<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>vellore</title><atom:link href="https://tamil.abplive.com/vellore/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 19:26:51 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[தன்னுயிர் தந்து 25 உயிர்களை காத்த தியாகி! வேலூரில் நெஞ்சை உருக்கும் சம்பவம்!]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/vellore-news-gudiyatham-government-bus-driver-saves-passengers-heart-attack-274794</link><comments>https://tamil.abplive.com/news/vellore/vellore-news-gudiyatham-government-bus-driver-saves-passengers-heart-attack-274794#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 13:59:14 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/vellore-news-gudiyatham-government-bus-driver-saves-passengers-heart-attack-274794</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;வேலூர்:&lt;/strong&gt; குடியாத்தத்தில் 25 பயணிகளுடன் வந்த அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகளை பத்திரமாக காப்பாற்றி தன்னுயிரை விட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டிலிருந்து காலை 8 மணி அளவில் சுமார் 25 பயணிகளுடன் காட்பாடி சில்க் மில்க் பகுதியில் வசிக்கும் அரசு பேருந்து ஓட்டுநர் வெங்கடசாமி மற்றும் நடத்துனர் அன்பழகன் வந்து கொண்டிருந்தனர். குடியாத்தம் நகரில் கவுண்டன்யா மகாநதி ஆற்றோரம் புதிய பைபாஸ் சாலையில் கங்கை அம்மன் கோவில் பாலம் அருகே வரும்போது ஓட்டுநர் வெங்கடசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/DfL5DKShrSk?si=Tpm5wpk4TFbSwMvp&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதனை அறிந்த ஓட்டுனர் பேருந்தில் பயணிகள் காப்பாற்றுவதற்காக பேருந்தை சாமர்த்தியமாக நெஞ்சு வலியிலும் ஓரம் கட்டியுள்ளார். பயணிகள் ஓட்டுநர் வெங்கடசாமி மயங்கியதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். &amp;nbsp;சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெங்கடசாமியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனை அறிந்தபேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் பணிமனை அதிகாரிகள், சக ஊழியர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்தடைந்தனர். உடனடியாக அவருடைய மனைவிக்கு குடியாத்தம் &amp;nbsp;காவல்துறையினர் தகவல் கொடுத்ததின் அடிப்படையில் உறவினர்கள் விரைந்து வந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;25 பயணிகளின் உயிரை காப்பாற்றி அரசு பேருந்து ஓட்டுநர் உயிர் இழந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/business/how-to-manage-your-expenses-during-inflation-274782&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/c12befaacea981d5c70a6b7e50b032991789632572187113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Vellore power cut: வேலூரில் நாளை (12-09-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/vellore-power-cut-12-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-274243</link><comments>https://tamil.abplive.com/news/vellore/vellore-power-cut-12-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-274243#respond</comments><pubDate>Fri, 11 Sep 2026 16:01:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/vellore-power-cut-12-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-274243</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( செப்டம்பர் 12, 2026, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/Zd93cHcVmak?si=HEKz_9XnRL5TSP71&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;வேலூர் மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;சோளிங்கர் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பானாவரம், வி.ஜி.புரம், தளிகால், எறும்பி, கொண்டபாளையம், கரிக்கால் மற்றும் சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;பரவத்தூர் துணை மின் நிலையம்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சின்ன பரவத்தூர், அக்காச்சிக்குப்பம், ஜனகாபுரம், பரஞ்சி, வெங்குப்பட்டு, பரவத்தூர் சுற்றுவட்டார பகுதிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;கரிக்கால் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஐயப்பேடு, வெங்குப்பட்டு, ஆயல், பொலிபாக்கம், பழையபாளையம், கரிக்கால் சுற்றுவட்டாரப் பகுதிகள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;பானாவரம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பானாவரம், வெளித்தகிபுரம், புதூர், மங்கலம், மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கல் மற்றும் பானாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/politics/how-old-will-pm-modi-turn-this-month-274193&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/11/05/57e7644fbd886fd750d957bde33703131762332109163240_original.png" width="220"/></item><item><title><![CDATA[ஆம்பூர், ஜோலார்பேட்டை மக்களுக்கு குட் நியூஸ்! எம்.பி எல்.கே.சுதீஷ் கொடுத்த அதிரடி வாக்குறுதி!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mp-l-k-sudheesh-says-steps-will-be-taken-to-ensure-that-the-vande-bharat-train-stops-at-jolarpettai-273336</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mp-l-k-sudheesh-says-steps-will-be-taken-to-ensure-that-the-vande-bharat-train-stops-at-jolarpettai-273336#respond</comments><pubDate>Wed, 2 Sep 2026 19:40:05 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mp-l-k-sudheesh-says-steps-will-be-taken-to-ensure-that-the-vande-bharat-train-stops-at-jolarpettai-273336</guid><description><![CDATA[&lt;p&gt;ஆம்பூரில் கஸ்டம்ஸ் கிடங்கு அமைக்கவும் ஜோலார்பேட்டையில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் எல்.கே.சுதீஷ் &amp;nbsp;உறுதி அளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரை, &amp;nbsp;மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் எல்.கே.சுதீஷ், சந்தித்து மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறியதாவது, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டப் பகுதிகளுக்குச் சமமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆம்பூர் தொகுதிக்கு குடிநீர் மேல்நிலைத் தொட்டி பள்ளிக் கட்டடங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/BrCJ5-CmcYg?si=XiPqcy0faFGJo6NC&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;​ஆம்பூரில் கஸ்டம்ஸ் கிடங்கு நமது மாவட்டத்திலிருந்து ஆண்டுதோறும் ரூபாய் 2,000 கோடிக்கும் மேலாகத் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆம்பூரில் பாண்டட் கஸ்டம்ஸ் கிடங்கு (Customs Bonded Warehouse) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து தேவையான அனுமதியைப் பெற உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;​ஜோலார்பேட்டையில் வந்தே பாரத் ரயில்&lt;/h2&gt;
&lt;p&gt;சுமார் மூன்று சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் சென்னை மற்றும் பெங்களூருவுக்கு எளிதில் சென்று வர ஏதுவாக, முக்கிய ரயில் சந்திப்பான ஜோலார்பேட்டையில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தொகுதி மக்களின் சார்பில் மனுக்கள் பெறப்பட்டு மத்திய ரயில்வே அமைச்சரிடம் பேசி இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;சிப்காட் தொழிற்பேட்டை &amp;amp; விமான நிலைய விரிவாக்கம்&lt;/h2&gt;
&lt;p&gt;திருப்பத்தூர் மாவட்ட படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், இம்மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், வேலூர் விமான நிலையத் திட்டத்திற்கு தற்போதுள்ள நிலம் போதுமானதாக இல்லாததால் கூடுதலாக 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதுகுறித்து &amp;nbsp;தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இதன் மூலம் பெரிய விமானங்கள் வந்து செல்ல வழிவகை ஏற்பட்டு, இப்பகுதி மக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், திருப்பத்தூர் - குப்பம் சாலையில் பொம்மநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலம் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளும் மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சரிசெய்யப்படும். என அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/02/82919cee2ab62d76ff0ef1f90fd5463f1788355468609113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வேலூர் காட்பாடியில் டிராஃபிக்குக்கு குட்பை! ரூ.90 கோடியில் திறக்கப்பட்ட புதிய சாலை... இனி பயணம் ஈஸி!]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/vellore-90-crore-elevated-road-opens-major-relief-for-katpadi-traffic-offering-a-faster-route-to-nh-48-tnn-272367</link><comments>https://tamil.abplive.com/news/vellore/vellore-90-crore-elevated-road-opens-major-relief-for-katpadi-traffic-offering-a-faster-route-to-nh-48-tnn-272367#respond</comments><pubDate>Tue, 25 Aug 2026 12:13:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/vellore-90-crore-elevated-road-opens-major-relief-for-katpadi-traffic-offering-a-faster-route-to-nh-48-tnn-272367</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்னை&amp;ndash;பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை (NH-48) உடன் இணையும் வகையில், ரூ.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சத்துவாச்சாரி&amp;ndash;வி.ஐ.டி. உயர்மட்டச் சாலை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நான்கு வழிச்சாலை, சத்துவாச்சாரி பகுதியையும், வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள காங்கேயநல்லூர் பகுதியையும் நேரடியாக இணைக்கிறது. இதன் மூலம் வேலூர்&amp;ndash;காட்பாடி இடையேயான போக்குவரத்து இணைப்பு மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காட்பாடி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காட்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக பழைய காட்பாடி சாலையில் அதிகளவில் இயக்கப்படும் கனரக வாகனங்கள் இருந்து வந்தன. குறிப்பாக லாரிகள், டிப்பர் லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகள் தொடர்ந்து செல்வதால், முக்கிய சந்திப்புகள் மற்றும் ரவுண்டானா பகுதிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய உயர்மட்டச் சாலை பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், கனரக வாகனங்கள் பழைய காட்பாடி சாலைக்குள் செல்லாமல் நேரடியாக தேசிய நெடுஞ்சாலையை சென்றடைய முடியும். இதனால் பழைய சாலையில் வாகனங்களின் அழுத்தம் குறைவதுடன், கிரீன் சர்க்கிள் ரவுண்டானா பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வேலூர்&amp;ndash;காட்பாடி பயண நேரமும் குறையும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய சாலை திறக்கப்பட்டுள்ளதால் காட்பாடி, சத்துவாச்சாரி மற்றும் வேலூர் பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்து இணைப்பு எளிதாகியுள்ளது. குறிப்பாக காட்பாடி மற்றும் வேலூர் இடையே தினசரி பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த புதிய பாதை பயனுள்ளதாக இருக்கும். பழைய வழித்தடத்தை ஒப்பிடும்போது குறுகிய மற்றும் நேரடியான இணைப்பை வழங்குவதால் பயண நேரமும் குறைய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;475 மீட்டர் நீளத்தில் பிரம்மாண்ட நான்கு வழிப்பாலம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக பாலாற்றின் குறுக்கே 475 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட நான்கு வழி உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மையப்பகுதியில் 2.5 மீட்டர் அகலத்தில் மையத் தடுப்பு மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு திசைகளிலும் வாகனங்கள் சீராகச் செல்லும் வகையில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாலாற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் காலங்களில் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையிலும் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய காட்பாடி மேம்பாலங்களுடன் ஒப்பிடும்போது, புதிய பாலம் ஆற்றுப்படுகையிலிருந்து சுமார் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ள காலங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;2 சிறிய பாலங்கள், 20 சிறுபாலங்கள் அமைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உயர்மட்டச் சாலை திட்டத்தின் கீழ் முக்கிய உயர்மட்டப் பாலத்துடன் 2 சிறிய பாலங்களும், 20 சிறுபாலங்களும் (Culverts) அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் தண்ணீர் முறையாக வெளியேறும் வகையில் நீர்வழிப் பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சாலையின் நீடித்த பயன்பாட்டுக்கும் பாதுகாப்பான போக்குவரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தினமும் 17,250 வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்ப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த புதிய வழித்தடத்தை தினமும் சுமார் 17,250 வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்களும், வேலூர்&amp;ndash;காட்பாடி பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும் வாகனங்களும் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பழைய காட்பாடி சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து, போக்குவரத்து சீராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இரவு நேர பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலையின் முக்கிய பகுதிகளில் ஒளிரும் பட்டைகள், பிளிங்கர் விளக்குகள் மற்றும் பாதசாரிகளுக்கான கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், வாகனங்கள் சாலையின் எல்லையை விட்டு விலகிச் சென்று விபத்தில் சிக்குவதைத் தடுக்கும் வகையில் சாலையின் இறுதிப் பகுதிகளை பலப்படுத்தும் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வேலூர் போக்குவரத்து கட்டமைப்பில் முக்கிய மாற்றம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சத்துவாச்சாரி&amp;ndash;வி.ஐ.டி. உயர்மட்டச் சாலை திறக்கப்பட்டிருப்பது வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளின் போக்குவரத்து கட்டமைப்பில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாக பார்க்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையுடன் நேரடி இணைப்பு, கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை, பாலாற்றைக் கடக்கும் உயர்மட்டப் பாலம் மற்றும் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், நீண்டகாலமாக நிலவி வந்த காட்பாடி போக்குவரத்து நெரிசலுக்கு இந்த புதிய சாலை குறிப்பிடத்தக்க தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/25/76e5895b24fce232c824bc9cd4b0cac717876401947231319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் நிச்சயம்! - வேலூர் ஆதி பச்சையம்மன் கோவிலின் மகிமை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/sri-aadhi-pachaiamman-thirukkovil-vellore-palathuvannan-remedies-benefits-271962</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/sri-aadhi-pachaiamman-thirukkovil-vellore-palathuvannan-remedies-benefits-271962#respond</comments><pubDate>Fri, 21 Aug 2026 17:53:35 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/sri-aadhi-pachaiamman-thirukkovil-vellore-palathuvannan-remedies-benefits-271962</guid><description><![CDATA[&lt;p&gt;வேலூர்: வேலூர் மாவட்டம், பாலத்துவண்ணன் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி பச்சையம்மன் திருக்கோவில், பக்தர்களின் துயர் தீர்க்கும் பிரசித்தி பெற்ற ஆன்மீக மையமாகத் திகழ்ந்து வருகிறது. தென் ஆற்காடு மற்றும் தொண்டை மண்டலப் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற இக்கோவிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;வேலூர் மாவட்டம், பாலத்துவண்ணன் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி பச்சையம்மன் திருக்கோவில், பக்தர்களின் துயர் தீர்க்கும் பிரசித்தி பெற்ற ஆன்மீக மையமாகத் திகழ்ந்து வருகிறது. தென் ஆற்காடு மற்றும் தொண்டை மண்டலப் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற இக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;தல வரலாறு மற்றும் பின்னணி:&lt;/h2&gt;
&lt;p&gt;சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற அன்னை பார்வதி தேவி காஞ்சிபுரத்தில் தவமிருந்தபோது, அவருக்குக் காவலாகவும் துணையாகவும் பச்சை நிற உருவெடுத்து நின்ற வடிவமே &amp;lsquo;ஆதி பச்சையம்மன்&amp;rsquo; என்று ஆகம நூல்கள் கூறுகின்றன. இக்கோவிலில் அன்னை பச்சையம்மனுடன் மன்னார்சாமி, வாழைப்பந்தல் முனீஸ்வரர், செம்படத்து முனி உள்ளிட்ட சப்த முனீஸ்வரர்களும், அக்னி வீரர்களும் காவல் தெய்வங்களாக வீற்றிருந்து பக்தர்களைக் காத்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;சிறப்புப் பரிகாரங்கள் மற்றும் பலன்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;இக்கோவிலில் செய்யப்படும் சிறப்புப் பரிகாரங்களுக்கு உடனடியாகப் பலன் கிடைப்பதாகப் பக்தர்கள் பரவசத்துடன் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;திருமணத் தடை நீங்க: வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்குப் பச்சை நிறப் புடவை சாத்தி, எலுமிச்சம்பழ மாலையிட்டு வழிபடுபவர்களுக்குத் தடைப்பட்ட திருமணங்கள் விரைந்து கைகூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;குழந்தைப் பாக்கியம் பெற: மகப்பேறு இல்லாத தம்பதியர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, கோவில் வளாகத்தில் தொட்டில் கட்டிப் பிரார்த்தித்தால் விரைவில் நன்மக்கட்பேறு கிடைக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;தோஷ நிவர்த்தி &amp;amp; தீய சக்தி அகல: செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அம்மனுக்கும் முனீஸ்வரருக்கும் விளக்கேற்றி வழிபடச் செவ்வாய் தோஷம் விலகும். மேலும், மாலை வேளையில் வேப்பிலை மற்றும் எலுமிச்சை வைத்து வழிபடப் பில்லி, சூனியம் மற்றும் தீய சக்திகளின் பயம் முற்றிலுமாக அகலும்.&lt;/p&gt;
&lt;h2&gt;தரிசன நேரம் மற்றும் திருவிழாக்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;கோவில் நடை தினமும் காலை 06:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 04:30 மணி முதல் இரவு 08:00 மணி வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் பௌர்ணமி நாட்களில் நாள் முழுவதும் சிறப்புத் தரிசனம் நடைபெறுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;குறிப்பாக ஆடி மாதம் முழுவதும் கூழ் வார்த்தல், பால்குடம் எடுத்தல் மற்றும் தீமிதி திருவிழாக்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. வாழ்க்கையில் சந்திக்கும் தடைகள் நீங்கி, அமைதியும் செல்வமும் பெற பாலத்துவண்ணன் ஸ்ரீ ஆதி பச்சையம்மனைத் தரிசித்து அருள் பெறலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/21/17a2083188c3beaebb050d2286d34c1c1787314943429194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[“இனியும் தாமதித்தால் டெல்டா பாலைவனமாகும்” - மேகதாது விவகாரத்தில் சிஎம் விஜய்க்கு துரைமுருகன் கொடுத்த எச்சரிக்கை]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/duraimurugan-warns-tamil-nadu-chief-minister-karnataka-mekedatu-dam-issue-269410</link><comments>https://tamil.abplive.com/news/vellore/duraimurugan-warns-tamil-nadu-chief-minister-karnataka-mekedatu-dam-issue-269410#respond</comments><pubDate>Wed, 29 Jul 2026 11:55:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/duraimurugan-warns-tamil-nadu-chief-minister-karnataka-mekedatu-dam-issue-269410</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது பெரும் ஆபத்தானது என்று முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுசெயலாளருமான &amp;nbsp;துரைமுருகன் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதுதொடர்பாக வேலூர் மாவட்டம், காட்பாடியில் தனது இல்லத்தில் திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், &amp;ldquo;மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் நீர்வளதுறையிடம் கேள்விகளை கேட்டார். அதற்கு நீர் வளத்துறை இணை அமைச்சர் அளித்த பதிலை கண்டு எனக்கு அதிர்ச்சியானது. காரணம் உச்சநீதிமன்ற தீர்ப்பு காவிரியின் கடைமடை மாநிலங்களான தமிழ்நாடு, பாண்டிச்சேரியிடம் ஆலோசிக்காமல் எந்த நீர்தேக்கத்தையும் அமைக்க முடியாது என திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. ஆனால் வேண்டுமென்றே மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அப்படி எந்த தடையும் ஆலோசனையும் பெற வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பில் இல்லை என கூறுவது அபத்தமானது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/E_dz9OOE9Fo?si=m_F4yvj6mXa4Hw0T&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துங்க&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஒரு மத்திய அமைச்சருக்கு இது கூடவா தெரியாமல் போய்விடும் இது ஆபத்தானது. எனவே தமிழக அரசு மேகதாது அணை விவகாரத்தில் உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரையும் கூட்டி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி டெல்லியில் உள்ள நீர் வளத்துறை அமைச்சரையும் பிரதமரையும் சந்திக்க