<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>trichy</title><atom:link href="https://tamil.abplive.com/trichy/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 00:34:39 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/rainwater-drainage-works-worth-9-21-crore-expedited-at-trichy-airport-tnn-270309</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/rainwater-drainage-works-worth-9-21-crore-expedited-at-trichy-airport-tnn-270309#respond</comments><pubDate>Thu, 6 Aug 2026 17:01:35 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/rainwater-drainage-works-worth-9-21-crore-expedited-at-trichy-airport-tnn-270309</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி: விமான சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்தி ஏஏஐ அதிரடி நடவடிக்கை மேற்ொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டின் முக்கிய வான்வழிப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாகவும், சென்னைக்கு அடுத்தபடியாக அதிக சர்வதேசப் பயணிகளைக் கையாளும் இரண்டாவது பெரிய விமான நிலையமாகவும் திகழ்கிறது திருச்சி சர்வதேச விமான நிலையம். தென் கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு தினமும் ஏராளமான சர்வதேச விமானங்கள் திருச்சியிலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/06/a822d1d6f2d4522e4f39432c046c225f1786015557105733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில், வரவிருக்கும் மழைக்காலத்தில் விமான சேவைகள் எவ்வித தடையுமின்றி பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, புதிய உள்கட்டமைப்புத் திட்டத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) முடுக்கிவிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுவாகப் பருவமழைக் காலத்தில் திருச்சி விமான நிலையத்தின் இயக்கப் பகுதியில் (Airside Area) மழைநீர் தேங்குவது பெரும் சவாலாக இருந்து வந்தது. குறிப்பாக, ஓடுதளப் பாதையை (Runway) அடுத்துள்ள இணை டாக்ஸி பாதை (Parallel Taxi Track - PTT-F) மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட ஏப்ரன் (Apron - விமானங்கள் நிறுத்தும் பகுதி) ஆகிய பகுதிகளுக்கு இடையே பெருமளவில் தண்ணீர் தேங்கியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் விமானப் போக்குவரத்தில் தாமதம் ஏற்படுவதுடன், விமான நிலையத்தின் முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடையும் அபாயம் நிலவியது. இந்த நீர் தேங்கும் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், ₹9.21 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மழைநீர் வடிகால் கட்டமைப்புப் பணிகள் தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்திட்டத்தின் கீழ் விமான நிலைய வளாகத்திற்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன்மைப் பணிகள் வருமாறு:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழைநீர் எவ்விதத் தேக்கமுமின்றி உடனடியாக வெளியேறும் வகையில், நீண்டகால உழைப்பைத் தரக்கூடிய நவீன ஆர்.சி.சி வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கனமழை பெய்யும் நேரங்களில் சேகரிப்பாகும் அதிகப்படியான உபரி நீரை, விமான நிலைய எல்லைக்கு வெளியே தடையின்றி விரைவாகக் கொண்டு செல்ல வலுவான கான்கிரீட் பெட்டி வடிவிலான மதகுகள் கட்டப்படுகின்றன. சீரான நீர் ஓட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம், இயக்கப் பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்படும். அதேபோல் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்வது தவிர்க்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் ஜி. கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், &quot;இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் போது மழைநீர் தேங்குவது முற்றிலும் தவிர்க்கப்படும். கனமழை காலங்களிலும் எவ்விதத் தடங்கலுமின்றி விமானங்கள் பாதுகாப்பாக இயங்க இது வழிவகுக்கும்&quot; என்று குறிப்பிட்டுள்ளார். இப்பணிகள் அனைத்தும் அடுத்த 5 மாதங்களுக்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி விமான நிலையம் கடந்த 10 ஆண்டுகளில் அடைந்துள்ள வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வியப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளன. 2014-15 நிதியாண்டில் 9,694 ஆக இருந்த மொத்த விமானங்களின் இயக்கம், 2025-26 நிதியாண்டில் 18,858 ஆக உயர்ந்து 100% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச விமானங்களின் இயக்கம் 7,778-லிருந்து 9,386 ஆக அதிகரித்து 21% வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டு விமானங்களின் இயக்கம் 1,916-லிருந்து 9,472 ஆக உயர்ந்து 394% என்ற பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது திருச்சியிலிருந்து கொழும்பு, சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய் மற்றும் அபுதாபி ஆகிய சர்வதேச நகரங்களுக்குப் பல்வேறு முன்னணி விமான நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வருகின்றன. அதேபோல், உள்நாட்டுப் பிரிவில் சென்னை, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களுக்கும் தொடர்ச்சியான விமானங்கள் இயக்கப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதிவேகமாக அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் விமானப் போக்குவரத்துக்கு ஏற்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது. அந்த வகையில், ₹9.21 கோடியில் மேற்கொள்ளப்படும் இந்த வடிகால் சீரமைப்பு திட்டம் சர்வதேசத் தரத்திலான பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/06/ef2ae99e43cc2423e69ff17535abb6b11786015111293733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/3-575-square-meters-10-000-saplings-a-dense-miyawaki-micro-forest-is-taking-shape-in-trichy-tnn-270210</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/3-575-square-meters-10-000-saplings-a-dense-miyawaki-micro-forest-is-taking-shape-in-trichy-tnn-270210#respond</comments><pubDate>Wed, 5 Aug 2026 17:29:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/3-575-square-meters-10-000-saplings-a-dense-miyawaki-micro-forest-is-taking-shape-in-trichy-tnn-270210</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திருச்சி:&lt;/strong&gt; வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வெப்பத் தாக்கம், காற்று மாசு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கட்டுப்படுத்தவும், நகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் திருச்சி மாநகராட்சி ஒரு அதிரடியான அட்டகாச நடவடிக்கையில் இறங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;ஜப்பானிய தாவரவியல் வல்லுநர் அகிரா மியாவாக்கி உருவாக்கிய முறையை அடிப்படையாகக் கொண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த குறுங்காடுகளை உருவாக்கும் திட்டம்தான் அது. தற்போது திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அதை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/05/cd3217ae65805ae41b995e4a41fac9f51785930999215733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நகரத்தில் சாலைகள், கட்டிடங்கள், வாகனங்கள் என கான்கிரீட் பரப்பு அதிகரித்து வரும் நிலையில், அதற்கு நடுவே பசுமைப் பரப்பை உருவாக்கும் முயற்சியாக மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. &amp;ldquo;நகரம் வளரட்டும்&amp;hellip; மரங்களும் அதே வேகத்தில் வளரட்டும்&amp;rdquo; என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திருவானைக்கோவிலில் புதிய அடர்வனம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாநகராட்சி மண்டலம் 1-க்குட்பட்ட திருவானைக்கோவில் ஸ்ரீராம் நகர் பூங்காவில் சுமார் 3,575 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய மியாவாக்கி குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஒரே கட்டமாக சுமார் 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. வழக்கமாக மரங்களை ஒன்றுக்கு ஒன்று இடைவெளி விட்டு நடும் முறைக்கு மாறாக, மியாவாக்கி முறையில் அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நெருக்கமாக நடப்படுவதால், குறுகிய காலத்திலேயே அடர்த்தியான பசுமைப் பகுதியை உருவாக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், மாநகராட்சி அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;26 வகையான நாட்டு மரங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருவானைக்கோவிலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குறுங்காட்டில் சுமார் 26 வகையான பாரம்பரிய நாட்டு மரக்கன்றுகள் இடம்பெற்றுள்ளன. நிழல் தரும் மரங்கள், பூக்கும் மரங்கள், கனி தரும் மரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதிக பயன் அளிக்கும் மரங்கள் என பல்வேறு வகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேம்பு, புங்கை, இலுப்பை, நாவல் உள்ளிட்ட நாட்டு மரங்கள் இதில் முக்கிய இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் மரங்கள் வளர்வதுடன், எதிர்காலத்தில் பறவைகள், பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கும் வாழ்விடமாக இந்த பகுதி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மரம் நடுவது மட்டும் அல்ல&amp;hellip; பராமரிப்பும் முக்கியம்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மரக்கன்றுகளை நட்டு விட்டு அதன் பிறகு அவற்றை மறந்து விடாமல், அவை முறையாக வளர்வதற்கான பராமரிப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மரக்கன்றுகளுக்கு தேவையான தண்ணீரை சிக்கனமாகவும் சீராகவும் வழங்க சொட்டுநீர்ப் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மரக்கன்றுகளை கால்நடைகள் உள்ளிட்டவற்றால் சேதமடையாமல் பாதுகாக்க வேலி அமைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தனியார் நிறுவனங்களும் கைக்கோர்த்தன&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருவானைக்கோவில் பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த பசுமைத் திட்டத்திற்கு கே.ஆர்.டி மோட்டார்ஸ் மற்றும் ஹீரோ குழுமம் ஆகிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி எனப்படும் CSR நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு அமைப்புகளுடன் தனியார் நிறுவனங்களும் கைகோர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது, நகர்ப்புறங்களில் பசுமைப் பரப்பை விரைவாக அதிகரிக்க உதவும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மியாவாக்கி முறையின் தனிச்சிறப்பு என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஜப்பானிய தாவரவியல் வல்லுநர் அகிரா மியாவாக்கியால் பிரபலப்படுத்தப்பட்ட மியாவாக்கி முறையில், பல்வேறு உள்ளூர் மரவகைகள் அதிக அடர்த்தியில் நடப்படுகின்றன. இயற்கையான காடு உருவாகும் முறையைப் பின்பற்றி மண்ணை மேம்படுத்தி, பல்வேறு வகையான தாவரங்களை இணைத்து வளர்ப்பதே இதன் முக்கிய சிறப்பாகும். வழக்கமான மரக்கன்றுகள் நடும் முறையை விட மியாவாக்கி முறையில் மரங்கள் வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரக்கூடிய சூழல் உருவாக்கப்படுகிறது. இதனால் குறுகிய காலத்திலேயே சிறிய பரப்பளவில் கூட அடர்ந்த பசுமைப் பகுதியை உருவாக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நகர வெப்பத்தை குறைக்க உதவும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோடை காலங்களில் கான்கிரீட் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் அதிகமாக உள்ள நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது. இதனை &amp;lsquo;Urban Heat Island&amp;rsquo; எனப்படும் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு மேலும் தீவிரப்படுத்துகிறது. இந்த நிலையில் அதிக அளவில் மரங்கள் வளர்க்கப்படுவதன் மூலம் நிழல் கிடைப்பதுடன், சுற்றுப்புற வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் காற்றின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். மழைநீர் மண்ணுக்குள் செல்வதற்கும், உள்ளூர் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கும் பசுமைப் பகுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஐந்து மண்டலங்களிலும் விரிவாக்கம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் மியாவாக்கி குறுங்காடுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுப் பூங்காக்கள், சாலையோரப் பகுதிகள், ஆற்றுப்படுகைகள், குளக்கரைகள் உள்ளிட்ட பொருத்தமான இடங்கள் இதற்காக பயன்படுத்தப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2026&amp;ndash;27 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில், இந்த பசுமைத் திட்டத்திற்காக மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மண்டலங்களிலும் தலா 2 பூங்காக்கள் வீதம் மொத்தம் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மியாவாக்கி குறுங்காட்டுக்கும் சுமார் ரூ.1.50 கோடி வரை செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒவ்வொரு இடத்தின் பரப்பளவுக்கு ஏற்ப சுமார் 10,000 மரக்கன்றுகள் வரை நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாளைய திருச்சிக்கு இன்று பசுமை தேவை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொழில்மயமாக்கல், வாகனப் பெருக்கம், கட்டிடங்களின் அதிகரிப்பு என திருச்சி நகரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் வேகம் பெற வேண்டியது அவசியமாகியுள்ளது. ஒரு மரம் வளர்வதற்கு ஆண்டுகள் தேவைப்பட்டாலும், ஒரு நகரத்தின் வெப்பநிலை உயர்வதற்கு சில ஆண்டுகளே போதுமானதாகிவிடும். எனவே, நகர வளர்ச்சியுடன் பசுமை வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாநகராட்சியின் மியாவாக்கி குறுங்காடு