தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் திருச்சி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திருச்சியில் ரவுடி சுட்டுகொலை செய்தது குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது. ஆகையால் சட்டம்- ஒழுங்கு பாதிக்காத வகையில் குற்றங்களை தடுக்க வேண்டும். ரவுடி ஏன் சுட்டு கொல்லப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவரும் என்றார். 


மேலும், வந்தே பாரத் ரயில் சேவை மிகச் சிறப்பாக உள்ளது. பொதுமக்களுக்கு இந்த ரயில் சேவை மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. ஆகவே வந்தே பாரத் ரயில் சேவை திட்டம் சிறப்பானது என்றார். தமிழக ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்புவது குறித்த கேள்விக்கு, தமிழக ஆளுநர் மசோதாக்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.


திருவண்ணாமலையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் கண்டனத்துக்குரியது. ஆகவே உடனடியாக விவசாயிகள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மேலும் சம்பா சாகுபடியின் போது விவசாயிகளுக்கு உரிய தண்ணீர் கிடைக்காததால் விலக்கு இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே தமிழ்நாடு அரசு வறட்சி மாவட்டமாக அறிவித்து சம்பா சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும். குறிப்பாக விவசாயிகளுக்கு நிதி வழங்குவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதன்படி உரிய முறையில் நிதிகளை வழங்க வேண்டும். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஒரு அணியில் இருக்கிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறுகிறார்கள்.




எங்களைப் பொறுத்தவரை கடந்த பத்து நாட்களாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சி எண் முக்கிய நிர்வாகிகள் மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணி, விவசாய அணி என அனைவரையும் நேரில் சந்தித்து கட்சியை பலப்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளேன்.


நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை அதிமுக கூட்டணி இருக்கக்கூடிய பாமக, தேமுதிக மற்ற கட்சிகள் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான முடிவுகளை எடுக்கவில்லை. எங்களை பொறுத்தவரை தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகு அதிகாரப்பூர்வமாக முடிவுகளை வெளியிடுவோம். அதே சமயம் எதிரணியை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றார். 


தமிழ்நாட்டில் சமீப காலமாக பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் படியில் தொங்கிக் கொண்டு செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அதே சமயம் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று உயிர் பலியும் ஏற்படுகிறது. ஆகையால் மாணவர்களின் நலனில் தமிழ்நாடு அரசு அக்கறை காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கக்கூடிய அனைத்து பேருந்துகளிலும் இருபுறமும் கதவுகளை கட்டாயமாக பொருத்த வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார்.