வேண்டும். தமிழக முதல்வர் கர்நாடகா சென்று மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது பெரும் ஆபத்தை உருவாக்கும். நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதமாக இருக்கும்போது நாம் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த கூடாது. கர்நாடகாவில் மேகதாது அணை காவிரி நீர் பிரச்சனையில் எல்லா கட்சிகளும் ஒன்று பட்டு நிற்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதே போல் தமிழகத்திலும் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ஏற்கனவே கடை மடை எல்லாம் காய்ந்து பயிர்கள் கருகி போய் உள்ளன காவிரியில் அவர்கள் தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பதை கர்நாடகா தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ளும். எனவே சட்டவல்லுநர்களையும் தமிழக அரசு கலந்தாலோசிக்க வேண்டும். திமுக ஆட்சியில் இருந்த போதெல்லாம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி டெல்லி சென்றோம். அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூட இதற்காக உண்ணாவிரதம் இருந்தார். இந்த விவகாரத்தில் கொந்தளிக்க வேண்டிய தமிழக அரசு அமைதியாக உள்ளது. மேகதாது விவகாரத்தை காரணம் காட்டி கர்நாடகாவில் கன்னடர்கள் போராட்டம் நடத்துவதால் அங்குள்ள தமிழர்கள் நிலை என்ன ஆகும் என தெரியவில்லை.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;நாங்கள் தீய சக்தி என்பதால் கேட்கவில்லை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நீர் வளத்துறையை நான் கவனித்து வந்தேன் என்பதால் பொறுக்க முடியாமல் உங்களை சந்தித்து இதனை கூறுகிறேன். சட்டபூர்வமாக பெற்ற உரிமை பறிபோய்விடுமோ என்ற நிலை உள்ளது. முதல்வரோ இந்த விவகாரத்தில் எல்லோரிடமும்&amp;nbsp; ஆலோசனை கேட்பதாக கூறுகிறார். ஆனால் எங்களிடம் கேட்கவில்லை நாங்கள் தீய சக்தி என்பதால் கேட்கவில்லை போலும் இனியும் காலதாமதம் செய்தால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் மத்திய சர்காருடன் ஒத்து போகிறேன் என தமிழக முதல்வர் சொல்கிறார். அப்போது இந்த மேகதாது விவகாரத்தை மத்திய அரசுடன் தமிழக முதல்வர் பேச வேண்டியதுதானே இது கட்சி பிரச்சனை அல்ல, ஒட்டுமொத்த எல்லா கட்சி நண்பர்களுடன் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழகத்தை திசை திருப்பதான் மத்திய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் கொடுத்த அறிக்கையே தவறு உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி மத்திய இணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்புரிமை வழங்கப்பட்டது தமிழகத்திற்கு அவ்வாறு தவறான அறிக்கையை வெளியிட்ட மத்திய இணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோர வேண்டும். ஆனால் ஆளுங்கட்சி திட்டினாலும் பரவாயில்லை காவிரி பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான் கர்நாடகாவுக்கு மேகதாது பிரச்சணை குறித்து பேச சென்றதும் &amp;nbsp;அப்போது நீதிமன்றத்தில் தீர்ப்பில்லை. ஆனால் இப்போது தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துவிட்டது. பிறகு எதற்காக தமிழக முதல்வர் கர்நாடகாவுக்கு பேச்சுவார்த்தை செல்ல வேண்டும். &amp;nbsp;தமிழக முதல்வர் அனுபவம் வாய்ந்தவர்களுடன் கலந்தாலோசிப்பதாக கூறியுள்ளார். ஆனால் எங்களை கலந்தாலோசிக்கவில்லை, என்னை கலந்தாலோசிக்கவில்லை, நான் தீய சக்தியின் பொதுச்செயலாளர், என்னை அழைப்பாரா?.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;இதைவிட கேவலம் எதுவுமில்லை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது பாடப்பட்டது அவமானமாகும். இதைவிட கேவலம் வேறு எதுவுமில்லை. &amp;nbsp;நமது பாடலை கூட பாட அவர்கள் தீர்மானிக்கிறார்கள். இதனை வேறு விதமாக கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இதனை அரசாங்கம் விட்டு கொடுக்காமல் பயங்கரமாக எதிர்க்க வேண்டும். தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லையில் நிறுத்தபடுகிறது தமிழன் என்ன கதி ஆவானோ என வயிறு எரிகிறது. சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை தாக்கிய விவகாரத்தில் முதல்வர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டராக உள்ள சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினரே அடிமட்ட வேலையை செய்கிறார்&amp;rdquo; எனக் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/29/5a7c2ca1e9f28b6bc028e3781bc4e3941785305824923113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கோபாலபுரம் சென்று கலைஞர் தலையை வெட்டுவேன் சொன்ன கிருஷ்ணசாமி! கலைஞர் கொடுத்த மாஸ் ரிப்ளை!]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/dmk-general-secretary-duraimurugan-chief-minister-breakfast-scheme-name-change-268684</link><comments>https://tamil.abplive.com/news/vellore/dmk-general-secretary-duraimurugan-chief-minister-breakfast-scheme-name-change-268684#respond</comments><pubDate>Thu, 23 Jul 2026 09:34:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/dmk-general-secretary-duraimurugan-chief-minister-breakfast-scheme-name-change-268684</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதை விட்டுவிட்டு ,நாட்டு நலனில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த திமுக தலைமை கழக பேச்சாளரும் மாவட்ட பிரதிநிதியுமான கழிஞ்சூர் கண்ணன் உடல் நலக்குறைவால் கடந்த 17ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இந்த நிலையில் கழிஞ்சூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரித்து திருவுருவப்படத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மலர் தூவி மரியாதை செய்ததுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/da7whFYRDkE?si=VnUbv9OHfBVAZr_0&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பெயர் மாற்றிக் கொண்டே இருந்தால்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, &amp;ldquo;காமராஜர் கொண்டு வந்தது மத்திய உணவு திட்டம் அதற்கு பெயரிட்டாலும் பரவாயில்லை, எம்ஜிஆர் அவர்கள் அதை விரிவு படுத்தினார். அவர் பெயர் வைத்தாலும் பரவாயில்லை. காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் முதல்வராக இருந்த மு.