திட்டம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டால், எதிர்காலத்தில் கான்கிரீட் கட்டிடங்களுக்கு நடுவே பசுமையான சுவாசப் பகுதிகளைக் கொண்ட நகரமாக திருச்சி மாறுவதற்கான வாய்ப்பு உருவாகும். இன்று நடப்படும் இந்த 10 ஆயிரம் மரக்கன்றுகள், நாளைய தலைமுறைக்கு வழங்கப்படும் பசுமையான பரிசாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/05/83ee35f08015f9ddeab0298aad3c45381785930958176733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/prayer-reflecting-religious-unity-muslims-offer-special-prayers-with-tear-filled-eyes-seeking-rain-tnn-270198</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/prayer-reflecting-religious-unity-muslims-offer-special-prayers-with-tear-filled-eyes-seeking-rain-tnn-270198#respond</comments><pubDate>Wed, 5 Aug 2026 16:11:55 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/prayer-reflecting-religious-unity-muslims-offer-special-prayers-with-tear-filled-eyes-seeking-rain-tnn-270198</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திருச்சி:&lt;/strong&gt; திருச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்தினர். இது மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனையாக அமைந்து மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து, வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்தினர். தமிழகம் முழுவதும் மழை பெய்து, நீர்நிலைகள் நிரம்பி, விவசாயம் செழிக்க வேண்டும் என அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வெயிலின் தாக்கம் அதிகரிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எல் நினோ தாக்கம் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்களின் தாக்கத்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்பம், வறட்சி, அதீத மழை உள்ளிட்ட இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் கோடைக்காலத்தில் வெயில் சுட்டெரித்ததுடன், பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவானது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோடை காலம் நிறைவடைந்த பின்னரும் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவுவதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் தேவைக்காக மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழலும், சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க உள்ளாட்சி நிர்வாகத்தை நாட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வறண்டு கிடக்கும் நீர்நிலைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழைப்பொழிவு இல்லாததால் காவிரி உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சம் ஒருபுறம் இருக்க, கால்நடைகளுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதும் சவாலாக மாறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக காவிரி நீரை நம்பியுள்ள டெல்டா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைவது விவசாயப் பணிகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பருவமழை உரிய நேரத்தில் பெய்து நீர்நிலைகள் நிரம்பினால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்பார்த்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மழை வேண்டி சிறப்புத் தொழுகை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிலையில், திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டது. ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது ரூருல் ஹக் ரஷாதி மற்றும் செயலாளர் இன் ஆமுல் ஹசன் ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்புத் தொழுகையில், 1,000-க்கும் மேற்பட்ட உலமாக்கள், ஆலிம்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் பங்கேற்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முகமது நபி வழியில் நடத்தப்பட்ட சிறப்புத் தொழுகையில், தமிழ்நாடு முழுவதும் போதிய மழைப்பொழிவு ஏற்பட்டு, விவசாயம் செழிக்கவும், நீர்நிலைகள் நிரம்பவும், பொதுமக்களின் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கவும் வேண்டி அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கண்ணீர் மல்க பிரார்த்தனை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொழுகையின் போது பங்கேற்றவர்கள் தங்களது கைகளை உயர்த்தி இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்தனர். மழை இல்லாமல் மக்கள், விவசாயிகள், கால்நடைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துயரத்தில் இருந்து அனைவருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தேவையல்ல; அனைத்து உயிர்களுக்கும் பொதுவான வாழ்வாதாரம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சிறப்புத் தொழுகை அமைந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மத ஒற்றுமையை வெளிப்படுத்திய நிகழ்வு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழை வேண்டி நடைபெற்ற இந்த சிறப்புத் தொழுகை, மத நல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியது. மழை பெய்தால் விவசாயி மட்டுமின்றி, நகரம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் அனைத்து மக்களும் பயன்பெறுகின்றனர். குடிநீர் முதல் விவசாயம் வரை மனிதர்களின் அன்றாட வாழ்க்கையுடன் மழை நேரடியாக தொடர்புடையதாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில், மழைக்காக இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் பிரார்த்தனை, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், தண்ணீரின் மதிப்பையும் உணர்த்தும் வகையில் அமைந்தது. தமிழகத்தில் போதிய மழை பெய்து, ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி, விவசாயம் செழித்து, பொதுமக்களின் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கி, மாநிலம் வளம் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/05/8c52d7a8f97cc84fec38909d85b34fb51785926000680733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? ]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/distress-caused-by-poorly-maintained-roads-devotees-fear-the-dark-girivalam-path-do-you-know-where-this-is-tnn-270190</link><comments>https://tamil.abplive.com/news/trichy/distress-caused-by-poorly-maintained-roads-devotees-fear-the-dark-girivalam-path-do-you-know-where-this-is-tnn-270190#respond</comments><pubDate>Wed, 5 Aug 2026 15:34:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/distress-caused-by-poorly-maintained-roads-devotees-fear-the-dark-girivalam-path-do-you-know-where-this-is-tnn-270190</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திருச்சி:&lt;/strong&gt; திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை கிரிவலப் பாதையில் பராமரிப்பின்றி உள்ள சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்கள் குத்தி பக்தர்கள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதனை உடன் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, 'தென் திருப்பதி' என்று போற்றப்படும் புகழ்பெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் அமைந்திருக்கும் பெருமாள் மலை, ஆன்மீக அன்பர்களின் முதன்மைத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாகப் பௌர்ணமி தினங்கள் மற்றும் புரட்டாசி விசேஷ நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து எம்பெருமானை வழிபடுவது வழக்கம். ஆனால், இந்த புனிதமான கிரிவலப் பாதை தற்போது முற்றிலுமாகச் சிதைந்து, பக்தர்களின் நிம்மதியைப் பறிக்கும் களமாக மாறியிருப்பது மக்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முள்ளாய் குத்தும் ஜல்லி கற்கள்... வழுக்கி விழ வைக்கும் சேறு!