திருச்சி கண்டோன்மென்ட் எஸ்.பி.ஐ காலனி பகுதியில் கடந்த 15ஆம் தேதி நவீன இறகுபந்து உள் விளையாட்டு அரங்கத்தை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் திருச்சி சிவா எம்.பி அவர், இல்லத்தை தாண்டி தான் செல்லவேண்டும். இந்நிலையில் நிகழ்ச்சியில் வைக்கபட்ட கல்வெட்டு, பேனர்களில் திருச்சி சிவா பெயர் இடம் பெறவில்லை என அவருடைய ஆதரவாளர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியும், வீட்டில் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகன மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இதனை தொடர்ந்து கருப்புக்கொடி காட்டிய 10க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் பிடித்து திருச்சி அமர் நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.




இதனை தொடர்ந்து  காவல் நிலையத்திற்குள் புகுந்து திருச்சி சிவா எம்.பி ஆதரவாளர்களை அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தாக்கினர். இதில் பெண் காவலர் தாக்கபட்டு அருகில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவம்  குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்கள் வைரலாக பரவியது. இதனையடுத்து தாக்குதலில் நடத்திய அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.




இதனை தொடர்ந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், முன்னாள் மாவட்ட பொருளாளர் துரைராஜ், 55 ஆவது முன்னாள்  வட்ட செயலாளர் ராமதாஸ் மற்றும் முன்னாள் பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகிய 5 பேருக்கு ஜாமின் மனு திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2ல்,  2 -வது முறையாக  (23.03.2023) தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி பாலாஜி தள்ளுபடி செய்தார். இதை தொடர்ந்து 5 பேருக்கு ஜாமீன் பெற அவர்களது, வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாபு, ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண