<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>trichy</title><atom:link href="https://tamil.abplive.com/trichy/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 03:55:53 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[நிழல் இல்லா அதிசயம்: திருச்சியில் வானம் காட்டிய வியப்பு]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/a-shadowless-miracle-the-wonder-of-the-sky-in-trichy-tnn-257562</link><comments>https://tamil.abplive.com/news/trichy/a-shadowless-miracle-the-wonder-of-the-sky-in-trichy-tnn-257562#respond</comments><pubDate>Sun, 26 Apr 2026 14:07:35 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/a-shadowless-miracle-the-wonder-of-the-sky-in-trichy-tnn-257562</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: என்னது திருச்சியில் நிழல் இல்லாத நாளா? என்ற கேள்வி எழுகிறதா. ஆனால் இந்த வானியல் அதிசயத்தை அண்ணா அறிவியல் மையம் விளக்கி உள்ளது. இது ஆண்டுக்கு 2 முறைதான் நிகழும் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சியில் உள்ள அண்ணா அறிவியல் மையக் கோளரங்கத்தில், 'நிழல் இல்லா நாள்' எனும் அரிதான வானியல் நிகழ்வைக் குறிக்கும் வகையில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களுக்கும், குறிப்பாக மாணவர்களுக்கும் வானியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், சூரியனின் இயக்கத்தைப் பற்றிய அறிவியல் உண்மைகளை விளக்கவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயற்கையின் இந்த வியக்கத்தக்க மாற்றத்தை நேரடிச் சோதனைகள் மூலம் பார்வையாளர்கள் கண்டு வியந்தனர்&amp;hellip; மகிழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/26/162a1ae59a84045d227788b3cbda38741777192585516733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சூரியன் சரியாக உச்சி வானிற்கு வரும்போது, அதாவது அதன் அச்சு பூமிக்குச் செங்குத்தாக (90 டிகிரி கோணத்தில்) அமையும் போது 'நிழல் இல்லா நாள்' ஏற்படுகிறது. சூரிய மதிய வேளையில் சூரியன் அதன் உச்சநிலையை அடையும் போது, குச்சிகள், தூண்கள் அல்லது மனிதர்கள் போன்ற செங்குத்தான பொருட்களின் நிழல் பக்கவாட்டில் விழாமல், சரியாக அந்தப் பொருளின் அடியிலேயே விழும். இதனால் அந்தப் பொருளுக்கு நிழல் இல்லாதது போன்ற ஒரு மாயத் தோற்றம் உருவாகிறது. இது பூமியின் அச்சு சாய்வு மற்றும் சூரியனைச் சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதை காரணமாக நிகழும் ஒரு காலமுறை நிகழ்வாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சியைப் பொறுத்தவரை, உள்ளூர் சூரிய மத்தியான நேரம் என்பது மதியம் சுமார் 12.10 மணி அளவில் அமையும். ஒவ்வொரு ஆண்டும் இதில் மிகச் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். சுமார் 10.79 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ள திருச்சி மாவட்டம், ஆண்டுக்கு இரண்டு முறை இந்த நிழல் இல்லா நாளை அனுபவிக்கிறது. வழக்கமாக ஏப்ரல் 18 மற்றும் ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகளில் இந்த அதிசயம் நிகழும் என்று கோளரங்க வல்லுநர்கள் விளக்கினர். கடக ரேகை மற்றும் மகர ரேகைக்கு இடைப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே இந்த அரிய நிகழ்வை ஆண்டுக்கு இருமுறை காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நேரடிச் செய்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. திறந்தவெளியில் செங்குத்தான கம்புகளை நட்டு வைத்து, மதியம் 12.10 மணி அளவில் அவற்றின் நிழல் மறைவதை பொதுமக்கள் அனைவரும் நேரடியாகக் கண்டனர். சூரியனின் நகர்விற்கும், பூமியின் அட்சரேகைக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் ஊடாடும் அமர்வுகளும் (Interactive Sessions) நடத்தப்பட்டன. இதன் மூலம், பாடப்புத்தகங்களில் படிக்கும் அறிவியல் கோட்பாடுகள் எவ்வாறு நிஜ வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றன என்பதை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி மிகவும் உதவிகரமாக இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சூரிய வடிவியல் மற்றும் அது நம் பகுதியில் ஏற்படுத்தும் தனித்துவமான விளைவுகள் குறித்து மக்களிடையே அறிவியல் பூர்வமான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் முதன்மை நோக்கமாகும். இயற்கையின் மாற்றங்களை அறிவியலின் துணை கொண்டு அணுகுவதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் பெரிதும் உதவுகின்றன. அண்ணா அறிவியல் மையம் நடத்திய இந்த முன்னெடுப்பு, எதிர்காலத் தலைமுறையினரிடையே வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/26/7f450d3fdeabe78912ea9d8883685ccc1777192569437733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த கும்பல்: 1 கிலோ தங்கம் சுருட்டல்]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/gang-breaks-into-house-in-broad-daylight-1-kg-of-gold-stolen-tnn-257553</link><comments>https://tamil.abplive.com/news/trichy/gang-breaks-into-house-in-broad-daylight-1-kg-of-gold-stolen-tnn-257553#respond</comments><pubDate>Sun, 26 Apr 2026 12:48:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/gang-breaks-into-house-in-broad-daylight-1-kg-of-gold-stolen-tnn-257553</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: திருச்சியில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மதிப்பீட்டாளரை தாக்கி ஒரு கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் உதய் (36), திருச்சி பெரிய செட்டி தெருவில் குடும்பத்தோடு தங்கி, நகை மதிப்பீடு பணி செய்து வருகிறார். இந்நிலையில் இவரது குடும்பத்தினர் அனைவரும் கோடை விடுமுறைக்காக சொந்த ஊரான மகாராஷ்டிராவிற்கு சென்றுவிட்டனர். இதனால் &amp;nbsp;உதய் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டின் கீழ் தளத்தில் அவரது கடையில் பணியாற்றும் நிதின் தங்கி உள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் 5 பேர் நிதினிடம் சென்று உங்கள் உரிமையாளரிடம் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் நிதின் அந்த 5 பேரையும் உதய் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுள்ளார். தொடர்ந்து உதய்யிடம் அந்த 5 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று அந்த 5 பேரும் உதய்யை தாக்கியுள்ளனர். மேலும் அவரை அடித்து, பாத்ரூமில் அடைத்து கதவை பூட்டி விட்டனர். மேலும் நிதினையும் தாக்கி கட்டி போட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னர் உதய் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். இந்நிலையில் பாத்ரூமில் அடைக்கப்பட்டு இருந்த உதய் உதவி கேட்டு அலறியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து பாத்ரூமில் இருந்து உதய்யை மீட்டு, திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடந்து தனது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து உதய் கோட்டை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அந்த புகாரில் தனது வீட்டில் இருந்து வீட்டில் இருந்த 1 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்கள் 5 பேரையும் தேடிவருகின்றனர். மேலும் அக்கம்பக்கத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது குறித்து போலீசார் கூறுகையில்,&amp;lsquo;&amp;lsquo; நகையை கொள்ளையடித்து பிறகு 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்துள்ளனர். பின்னர், அவர்கள் தயாராக இருந்த ஆட்டோவில் சென்றுள்ளனர். மாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சி பதிவுகளை ஆராய்ந்து வருகிறோம். கொள்ளையர்கள் உதய் வீட்டில் இருந்த கேமராக்களை சேதப்படுத்தி, ஹாஸ்டு டிஸ்கை எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் டம்மி துப்பாக்கியை பயன்படுத்தியதாக தெரிகிறது. உதய்க்கு தெரிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம்,&amp;rsquo;&amp;lsquo;என்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/26/ff15c740e17b44f07fa05f5cb7faff201777187835676733_original.png" width="220"/></item><item><title><![CDATA[போட்டியிட்ட தொகுதியில் ஓட்டு இல்லை... முக்கிய வேட்பாளர்களின் நிலை]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/no-votes-in-the-contested-constituency-status-of-the-main-candidates-tnn-257364</link><comments>https://tamil.abplive.com/news/trichy/no-votes-in-the-contested-constituency-status-of-the-main-candidates-tnn-257364#respond</comments><pubDate>Fri, 24 Apr 2026 13:48:36 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/no-votes-in-the-contested-constituency-status-of-the-main-candidates-tnn-257364</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. இதில் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் ஓட்டு போட முடியாத முக்கிய கட்சி வேட்பாளர்கள் யார் யார் என்று தெரியுங்களா?&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் ொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் முதன்முறையாக தங்கள் வாக்குகளை பதிவு செய்த வாக்காளர்கள் நீண்ட நேரம் ொறுமையாக வரிசையில் காத்திருந்து தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்தனர். இந்நிலையில் த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் உட்பட, முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்ளும், தங்களின் ஓட்டை போட முடியவில்லை. திருச்சி கிழக்கு தொகுதியில், த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவரை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் ராஜசேகரன், தி.மு.க., சார்பில் 'சிட்டிங்' எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;க்கும், இனிகோ இருதயராஜுக்கும் சென்னையில் ஓட்டு உள்ளது. அதேபோல், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகரனுக்கு திருச்சி மேற்கு தொகுதியில் ஓட்டு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் மேற்கண்ட மூன்று வேட்பாளர்களும், தங்களுக்கு ஓட்டு போட்டுக் கொள்ள முடியாத நிலை உருவானது. அதேபோல், லால்குடி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் லீமா ரோஸூக்கு, கோவையில் ஓட்டு உள்ளது. இவரை எதிர்த்து போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு, ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டு உள்ளது. துறையூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் லெனின் பிரசாத்துக்கு, ஸ்ரீரங்கம் தொகுதியிலும், த.வெ.க., வேட்பாளர் ரவிசங்கருக்கு மண்ணச்சநல்லுார் தொகுதியிலும் ஓட்டு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மணப்பாறை தி.மு.க., கூட்டணி ம.ம.க., வேட்பாளர் அப்துல் சமதுக்கு, செங்கல்பட்டில் ஓட்டு உள்ளது. முசிறி தி.மு.க., வேட்பாளர் கருணைராஜாவுக்கு, திருச்சி மேற்கு தொகுதியில் ஓட்டு உள்ளது. த.வெ.க., வேட்பாளர் விக்னேஷூக்கு, லால்குடியில் ஓட்டு உள்ளது. அதேபோல, ஸ்ரீரங்கம் த.வெ.க., வேட்பாளருக்கு ரமேஷூக்கு அந்த தொகுதியில் ஓட்டு இல்லை. அமைச்சர் நேருவை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் ராஜசேகரனுக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நேருவின் மகன் எம்.பி., அருண். இவர், திருச்சி தில்லைநகரில் வசித்தாலும், அவரது ஓட்டு சொந்த ஊரான லால்குடி தொகுதி காணக்கிளியநல்லுாரில் உள்ளது. இதனால் அவர், நேருவுக்கு ஓட்டு போட முடியவில்லை.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/24/54baa44b3d85118468a8388343d2d8b11777018644805733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TVK Vijay: ”தவெக பெண் நிர்வாகியை கட்டையால் தாக்கிய போதை ஆசாமி” வைரலாகும் அரைநிர்வாண வீடியோ]]></title><link>https://tamil.abplive.com/elections/trichy-east-constituency-elderly-man-chases-away-tvk-cadres-seeking-votes-for-vijay-tn-election-2026-256546</link><comments>https://tamil.abplive.com/elections/trichy-east-constituency-elderly-man-chases-away-tvk-cadres-seeking-votes-for-vijay-tn-election-2026-256546#respond</comments><pubDate>Thu, 16 Apr 2026 10:04:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/trichy-east-constituency-elderly-man-chases-away-tvk-cadres-seeking-votes-for-vijay-tn-election-2026-256546</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;TVK Vijay:&lt;/strong&gt; திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக வாக்கு கேட்டுச் சென்ற பெண் நிர்வாகியை தாக்கியதாக முதிவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;திருச்சி கிழக்கில் தவெக வாக்கு சேகரிப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக களம் கண்டுள்ளது. அக்கட்சியின் தலைவரான விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிகளில் அவர் ஒரு முறை மட்டுமே தேர்தல் பரப்புரை மேற்கொண்டாலும், அவருக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற நிர்வாகிகள் மீது, போதை ஆசாமி ஒருவர் தாக்குதல் நடத்த முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/signs-your-body-has-excess-fat-you-shouldnt-ignore-details-in-tamil-256439&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;முதியவர் தாக்க முயன்ற வீடியோ&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சம்பவம் தொடர்பாக தவெகவைச் சேர்ந்தவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், புதன்கிழமை இரவு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள கே.கே.நகர் பகுதியில் தவெக தோழர்கள் கட்சி தலைவர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;க்காக &amp;nbsp;வீடு வீடாக வாக்கு சேகரிக்கச் சென்ற போது 60 வயது முதியவர் ஒருவர் குடிபோதையில் பெண் நிர்வாகிகளை அநாகரிகமாப் பேசி, செருப்பை வைத்து எறிந்ததோடு மட்டுமின்றி கம்பை வீசி அடித்ததால் பெண் நிர்வாகி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு தகாத வார்த்தைகள் பேசி திமுகவிற்கு ஆதரவாகப் பேசியுள்ளார். தவெக தோழர்கள் உடனடியாக கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட நபர் மீது புகாரளித்துள்ளனர். குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது&amp;rdquo; என குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;நேற்று இரவு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள கே.கே.நகர் பகுதியில் நம் கழகத் தோழர்கள் அண்ணன் &lt;a href=&quot;https://twitter.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw&quot;&gt;@TVKVijayHQ&lt;/a&gt; -க்காக வீடு வீடாக வாக்கு சேகரிக்கச் சென்ற போது 60 வயது முதியவர் ஒருவர் குடிபோதையில் நமது பெண்களை அநாகரிகமாப் பேசி, செருப்பை வைத்து எறிந்ததோடு மட்டுமின்றி கம்பை வீசி அடித்ததால்&amp;hellip; &lt;a href=&quot;https://t.co/1qGG1xaBOu&quot;&gt;pic.twitter.com/1qGG1xaBOu&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; Sindhu Vote For Whistle (@sindhu_515) &lt;a href=&quot;https://twitter.com/sindhu_515/status/2044589582726123830?ref_src=twsrc%5Etfw&quot;&gt;April 16, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.twitter.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அநாகரீகமான, ஆபசமான பேச்சு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பதிவில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பிரச்னையின் தொடக்கப்புள்ளி என்ன? வாக்குவாதம் ஏற்பட்டது ஏன்? என்பது தொடர்பான எந்த தகவலும் இல்லை. இருப்பினும் அந்த வீடியோவின்படி, &amp;ldquo;மேல் சட்டை கூட அணியாத அந்த முதியவர் வீட்டின் கேட்டிற்கு அந்த பக்கமாக இருந்துகொண்டு, கையில் கட்டை எடுத்து தவெகவினரை தாக்கும் வகையில் ஆவேசமாக வீசியுள்ளார். அவருடன் இருந்த பெண்மணி தடுக்க முயன்றும், மீண்டும் மீண்டும் கட்டையை எடுத்து அடிக்க முயன்றுள்ளார். அநாகரீகமான ஆபாச வாஎத்தைகளையும் பேசி திட்டியுள்ளார். காவல்நிலையத்தில் புகாரளிப்பேன் எனவும் மிரட்டியுள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;போலீசாருடன் வாக்குவாதம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதையடுத்து கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு சென்று தவெக நிர்வாகிகள் சார்பில் புகாரளிக்கப்பட்டது. மேலும் அந்த நபரை உடனடியாக அழைத்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மாலை 6 மணிக்கு மேல் வயதானவர்கள் யாரையும் அழைத்து வந்து விசாரணை நடத்துவதில்லை என காவல்துறை தரப்பில் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் விரைவில் குறிப்பிட்ட நபரை அழைத்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறை உறுதியளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் கலைந்து சென்றுள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/16/b38cab0a1b981be68d25b303815861b41776314010265732_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[அதிரடி! திருச்சி விமான நிலையம் புதிய சாதனை: 22 லட்சம் பயணிகள் பயணம்!]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/trichy-international-airport-achieves-historic-passenger-milestone-22-lakh-travelers-in-2025-26-fiscal-year-tnn-255536</link><comments>https://tamil.abplive.com/news/trichy/trichy-international-airport-achieves-historic-passenger-milestone-22-lakh-travelers-in-2025-26-fiscal-year-tnn-255536#respond</comments><pubDate>Mon, 6 Apr 2026 09:55:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/trichy-international-airport-achieves-historic-passenger-milestone-22-lakh-travelers-in-2025-26-fiscal-year-tnn-255536</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: திருச்சி சர்வதேச விமான நிலையம் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. 2025-26 நிதியாண்டில் 22 லட்சம் பயணிகள் பயணம் செய்து மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி சர்வதேச விமான நிலையம் தனது வரலாற்றிலேயே எப்போதும் இல்லாத வகையில், 2025-26 நிதியாண்டில் 2.2 மில்லியன் (22 லட்சம்) பயணிகளைக் கையாண்டு ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. முதல்முறையாக இரண்டு மில்லியன் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளதோடு, சரக்கு கையாளுதலிலும் &amp;nbsp;புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் நிலவிய போர்ச் சூழல் மற்றும் சில தனியார் விமான நிறுவனங்களின் சேவை மாற்றங்கள் போன்ற சவால்களுக்கு மத்தியிலும், இந்த அகில இந்திய அளவிலான வளர்ச்சி திருச்சியின் முக்கியத்துவத்தை உலகின் பார்வையை தஞ்சை பக்கம் திருப்பியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) புள்ளிவிவரப்படி, கடந்த 2024-25 நிதியாண்டில் 1.9 மில்லியன் பயணிகள் பயணம் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது புதிய ஒருங்கிணைந்த முனையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டதுடன், பயணிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் 20-ம் தேதியன்றே இரண்டு மில்லியன் என்ற இலக்கை விமான நிலையம் எட்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சர்வதேச வழித்தடங்களைப் பொறுத்தவரை, யாழ்ப்பாணம், பாங்காக் மற்றும் ஹோசிமின் சிட்டி போன்ற நகரங்களுக்குப் புதிய சேவைகள் தொடங்கப்பட்டன. இடையில் சில சேவைகள் நிறுத்தப்பட்டாலும், யாழ்ப்பாணத்திற்கான சேவை தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் வழித்தடங்களில் விமான இருக்கைகள் முழுமையாக நிரம்பி வழிவது, சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கையைச் சீராக வைத்திருக்கப் பெரிதும் உதவியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி விமான நிலையத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் உள்நாட்டுப் போக்குவரத்து மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. கடந்த ஆண்டை விட 48 சதவீத வளர்ச்சியை உள்நாட்டுச் சேவைகள் பதிவு செய்துள்ளன. முக்கியமாக புதுடெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொச்சி போன்ற பெருநகரங்களுக்குப் புதிய மற்றும் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டதே இதற்கு முதன்மைக் காரணமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவருமான துரை வைகோ கூறுகையில், &quot;திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் போக்குவரத்தை ஒருங்கிணைத்தது இந்தச் சாதனைக்கு அடிப்படையான ஒன்றாகும். இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் கூடுதல் உள்நாட்டுச் சேவைகளை இயக்க வலியுறுத்தப்பட்டது, அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது&quot; என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சரக்கு போக்குவரத்திலும் திருச்சி விமான நிலையம் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்பதும் முக்கியமான ஒன்றாகும். கடந்த நிதியாண்டில் 6,480 டன்களாக இருந்த சரக்கு கையாளுதல், தற்போது 11 சதவீத வளர்ச்சியைப் பெற்று 7,184 டன்களாக உயர்ந்துள்ளது. ஒரு மெட்ரோ அல்லாத விமான நிலையம் &amp;nbsp;7,000 டன் என்ற அளவைத் தாண்டுவது இதுவே முதல் முறையாகும். இதுவும் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வளைகுடா நாடுகளின் போர் சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்று நகரங்களுக்கான விமானச் சேவைகள் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தடைபடாமல் இருந்திருந்தால், இந்த இலக்கை இன்னும் முன்னரே திருச்சி எட்டியிருக்க முடியும். சரக்கு போக்குவரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், பழைய முனையத்தை முழுமையாகச் சரக்கு கையாளுதல் மற்றும் அது சார்ந்த விமானப் பணிகளுக்காகப் பயன்படுத்தும் திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/06/66edcb8d9dc89b2c46c1475e0c36c3ab1775449396934733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஊழல் செஞ்சா பா.ஜ.க வாஷிங் மெஷினில் சுத்தமாகிடலாம்! - திருச்சியில் கனிமொழி எம்.பி. அதிரடி !]]></title><link>https://tamil.abplive.com/elections/kanimozhi-karunanidhi-slams-aiadmk-bjp-alliance-tiruvarangam-election-campaign-255438</link><comments>https://tamil.abplive.com/elections/kanimozhi-karunanidhi-slams-aiadmk-bjp-alliance-tiruvarangam-election-campaign-255438#respond</comments><pubDate>Sun, 5 Apr 2026 07:53:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/kanimozhi-karunanidhi-slams-aiadmk-bjp-alliance-tiruvarangam-election-campaign-255438</guid><description><![CDATA[&lt;div&gt;திருவரங்கம்: திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து சோமரசம்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டார். அப்போது அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைராஜியை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியில் உள்ள சோமரசம்பேட்டை காந்தி சிலை அறுத்தால் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.&amp;nbsp;இதில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;h2 dir=&quot;auto&quot;&gt;தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி.;&lt;/h2&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;முதலமைச்சர் மற்றும் திமுகவின் தலைமைச் செயலாளரும் தேர்ந்தெடுத்து உங்கள் கைகளில் ஒப்படைத்துள்ள வேட்பாளர் துரைராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக் கொண்டார். கடந்த தேர்தலில், ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்குகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இன்று 1 கோடி 31 லட்சம் சகோதரிகள் தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத் தொகையை பெற்றுக் கொண்டு வருகின்றனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தேர்தல் முடிந்து மறுபடியும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும். ஆட்சி அமைந்தவுடன், மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் தற்போது மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மறுபடியும் ஆட்சிக்கு வந்தவுடன், அது 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். &amp;ldquo;நான் முதல்வன்&amp;rdquo; திட்டத்தின் மூலம் இளைஞர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவர்கள் இன்டர்வியூக்கு செல்லவும், பிற செலவுகளுக்காக பயன்படுத்தவும், படிப்பு முடித்த பின் ஆறு மாதங்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்குவோம் என்று முதலமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;முதலில், விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்கியது தலைவர் கலைஞர். இப்போது, எந்தவித மின்மீட்டர் பொருத்தப்படாத புதிய பம்பு செட்டுகள் 20 லட்சம் விவசாயிகளுக்கு மேல் வழங்கப்படும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.&amp;nbsp; நமது அமைச்சர் கே.என்.நேரு மாடுகளை வளர்க்க ஆர்வம் மிகுந்தவர். 24 மணி நேரமும் கால்நடை மருத்துவமனை இயங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்து இருக்கிறார். அதனை நிறைவேற்றுவதாக நமது முதலமைச்சர் இந்தத் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அதிமுக கூட்டணியில் வாஷிங் மெஷின் தான் கொடுக்கப்பட வேண்டும். ஏன் என்றால், பாஜகவிடம் ஒரு பெரிய வாஷிங் மெஷின் வைத்திருப்பார்கள். யார் மீது எந்த வழக்குகள் இருந்தாலும், யார் மீது எந்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பாஜகவில் சேர்ந்துவிட்டால், அந்த வாஷிங் மெஷின சுத்தம் செய்து விடும்.&amp;nbsp;நாங்கள் ஆட்சிக்கு மீண்டும் வந்தவுடன், 8,000 ரூபாய்க்கு ஒரு கூப்பன் கொடுக்குறோம். அதைக் பயன்படுத்தி உங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ளலாம். உங்களுக்கு ஃபிரிட்ஜ் வேண்டும் என்றால் ஃபிரிட்ஜ் வாங்கலாம், வாஷிங் மெஷின் வேண்டும் என்றால் வாங்கலாம், கிரைண்டர் வேண்டும் என்றால் அதையும் வாங்கிக்கொள்ளலாம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;டிவி பழசா போச்சு. பெருசா வேணும். தலைவர் கலைஞர் கொடுத்த TV இன்னும் ஓடுது இல்ல. இப்ப எல்லாம் நாம வாங்குனா TV வாங்கணும். மூணு வருஷத்துல ஓட மாட்டேங்குது. ஆனா தலைவர் கலைஞர் அவர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் உங்களுக்குத் தந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இன்னும் பயன்படுத்தக்கூடிய வகையில இருக்கு. அதனால TV இன்னும் புது TV வேணுமா? அந்த எட்டு ஆயிரம் ரூபாய்க்கு மேல குடுத்து பெரிய TV வாங்கிக்கலாம். அதனால உங்களுக்கு என்ன தேவையோ தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தலைவர் கலைஞர் கொடுத்த டிவி இன்றும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. இப்போது நீங்கள் புதிய டிவி வாங்க விரும்பினால், 8,000 ரூபாய் கூப்பனுடன் பெரிய TV வாங்கலாம். அதனால் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம். Choice is yours என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் எது வேண்டுமோ வாங்கி கொள்ளுங்கள்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அதிமுக தேர்தல் அறிக்கை யாரும் படிக்கிறதே கிடையாது. 2016 அதிமுக தேர்தல் அறிக்கையில் 27 பக்கத்துல 31வது வாக்குறுதி. என்ன மறந்துருப்பீங்க? இல்லையா? அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும். Cell phone. ஞாபகம் இருக்கா? யாருக்காவது யாராவது cell phone வாங்குனீங்களா? யாருக்காவது கிடைச்சுதா? கிடைக்கல இல்ல. Cell phone cell phone குடுக்குறேன்னாரு. குடுத்தாங்களா? யாரும் வாங்கல. அவங்களும் மறந்துட்டாங்க. நம்மளும் மறந்துட்டோம்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;2016ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் 27 பக்கத்தில், 31வது வாக்குறுதி. அதில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஞாபகம் இருக்கிறதா? யாராவது அந்த கைபேசி (cell phone) வாங்கியிருக்கிறீர்களா? யாருக்காவது கிடைத்ததா? கிடைக்கவில்லை. அவர்களும் மறந்துவிட்டனர். நாமும் மறந்துவிட்டோம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அதே போல 40வது பக்கத்துல அம்மா Banking card. வங்கிக்கு செல்லும்போது நடத்துற மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் நிதி சேவைகளுக்காக பயன்படுத்துறதுக்காக அம்மா Banking card குடுக்குறேன்னாங்க. ஒரே ஒரு card. அதையாவது குடுத்தாங்களா?இல்லை.&amp;nbsp;அதே போல, 40வது பக்கத்தில் அம்மா Banking Card பற்றிய விபரம் உள்ளது. வங்கியில் ஏழை எளிய மக்களுக்கும் நிதி சேவைகளுக்காக பயன்படுத்தச் செய்ய அம்மா Banking Card வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஒரே ஒரு கார்டையும் கொடுத்தார்களா? இல்லை.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரானவர்கள். இந்த நாட்டில் உள்ள மத நல்லிணக்கத்துக்கும், மக்களுடைய ஒற்றுமைக்கும் எதிரானவர்கள். கோடி கோடியாக ஹிந்திக்கும், சம்சம்கிறதா மொழியையும் தருகிறார்கள். தமிழுக்கு எந்த உதவியும் இல்லை. தமிழ்நாட்டில் தமிழ் பிள்ளைகள் ஹிந்தி படிக்கவில்லை என்றால், நமது பிள்ளைகளுக்கு வரவேண்டிய நியாயமான கல்வித் தொகையையும் நிறுத்தி வைக்கக்கூடிய ஒன்றிய அரசு. மோடியின் ஆட்சியோடு இணைந்து, எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தலில் நிற்கிறார். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியையும், உரிமைகளையும் வழங்கவில்லை.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மெட்ரோ ரயில் வேண்டும் என்று கேட்டாலும் கிடையாது. எந்தத் திட்டத்தையும் கேட்டாலும் கிடையாது. நிதி கேட்டாலும் கிடையாது. தமிழ்நாட்டின் உரிமைகளையும், நிதியையும் எல்லாம் தட்டிப் பறிக்கக்கூடியவர்களோடு இணைந்து, இன்று ஒரு கூட்டணி அமைத்துள்ளனர்.&amp;nbsp;நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் செல்லாது என்று சொன்னார்கள். நம்ம பணத்தை எடுக்க, வங்கியின் முன் நாளெல்லாம் க்யூவில் நின்றோம். அதன் பிறகு, கொரோனா வந்தபோது மருந்து, ஆக்சிஜன் போன்றவற்றிற்கும் க்யூவில் நின்றோம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தமிழ்நாட்டில் வந்தபின் எல்லாருக்கும் மருத்துவ வசதிகள் கிடைத்தன. அதற்கு முன்பு வரிசையில் நின்று கஷ்டப்பட்டு கொண்டிருந்தோம். மற்ற மாநிலங்களில், பாஜக ஆட்சியுள்ள மாநிலங்களில், மருத்துவமனை வாசல்களிலும் மக்கள் இருப்பதைப் பார்த்தோம், ஆனால் வழியில்லாமல் க்யூவில், தெருவில் படுத்துக் கிடக்க வேண்டிய நிலை இருந்தது. இன்னைக்கு டீசல், பெட்ரோல் வாங்குவதற்கும் க்யூவில் நின்று காத்திருக்கிறோம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அடுத்து LPG cylinder gas cylinderக்கு queueல நிக்கணுமா அப்படிங்கிற பயத்தோடு தவித்துக்கொண்டிருக்கிறோம். அதைப் பத்தி அங்கிருந்து Delhi ல வர அங்கிருந்து வரக்கூடியவர்கள் வாய் திறப்பதில்லை. இன்னைக்கு commercial cylinders எல்லாம் ஒரு உணவு கடைக்கு வாங்கக்கூடிய cylinder ஆ இருக்கட்டும், தங்கக்கூடிய விடுதிகளுக்கு வாங்கக்கூடிய gas cylinder ஆ இருக்கட்டும் எல்லாத்துக்கும் விலை ஏறிடுச்சு. அவங்களால தாங்கப் பிடிக்க முடியவில்லை. இன்னைக்கும் எல்.பி.ஜி சிலிண்டெற்காக க்யூவில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது, டெல்லியில் வரக்கூடியவர்கள் வாயை திறப்பதில்லை. இன்றைக்கு உணவுக் கடைகளுக்கு காமர்ஷியல் சிலிண்டர்கள் கிடைக்கிறதோ? எல்லாவற்றுக்கும் விலை உயர்ந்துவிட்டது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;ldquo;&amp;lsquo;Make in India&amp;rsquo; என்று அடிக்கடி மோடி சொல்லுவார். ஆனால் இந்த எல்.பி.ஜி சிலிண்டருக்கு &amp;lsquo;Make in India&amp;rsquo; என்பதே இல்லை. எல்லாமே வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. இன்றைக்கு இவ்வளவு பெரிய போர் நடக்கக்கூடிய சூழ்நிலையில், நமக்கு இன்னும் எத்தனை நாள் கேஸ் சிலிண்டர் கிடைக்கும், கிடைக்காதோ என்று தெரியாத நிலையில் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் கேள்வி கேட்க யாரும் தயாராக இல்லை..&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;எதிரணியில் இருப்பவர்கள் நம்மைப் பார்த்து, திமுக ஆட்சிக்கு வந்தால் பெரும்பான்மை மக்களுக்கும், இந்துக்களுக்கும், கோயில்களுக்கும் எதிரானவர்கள் என்று சொல்லுவார்கள். நான் கேட்கிறேன், வேறு எந்த ஆட்சியிலாவது 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறார்களா? திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;7,500 கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது பெரும்பான்மை மக்களுக்கு எதிரானதா? இது கோயிலுக்கு எதிரானதா? கோயில்களை பாதுகாக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, நீங்கள் கோயில்களை பயன்படுத்தி மதக் கலவரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் உண்மையிலேயே மக்களின் நம்பிக்கையை மதிக்கக்கூடியவர்கள்; அதைப் பாதுகாக்கக்கூடியவர்கள். அது எந்த மதமாக இருந்தாலும், மக்களை பாதுகாக்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த பகுதியில ஸ்ரீரங்கம் பகுதியில், ஸ்ரீரங்கம் பகுதியில் நகர்ப்புற பேருந்து நிலையம் ரூ. 11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தநல்லூர் மற்றும் மணிகண்டம் ஒன்றியங்களில் ஊரக குடியிருப்புத் திட்டத்தில் 119.22 கோடி ரூபாய் செலவீட்டில் குடிநீர் இணைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணுடையான்பட்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, மணப்பாறை ஒன்றியம் - பெரியப்பட்டி ஊராட்சியில் மாமுண்டி ஆற்றின் குறுக்கே ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சிங்கப்பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வேத பாடசாலை, உணவருந்தும் இடம், மற்றும் தங்கும் விடுதி 5.66 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் ரூ. 106 கோடி செலவீட்டில் கட்டப்பட்டு வருகிறது. சேதுராப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 8.5 கோடி மதிப்பீட்டில் 100 மாணவிகள் தங்கக்கூடிய அளவில் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் அரசு கலைக் கல்லூரிக்கு 4.50 கோடி ரூபாய் செலவில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சியில் 34.45 லட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ஸ்ரீரங்கம் கொள்ளிட கரையில் 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது மற்றும் மணிகண்டம் ஒன்றியத்தில் 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மணிகண்டம் ஒன்றிய அலுவலகத்திற்கு பின்புறமாக கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அந்தநல்லூர் ஒன்றியத்தில் 5 கோடி ரூபாய் செலவில் அங்கன்வாடி தடுப்பு சுவர்கள் மற்றும் அரசு பள்ளி கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இப்படி இத்தனை சாதனைகளையும் செய்து விட்டு தான் உங்களைச் சந்தித்து வாக்கு கேட்க வந்திருக்கிறோம். அது மட்டும் இல்லாமல், மறுபடியும் நம்முடைய ஆட்சி அமையும் போது முக்கிய திருத்தலங்களை இணைத்து சுற்றுலா வசதி மேம்படுத்தப்படும். திருச்சி, திருவரங்கம், மணச்சநல்லூர், சமயபுரம், கல்லணை, திருவெறும்பூர், புதுக்கோட்டை, மதுரை - சுற்றுச்சாலை அமைக்கப்படும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நகரின் முக்கியப் பகுதிகளில் வாகன நிறுத்த வசதிகள் மேம்படுத்தப்படும். தேவை