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெருமாள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கிரிவலப் பாதையின் பெரும்பகுதி, பராமரிப்பின்றி ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும், பெரிய பெரிய பள்ளங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. கிரிவலம் வரும் பெரும்பாலான பக்தர்கள் காலணிகள் இன்றி வெறும் கால்களிலேயே நடப்பதே ஆன்மீக வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், பாதையில் சிதறிக் கிடக்கும் கூர்மையான கற்களும் முட்களும் பக்தர்களின் பாதங்களைக் குத்திப் பதம் பார்ப்பதால், ஒவ்வொரு அடியையும் ரண வேதனையுடனேயே எடுத்து வைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழை பெய்யும் நேரங்களில் இந்தச் சிறு பள்ளங்களில் நீர் தேங்கி நிற்பதால் பாதை முழுவதும் சேறும் சகதியுமாக மாறுகிறது. இதனால் முதியவர்களும் பெண் பக்தர்களும் வழுக்கி கீழே விழுந்து காயமடையும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கும்மிருட்டில் மூழ்கும் பாதை... விஷ பூச்சிகளால் அச்சுறுத்தல்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பக்தர்கள் பெரும்பாலும் அதிகாலை வேளைகளிலும், வெயில் தணிந்த இரவு நேரங்களிலுமே அதிகளவில் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், இந்தச் சமயத்தில் கிரிவலப் பாதையில் பயணப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாதையோரம் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் பல மாதங்களாகப் பழுதடைந்து எரியாமல் கிடப்பதால், கிரிவலப் பாதை முழுமையாக இருளில் மூழ்கிப் போகிறது. மலை அடிவாரப் பகுதி என்பதால் இருளைப் பயன்படுத்திப் பாம்புகள், தேள்கள் போன்ற விஷப்பூச்சிகளின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது. வெளிச்சம் இல்லாததால் எங்கே கால் வைப்பது என்று தெரியாமல், பக்தர்கள் ஒவ்வொரு கணமும் அச்சத்தோடு கிரிவலம் வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;குடிநீரும் இல்லை... கழிவறை வசதியும் இல்லை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆன்மீக ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித்தடத்தில், கிரிவலம் வரும் பக்தர்களின் தாகத்தைத் தணிப்பதற்கோ அல்லது சற்று நேரம் ஓய்வெடுப்பதற்கோ போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் எதுவுமே இல்லை. கிரிவலப் பாதையின் நெடுகிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளோ, சுத்தமான பொதுக் கழிப்பிட வசதிகளோ இல்லாததால், குறிப்பாகப் பெண் பக்தர்களும் முதியவர்களும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முறையான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், பாதையோரம் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன. இதனால் ஆன்மீகச் சூழலின் தூய்மை கெட்டுச் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;துறையூர் பெருமாள் மலை கிரிவலப் பாதையை உடனடியாகச் சீரமைத்துத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பக்தர்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திற்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெறும் காலில் நடக்கும் பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, கூர்மையான கற்கள் இல்லாத வகையில் தார்ச் சாலையாகவோ அல்லது தரமான பேவர் பிளாக் (Paver blocks) பாதையாகவோ மறுசீரமைக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கிரிவலப் பாதை முழுவதையும் வெளிச்சமாக்கும் வகையில் புதிய மின்விளக்குகளையும், ஆபத்தான வளைவுகளில் உயர் கோபுர விளக்குகளையும் பொருத்த வேண்டும். குறிப்பிட்ட இடைவெளிகளில் குடிநீர் மையங்களை அமைத்து, முறையான தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகமும் அறநிலையத்துறையும் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பக்தர்களின் பாதுகாப்பையும் ஆன்மீக உணர்வுகளையும் மதித்து, இந்து சமய அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து, கிரிவலப் பாதையை முழுமையாகச் சீரமைத்துத் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்!&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/05/3563b9a5c12b0f323efca72b263e40251785923836970733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/between-private-buses-ear-splitting-air-horns-commuters-travel-in-fear-for-their-lives-tnn-269956</link><comments>https://tamil.abplive.com/news/trichy/between-private-buses-ear-splitting-air-horns-commuters-travel-in-fear-for-their-lives-tnn-269956#respond</comments><pubDate>Mon, 3 Aug 2026 17:19:08 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/between-private-buses-ear-splitting-air-horns-commuters-travel-in-fear-for-their-lives-tnn-269956</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திருச்சி:&lt;/strong&gt; திருச்சியில் தனியார் பேருந்துகளின் &amp;lsquo;வேகப் போட்டி&amp;rsquo;... பயணிகளின் உயிருக்கு ஆபத்து வகையில் உள்ளது. போட்டி போட்டு முந்தும் பேருந்துகளின் அசுர வேகம், அலற விடும் ஏர் ஹாரன் போன்றவற்றால் பொதுமக்கள் வெகுவாக அச்சத்தில் உள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாநகர சாலைகளில் தனியார் பேருந்துகளுக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடுமையான போட்டி, பயணிகளையும், பிற வாகன ஓட்டிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த பேருந்து நிறுத்தத்தை யார் முதலில் அடைவது? அதிக பயணிகளை யார் ஏற்றுவது? என்ற போட்டியில் சில தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதுடன், ஆபத்தான முறையில் மற்ற வாகனங்களை முந்திச் செல்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/03/8812c89477bc9338775ae766846b763d1785757533035733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி, இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் மற்றும் சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சாலையில் அசுர வேகத்துடன் பறக்கும் தனியார் பேருந்துகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நகர