சென்னை செல்வோர் கவனத்திற்கு... விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை 6.35 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந் தேதிகளில் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.

Continues below advertisement

விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மெமு ரயில் மற்றும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

ரயில் பயண நேரம் மாற்றம் 

தாம்பரத்தில் இருந்து விழுப்புரத்துக்கு காலை 9.45 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை (9-ந்தேதி), 16 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி வரை மட்டும் இயக்கப்படும். அதே போன்று சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை 6.35 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந்தேதிகளில் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.

மறுமார்க்கமாக விழுப்புரம்- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.40 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந்தேதி விக்கிரவாண்டியில் இருந்து இயக்கப்படும்.

விழுப்புரம்- மயிலாடுதுறை மெமு ரெயில் சேர்ந்தனூரில் இருந்தும், புதுச்சேரி-திருப்பதி மெமு ரெயில் முண்டியம்பாக்கத்தில் இருந்தும் நாளை (9-ந்தேதி), மற்றும் 16-ந்தேதிகளில் புறப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் குருவாயூர் விரைவில் ரெயில் 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola