நாடு முழுவதும் 1.1.2023-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர் மற்றும் துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டார். அதன்படி தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 10 ஆயிரத்து 413 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 11 லட்சத்து 20 ஆயிரத்து 158 பேரும், பெண்கள் 11 லட்சத்து 89 ஆயிரத்து 933 பேரும் உள்ளனர். மேலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,544 ஆகும். அதிகமான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக ஸ்ரீரங்கம் 3 லட்சத்து ஆயிரத்து 659, குறைவான வாக்காளர் கொண்ட தொகுதியாக லால்குடி 2 லட்சத்து 18 ஆயிரத்து 971 உள்ளது. புதிய வாக்காளர்களாக 43 ஆயிரத்து 423 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு தற்போது நவீன வாக்காளர் அட்டை அச்சிடும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அவர்களுக்கு தபால் மூலம் புதிய வாக்காளர் அட்டை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி: புதிய வாக்காளர்களுக்கு நவீன வாக்காளர் அட்டை தபால் மூலம் அனுப்பும் பணி தீவிரம்
திருச்சி தீபன் | 07 Apr 2023 12:42 PM (IST)
திருச்சி மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு இந்த நவீன வாக்காளர் அட்டை தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
நவீன வாக்காளர் அட்டை
Published at: 07 Apr 2023 12:42 PM (IST)