<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>villupuram</title><atom:link href="https://tamil.abplive.com/villupuram/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 03:22:24 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!]]></title><link>https://tamil.abplive.com/crime/puducherry-thavalakuppam-nallavadu-aadi-thiruvizha-45-sovereign-gold-theft-270856</link><comments>https://tamil.abplive.com/crime/puducherry-thavalakuppam-nallavadu-aadi-thiruvizha-45-sovereign-gold-theft-270856#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 21:53:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/puducherry-thavalakuppam-nallavadu-aadi-thiruvizha-45-sovereign-gold-theft-270856</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பம் அருகே ஆடித்திருவிழாவை முன்னிட்டு குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, கப்பல் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;புதுச்சேரி தவளக்குப்பத்தை அடுத்துள்ள நல்லவாடு மீனவர் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயேந்திரன் (41). இவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முகுந்தாவதி, ஒரு மகள் மற்றும் மகனுடன் வசசித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;நேற்று நல்லவாட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற குட்டியாண்டவர் கோயிலில் ஆடிமாதத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக முகுந்தாவதி தனது பிள்ளைகள் மற்றும் சென்னையிலிருந்து வருகை தந்திருந்த உறவினர்களுடன் வீட்டைப் பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;அதிர்ச்சி தந்த காட்சி:&lt;/h2&gt;
&lt;p&gt;திருவிழா நிகழ்வுகள் முடிந்து இரவில் குடும்பத்தினர் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு மற்றும் உள்ளே இருந்த 2 பீரோக்களின் கதவுகள் திறந்து கிடப்பதைக் கண்டு முகுந்தாவதி கடும் அதிர்ச்சியடைந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;உள்ளே சென்று சோதித்துப் பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. குடும்பத்தினர் அனைவரும் கோயிலுக்குச் சென்றதை நைஸாக நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;போலீஸார் விசாரணை தீவிரப்படுத்தல்:&lt;/h2&gt;
&lt;p&gt;இச்சம்பவம் குறித்து முகுந்தாவதி உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் அளித்தார். புகாரின் பேரில் தவளக்குப்பம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தடயங்களைச் சேகரித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;பொதுமக்கள் அச்சம்:&lt;/h2&gt;
&lt;p&gt;அண்மையில்தான் இதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. அந்தச் சம்பவத்தின் வடு மாறுவதற்குள்ளேயே, தற்போது மீண்டும் 45 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது நல்லவாடு கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர் திருட்டில் ஈடுபடும் நபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் எனப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/11/269b1122cc179b284062e9a88e8f72c21786465265317194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/puducherry-lieutenant-governor-kailashnathan-bjp-narayanasamy-thamizh-thai-vazhthu-270728</link><comments>https://tamil.abplive.com/news/politics/puducherry-lieutenant-governor-kailashnathan-bjp-narayanasamy-thamizh-thai-vazhthu-270728#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 21:48:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/puducherry-lieutenant-governor-kailashnathan-bjp-narayanasamy-thamizh-thai-vazhthu-270728</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: பாஜகவின் அரசியல் நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நடுநிலை தவறி, பாஜகவின் ஏஜெண்டாகச் செயல்படுவது உறுதியாகி உள்ளதாக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வி. நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இச்செயலுக்கு ஆளுநர் பகிரங்க விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:&lt;/h2&gt;
&lt;h2&gt;தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு - கடும் கண்டனம்:&lt;/h2&gt;
&lt;p&gt;மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருகையின் போது, காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் 'வண்ண விருது' வழங்கும் விழா நடைபெற்றது. அரசு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்த்தாய்க்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;அரசு விழாக்களில் கட்டாயம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், அது புறக்கணிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் என். ரங்கசாமி ஏன் வாய்மூடி மௌனமாக இருக்கிறார்? இந்தச் சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும், புதுச்சேரி முதலமைச்சரும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2&gt;பாஜக விழாவில் ஆளுநர் - அதிர்ச்சி தகவல்:&lt;/h2&gt;
&lt;p&gt;காவல் துறை விழாவிற்குப் பிறகு, புதுச்சேரி பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இது முழுக்க முழுக்க பாஜகவின் உட்கட்சி சார்ந்த அரசியல் விழாவாகும். இதில் அரசு அதிகாரிகளோ அல்லது முதலமைச்சரோ பங்கேற்கவில்லை. ஆனால், எதிர்பாராத அதிர்ச்சியாக மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அந்த பாஜக விழா மேடையில் வீற்றிருந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர் பதவி என்பது மிகவும் நடுநிலையானது; எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயல்படக் கூடாது. அப்படி இருக்கையில், பாஜகவின் விழா மேடையில் ஆளுநருக்கு என்ன வேலை?&lt;/p&gt;
&lt;h2&gt;ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாகிவிட்டது:&lt;/h2&gt;
&lt;p&gt;தற்போது புதுச்சேரி ஆளுநர் மாளிகையானது பாஜகவின் தலைமை அலுவலகம் போலச் செயல்பட்டு வருகிறது. பாஜகவினரை மட்டுமே ஆளுநர் உடனுக்குடன் சந்திக்கிறார்; மற்ற எதிர்க்கட்சியினர் அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்படுவதில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. நிர்வாக நடைமுறைகளும், எந்தெந்த நிகழ்வுகளில் ஆளுநர் கலந்துகொள்ள வேண்டும் என்ற விதிகளும் அவருக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தே அவர் பாஜக நிகழ்வில் பங்கேற்றது ஆளுநர் பதவிக்கே ஏற்படுத்திய மாபெரும் இழுக்காகும்.&lt;/p&gt;
&lt;h2&gt;விளக்கம் அல்லது ராஜினாமா தேவை:&lt;/h2&gt;
&lt;p&gt;பாஜக விழாவில் ஆளுநர் பங்கேற்றதன் மூலம் அவர் அக்கட்சியின் ஏஜெண்டாகச் செயல்படுவது அம்பலமாகியுள்ளது. ஆளுநரின் இந்தச் செயல் புதுச்சேரி மக்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், தான் வகிக்கும் பதவியின் கண்ணியத்தின் மீதும் ஆளுநருக்கு உண்மையிலேயே மரியாதை இருக்குமானால், இந்தச் சம்பவத்திற்கு அவர் குறைந்தபட்சம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், தனது துணைநிலை ஆளுநர் பதவியை அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது வீடியோ பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/01/01/fdb28fe8115a579594fc80007f1231c71767275590390194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/amit-shah-puducherry-police-presidents-colour-matrimandir-auroville-270727</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/amit-shah-puducherry-police-presidents-colour-matrimandir-auroville-270727#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 21:42:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/amit-shah-puducherry-police-presidents-colour-matrimandir-auroville-270727</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறைக்கு 'ஜனாதிபதி வண்ண விருது' வழங்கும் விழாவிற்கான பயணத்தை நிறைவு செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா; லாஸ்பேட்டை விமான நிலையத்தில் மாத்ரிமந்திர் தங்க ஓடு பரிசளிப்பு.&lt;/p&gt;
&lt;h2&gt;ஆன்மீகப் பாரம்பரியத்திற்கு புகழாரம்:&lt;/h2&gt;
&lt;p&gt;விருது வழங்கும் விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னைக்கு (The Mother) தனது ஆழமான அஞ்சலியைச் செலுத்தி உரையைத் தொடங்கினார். அவர்களின் ஆன்மீகப் பணியும் அர்ப்பணிப்பும் புதுச்சேரி, ஆரோவில் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை பாரதத்தின் முதன்மையான ஆன்மீக மையமாக மாற்றியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். முன்னதாக, நாட்டின் துணை குடியரசுத் தலைவர் புதுச்சேரி மற்றும் ஆரோவில்லின் ஆன்மீக முக்கியத்துவம் குறித்துப் பேசியதையும் தனது உரையில் அவர் நினைவுகூர்ந்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;விமான நிலையத்தில் திரண்ட தலைவர்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;தனது பயணத்தை முடித்துக் கொண்டு புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரான உள்துறை அமைச்சருக்கு உற்சாக வழியனுப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் என். ரங்கசாமி, மாநில உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம், சட்டப்பேரவை சபாநாயகர் ஏ. அன்பழகன், தலைமைச் செயலாளர் டாக்டர் சரத் சவுகான் (IAS) மற்றும் காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) ஷாலினி சிங் (IPS) உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் உடனிருந்து வழியனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;சிறப்பு நினைவுப் பரிசு - மாத்ரிமந்திர் தங்க ஓடு:&lt;/h2&gt;
&lt;p&gt;மத்திய அமைச்சரின் ஆன்மீகச் சிந்தனைகளைப் போற்றும் வகையில், ஆரோவில் அறக்கட்டளை செயலாளரும் குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி (IAS) ஒரு அபூர்வ நினைவுப் பரிசை அமித் ஷாவுக்கு வழங்கினார். ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் அடையாளமாக, உலகப் புகழ்பெற்ற மாத்ரிமந்திரின் (Matrimandir) முக்கிய கட்டிடக்கலை அங்கமான &amp;lsquo;ஐகானிக் தங்க ஓடு&amp;rsquo; (Golden Tile) அவருக்குப் பரிசளிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h2&gt;தங்க ஓட்டின் தொழில்நுட்ப அதிசயம்:&lt;/h2&gt;
&lt;p&gt;பரிசளிக்கப்பட்ட இந்தத் தங்க ஓடு ஒரு பொறியியல் மற்றும் கலை அற்புதமாகும். இரட்டை கண்ணாடித் தகடுகளுக்கு இடையில் வெற்றிட முத்திரையிடப்பட்டு (vacuum seal) 24-காரட் தங்க இலை பாதுகாப்பாகப் பொருத்தப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியின் உப்புக்காற்றால் அரிப்பு ஏற்படாமல் மெல்லிய தங்கத்தைப் பாதுகாக்கவும், சூரிய ஒளியில் மாத்ரிமந்திர் என்றும் பொன்னிறப் பொலிவுடன் மிளிர்வதை உறுதி செய்யவும் இந்தத் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தகது.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி காவல் துறையினருக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க கௌரவத்தையும், ஆரோவில்லின் ஆன்மீகப் பாரம்பரியத்தையும் பிணைக்கும் விதமாக அமைந்த இந்த நினைவுப் பரிசு வழங்கலுடன் மத்திய உள்துறை அமைச்சரின் புதுச்சேரி பயணம் நிறைவுற்றது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/b459c6b6f309b084a5faf9068415e9bf1786378318743194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-school-anbarasi-neet-success-medical-study-270726</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-school-anbarasi-neet-success-medical-study-270726#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 21:29:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-school-anbarasi-neet-success-medical-study-270726</guid><description><![CDATA[&lt;p&gt;வறுமையை ஒரு தடைக் கல்லாகக் கருதாமல், அதையே தனது வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றி சாதனை படைத்துள்ளார் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி அன்பரசி. எந்தவித தனியார் பயிற்சி மையங்களின் உதவியுமின்றி, சுய முயற்சியால் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேரத் தகுதி பெற்றுள்ள இவரது கதை, பலரது நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;அரசுப் பள்ளிப் படிப்பும் நீட் வெற்றியும்:&lt;/h2&gt;
&lt;p&gt;திருபுவனையை அடுத்த கலித்தீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்றவர் அன்பரசி. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 517 மதிப்பெண்கள் பெற்று சிறந்த தேர்ச்சியைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, தனியார் பயிற்சி மையங்களுக்குச் செல்ல வசதியில்லாத நிலையிலும், தனது பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் சுயமாக நீட் தேர்வுக்குத் தயாரானார்.&lt;/p&gt;
&lt;p&gt;கடுமையான உழைப்பின் பயனாக நீட் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றார். இதன் மூலம் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;துயரங்களை எதிர்கொண்ட உழைப்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;அன்பரசியின் குடும்பப் பின்னணி மிகுந்த சவால்கள் நிறைந்தது. இவரது தந்தை இருதய நோயால் உயிரிழந்த நிலையில், குடும்பப் பொறுப்பு முழுவதும் தாயார் கஸ்தூரியின் தோள்களில் விழுந்தது. தனது குடும்பத்தைக் காப்பாற்ற தாயார் பானிப்பூரி விற்பனை செய்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;தாயின் கடின உழைப்புக்குத் தோள்கொடுக்கும் வகையில், மாணவி அன்பரசி தினமும் பள்ளி நேரம் முடிவடைந்ததும் மாலை வேளைகளில் பானிப்பூரி கடையில் தாயாருக்கு உதவியாகப் பணியாற்றினார். வேலைப் பளுவிற்கு இடையிலும், இரவு நேரங்களில் விழித்திருந்து படித்து இந்த மகத்தான சாதனையை எட்டியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;நேரில் சென்று பாராட்டி கவுரவிப்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் சாதித்துக் காட்டிய மாணவி அன்பரசியின் சாதனையைப் பாராட்டும் வகையில், சமூக சேவகர்கள் நாராயணசாமி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்றனர். அன்பரசிக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்த அவர்கள், ஒரு மருத்துவ மாணவிக்குத் தேவையான முதன்மை அடையாளங்களான டாக்டர் கோட் (Doctor Coat), ஸ்டெதஸ்கோப் (Stethoscope) மற்றும் மருத்துவப் படிப்பிற்கான புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்தினர்.&lt;/p&gt;
&lt;h2&gt;எளிய மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம்:&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த கவுரவத்தைப் பெற்றுக் கொண்ட மாணவி அன்பரசி நெகிழ்ச்சியுடன் பேசுகையில், &quot;மருத்துவராகி ஏழை மற்றும் எளிய மக்களுக்கு குறைந்த செலவிலும், முடிந்தவரை இலவசமாகவும் மருத்துவச் சேவை வழங்க வேண்டும் என்பதே எனது வாழ்நாள் கனவும் லட்சியமும் ஆகும்&quot; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;கல்விச் செலவை ஏற்க உறுதி:&lt;/h2&gt;