எல்லைக்குள் இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட வேக வரம்பை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. பொதுவாக நகரப் பகுதிகளில் பேருந்துகள் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்துக்குள் இயக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், நடைமுறையில் சில தனியார் பேருந்துகள் இந்த வேக வரம்பை பொருட்படுத்தாமல் அதிவேகத்தில் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் போட்டிப் பேருந்துகளை முந்தி முன்னதாக சென்று அதிக பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், ஓட்டுநர்கள் வேகத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரே வழித்தடத்தில் அடுத்தடுத்து வரும் பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயல்வதால், சில நேரங்களில் சாலையில் போட்டி பந்தயம் போன்று காட்சியளிப்பதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;lsquo;முந்துவதில்&amp;rsquo; விபரீதம்... அரசுப் பேருந்து மீது மோதிய தனியார் பேருந்து&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிலையில், சமீபத்தில் திருச்சி&amp;ndash;மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் மற்றும் பஞ்சப்பூர் இடையே நடந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து அதனை அதிவேகமாக முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் மோதியது. இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்ததுடன், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டாலும், இந்த சம்பவம் தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஏர் ஹாரன்... லேன் விதிமீறல்... அச்சத்தில் வாகன ஓட்டிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதிவேகத்துடன் மட்டுமின்றி, சில பேருந்து ஓட்டுநர்கள் மற்ற வாகனங்களை ஆபத்தான முறையில் முந்திச் செல்வது, திடீரென பாதையை மாற்றுவது, போக்குவரத்து வரிசை விதிகளை மீறுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுவதாக புகார்கள் உள்ளன. மேலும், அதிக சத்தத்தை எழுப்பும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பேருந்துகள் பின்னால் இருந்து வேகமாக வந்து ஹாரன் எழுப்பும்போது, குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சமடைந்து திடீரென பாதையை மாற்றும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற தருணங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அதிகரிக்கும் வேகப் போட்டி... மிரண்டு தெறிக்கும் மக்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாநகரில் குறிப்பிட்ட சில முக்கிய சாலைகளில் தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;டி.வி.எஸ். டோல்கேட் &amp;ndash; மன்னார்புரம் &amp;ndash; பஞ்சப்பூர் நெடுஞ்சாலை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாரதியார் சாலை மற்றும் சாலை ரோடு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கரூர் பைபாஸ் சாலை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிங்காரத்தோப்பு &amp;ndash; பாலக்கரை பகுதிகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சத்திரம் பேருந்து நிலையத்தை இணைக்கும் கல்வி நிறுவனங்கள் நிறைந்த பகுதிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள சாலைகளில் மாணவர்கள் அதிகளவில் நடந்து செல்வதால், பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஸ்பீட் ரேடார்... சோதனையில் சிக்கும் பேருந்துகள்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பேருந்துகளின் அதிவேகத்தை கட்டுப்படுத்தவும், சாலை விபத்துகளை குறைக்கவும் திருச்சி போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நகரின் முக்கிய சாலைகளில் வேகப் பரிசோதனைக் கருவிகள் எனப்படும் Speed Radar Guns மூலம் வாகனங்களின் வேகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேக வரம்பை மீறும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அபராதமும் விதிக்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இருப்பினும், அபராதம் விதிப்பது மட்டும் போதுமானதாக இல்லை என்றும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;ldquo;கடும் நடவடிக்கை எடுக்கப்படும்&amp;rdquo; - போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அதிவேகமாக இயக்கப்படும் மற்றும் விதிமுறைகளை மீறி காற்று ஹாரன்களை பயன்படுத்தும் தனியார் பேருந்துகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களுக்கு சட்ட விதிகளின்படி அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சாலைப் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகையில், ஒருமுறை அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கையை முடித்துக்கொள்ளாமல், தொடர்ந்து விதிமீறும் ஓட்டுநர்களை அடையாளம் கண்டு கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், நகரின் முக்கிய சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை குறிப்பிடும் வகையில் தெளிவான விழிப்புணர்வு பலகைகள் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நேர அட்டவணையை முறைப்படுத்த வேண்டும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தனியார் பேருந்துகளுக்கு இடையே ஏற்படும் போட்டிக்கு முக்கிய காரணமாக நேர அட்டவணையும் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பேருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு பேருந்து நிலையத்தை அடைய வேண்டும் என்ற அழுத்தம் இல்லாத வகையில், தனியார் பேருந்துகளின் Time Chart-ஐ முறையாக முறைப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பேருந்துகளுக்கு இடையே தேவையற்ற போட்டி ஏற்படாத வகையில் நேர இடைவெளியை சீரமைத்தால், ஓட்டுநர்கள் வேகமாக சென்று பயணிகளை பிடிக்க வேண்டிய அவசியம் குறையும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;lsquo;வேகப் போட்டி&amp;rsquo;க்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாநகரில் ஏற்கனவே வாகன நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், தனியார் பேருந்துகளின் கட்டுப்பாடற்ற வேகம் மேலும் விபத்து அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது. பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணியும் பாதுகாப்பாக தனது இலக்கை அடைவதே முக்கியம். ஒரு சில பயணிகளை கூடுதலாக ஏற்றுவதற்காக அல்லது அடுத்த பேருந்தை முந்துவதற்காக எடுக்கப்படும் தேவையற்ற ஆபத்து, ஒரு நொடியில் மிகப்பெரிய விபத்தாக மாறிவிடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, அபராதம் மட்டும் விதிப்பதைத் தாண்டி, தொடர் கண்காணிப்பு, ஓட்டுநர்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி, நேர அட்டவணை முறைப்படுத்தல் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தினால் மட்டுமே திருச்சி மாநகர சாலைகளில் நிலவும் தனியார் பேருந்துகளின் &amp;lsquo;வேகப் போட்டிக்கு&amp;rsquo; முற்றுப்புள்ளி