க.&lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt;. அந்தப் பெயரை மாற்றுவதில் ஒரு முதலமைச்சர் ஈடுபடுவது முறையல்ல இப்படிப்பட்ட விஷயங்களில் அவர் கவனம் செலுத்துவதை விட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி என்பதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு தெரியாவிட்டாலும் பக்கத்தில் உள்ள அதிகாரிகள் அவருக்கு தெரிவிக்க வேண்டும். அதுதான் நல்லதே தவிர, பெயர் மாற்றிக் கொண்டே இருப்பது விரும்பத்தக்கது அல்ல.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/23/769266246b576fd050039bc0644e7b421784779415005113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;அம்மா உணவகத்தை மாற்றியிருக்கலாம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஜெயலலிதா படம் போட்ட பைகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இருந்தது. இதை மாற்ற வேண்டுமா என கேட்டபோது தேவையில்லை. அரசாங்கத்தின் பணத்தில் தான் அடிக்கப்பட்டது. அதனால் அதே படத்துடன் இருக்கட்டும் என்று தான் தளபதி தெரிவித்தார். அந்த பெருந்தன்மை தற்போது உள்ள முதலமைச்சருக்கு வரவேண்டும். அம்மா உணவகம் என்று அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தார்கள். நாங்கள் நினைத்திருந்தால் அதை மாற்றி இருக்க முடியும். ஆனாலும் தேவையில்லை ஒரு முதலமைச்சர் ஆரம்பித்திருக்கிறார். அப்படியே இருக்கட்டும் என்று நாங்கள் பெருந்தன்மையாக இருந்தோம்.&amp;nbsp;திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு அரசியல் கட்சி நீண்ட நெடுங்காலம் பாரம்பரியம் உள்ள ஒரு கட்சி இதனால் சில நீக்கு போக்குகள் தெரியும். ஆனால் தற்போது உள்ள கட்சி ஒரு ரெடிமேட். அதனால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;டெல்லியில் நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, &amp;ldquo;எப்போதுமே தண்ணீர் இல்லை என கர்நாடகா அரசு சொல்லுவார்கள். தண்ணீர் முழுவதுமாக நிரம்பி டேம் உடையும் நிலைமையில் இருந்தால் மட்டுமே தண்ணீர் விடுவார்கள். இவை எல்லாம் எனக்கு கேட்டு கேட்டு புளித்துப்போன சப்ஜெக்ட்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;முதல்வரை அவதூறாக பேசுகிறார்கள் என்று கைது நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு, &amp;ldquo;எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது மதியழகன் உடைய தம்பி கிருஷ்ணசாமி பொதுக்கூட்டத்தில் பகிரகங்கமாக எம்ஜிஆர் ஆணையிட்டால் நான் நேராக கோபாலபுரம் சென்று கருணாநிதி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து மேஜை மேலே வைப்பேன் என்று கூறினார். இதற்கு கலைஞர் தலையை வெட்டுவேன் என கூறியிருக்க மாட்டார், கிராப் வெட்டுவேன் என கூறி இருப்பார்&amp;rdquo; என நகைச்சுவையாக பேசினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tvs-scooty-ntorq-125-how-many-kilometers-per-liter-266815&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/23/9c0211e74153b74d2e9dd3cc585cfdd31784779007256113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[டிக்கெட் காசு வேஸ்ட்! ஏலகிரிக்கு போறீங்களா? இதைப் பார்த்துட்டுப் போங்க]]></title><link>https://tamil.abplive.com/news/vellore/yelagiri-malai-kodai-vizha-tourists-disappointed-missing-exhibitions-268001</link><comments>https://tamil.abplive.com/news/vellore/yelagiri-malai-kodai-vizha-tourists-disappointed-missing-exhibitions-268001#respond</comments><pubDate>Sat, 18 Jul 2026 13:31:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/yelagiri-malai-kodai-vizha-tourists-disappointed-missing-exhibitions-268001</guid><description><![CDATA[&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;திருப்பத்தூர்:&lt;/strong&gt; ஏலகிரி மலையில் நடைபெற்ற கோடை விழாவில் மலர்கள் கண்காட்சி, பழங்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் புலம்பியபடி வீடு திரும்பினார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் சுற்றுலாத்தலமான ஏலகிரி மலை அமைந்துள்ளது. இந்த ஏலகிரி மலைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சுற்றுலாபயணிகளும் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/2TP9RX3psvI?si=J8BT3IjjIc0TSR1-&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை நாட்களில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த கோடை விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்டம் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்வார்கள். மேலும், கோடை விழாவின்போது மலர்கள் கண்காட்சி, பழங்கள் கண்காட்சி பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கோடை &amp;nbsp;விடுமுறையில் கோடை விழா நடைபெறாத காரணத்தால் இன்று மற்றும் நாளை கோடை விழா நடைபெற உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/18/df10c651ea09d900a51adb100f6b779b1784361550296113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், இன்று நடைபெற்ற கோடை விழாவில் மலர் கண்காட்சி மற்றும் மலைகளில் விளையாடக்கூடிய பல்வேறு வகையான பழங்களின் கண்காட்சி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெறாததால் கோடை விழாவிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும், இந்த ஆண்டு கோடைவிழா போல் இல்லை என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் புலம்பியபடி ஏமாற்றத்துடன் வீடு திரும்பி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/18/435fb627b03d0d806e30fe56c2efda211784361443027113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு செக் வைக்கத் திருமாவளவன் மாஸ் ஐடியா - 'முதலமைச்சரே உடனே கூட்டுங்க']]></title><link>https://tamil.abplive.com/news/vellore/thirumavalavan-says-mekedatu-dam-issue-all-party-meeting-tamil-nadu-government-264647</link><comments>https://tamil.abplive.com/news/vellore/thirumavalavan-says-mekedatu-dam-issue-all-party-meeting-tamil-nadu-government-264647#respond</comments><pubDate>Sun, 21 Jun 2026 14:25:08 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ வேலூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/vellore/thirumavalavan-says-mekedatu-dam-issue-all-party-meeting-tamil-nadu-government-264647</guid><description><![CDATA[&lt;p&gt;மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் அடுத்தகட்ட நகர்வுக்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு இன்னும் அதிக அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், &amp;ldquo;விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா ஜுலை 5 ஆம் தேதி சென்னையில் வழங்கவுள்ளோம். அந்த விழாவில் விசிகவினர் பெருவாரியாக பங்கேற்க வேண்டும். ஆகஸ்ட் 17 என்னுடைய பிறந்த நாள் தமிழர் எழுச்சி நாளாக நடக்கிறது. மே 17 நடக்கவிருந்த தமிழ் தேசிய மாநாடு ஆகஸ்ட் 17 அன்று நடக்கும் இடம் முடிவு செய்ய இருக்கிறோம். மண்டல வாரியாக மாநாட்டிற்காக முன்னணி பொறுப்பாளர்களை சந்திக்கவுள்ளேன்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/sy7rIyVokWE?si=AzC8lEaGlgk55lkJ&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;விசிக, &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; ஆட்சி அமைக்க ஆதரவு அளித்து அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் எதிர்கால அரசியல் குறித்து உயர்நிலை கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கவுள்ளோம். விசிக மதச்சார்பின்மையை பாதுகாப்பதில் உண்மையாக இருக்கிறது. தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt; பாஜகவிலிருந்து வெளியேறி அனுமதி பெற்று ஒரு இயக்கத்தை துவங்குகிறார். அவர் பாஜகவிலிருந்து வெளியேறுவது என்றால் செய்தியாளர்களுக்கு அறிவிப்பு செய்தால்போதும், ஆனால் அரசு அதிகாரி போல் பாஜகவுக்கு விலகல் கடிதம் கொடுத்து அனுமதி பெற்று அதன் பின்னர் புதிய இயக்கம் துவங்குகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டியது மதவாத அரசியல். எந்த அவதாரம் எடுத்தாலும் தமிழக மக்கள் கண்டுகொள்வார்கள்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, &amp;ldquo;சட்டமன்றத்தில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேகதாதுவில் அணைக்கட்ட இந்திய ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது என முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். அதனை உறுதிபடுத்தவே சட்டமன்ற தீர்மானம் மேகதாதுவில் அனைகட்டினால் தமிழகம் எந்த வகையில் பாதிக்கபடுவார்கள் விவசாயிகளும் மக்களும் கால்நடைகளும் எவ்வாறு பாதிக்கப்படும் என கவலை மேலோங்கி உள்ளது. அனைத்து கட்சிகளும் எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இதில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அனைத்து கட்சி கூட்டம் அவசியமானது. எனவே விசிகவும் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டுமென முதல்வருக்கு விசிக வேண்டுகோள் விடுக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளது. இதுதான் கடந்த கால வரலாறு. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாடு காங்கிரஸ் தமிழக மக்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பார்கள். பாலியல் கொடுமைகள், பெண்கள், சிறுமிகள் தொடர்பான விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்ற பொறுப்புணர்வு முதல்வருக்கு இருக்கிறது என்பதை உறுதிபடுத்துவதுதான் சிங்கபெண் திட்டம். எனவே இதனை ஒட்டி அவர் தீவிரமாக வல்லுநர்களுடன் கலந்துபேசி தடுப்பு நடவடிக்கைகளை செய்வார். நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி மாடுகளால் தான் சாப்பிட முடியும் என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார் என்றால், மக்களால் அதனை சாப்பிட முடியாததால் மாடுகளுக்கு தீணியாக போடுவதாக சொல்லியுள்ளார். நல்ல அரிசி போடுவது மக்களின் எதிர்பார்ப்பு திமுக அரசு மீது குறை சொல்வதை விட நல்ல அரிசியை அரசு வழங்க