கிரிவலம் சென்றபோது நேர்ந்த பெருஞ்சோகம்; கார் நொறுங்கி 2 பக்தர்கள் உடல் நசுங்கி பலியான கொடூரம்
திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும்போது நேர்ந்த சோகம். செங்கம் அருகே அரசு பேருந்து மற்றும் கார் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரத்துக்குட்பட்ட தோக்கவாடி புறவழிச் சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு நண்பர்களின் குடும்பத்தினர், பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வதற்காக ஆம்னி காரில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்தும் காரும் மோதியதில் கார் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற விநாயக் மற்றும் அவருடன் பயணம் செய்த ராமச்சந்திரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், காரில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு செங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நீலகண்டன் என்பவர் தீவிர காயமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கம் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலைக்கு கிரிவலவம் செல்வதற்காக குடும்பத்துடன் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