இருக்கும் வழித்தடங்களில் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்படும். தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இளைஞர்களுக்காக விளையாட்டரங்கம் நிறுவப்படும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டு வசதி ஏற்படுத்தப்படும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தொகுதி முழுவதும் பசுமை பரப்பளவு உயர்த்தப்படும். குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்காக பூங்காக்கள் அமைக்கப்படும். எல்லா அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டு வசதியோடு கூடிய பள்ளி அறைகள் உருவாக்கப்படும். மறுபடியும் ஆட்சிக்கு வந்தவுடன் காலை உணவு திட்டம் எட்டாவது வகுப்பு வரை நீட்டித்துத் தரப்படும். இன்னும் கொஞ்ச நாள்ல எல்லா வகுப்பில் இருக்கக்கூடிய பிள்ளைகளுக்கும் காலை உணவு என்ற அந்த நிலை உருவாக்கித் தரப்படும்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நம்ம மேல் ஹிந்தியை கொண்டு வந்து திணிக்கிறார்கள். ஹிந்தி படித்து என்ன பயன்? உத்தரப் பிரதேசத்துக்கு வேலைக்குப் போக முடியும். ஆனால் நம்ம வீட்டு பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகிறார்கள். நம்ம வீட்டு பிள்ளைகள் நல்ல எதிர்காலத்துடன் இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை தன் கையில் வைத்திருக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் இருமொழிக் கொள்கையை கையில் எடுத்திருக்கிறோம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் நல்லதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எத்தனையோ தொழில் முதலீடுகளை கொண்டு வந்து, இன்று தமிழ்நாட்டில் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வளர்ச்சி தொடர வேண்டும். தமிழ்நாட்டின் சுயமரியாதையை, மொழியை, அடையாளங்களை பாதுகாக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நமக்காகக் குரல் கொடுக்க, போராடக்கூடிய வேட்பாளருக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் துரைராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/05/389a392c6d57dd26bd35509a59ef101b1775355749312194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திருச்சி கிழக்கு: கே.என். நேரு தலைமையில் இனிகோ இருதயராஜை ஆதரித்து மாபெரும் கூட்டணி எழுச்சி! வெற்றிக்கு வியூகங்கள் தீட்டினார்களா?]]></title><link>https://tamil.abplive.com/elections/tn-election-trichy-east-constituency-f-secular-progressive-alliance-activists-meeting-255235</link><comments>https://tamil.abplive.com/elections/tn-election-trichy-east-constituency-f-secular-progressive-alliance-activists-meeting-255235#respond</comments><pubDate>Thu, 2 Apr 2026 19:37:16 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/tn-election-trichy-east-constituency-f-secular-progressive-alliance-activists-meeting-255235</guid><description><![CDATA[&lt;p&gt;திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்குத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து, அக்கூட்டணியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தக் கூட்டத்திற்குத் திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் &amp;nbsp;தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்புரை ஆற்றினார். கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான &amp;nbsp;கே.என். நேரு முன்னிலை வகித்துச் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ சிறப்புரையாற்றினார். வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் இனிகோ இருதயராஜை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்கான தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/02/970a3f3ac63167379f91d949bdcb17e61775138768855113_original.jpeg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தலைவர்கள் உரை:&lt;/strong&gt; கூட்டத்தில் கலந்துகொண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், களப்பணியின் அவசியம் குறித்தும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் சிறப்புரையாற்றினர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நிர்வாகிகள் வருகை&lt;/strong&gt;: மாநகர, மாவட்ட அளவிலான கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/02/b4adc018f48d5a5996910cee2dbe18f21775138544239113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திருச்சி தொழில்துறை கனவு நனவாகுமா? தாமதமாகும் திட்டங்கள்: தேர்தல் வாக்குறுதிகள் போதுமா?]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/trichy-industrial-infrastructure-development-stalled-election-promises-vs-action-tnn-255227</link><comments>https://tamil.abplive.com/news/trichy/trichy-industrial-infrastructure-development-stalled-election-promises-vs-action-tnn-255227#respond</comments><pubDate>Thu, 2 Apr 2026 18:43:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/trichy-industrial-infrastructure-development-stalled-election-promises-vs-action-tnn-255227</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: திருச்சியின் தொழில்துறை உள்கட்டமைப்பு நிலை வருமா? வராதா? தாமதமாகிக் கொண்டே இருக்கிறதே என்று மனவேதனையுடன் திருச்சி மக்கள் உள்ளனர். இம்முறை வாக்குறுதி அளிப்பதை விட வேட்பாளர்கள் செயல்படுத்தி காட்ட வேண்டும் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவின் எரிசக்தி உபகரணங்கள் மற்றும் ஃபேப்ரிகேஷன் தலைநகரம் என்று அழைக்கப்படும் திருச்சி, கடந்த ஆறு தசாப்தங்களாக மின் உற்பத்தி நிலைய கூறுகளின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது என்றால் மிகையில்லை. ஆனால், நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடிய பெரிய 'ஆங்கர்' &amp;nbsp;தொழிற்சாலைகளுக்காக இப்போதும் காத்திருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில், வெறும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் மட்டும் தொழில்துறையினரின் வாக்குகளைப் பெற்றுத் தந்துவிடாது; மாறாக, நிலுவையில் உள்ள திட்டங்களைச் செயல்படுத்தும் அரசியல் உறுதிப்பாடே வெற்றியைத் தீர்மானிக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/02/2cddc69bcae82dd6f1e8ad2a3bdc25bd1775135504908733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவிரி டெல்டாவின் நுழைவாயிலான திருச்சிக்கு மிக நீண்ட தொழில்துறை வரலாறு உண்டு. 