வேண்டும்&amp;rdquo; எனக் கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-electric-scooters-with-200-km-range-know-price-details-264203&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/21/655b3ee6e92e06fa3d40a5015143edfd1782031910200113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தீர்மானத்தால் கர்நாடகா பணியாது! மேகதாது விவகாரத்தில் துரைமுருகன் எச்சரிக்கை - தமிழகத்தின் அடுத்தகட்ட மூவ் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mekedatu-dam-issue-duraimurugan-talk-about-resolution-in-tn-assembly-264507</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mekedatu-dam-issue-duraimurugan-talk-about-resolution-in-tn-assembly-264507#respond</comments><pubDate>Sat, 20 Jun 2026 11:01:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mekedatu-dam-issue-duraimurugan-talk-about-resolution-in-tn-assembly-264507</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;ldquo;இப்படிப்பட்ட தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது&amp;rdquo; &amp;nbsp;என்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருவது குறித்தும் இது தொடர்பாக அம் மாநில முதலமைச்சர் சிவக்குமார் தொடர்ந்து பேசி வரும் நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; மேகதாது விவகாரம் தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றினார். இவ்விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து முன்னாள் நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/GE7C3AMBwwE?si=5-0CNxHGbpOFEVxl&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;கர்நாடகா பணியாது&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அப்போது அவர் பேசுகையில், &amp;ldquo;இப்படிப்பட்ட தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது. அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு பேசினாலும் அவர்கள் மேகதாதுவை கட்ட வேண்டும் என்று தான் பேசுவார்கள். நான் கிருஷ்ணா முதல் கொண்டு 6, 7 முதலமைச்சர்களிடமும் பேசி உள்ளேன். தலைவர் கலைஞர் அவர்களும் பேசியிருக்கிறார். ஆகையால் எல்லோரும் ஒரே மாதிரி தான் பேசுவார்கள். ஆகையால் அணையை கட்டினால் இப்போது வருகிற தண்ணீர் கூட வராது. அணை கட்டினால் அணை நிரம்பி வெளியேறும் நீர் மட்டுமே நமக்கு வரும். இவர்கள் திருப்திகரமாக எப்போது திறப்பார்கள் என்று கேட்டால் அவர்களுக்கு எப்போது வெள்ளம் வருகிறதோ அப்போதுதான் திறப்பார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;ஒட்டுமொத்த தமிழகம் எதிர்க்க வேண்டும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஆகையால் தீர்மானத்தை வரவேற்கிறேன் அது மட்டும் போதாது தமிழகமே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறது என்பதை உணர்த்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மேலும், எந்த கூட்டம் கூட்டினாலும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் இதனுடைய உரிமை உச்ச நீதிமன்றத்தில் தான் உள்ளது. இது நமது வாழ்வாதார பிரச்சனை எந்தவிதமான கட்சி மனமாற்றங்களும் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தால்தான் பாதுகாக்க முடியும். கர்நாடகாவில் கட்சிகள் மோதிக் கொள்வதில்லை. இங்குதான் மோதிக் கொள்ளும் காட்சி உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் இதனை எதிர்க்க வேண்டும். அதை செய்வார்கள் என கருதுகிறேன்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;அனைத்து கட்சி கூட்டம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேகதாது தொடர்பாக படிப்படியாக அனைத்தும் எனக்கு தெரியும்.என்னோட, எங்களோட ரத்தத்தோடு கலந்து இருக்கிற சப்ஜெக்ட் இது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது தவறு இல்லை. அனைத்து கட்சி கூட்டத்தை இவர்கள் கூட்ட வேண்டும் அப்போதுதான் தீர்வு கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் உச்சநீதிமன்றத்தில் சரியான வழக்கறிஞர்களை வைத்து தீர்க்கமாக வாதாட வேண்டும். சரியான வழக்கறிஞர்களை வைத்து வைத்து சரியாக வாதாடி, சரியான நேரத்தில் மத்திய அரசிற்கு கிடுக்கு பிடி போட்டால் ஒழிய நம்மால் இதை சமாளிக்க முடியாது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பேச்சுவார்த்தை எல்லாம் வேண்டாம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கர்நாடகா திட்டம் போட்டு மத்திய அரசிற்கு அனுப்புவது இது முதல் முறை அல்ல இரண்டு மூன்று முறை பிளான் போட்டு மத்திய நீர்வளத் துறைக்கு அனுப்பினார்கள். ஆகையால் தீர்மானம் போட்டு வந்தாலும் கர்நாடகா &amp;nbsp;ஆறு ,ஏழு கட்டங்களை தாண்டி வரணும். அதற்குள் அதனை தடுக்கணும். ஆகையால் ஒரு ஆர்வத்தோடு புதிதாக வந்திருக்கிற என்னுடைய மதிப்புக்குரிய நண்பர் சிவகுமார் இதிலே முந்தி இருக்கிறார். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது சரியானது அல்ல. கோர்ட் முடிவுக்கு பிறகு எப்படி பேச்சு வார்த்தை நடத்த முடியும். ஆகையால் பேச்சுவார்த்தைக்கு ஈடுபட்டால் நமக்கு இழப்பு தான் ஏற்படும்.&lt;br /&gt;ஒரு முறை இல்ல 36 ,37 முறை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்&amp;rdquo; எனக் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-electric-scooters-with-200-km-range-know-price-details-264203&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/20/931fadd9d1b8d4f332640694b7d52c621781933089006113_original.jpg" width="220"/></item></channel></rss>