்.&lt;/p&gt;
&lt;h2&gt;எந்தவித சுமையுமின்றி சுதந்திரமான பயணம்!&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த புதிய வசதியின் மூலம், புதுச்சேரிக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக (One-day trip) வரும் பயணிகள், தங்களது பெரிய பயணப் பைகளை இந்த லாக்கரில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, எந்தவித சுமையுமின்றி கடற்கரை மற்றும் அதன் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்களைச் சுதந்திரமாகச் சுற்றிப் பார்க்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் சேவை தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தும் நோக்கில் இந்த சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;சுற்றுலா ஆர்வலர்கள் மகிழ்ச்சி&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய லக்கேஜ் லாக்கர் வசதி, தற்போது வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிக அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. &quot;புதுச்சேரி சுற்றுலா உள்கட்டமைப்பில் (Tourism Infrastructure) இணைந்துள்ள இந்த நவீன வசதி, நகரின் சுற்றுலா மதிப்பை மேலும் உயர்த்தும்&quot; என்று உள்ளூர் சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/e205dd78b7ebdb42276d924ca89fbb9f1782799059655194_original.jpg" width="220"/></item></channel></rss>