1928-இல் தொடங்கப்பட்ட பொன்மலை ரயில்வே பணிமனை, 1964-இல் வந்த பெல் (BHEL) நிறுவனம் மற்றும் 1966-இல் அமைக்கப்பட்ட துப்பாக்கித் தொழிற்சாலை போன்றவை திருச்சியின் மிகப்பெரிய அடையாளங்கள். இருப்பினும், நவீன யுகத்தில் செமிகண்டக்டர்கள், மின்சார வாகனங்கள் (EV) மற்றும் மென்பொருள் மேம்பாடு போன்ற அதிக ஊதியம் தரும் துறைகளில் திருச்சி இன்னும் கால்பதிக்கவில்லை என்பதும் வேதனையாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் மற்றும் மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகள் நேரடியாகத் தொழில்துறை முதலீடுகளைச் சார்ந்துள்ளன. பெல் போன்ற பாரம்பரிய நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்காமல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் ஒரு பகுதியைத் திருச்சிக்கு அரசு திசை திருப்ப வேண்டும் என்பதே தொழில் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது. அப்போதுதான் வேலைக்காக இளைஞர்கள் வெளியூர்களுக்குப் புலம்பெயர்வது குறையும். திறன்மிக்க இளைஞர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலைவாய்ப்பை சொந்த ஊரிலேயே ஏற்படுத்தும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி வர்த்தக மையம், பாதுகாப்புத் தொழில் வழித்தடம், வேளாண் தொழில் வழித்தடம் மற்றும் சிப்காட் பூங்காக்களில் பெரிய தொழிற்சாலைகள் எனப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அவை இன்னும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதுதான் வேதனையே. மணப்பாறை சிப்காட் பூங்காவிற்கு ஜேபில் மற்றும் ஜிண்டால் போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஆனால் அதனால் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை. பஞ்சப்பூரில் அமையவுள்ள டைடல் பார்க் மற்றும் எல்காட் இரண்டாம் கட்ட ஐடி பூங்கா போன்றவற்றை ஆளுங்கட்சியான திமுக தனது சாதனையாக இருந்தாலும், 5 ஆண்டுகளாகத் தாமதமாகும் திருச்சி வர்த்தக மையத் திட்டம் மக்கள் மத்தியில் வருத்தத்தையே ஏற்படுத்தி உள்ளது என்பதுதான் உண்மை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருவெறும்பூர் மற்றும் திருச்சி மாநகரத் தொகுதிகள் ஓரளவு தொழில்துறைப் பலன்களைப் பெற்றாலும், துறையூர், முசிறி, லால்குடி மற்றும் மணப்பாறை போன்ற தொகுதிகள் தொழில்துறையில் மிகவும் பின்தங்கியே உள்ளது என்பதுதான் உண்மை. மருங்காபுரி, உப்பிலியபுரம் மற்றும் தொட்டியம் போன்ற பகுதிகளில் உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மிகவும் அவசியமான ஒன்றாகும். திருச்சியின் தொழில்துறை சூழலை மேம்படுத்த ஒரு பெரிய ஐடி நிறுவனம் தனது அலுவலகத்தைத் திருச்சியில் திறக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஏற்றுமதியை அதிகரிக்க உலர் துறைமுகம் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகும். வரும் தேர்தலில், பழைய வாக்குறுதிகளைத் தாண்டிச் செயல்பாடுகளை நிரூபிக்கும் வேட்பாளர்களுக்கே தொழில்துறையினர் ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/02/5dfba04a7182faa375901df7bae93f7a1775135242247733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/tamil-nadu-farmers-collective-support-dmk-alliance-for-2026-assembly-elections-tnn-255225</link><comments>https://tamil.abplive.com/news/trichy/tamil-nadu-farmers-collective-support-dmk-alliance-for-2026-assembly-elections-tnn-255225#respond</comments><pubDate>Thu, 2 Apr 2026 18:17:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/tamil-nadu-farmers-collective-support-dmk-alliance-for-2026-assembly-elections-tnn-255225</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஏகமனதாக ஆதரவு தெரிவித்து தமிழக விவசாயிகளின் கூட்டு இயக்க குழு நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சியில் விவசாய சங்கங்களின் &amp;nbsp;மாநில &amp;nbsp;நிர்வாகிகள் &amp;nbsp;கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளுடன் நிலை என்ன என்று கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதில் விவசாயிகள் அனைவரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக ஒட்டுமொத்த விவசாயிகளின் கருத்தாக மத்திய அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிக் கொண்டே இருக்கும் விவசாயிகளுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மின்சார திருத்த அவசர சட்டம் கொண்டு வந்து மத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கைப் பாவையாக செயல்படுகிறது. அதேபோல மத்திய அரசு விலையைத் தவிர எந்த மாநில அரசும் ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்க கூடாது என்று அவசர சட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து தலைமை செயலாளருக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது போன்ற மத்திய அரசின் தொடர்ந்த விவசாயிகளுக்கு எதிரான மனநிலையையும், நடவடிக்கைகளையும் கண்டிப்பது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளுக்கு விவசாயிகள் சங்கங்களின் ஆதரவு கிடையாது என்றும் தீர்மானிக்கப்பட்டது. விவசாயிகளின் நலன் காக்கும் திமுக கூட்டணிக்கு ஏகமனதாக ஆதரவு அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் கூறுகையில், மத்திய அரசு விவசாயிகள் நலன் பற்றி அக்கறை கொள்ளாமல் விரோதப்போக்கையை கடைப்பிடித்து வருகிறது. விவசாயிகளுக்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது எனக்கூறி நாடு தழுவிய அளவில் கடும் போராட்டங்கள் வெடித்தன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் வேளாண் விளைபொருள் சந்தை குழு அமைப்புகளை அழிக்கும் சட்டங்கள் இவை என்பதால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். நீண்ட போராட்டங்களால் விவசாயிகள் வெகுவாக மன உளைச்சலுக்கு உள்ளாகினர். குறைந்தபட்ச ஆதரவு விலையையும் அறிவிக்கவில்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாம். அதில் விவசாயிகளுக்கு மத்திய அரசின் ஊக்கத் தொகையை தவிர மாநில அரசுகள் ஊக்கத் தொகை அளிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளதாம். இதுபோன்ற விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனால் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/02/4d230ecd6efd787fc2bce23a1d9aa81f1775133911427733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விசில் புரட்சி வெடிக்குமா?  திருச்சி பிரச்சாரத்தில் திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்]]></title><link>https://tamil.abplive.com/news/trichy/vijay-campaigns-in-trichy-east-promises-freebies-criticizes-dmk-bjp-tnn-255214</link><comments>https://tamil.abplive.com/news/trichy/vijay-campaigns-in-trichy-east-promises-freebies-criticizes-dmk-bjp-tnn-255214#respond</comments><pubDate>Thu, 2 Apr 2026 16:54:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ திருச்சி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/trichy/vijay-campaigns-in-trichy-east-promises-freebies-criticizes-dmk-bjp-tnn-255214</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: இது ஒரு தலைமுறைக்கான ஒரு தேர்தல். உங்களுக்கான தேர்தல். எனவே விசில் சின்னத்தில் உங்கள் விஜய்க்கு ஓட்டு போடுங்கள் என்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தனித்து களம் காண்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பிரசார வாகனத்தில் ஏறி நின்று உற்சாகமாக கையசைத்து செல்லும் விஜயை கண்டு தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் அவர் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு முன்பு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கேஸ் தட்டுப்பாட்டால் எவ்வளவு பிரச்சனைகள். எவ்வளவு டீக்கடைகள், ஹோட்டல் மூடிட்டாங்க. மத்திய, மாநில அரசுகள் உஷாராக இருந்து இருந்தால் கேஸ் தட்டுப்பாடை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிருக்கலாம். இவங்க ரெண்டு பேரும்தான் இதுக்கு காரணம். ஸ்டாலின் சார் தனக்கோ, தன் வீட்டிற்கோ பிரச்சினை என்றால் டெல்லிக்கு பறந்து போயிட்டு வருவார். இந்த கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு கொஞ்சம் டெல்லிக்கு பறந்து போயிட்டு வரலாமே? &amp;nbsp;கேஸ் சிலிண்டருக்கு மானியமா 100 ரூபாய், கரும்புக்கு ஆதார விலையா 4,000 ரூபாய், ரேஷன்ல சர்க்கரை ஒரு கிலோ எக்ஸ்ட்ரா தரப்படும், ரேஷன்ல உளுந்தம்பருப்பு கொடுக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்வோம்னு என்று சொன்னது எல்லாம் என்னாச்சு.