&lt;p&gt;இந்நிகழ்வில் பங்கேற்ற புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் நாராயணசாமி பேசுகையில், &quot;கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்புக்குத் தகுதி பெறும் ஏழை அரசுப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறோம். இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் நிதியுதவி அளித்துள்ளோம். அதேபோல், மாணவி அன்பரசியின் முழு மருத்துவக் கல்விக்கான நிதியுதவியையும் வழங்க நாங்கள் உறுதியளிக்கிறோம்&quot; எனக் கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;வறுமை, தந்தையின் இழப்பு என அடுத்தடுத்து சோதனைகள் வந்தபோதும், தளராத மன உறுதியோடு போராடி வெற்றி பெற்றுள்ள அன்பரசியின் இச்சாதனை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், நீட் தேர்வுக்குத் தயாராகும் கிராமப்புற இளைஞர்களுக்கும் ஒரு புதிய நம்பிக்கையையும் மாபெரும் உத்வேகத்தையும் அளிப்பதாக அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/1ef758c9bd3425ca4843e3e388fd6b281786377486610194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!]]></title><link>https://tamil.abplive.com/crime/villupuram-town-police-station-anburani-husband-ramachandran-acid-attack-mundiyambakkam-270704</link><comments>https://tamil.abplive.com/crime/villupuram-town-police-station-anburani-husband-ramachandran-acid-attack-mundiyambakkam-270704#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 17:14:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/villupuram-town-police-station-anburani-husband-ramachandran-acid-attack-mundiyambakkam-270704</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: விழுப்புரம் நகரின் மையப்பகுதியில், காவல் நிலையம் அருகிலேயே பட்டப்பகலில் பெண் ஒருவர் மீது அவரது கணவரே ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அருகில் நடந்து சென்ற முதியவர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விழுப்புரம் நகரப் பகுதிக்குட்பட்ட முத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்புராணி. இவருக்கும் இவரது கணவர் ராமச்சந்திரன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அன்புராணி தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;பிரிந்து வாழ்ந்தபோதிலும், ராமச்சந்திரன் அடிக்கடி அன்புராணியின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததோடு, கைப்பேசி வாயிலாகவும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணவரின் தொல்லை அதிகரித்ததால் அன்புராணி ஏற்கனவே விழுப்புரம் டவுன் காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் அளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;பட்டப்பகலில் கொடூரத் தாக்குதல்&lt;/h2&gt;
&lt;p&gt;இந்நிலையில், இன்று அன்புராணி ஆஞ்சநேயர் கோவில் வீதியில் டவுன் காவல் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த கணவர் ராமச்சந்திரன், தான் கையில் மறைத்து எடுத்து வந்த ஆசிட்டை அன்புராணியின் முகத்தில் வீசியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆசிட் முகத்தில் பட்டதால் அன்புராணி வலியால் அலறித் துடித்தார். அச்சமயத்தில் அவருக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முதியவர் மீதும் ஆசிட் சிதறியதில், இருவருமே காயமடைந்தனர். தாக்குதலை நடத்திய உடனடியாக ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.&lt;/p&gt;
&lt;h2&gt;மருத்துவ சிகிச்சை மற்றும் காவல் துறை நடவடிக்கை&lt;/h2&gt;
&lt;p&gt;மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும், அருகிலிருந்த நகரப் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த அன்புராணி மற்றும் முதியவர் கிருஷ்ணமூர்த்தியை மீட்டனர். முதற்கட்டமாக அருகிலுள்ள நகராட்சி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;அதனைத் தொடர்ந்து, இருவருமே மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இச்சம்பவம் குறித்து விழுப்புரம் நகரப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கணவர் ராமச்சந்திரனைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் நிலையம் அருகிலேயே நடைபெற்ற இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/435cf601654dc824274668673e36554b1786362229925194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுரையை மிஞ்சும் திண்டிவனம் மல்லி: சிப்காட்டில் உருவாகுமா வாசனை திரவிய சாம்ராஜ்யம்?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/villupuram-jasmine-cultivation-tindivanam-perfume-factory-farmers-livelihood-270541</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/villupuram-jasmine-cultivation-tindivanam-perfume-factory-farmers-livelihood-270541#respond</comments><pubDate>Sat, 8 Aug 2026 17:11:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/villupuram-jasmine-cultivation-tindivanam-perfume-factory-farmers-livelihood-270541</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் :&amp;nbsp; விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை உள்ளிட்ட மலர் சாகுபடி கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும் திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;விவசாய நிலப்பரப்பும் பயிர்ச் சாகுபடியும்:&lt;/h2&gt;
&lt;p&gt;விழுப்புரம் மாவட்டத்தின் மொத்த வேளாண் நிலப்பரப்பில் 40 சதவீதம் நெல் சாகுபடிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள நிலங்களில் பயறு வகைகள் மற்றும் பணப்பயிரான கரும்பு உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கரும்பை அடிப்படையாகக் கொண்ட சர்க்கரை ஆலைகள் போதுமான அளவில் இயங்கி வருகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;அதேநேரத்தில், தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் (நிலக்கோட்டை) ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக, விழுப்புரம் மாவட்டத்திலும் மலர் சாகுபடி தீவிரமடைந்து வருகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;மலர் சாகுபடி பரப்பளவு விவரம்:&lt;/h2&gt;
&lt;p&gt;மாவட்ட கணக்கெடுப்பின்படி, பல்வேறு வகையான மலர்கள் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன:&lt;/p&gt;
&lt;p&gt;சம்பங்கி: 213 ஏக்கர்&lt;/p&gt;
&lt;p&gt;மல்லி, முல்லை, கனகாம்பரம், கோழிக்கொண்டை உள்ளிட்ட இதர மலர்கள்: 1,071 ஏக்கர்&lt;/p&gt;
&lt;h2&gt;பகுதி வாரியாக பயிரிடப்படும் மலர்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மல்லிகை:&lt;/strong&gt; மயிலம், வீடூர், ஒலக்கூர், நொளம்பூர் ஆகிய பகுதிகள்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கனகாம்பரம்&lt;/strong&gt;: விக்கிரவாண்டி, வீடூர் பகுதிகள்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கோழிக்கொண்டை&lt;/strong&gt;: மரக்காணம், ஒலக்கூர் பகுதிகள்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;சம்பங்கி&lt;/strong&gt;: மயிலம், விக்கிரவாண்டி, ஒலக்கூர், தீவனூர் பகுதிகள்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;குண்டு மல்லி &amp;amp; மஞ்சள் சாமந்தி:&lt;/strong&gt; திண்டிவனம் அடுத்த சலவாதி, பட்டணம், ஊரல் பகுதிகள்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழகத்தில் மதுரைக்கு அடுத்தபடியாக திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே மல்லிகைப் பூ அதிகளவில் அறுவடை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h2&gt;மதிப்புக் கூட்டு தொழிலின் அவசியம்:&lt;/h2&gt;
&lt;p&gt;பூக்கள் எளிதில் அழுகக்கூடிய தன்மை கொண்டவை என்பதால், சந்தையில் திடீரென ஏற்படும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெருமளவில் நஷ்டத்தைச் சந்திக்கின்றனர். இதற்கு தீர்வாக, திண்டிவனம் பகுதியில் விளையும் மல்லிகைப் பூக்களுக்கு மதிப்புக் கூட்டும் தொழிலாக வாசனை திரவியத் தயாரிப்பு ஆலையைத் தொடங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் தரவுகளின்படி, மல்லிகைப் பூவிலிருந்து 0.14% முதல் 0.19% வரை உயர்தர வாசனைச் சாறு (Essential Oil) எடுக்க முடியும். தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் கிலோ மல்லி, ஜாதிமல்லி மற்றும் சம்பங்கி பூக்கள் வாசனை திரவிய தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;விவசாயிகளின் எதிர்பார்ப்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வாசனை திரவிய தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதைப் போல, உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்த திண்டிவனம் சிப்காட் (SIPCOT) தொழில்பூங்கா வளாகத்தில் புதிய வாசனை திரவிய தொழிற்சாலையை தமிழ்நாடு அரசு நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவதுடன், உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனப்ப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/1764d76259dc5d9984e3e19c4bf7be041786189219831194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/vanni-arasu-tindivanam-anganwadi-panchami-lands-human-rights-constituency-delimitation-270536</link><comments>https://tamil.abplive.com/news/politics/vanni-arasu-tindivanam-anganwadi-panchami-lands-human-rights-constituency-delimitation-270536#respond</comments><pubDate>Sat, 8 Aug 2026 16:52:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/vanni-arasu-tindivanam-anganwadi-panchami-lands-human-rights-constituency-delimitation-270536</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எம்.புதுப்பாக்கம் ஊராட்சி மற்றும் கூனிமேடு ஊராட்சி ஆகிய பகுதிகளில் ரூ.92.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து கூனிமேடு திடீர் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அப்பகுதி மக்களுக்கு மின்சார வசதி மற்றும் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அதனைத் தொடர்ந்து மரக்காணம் அருகே உள்ள ஆட்சிக்காடு கிராமத்தில் சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் தவித்து வந்த பொதுமக்களுக்கு, மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தயாளன் தனது சொந்த செலவில் நிலத்தை வாங்கி தானமாக வழங்கிய இடத்தில், சாலை அமைப்பதற்காக ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சாலை அமைக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் வன்னி அரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-&lt;/p&gt;
