மேலும் அறிய

துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?

கனரக லாரிகள், சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் இந்தச் சாலையை பயன்படுத்துகின்றன.

திருச்சி: திருச்சி மாவட்டத்தின் மிக முக்கியமான மாநில நெடுஞ்சாலைகளில் ஒன்றாக விளங்கும் துறையூர் – முசிறி மாநில நெடுஞ்சாலை (SH-30) நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடர் விபத்துகளால் உயிர்பலி சாலையாக மாறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சுமார் 28 கிலோமீட்டர் நீளமுடைய இந்த சாலையை உடனடியாக அகலப்படுத்தி, பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வலுத்து வருகிறது. திருச்சி மாவட்டத்தை மேற்குத் தமிழக மாவட்டங்களுடனும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளுடனும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக இந்தச் சாலை விளங்கி வருகிறது. இதனால், கனரக லாரிகள், சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் இந்தச் சாலையை பயன்படுத்துகின்றன.

24 மணி நேரமும் கனரக வாகன போக்குவரத்து

துறையூர் – முசிறி சாலையில் பகல், இரவு பாராமல் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் அதிக அளவில் இயங்குவதால், சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

ஆனால், தற்போது இந்தச் சாலையின் அகலம் வெறும் 7 மீட்டர் மட்டுமே இருப்பதால், எதிரெதிரே வரும் கனரக வாகனங்கள் பாதுகாப்பாக கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதுவே விபத்துகளுக்கான முக்கிய காரணமாக இருப்பதாக சாலைப் பாதுகாப்பு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

10 மீட்டர் அகலப்படுத்த வேண்டும்

துறையூரைச் சேர்ந்த சாலைப் பாதுகாப்பு ஆர்வலர் என். சரவணன் கூறுகையில், "இப்போதைய போக்குவரத்து அளவுக்கு 7 மீட்டர் அகலமுள்ள சாலை போதுமானதாக இல்லை. இருபுறமும் தார் பூசப்பட்ட ஓரங்களுடன் குறைந்தபட்சம் 10 மீட்டர் அகலத்திற்கு சாலையை விரிவுபடுத்தினால்தான் விபத்துகளை குறைக்க முடியும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

அதிர்ச்சி ஏற்படுத்திய ஜம்புநாதபுரம் விபத்து

இந்தச் சாலையில் அண்மைக்காலமாக பல உயிரிழப்பு விபத்துகள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக, ஜம்புநாதபுரம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது, மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கு பிறகும் நிரந்தர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே போதுமா?

ஒவ்வொரு விபத்துக்கும் பிறகும் அதிகாரிகள் சாலையின் நடுவில் தடுப்புகள் அமைப்பது, வேகத்தடைகள் அமைப்பது போன்ற தற்காலிக நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் விபத்துகளை நிரந்தரமாகத் தடுக்க உதவுவதில்லை. சாலையை முழுமையாக விரிவுபடுத்தி, ஆபத்தான பகுதிகளை சீரமைப்பதே ஒரே தீர்வு என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சேதமடைந்த சாலை... குலுங்கும் வாகனங்கள்

சாலையின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒட்டு வேலைகள் (Patch Work) தரமற்ற நிலையில் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக கண்ணனூர் முதல் கண்ணனூர்பாளையம் வரையிலான சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஆபத்தான வளைவுகளும் குறுகிய பாலமும்

கண்ணனூர்பாளையம் – பொன்னுசங்கம்பட்டி இடையே உள்ள குறுகிய பாலமும், ஐத்தம்பட்டி பகுதியில் உள்ள அபாயகரமான வளைவும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வளைவை நேராக்குவதும், குறுகிய பாலத்தை விரிவுபடுத்துவதும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கையாகும்.

மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு

முசிறியைச் சேர்ந்த ஆர். மணிகண்டன் கூறுகையில், "முசிறியும் துறையூரும் வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள். இந்த இரு நகரங்களையும் இணைக்கும் முக்கிய சாலையை அகலப்படுத்துவது பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திட்டம். இனியும் தாமதிக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?

இந்த கோரிக்கை குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலையின் தற்போதைய நிலை, போக்குவரத்து அளவு மற்றும் விபத்து அபாயங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். ஆய்வறிக்கையின் அடிப்படையில் சாலை விரிவாக்கம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உயிர் காக்க உடனடி நடவடிக்கை அவசியம்

துறையூர் – முசிறி நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அவர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் முக்கிய பொறுப்பாகும். எனவே, தற்காலிக தீர்வுகளுக்கு பதிலாக, சாலையை 10 மீட்டர் அகலப்படுத்துதல், குறுகிய பாலங்களை விரிவுபடுத்துதல், ஆபத்தான வளைவுகளை நேராக்குதல் மற்றும் சேதமடைந்த பகுதிகளை தரமாக புதுப்பித்தல் ஆகிய பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே திருச்சி மாவட்ட மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
Embed widget