விழுப்புரம்: தீபாவளிக்கு ஸ்பெஷலாக இனிப்பு காரம் என அனைத்தும் ஒரே இடத்தில் வீட்டு முறைப்படி செய்து வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள்.

Continues below advertisement

தீபாவளி பண்டிகை 

தீபாவளிக்கு ஸ்பெஷலாக இனிப்பு காரம் என அனைத்தும் ஒரே இடத்தில் வீட்டு முறைப்படி செய்து வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள்.  இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. தீபாவளி என்றாலே எண்ணெய் குளியல், இனிப்பு வகைகள், ஸ்வீட்ஸ், பட்டாசு தான் பொதுமக்களுக்கு ஞாபகம் வரும். புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மக்கள் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகை தான் தீபாவளி. இந்த மாதம் தீபாவளி அக்டோபர் 20 ஆம் தேதி வருவதால் அனைத்து பகுதிகளிலும் இனிப்பு,, கார வகைகள் விற்பனை செய்து வருகின்றனர். முதலவதாக இனிப்பு வகைகளில் ஒன்றான லட்டுவை செய்து தீபாவளி இனிப்பு வகைகளை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அந்த வகையில் இனிப்பு காரம் என விழுப்புரத்தில் ஒரே இடத்தில், டேஸ்டாக செய்து தருகிறார்கள்.

Continues below advertisement

விறகு அடுப்பில் தயாரிக்கப்படும் பலகாரம் 

விழுப்புரம் டூ பானாம்பட்டு சாலையில் அமைந்துள்ளது நெல்லை ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ். இக்கடை 25 வருடங்களாக இயங்கி வருகிறது. இக்கடையில் வீட்டு முறைப்படி, விறகு அடுப்பில் இனிப்பு வகைகள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இக்கடையின் உரிமையாளர் கனகலட்சுமி (49) ஆவார். இக்கடையில் வீட்டு முறைப்படி இனிப்பு வகைகளில் 12 வகையும், கார வகைகளில் 13 வகையும் செய்து தருகிறார்கள். அதாவது அதிரசம், லட்டு, பாதுஷா, எள்ளடை, புதினா எள் அடை, முறுக்கு, கார முறுக்கு, பூண்டு முறுக்கு, ஜாங்கிரி, குலோப் ஜாமுன், பால்கோவா, நெய் மைசூர் பாக்கு, பூந்தி, சோமாஸ், ரவா லட்டு போன்ற தின்பண்டங்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இக்குழு பற்றி கடை உரிமையாளர் கனகலட்சுமி தெரிவிக்கையில், இங்கு பணிபுரியும் பணியாளர்கள் அனைவருமே திருமணமான பெண்கள். திருமணத்திற்கு பிறகு பெண்கள் சிலர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக சுய தொழில் சாதித்து வருகிறோம். மேலும் இக்குழுவில் 16-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விழுப்புரம் சுற்றுப்பகுதியில் வசித்து வருபவர்கள். இங்கு பணிபுரியும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு அவரவர்கள் வேலையைப் பொறுத்து ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரை வருமானம் வருகிறது. ஒரு நாளில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் கார வகைகள் அன்றே விற்பனை ஆகிவிடும். இங்கு தயாரிக்கப்படும் பொருட்களின் விலை ஒரு பாக்கெட் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை 8 மணிக்கு வேலை தொடங்கப்பட்டு இரவு 9:30 மணி வரை நடைபெறும். தின்பண்டங்கள் தயாரிப்பது மட்டுமல்லாமல் சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தயாரிக்கும் உணவு மற்றும் தின்பண்டங்களின் சுவையின்காரணமாக கடைக்கு அதிக அளவில் மக்கள் வருகின்றனர்.

தீபாவளி ஸ்பெஷல் :

தற்போது தீபாவளி ஸ்பெஷலாகஇக்கடையில் வீட்டு முறைப்படி அதிரசம், லட்டு, பாதுஷா, எள்ளடை, புதினா எள் அடை, முறுக்கு, கார முறுக்கு பூண்டு முறுக்கு அதிரசம் சோமாஸ் ரவா லட்டு போன்ற தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆர்டர் குவிந்து வருகின்றன, மேலும் இவை அனைத்து வீட்டு முறையில் செய்வதால் பொதுமக்களிடேயை வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைக்கு வருகை புரிவது மக்கள் நாங்கள் செய்வதை கண்கூடாக பார்த்து, சாப்பிட்டு வாங்கி செல்கிறார்கள் 

மேலும் என்னுடைய தந்தை வீடுகளிலேயே தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தார். அதை நான் சிறு வயதிலேயே பார்த்து, கற்றுக்கொண்டேன். தந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதன் காரணமாக நாங்கள் இனிப்பு வகைகளை தயாரிக்கும் தொழிலை கைவிட்டு விட்டோம். அதன்பின் எனக்கு திருமணமானது. திருமணமாகி 5-வது வருடத்தில் கணவனை இழந்துவிட்டேன். எங்களிடம் இனிப்பு வகைகளைப் பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள், கடைக்கு வந்து நீங்கள் மறுபடியும் இனிப்பு வகைகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். எனக்கும் குடும்பத்தை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதன்பின் வீட்டிலேயே சிறியதாக செய்ய ஆரம்பித்தேன்.

நானும் எனக்கு உதவியாக இன்னொரு பெண்ணையும் வைத்து வேலை செய்ய ஆரம்பித்தேன். நான் தயாரித்த இனிப்பு வகையின் சுவை பிடித்து இருந்த காரணத்தினால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூட ஆரம்பித்தது. தற்போது என்னிடம் 16 க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். அனைவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் ஆகும். இவர்களை வைத்து தற்போது வெற்றிகரமாக 25 வருடங்களாக இந்த கடையை நான் நடத்தி வருகிறேன். திருமணமான பெண்களாலும் நிச்சயமாக சாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம் என தெரிவித்தார்.

 மேலும் தீபாவாளி ஸ்பெஷலாக நார்மல் ஸ்வீட்ஸ் 1kg ரூ.300 க்கும், ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் 1 kg 400 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம் என கனக லட்சுமி தெரிவித்தார்.