&lt;p&gt;திண்டிவனம் தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் திண்டிவனத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரும் பணிகள் மாலை வேளையில் தொடங்கப்பட உள்ளன. இத்தொகுதியை மேலும் வளப்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன், தொகுதி மக்களுக்கான அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;தொகுதி மறுவரையறை, காவிரி விவகாரம்&lt;/h2&gt;
&lt;p&gt;காவிரி பிரச்சனை மற்றும் தொகுதி மறுவரையறை ஆகிய இரண்டுமே முக்கியமான விவகாரங்கள். குறிப்பாக மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய ஆபத்தாக முடியும். வடமாநிலங்களை மட்டுமே மையமாக வைத்து ஆட்சி அமைக்கும் நிலையை உருவாக்கவே இத்தகைய திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெளிவான நிலைப்பாடு. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 39 மக்களவை தொகுதிகளும் அப்படியே தொடர வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;அதேபோல் காவிரி விவகாரத்தில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதில் எந்தவித நாடகமும் இல்லை.&lt;/p&gt;
&lt;h2&gt;பஞ்சமி நிலங்கள் மீட்பு&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிந்து மீட்டெடுக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணிகள் முடிந்தவுடன் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;சிறைத்துறை மற்றும் மனித உரிமைகள்&lt;/h2&gt;
&lt;p&gt;சிறையில் கைதிகள் உயிரிழப்பது கவலையளிக்கிறது. காவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கும் சிறைத்துறைக்கும் உள்ளது. மனித உரிமை மீறல்கள் யார் செய்தாலும் தவறாகும். சட்டமும் காவல்துறையும் மனித உரிமைகளை பாதுகாக்க பொறுப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/4f6f527c0eede0d51275778a3290231e1786187994235194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தோளில் மனைவி... மனதில் காதல்! புதுச்சேரி ஆடித் திருவிழாவில் வைரலாகும் விநோதப் போட்டி!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-solai-nagar-aadi-thiruvizha-unique-husbands-carrying-wives-shoulders-race-270479</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-solai-nagar-aadi-thiruvizha-unique-husbands-carrying-wives-shoulders-race-270479#respond</comments><pubDate>Sat, 8 Aug 2026 09:18:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-solai-nagar-aadi-thiruvizha-unique-husbands-carrying-wives-shoulders-race-270479</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரி சோலை நகர் வடக்குப் பகுதியில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில், கணவர்கள் தங்களது மனைவியைத் தோளில் சுமந்தபடி ஓடும் போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.&lt;/p&gt;
&lt;h2&gt;கவனத்தை ஈர்த்த விநோதப் போட்டி:&lt;/h2&gt;
&lt;p&gt;திருவிழா என்றாலே சாமி தரிசனம், மேளதாள அதிர்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மட்டுமே நினைவுக்கு வரும் நிலையில், புதுச்சேரியில் குடும்ப உறவுகளின் பிணைப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற வித்தியாசமான விளையாட்டுப் போட்டிகள் பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன. புதுச்சேரி சோலை நகர் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னியம்மன் மற்றும் செங்கழுநீரம்மன் திருக்கோவில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் ஒன்று கூடி மகிழும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த விளையாட்டு விழாவில் அனைவரின் மேலான எதிர்பார்ப்பையும் சுவாரசியத்தையும் தூண்டிய நிகழ்ச்சி, கணவர்கள் தங்கள் மனைவிகளை தோளில் சுமந்துகொண்டு இலக்கை நோக்கி ஓடும் போட்டிதான்.&lt;/p&gt;
&lt;p&gt;போட்டி தொடங்கியதும், தங்களது மனைவிகளை பாதுகாப்பாகவும் அதேவேளையில் விரைவாகவும் சுமந்துகொண்டு கணவர்கள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் சிலர் வேகமாக ஓடியபோது எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்ததும், மீண்டும் மீண்டு எழுந்து உற்சாகத்துடன் ஓடியதும் பார்வையாளர்களிடையே பெரும் சிரிப்பலைகளையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;h2&gt;ஆரவாரத்தில் மூழ்கிய கிராமம்:&lt;/h2&gt;