வைத்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடியும்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/03/28c7bd1667a5e8a1eaddf2f24d57fcb01785757506342733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Trichy power cut: திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/trichy-power-cut-04-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-269945</link><comments>https://tamil.abplive.com/news/trichy/trichy-power-cut-04-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-269945#respond</comments><pubDate>Mon, 3 Aug 2026 16:31:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/trichy-power-cut-04-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-269945</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 04, 2026, செவ்வாய்க்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை &amp;nbsp;9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/VRL3RM6wp2I?si=s-DADEFIuazbs9YX&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;திருச்சி மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;துவரங்குறிச்சி துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம் பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியாக்குறிச்சிக்கட்டி, வேல குறிச்சி, கரடிப்பட்டி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;சிறுகனூர் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருப்பூர், ரெட்டிமாங்குடி, எம்.ஆர்.பாளையம், ஊடத்தூர், நெடுந்தூர், நம்பக்குறிச்சி, நீலுலம், மணியக்குறிச்சி, சாதமங்கலம்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/11/08/47b0c3363142e02338ce4a7968c0f7ef1762601227241240_original.png" width="220"/></item><item><title><![CDATA[வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/shops-with-outstanding-rent-arrears-trichy-corporation-abruptly-locks-and-seals-them-tnn-269777</link><comments>https://tamil.abplive.com/news/trichy/shops-with-outstanding-rent-arrears-trichy-corporation-abruptly-locks-and-seals-them-tnn-269777#respond</comments><pubDate>Sat, 1 Aug 2026 18:30:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/shops-with-outstanding-rent-arrears-trichy-corporation-abruptly-locks-and-seals-them-tnn-269777</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திருச்சி:&lt;/strong&gt; திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ரூ.5 லட்சத்துக்கும் மேல் வாடகை பாக்கி வைத்திருந்த 5 கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் &amp;lsquo;சீல்&amp;rsquo; வைத்து அதிரடி காட்டியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு சொந்தமான சத்திரம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் நீண்டகாலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 5 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பூட்டு போட்டு சீல் வைத்தனர். ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான வாடகை பாக்கியை வசூலிக்கும் வகையிலும், மாநகராட்சியின் வருவாயை பெருக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;54 கடைகள்... பாக்கி வைத்திருந்த 5 கடைகளுக்கு சீல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி நகரின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாக சத்திரம் பேருந்து நிலையம் விளங்கி வருகிறது. இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் மொத்தம் 54 கடைகள் உள்ளன. இதில் 5 கடைகளின் உரிமையாளர்கள், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர வாடகையை முறையாக செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த 5 கடைகளிடம் இருந்து மட்டும் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான வாடகை பாக்கி சேர்ந்துள்ளது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் நிலுவைத் தொகையை செலுத்துமாறு பலமுறை அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், பலமுறை அறிவுறுத்தியும் உரிய தொகை செலுத்தப்படாததால், மாநகராட்சி நிர்வாகம் தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நோட்டீஸ் மேல் நோட்டீஸ்... பலனில்லை! அதிரடியாக நடவடிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வாடகை பாக்கியை செலுத்துமாறு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் பலமுறை முறைப்படி நோட்டீஸ் அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, கடந்த மாதம் இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், அதன்பிறகும் நிலுவைத் தொகையை செலுத்தவோ, உரிய விளக்கத்தை அளிக்கவோ கடை உரிமையாளர்கள் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து சட்டப்பூர்வ நடைமுறைகளின்படி, மாநகராட்சி அதிகாரிகள் 5 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;டெபாசிட் தொகையில் இருந்து பிடித்தம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு ஏற்கனவே ஒப்பந்தத்தின்போது செலுத்தப்பட்டிருந்த வைப்புத்தொகையில் இருந்து வாடகை நிலுவைத் தொகையை பிடித்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&amp;nbsp;மேலும், தொடர்ந்து வாடகை செலுத்தாமல் விதிமுறைகளை மீறும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அவ்வாறு உரிமம் ரத்து செய்யப்பட்ட கடைகள் பின்னர் புதிய ஏலம் மூலம் வேறு நபர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாதம் ரூ.15 ஆயிரம் முதல் வாடகை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சத்திரம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு அவற்றின் பரப்பளவுக்கு ஏற்ப வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மாதம் ரூ.15 ஆயிரம் வாடகை வசூலிக்கப்படுகிறது. கடையின் பரப்பளவு மற்றும் அமைவிடத்தை பொறுத்து மாத வாடகை ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வணிக வளாகக் கடைகளுக்கான ஏலத்தின்போது, பல்வேறு வியாபாரிகள் போட்டி போட்டு அதிக வாடகைத் தொகையை குறிப்பிட்டு கடைகளை ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது கடைகளில் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறாததால், அதிக வாடகையை மாதந்தோறும் செலுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வணிக வளாகக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.55 கோடி வருவாய்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு சொத்துகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.55 கோடி வரை வாடகை மற்றும் குத்தகை வருவாய் கிடைத்து வருகிறது. இந்த வருவாய் மாநகராட்சியின் முக்கியமான நிதி ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. நகரில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலப் பணிகள், சாலைப் பணிகள், குடிநீர் வசதி, தூய்மைப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மாநகராட்சியின் சொந்த வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் வாடகை நிலுவையை குறைத்து, வருவாயை முறையாக வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இனியும் தாமதித்தால் &amp;lsquo;சீல்&amp;rsquo; தான்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வாடகை பாக்கி வைத்துள்ள மற்ற கடைகளின் நிலுவைத் தொகையையும் விரைவாக வசூலிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், வாடகை பாக்கி வைத்திருக்கும் கடைகளுக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், அதன்பிறகும் தொகையை செலுத்தாத கடைகள் மீது பூட்டு போட்டு சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாநகராட்சிச் சொத்துகளைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து வரும் கடை உரிமையாளர்கள், தங்களது வாடகை நிலுவைத் தொகையை உடனுக்குடன் செலுத்த வேண்டும் என்றும், மாநகராட்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ரூ.5 லட்சத்துக்கும் மேல் வாடகை பாக்கி... பலமுறை நோட்டீஸ்... இறுதி எச்சரிக்கையும் பலனளிக்கவில்லை... இதையடுத்து ஒரே நேரத்தில் 5 கடைகளுக்கு பூட்டு போட்டு சீல் வைத்த மாநகராட்சியின் நடவடிக்கை சத்திரம் பேருந்து நிலைய வணிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/01/c59c4312eb53a402fbfb813b0a6c86b41785589068410733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...!  இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/new-6-lane-highway-between-chennai-and-trichy-at-an-estimated-cost-of-20-000-crore-land-acquisition-work-in-full-swing-269688</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/new-6-lane-highway-between-chennai-and-trichy-at-an-estimated-cost-of-20-000-crore-land-acquisition-work-in-full-swing-269688#respond</comments><pubDate>Fri, 31 Jul 2026 18:09:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/new-6-lane-highway-between-chennai-and-trichy-at-an-estimated-cost-of-20-000-crore-land-acquisition-work-in-full-swing-269688</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்குப் மிகப்பெரிய நற்செய்தியாக, சென்னை - திருச்சி இடையே புதிய 6 வழி அதிவேகப் பசுமைவழிச் சாலை (Greenfield Expressway) அமைக்கும் பணிகளை இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) தீவிரப்படுத்தியுள்ளது. சுமார் ரூ.20,000 கோடி பிரம்மாண்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ள இத்திட்டம் முழுமையாக நிறைவடைந்தால், சென்னை &amp;ndash; திருச்சி இடையேயான பயண நேரம் தற்போதைய 5 முதல் 6 மணி நேரத்திலிருந்து வெறும் 3 மணி நேரமாகக் குறையும்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஜி.எஸ்.டி சாலை நெரிசலுக்கு முற்றுப்புள்ளி&lt;/h2&gt;
&lt;p&gt;தற்போது சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதான வழியான சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை (NH 45 / GST Road) எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. குறிப்பாகத் வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்களில் தாம்பரம், பெருங்களத்தூர், செங்கல்பட்டு, விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் பல மணி நேரம் ஸ்தம்பிக்கும் சூழல் நிலவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதற்கு நிரந்தரத் தீர்வாக, தற்போதுள்ள சாலை விரிவாக்கத்திற்குப் பதிலாகக் முற்றிலும் புதிய பாதையில் (Greenfield Alignment) இந்த அதிவேகச் சாலையை அமைக்க NHAI முடிவெடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள்:&lt;/h2&gt;
&lt;p&gt;300 கி.மீ நீளப் புதிய பாதை: இப்புதிய அதிவேகச் சாலை சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதி (சென்னை வெளிவட்டச் சாலை இணைப்பு) பகுதியில் தொடங்கி, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர் வழியாகத் திருச்சி வரை சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிற்கு அமையவுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;120 கி.மீ வேக வரம்பு: முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் (Access-Controlled Expressway) கொண்ட இந்தச் சாலையில் தடுப்புகள் அமைத்து, வாகனங்கள் இடையூறின்றி மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சீராகப் பயணிக்கும் வகையில் வடிவமைப்பு செய்யப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;ஜிபிஎஸ் கட்டண வசூல் (GPS-based Tolling): பரனூர், ஆத்தூர், செங்குறிச்சி போன்ற வழக்கமான டோல்கேட்களில் காத்து நிற்பதைத் தவிர்க்க, இச்சாலையில் தானியங்கி ஜிபிஎஸ் முறை அல்லது செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம்: இத்திட்டத்தின் மிக முக்கியமான பொறியியல் அம்சமாக, திருச்சி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அதிநவீனப் புதிய பிரம்மாண்ட மேம்பாலமும் கட்டப்படவுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;விரைவுபடுத்தப்படும் நிலம் கையகப்படுத்தும் பணிகள்&lt;/h2&gt;
&lt;p&gt;இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தமிழக அரசு தரப்பில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை (DPR) இறுதி செய்யப்பபட்டு, சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் மற்றும் பாதைக்கான நிலங்களைக் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்டப் பணிகளை NHAI முடுக்கிவிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;தென் மாவட்டங்களின் பொருளாதாரப் புரட்சி&lt;/h2&gt;
&lt;p&gt;சென்னை &amp;ndash; பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் உருவாகும் இரண்டாவது மிகப்பெரிய 'கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே' திட்டம் இதுவாகும். இச்சாலை பயன்பாட்டிற்கு வரும் போது: சென்னை - திருச்சி இடையிலான பயண நேரமும் எரிபொருள் செலவும் பாதியாகக் குறையும். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புதிய தொழில் மண்டலங்களும் (Industrial Corridors) வேலைவாய்ப்புகளும் பெருகும். தென் மாவட்டங்களிலிருந்து சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் சரக்குப் போக்குவரத்து கணிசமாக வேகமெடுக்கும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/31/71fcb610de8bded53e8ad6ecf666f2c61785501348313194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/trichy-power-cut-01-8-2026-know-timings-areas-affected-by-power-shutdown-269685</link><comments>https://tamil.abplive.com/news/trichy/trichy-power-cut-01-8-2026-know-timings-areas-affected-by-power-shutdown-269685#respond</comments><pubDate>Fri, 31 Jul 2026 17:43:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/trichy-power-cut-01-8-2026-know-timings-areas-affected-by-power-shutdown-269685</guid><description><![CDATA[&lt;p&gt;திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 01, 2026, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45. மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/4wcjBL3654g?si=9aq-b8z7FdMnM3wl&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2&gt;திருச்சி மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;திருவெறும்பூர் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;போலீஸ் காலனி,அண்ணா நகர், கும்பக்குடி, வெங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, ஆர்எஸ்கே நகர், சோலமாதேவி, காந்தளூர், சூரியூர், பாரதிபுரம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அம்பிகாபுரம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா நகர், வள்ளுவர் நகர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;எஸ்.அபிசேகபுரம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பரமசிவபுரம், ஏ கே நகர், இடையாற்றுமங்கலம், டிவி நகர், ஆண்டிமேடு, திருமணமேடு, மூமூடிச்சலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதராஜன் நகர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/09/27/9fee62e035613ff7cc115e0b466c97bc1758978128773240_original.png" width="220"/></item><item><title><![CDATA[திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/rat-bite-incident-at-trichy-government-hospital-administration-intensifies-sanitation-efforts-tnn-269065</link><comments>https://tamil.abplive.com/news/trichy/rat-bite-incident-at-trichy-government-hospital-administration-intensifies-sanitation-efforts-tnn-269065#respond</comments><pubDate>Sun, 26 Jul 2026 14:31:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/rat-bite-incident-at-trichy-government-hospital-administration-intensifies-sanitation-efforts-tnn-269065</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திருச்சி:&lt;/strong&gt; திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டியை எலி கடித்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தூய்மைப் பணிகளை மருத்துவமனை நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதிய நோயாளி ஒருவரை எலி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக களமிறங்கி வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மற்றும் எலிகள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சிகிச்சைக்காக வந்த மூதாட்டிக்கு நேர்ந்த அதிர்ச்சி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மாவட்டம் கீழக்கல்கண்டார்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி ஒருவர், வீட்டில் தவறி விழுந்ததில் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு உறவினர்கள் மாறி மாறி உதவி செய்து வந்தனர். இதற்கிடையில், ஒரு கட்டத்தில் அவருடன் இருந்த மகன் தேநீர் வாங்கிச் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திரும்பி வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேநீர் வாங்கிவிட்டு வார்டுக்கு திரும்பிய மகன், தனது தாயின் காலில் ரத்தக்காயம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது, காலின் பெருவிரல் பகுதியில் எலி கடித்திருப்பது தெரியவந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உடனடியாக மருத்துவப் பணியாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மூதாட்டிக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்திலேயே இத்தகைய சம்பவம் நடந்தது நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நீரிழிவு நோயால் வலியை உணராத மூதாட்டி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாதிக்கப்பட்ட மூதாட்டி நீண்டகாலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீரிழிவு நோயின் காரணமாக நரம்புகளின் உணர்திறன் குறைந்திருந்ததால், எலி கடித்தபோதும் அவருக்கு உடனடியாக வலி அல்லது வேறு எந்த உணர்வும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுவே காயம் பெரிதாகும் வரை யாருக்கும் தெரியாமல் போனதற்கான முக்கிய காரணமாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;எலிகள் பெருக காரணமான கட்டுமானப் பகுதி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தியது. இதில், மருத்துவமனை வளாகத்தில் புதிதாக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் அமைந்துள்ள பகுதியில் தொழிலாளர்கள் பயன்படுத்திய உணவுக் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கியிருந்தது கண்டறியப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த உணவுக் கழிவுகள் காரணமாக எலிகளின் நடமாட்டம் அதிகரித்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் பொதுப்பணித் துறைக்கு உடனடியாக அறிவுறுத்தப்பட்டு, அப்பகுதியில் தேங்கியிருந்த கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகளுக்கும் விரிவான அறிக்கையை அனுப்பியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நோயாளிக்கு உரிய சிகிச்சை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எலி கடியால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு தேவையான அனைத்து தடுப்புச் சிகிச்சைகளும் உடனடியாக வழங்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொற்று பரவாமல் தடுக்க மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலும் அவர் வைக்கப்பட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், காயம் விரைவில் குணமடையும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தொடர்ச்சியான பராமரிப்பு அவசியம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தச் சம்பவம் அரசு மருத்துவமனைகளில் தூய்மை மற்றும் சுகாதார பராமரிப்பு தொடர்பான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. குறிப்பாக நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் எலிகள், பூச்சிகள் மற்றும் தெருநாய்களின் நடமாட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கைகள் அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், கழிவுகளை உடனுக்குடன் அகற்றுதல், உணவுக் கழிவுகள் தேங்காமல் கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தீவிர கண்காணிப்பில் மருத்துவமனை நிர்வாகம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எலிகள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், வார்டுகள், கட்டுமானப் பகுதிகள் மற்றும் கழிவு சேகரிப்பு இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமே முதன்மை என்பதால், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நிரந்தர பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/26/ceb7178ca5a13fa5ebe1d572790eb0701785056470185733_original.png" width="220"/></item></channel></rss>