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எதெல்லாம் அவரால செய்ய முடியாதோ, அதையெல்லாம் பொய் வாக்குறுதிகளா கொடுத்து ஏமாத்துறதுதான் வேலையே. இப்ப அடுத்த செட் ஆஃப் பொய் வாக்குறுதிகளை ரெடி பண்ணிட்டாரு. அவரை போல் நாங்க பொய் வாக்குறுதிகள் எல்லாம் கொடுக்க மாட்டோம். 6 சிலிண்டர்கள் தாய்மார்களுக்கு கட்டணமில்லாமல், சொன்ன மாதிரியே நிறைவேற்றுவோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருமணம் முடிந்து செல்லும் தங்கைகளுக்கு ஒரு பவுன் தங்கமும், பட்டு சேலையும் சொன்ன மாதிரியே கொடுப்போம். 60 வயசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 2,500 ரூபாய் சொன்ன மாதிரியே கொடுப்போம். என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள் எல்லாருமே தமிழ்நாட்டுல எந்த மூலையில இருந்து எங்க வேணாலும், தமிழ்நாட்டுக்குள்ள எந்த பஸ்ல வேணாலும் இலவசமாக செல்லலாம். கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதி, பஸ் போக்குவரத்து போன்ற அடிப்படை விஷயங்களில்தான் எங்களுடைய முதல் கவனம் இருக்கும். பள்ளிகளில் கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சியில் உள்ள அமைச்சர் நகராட்சித் துறையில வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கான பணத்தை லஞ்சமா வாங்கிக்கிட்டு, தகுதியானவங்களுக்கெல்லாம் வேலைவாய்ப்பு கிடைக்காத அளவுக்கு செய்துள்ளார். உங்களின் இந்த வேலைவாய்ப்பைப் பறிச்ச இந்த ஸ்டாலின் சார் சர்க்காரை என்ன பண்ணலாம்? தூக்கி வீசி எறிவோமா? உங்களுக்கு இந்த பாதுகாப்பு இல்லாத, சட்ட ஒழுங்கு சரியில்லாத இந்த தீய சக்தி திமுக அரசை என்ன பண்ணலாம்? தூக்கி வீசி எறிவோமா? நகராட்சித் துறையில மட்டுமே 1,000 கோடிக்கு மேல ஊழல்னா, அப்ப மத்த துறையில எல்லாம் கணக்கு போட்டுப் பாருங்க. நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொல்லியிருந்தேன், 'ஸ்டாலின் சார் டாக்ஸ்' (SST) அப்படின்னு... ஜிஎஸ்டி மாதிரி எஸ்எஸ்டி. அதைப்பத்தி அவங்க வாயைத் திறக்கலைங்க. என்னவோ அவங்களே ஒத்துக்கிட்ட மாதிரி இருக்குது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;கல்லூரி உதவி பேராசிரியர்கள் பதவியில் 2,000 பேருக்கு மேல அந்த வேலை கொடுப்போம்னு சொன்னாங்க. வெறும் 5 பேருக்கு மட்டுமே வேலை கொடுத்தார்கள். இதெல்லாம் வெறும் அறிவிப்புகள் மட்டும்தான். காலி பணியிடங்களை நிரப்புவோம்னு சொன்னாங்க, அதுவும் என்ன ஆச்சுன்னு தெரியல. 100 சதவீதம் ஒரு நியாயமான ஒரு ஆட்சியை நாம கொடுப்போம். 100 சதவீதம் நீங்க இந்த விஜயை நம்பலாம்ங்க. நீங்க நம்புறீங்கன்னு எனக்கு தெரியும். அதனாலதான் என்னுடைய சொந்த பந்தங்களாகிய உங்ககிட்ட, எனக்கு அந்த உரிமை இருக்கு. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க, எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கன்னு உங்ககிட்ட கேட்காம வேற யார்கிட்ட நான் கேட்பேன்? எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த தேர்தலில் திமுக ஏலத்தில எடுத்திருக்கிற கல்லாப்பெட்டி கூட்டணியோட சேர்ந்து, அப்புறம் நாம ஏற்கனவே சொன்னோமே அந்த மற்றும் பலர்' கூட்டணின்னு ஒன்னு இருக்குல்ல? அவங்களோடும் கள்ள கூட்டணி போட்டுக்கிட்டு உங்கள் விஜயை எப்படியெல்லாம் எதிர்க்கிறாங்கன்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்னு அவசியமில்லை. கரூர் நிகழ்ச்சி சூழ்ச்சின்னு பலர் சொல்றது மாதிரி, நம்ம கடைசி படமான 'ஜனநாயகம்'. இந்த தேர்தல்ல நமக்கு மிகப்பெரிய ஆயுதமா மாறிடுமோன்னு ஒரு கூட்டு சூழ்ச்சி, அதோட இன்னும் பல பல சூழ்ச்சிகள். அதனால உங்க விஜய் கேட்கிறேன்... உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும் சேர்த்துதான் நீதி வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திமுகவையும் நம்பாதீங்க, பாஜகவையும் நம்பாதீங்க. ரெண்டு பேரும் வேற வேற கூட்டணி எல்லாம் கிடையாது, ஒரே கூட்டணிதான். ரெண்டு பேரையும் நம்பாதீங்க, &amp;nbsp;இந்த தேர்தலில் டிவிகேக்கு உங்க ஆதரவை கொடுங்க. இன்னும் பல வருஷத்துக்கு தமிழ்நாடு சூப்பரா இருக்கும். ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக்கிட்டு, முதல் ஆளா பூத்துல போய் நின்னு, விசில் சின்னத்துக்கு நேரா இருக்கிற பட்டனை ஒரு அழுத்து அழுத்துங்க!&lt;br /&gt;இது ஒரு தலைமுறைக்கான ஒரு தேர்தல். உங்களுக்கான தேர்தல். எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கையா இருந்தாலும் எல்லாத்தையும் உதறி தள்ளிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். உங்களுக்காக நன்றி கடன் செலுத்துறதுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். அத்தனை வலிகளையும் தாங்கிக்கிட்டு. ஒருநாளும் பொய் சொல்லி உங்களை நான் ஏமாத்த மாட்டேன். நாலுமுனை போட்டி, நாற்பது முனை போட்டின்னு எத்தனை முனை போட்டின்னு வந்தாலும், இங்க இருமுனை போட்டி மட்டும்தான். டிவிகே, திமுகவுக்கு மட்டுமே போட்டி.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா? மக்களை நேசிக்கிற விஜய் வேணுமா? அவ்வளவுதான் இந்த தேர்தலே! அதனால விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க. இது ஒரு விசில் புரட்சி தேர்தலா இருக்க வேண்டும். &amp;nbsp;நம் வேட்பாளர்களா அவங்க வேற, நான் வேறன்னு தயவுசெஞ்சு பிரிச்சு பார்த்துறாதீங்க. அவங்க எல்லாரையும் வெற்றி பெற செய்யணும்னு உங்க எல்லாரையும் தாழ்மையுடன் நான் கேட்டுக்கிறேன். கான்பிடென்ட்டா இருங்க, நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பாட்டு பாடி கவர்ந்த விஜய்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய் ஓட்டு கேட்டு பாட்டும் பாடினார். &amp;nbsp;அவர் பாடிய பாட்டு...&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நான் தன்னந்தனி ஆளு... நீ ஏளனமா பாரு... கொஞ்சம் நவுந்தேன்னா நான்...இங்க எட்டு கோடி பேரு! மெரலப்போகுது ஸ்டேட்டு... எங்க விசில் சத்தம் கேட்டு... நல்லவங்க வாழ... நீ விசிலுக்கடி ஓட்டு! கடைசி நம்பிக்கை மக்களை தேடி வருது, அதை இறுக்கி பிடிச்சு ஒரு வரலாறு எழுது. உங்க விஜய் நான் வரேன்... விசில் அடிக்க ரெடியா? . இவ்வாறு பாடினார். இதை &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; பாடி முடித்ததும் விசில் சத்தம் பறந்தது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/02/e4105acd3bc4500fa3f8e840b04aad511775129031414733_original.jpg" width="220"/></item></channel></rss>