&lt;p&gt;தங்களைச் சுமந்து கொண்டு சிரமத்தைப் பொருட்படுத்தாமல் ஓடும் கணவர்களைக் கண்டு மனைவிகள் சிரித்தபடியும், கைத்தட்டியும், உற்சாகக் குரல் எழுப்பியும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். போட்டிக்களத்தில் இருந்த தம்பதிகளின் இந்த அன்யோனியத்தையும், பரஸ்பர அன்பையும் கண்ட கிராம மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினர். இதனால் அப்பகுதியே திருவிழாக் கோலம் பூண்டு கொண்டாட்ட மனநிலையில் மூழ்கியது.&lt;/p&gt;
&lt;h2&gt;பரிசளிப்பு மற்றும் தொடர் போட்டிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;சுவாரசியமாக நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற தம்பதியருக்கு விழாக்குழு சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பெண்களுக்கான விறுவிறுப்பான கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு தங்கள் வலிமையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.&lt;/p&gt;
&lt;p&gt;வெறும் வழிபாட்டுடன் நின்றுவிடாமல், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், கிராம மக்களின் ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த ஆடித் திருவிழா போட்டிகள், சோலை நகர் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் நீங்காத நினைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/2cec142f3b0e1e42370e827df128e5751786160783705194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியா? ஒன்றிய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 15 வரை சிபிஐ நடைபயணம்!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/indian-communist-party-m-veerapandian-padayatra-central-government-state-rights-270441</link><comments>https://tamil.abplive.com/news/politics/indian-communist-party-m-veerapandian-padayatra-central-government-state-rights-270441#respond</comments><pubDate>Fri, 7 Aug 2026 20:38:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/indian-communist-party-m-veerapandian-padayatra-central-government-state-rights-270441</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் : மாநில உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 'மாற்றத்தை நோக்கி' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற நடைபயண பிரச்சார மேற்கொள்வதாக கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேட்டி&lt;/p&gt;
&lt;p&gt;விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 'மாற்றத்தை நோக்கி' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற நடைபயண பிரச்சார இயக்கத்தை அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் துவக்கி வைத்து நடைபயணம் மேற்கொண்டார். நடைபயணத்தின் இறுதியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது அவர் கூறியதாவது:-&lt;/p&gt;
&lt;p&gt;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு முடிவின்படி ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழுக்களாக பிரச்சார நடைபயண இயக்கத்தை தொடங்கியுள்ளோம். ஒன்றிய அரசு அதிகாரத்தை குவித்துக்கொண்டு மாநிலங்களின் உரிமையை பறிக்கிறது. ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியை நிறுவ துடிக்கிறது. நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்து அதிகாரத்தை தக்கவைப்பதற்கான மிக மோசமான, சட்டத்திற்கு புறம்பான முயற்சிகள் நடைபெறுகிறது. இவை அனைத்திற்கும் எதிராக முழங்குகிறோம். விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், ரேஷன் பொருட்களின் அளவை அதிகரிக்க வேண்டும், போராடி பெற்ற உழைப்பாளி மக்களின் சட்டங்களை சிதைக்க கூடாது, சிறு, குறு தொழிலுக்கு நலவாரியங்கள் அமைக்க வேண்டும், ஏழைகள், தலித் மக்கள், பழங்குடிகள், அலைகுடி மக்கள் வாழ்வுக்காக அரசுகள் நலத்திட்டங்களை உருவாக்க வேண்டும்,&lt;/p&gt;
&lt;p&gt;கல்வியும் மருத்துவமும் முழுக்க முழுக்க அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை முன்மொழிந்து இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறோம். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, சார்பின்மை ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். செப்டம்பர் 1-ந் தேதி டெல்லியில் பிரமாண்டமான பேரணியை நடத்த உள்ளோம். இதில் பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். டெல்டா பகுதியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் டெல்லி செல்ல உள்ளோம். இந்த நடைபயண இயக்கம் ஆகஸ்ட் 15-ந் தேதி டெல்லி முதல் தமிழகத்தின் தலைநகர் சென்னை வரை தேசிய கொடியேந்தி நிறைவடைய உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ் கூறும் நல்லுலகம் இந்த 10 தின மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு பேராதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் வேளாண் பட்ஜெட் குறித்து அவர் கூறுகையில், இது ஒரு புதிய அரசு, நிதியில்லாமல் சிரமப்படுவது புரிகிறது. ஒன்றிய அரசு நிதியை தர வேண்டும். இது முழு நிறைவு பட்ஜெட் அல்ல. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்போதுதான் பட்ஜெட் முழு வடிவம் பெறும் என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;எதிர்க்கட்சி தலைவர் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். டாக்டர் அம்பேத்கர் கூறுவது போல் நாணயத்தின் இருபக்கம் போல் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும். எதிர்க்கட்சி இல்லாவிட்டால் ஆளுங்கட்சிக்கும் சட்டமன்றத்திற்கும் பொருள் இல்லை. மக்கள் நலன் சார்ந்த கேள்விகளை எதிர்க்கட்சி தலைவர் எழுப்பும்போது முதல்வரோ, அவை முன்னவரோ, அமைச்சர்களோ பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். பதில் சொல்ல முடியாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, முந்தைய அரசு கடைபிடித்த அதே நிலையைத்தான் இன்றைய அரசும் கடைபிடிக்கிறது. இது நல்ல அணுகுமுறை. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தமிழ்நாடு தனது உரிமைக்காக உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டும். இந்த பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்பதுதான் நல்லது என்றார். கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்து கேட்டதற்கு, கல்விக்கான நிதி அதிகரிக்கப்பட வேண்டும். கல்வியும் மருத்துவமும் முழுக்க அரசின் பொறுப்பு. அதுதான் சமூக நல அரசு. இந்த பொறுப்புகளில் இருந்து ஒன்றிய அரசு மெல்ல மெல்ல விலகிக்கொண்டு மாநில அரசுகளையும் விலக சொல்லி உலக வங்கியும் நிதி மூலதன உலக முதலாளிகளும் நிர்பந்திக்கிறார்கள். அந்த திசைக்கு நாடு சென்றுவிடக்கூடாது என்றார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/07/59fad238dda1c1089e3244bc4929b5291786115226322194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பாஜகவின் தொகுதி மறுவரையறை சதி: எதிர்க்கட்சிகள் ஒன்றுபட திருமாவளவன் அறைகூவல்!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/thol-thirumavalavan-parliament-constituency-delimitation-tamil-nadu-parties-270440</link><comments>https://tamil.abplive.com/news/politics/thol-thirumavalavan-parliament-constituency-delimitation-tamil-nadu-parties-270440#respond</comments><pubDate>Fri, 7 Aug 2026 20:28:14 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/thol-thirumavalavan-parliament-constituency-delimitation-tamil-nadu-parties-270440</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத்தை எதிர்கொள்ள தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:&lt;/p&gt;
&lt;h2&gt;தொகுதி மறுவரையறை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்:&lt;/h2&gt;
&lt;p&gt;நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை தொடர்பான சட்டத்தை இந்த கூட்டத் தொடரில் பாஜக அரசு அறிமுகப்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. வரும் வாரம் அறிமுகப்படுத்தவோ அல்லது இதற்காக சிறப்பு கூட்டத் தொடரை நடத்தவோ வாய்ப்புள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்த முன்வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. நாளை மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நானும், ரவிக்குமாரும் பங்கேற்கிறோம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய காலகட்டம். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே ஒன்று பட்டு நின்றதன் விளைவாக அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. மீண்டும் அதனை முறியடிக்க வேண்டிய தேவை உள்ளது. நாளை நடைபெறவுள்ள கலந்தாய்வு கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;விவசாயிகளுக்கு இழப்பீடு:&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பரிசளிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளின் குரலைத்தான் அனைத்து கட்சிகளும் எதிரொலிக்கும் நிலை உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கையை பரிசளிக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;தமிழக அரசுக்குப் பாராட்டு:&lt;/h2&gt;
&lt;p&gt;கடுமையான நிதி நெருக்கடி உள்ளது இந்திய ஒன்றிய அரசும் வஞ்சகம் செய்து வருகிறது இந்நிலையில் எந்த ஒரு திட்டத்தையும் நிறுத்தாமல் திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அப்படியே நடைமுறைப்படுத்த இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்த முயற்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;புதிய திட்டங்களை வரும் காலங்களில் கொண்டு வருவார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. பொருளாதார நெருக்கடி உள்ளது. நெருக்கடி நிலையை சமாளிக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளது. இந்நிலையில் தான் கடந்த கால திட்டங்களை எதையும் நிறுத்தாமல், பெயர் மாற்றம் செய்வது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்பது பாராட்டுக்குரியது. இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/07/e59ca2f799d7682d361cc791f582baf81786114600899194_original.jpg" width="220"/></item></channel></rss>