மேலும் அறிய

திருச்சியில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

திருச்சி மாவட்டத்தில் ரூபாய் 1 லட்சம் , லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே காட்டூர் விண்ணகரில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு மாநகராட்சி, நகராட்சி‌, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட மக்கள் பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சியில் வசித்து வரும் சுப்பிரமணியனின் மகன் அசோக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து அசோக்குமார், அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ய திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, தான் வாங்க இருக்கும் விவசாய நிலத்தை பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் பாஸ்கரனை அணுகியுள்ளார். அப்போது, சார் பதிவாளர் பாஸ்கரன், அந்த நிலத்தை அரசு மதிப்பீட்டின்படி சதுர அடி மதிப்பில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார். மேலும் விவசாய நிலமாக 47(ஏ) படி பத்திரம் பதிவு செய்ய வேண்டுமானால் தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சமாக கொடுத்தால்தான் விவசாய நிலமாக பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.


திருச்சியில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

இதனை தொடர்ந்து  லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின்படி நேற்று சார் பதிவாளர் பாஸ்கரனிடம், ரூ.1 லட்சத்தை அசோக்குமார் வழங்கினார். அந்த பணத்தை பாஸ்கரன் பெற்றபோது, அவரை அங்கு மறைந்திருந்த போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சார் பதிவாளர் பாஸ்கரன் பணியிட மாற்றம் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே திருவெறும்பூர் சார் பதிவாளராக பொறுப்பேற்ற நிலையில், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும், அலுவலகத்தில் அவர் இருக்காமல், அவரது இருக்கையில் வேறு யாரையாவது அமர வைத்துவிட்டு வெளியே சென்றுவிடுவார் என்றும் புகார் கூறப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றால் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்களும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RBI On Kotak Mahindra Bank: ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
Vishal: “வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” -  விஷாலுக்கு என்ன ஆச்சு?
“வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” - விஷாலுக்கு என்ன ஆச்சு?
Exclusive: ”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடிKoovagam Festival 2024 | கட்டிய தாலியை அறுத்து கதறி அழுத திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாKanimozhi Slams Modi | ”மோடிக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு” கடுமையாக சாடிய கனிமொழி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RBI On Kotak Mahindra Bank: ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
Vishal: “வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” -  விஷாலுக்கு என்ன ஆச்சு?
“வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” - விஷாலுக்கு என்ன ஆச்சு?
Exclusive: ”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
Madurai: ஒரே வாரத்தில் சிதிலமடைந்த சாலை ; அவல நிலையால் மக்கள் அதிருப்தி
ஒரே வாரத்தில் சிதிலமடைந்த சாலை ; அவல நிலையால் மக்கள் அதிருப்தி
வீடு கட்டுவதில் பிரச்சினை: மகனை மரத்தில் கட்டி வைத்து அடித்த தந்தை - உயிரிழந்த மகன்
வீடு கட்டுவதில் பிரச்சினை: மகனை மரத்தில் கட்டி வைத்து அடித்த தந்தை - உயிரிழந்த மகன்
Nainar Nagendran: எனக்கு நிறைய பேரை தெரியும் அதுக்காக அது என்னுடைய பணம் ஆகிடுமா? - நயினார் நாகேந்திரன்
எனக்கு நிறைய பேரை தெரியும் அதுக்காக அது என்னுடைய பணம் ஆகிடுமா? - நயினார் நாகேந்திரன்
Tamannaah Bhatia: ஐபிஎல் சட்டவிரோத ஒளிபரப்பு வழக்கு.. சிக்கலில் நடிகை தமன்னா.. சம்மன் அனுப்பிய போலீசார்!
ஐபிஎல் சட்டவிரோத ஒளிபரப்பு வழக்கு.. சிக்கலில் நடிகை தமன்னா.. சம்மன் அனுப்பிய போலீசார்!
Embed widget